என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hospital"

    • மணமகள் ஆவணி காரை ஓட்டிச் சென்றார்.
    • கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25).

    தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.

    மணமகள் ஆவணி ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.

    காரை ஆவணி ஓட்டிச் சென்றார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயமடைந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற மணமகன் ஷாரோன் அங்கு மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார்.

    ஆனாலும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.

    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • பச்சிளம் குழந்தை கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
    • புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அக்டோபர் 5 ஆம் தேதி பிறந்த பச்சிளம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் கோபால் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

    அங்கு ஊசி போட்ட பிறகு குழந்தையின் கை வீங்கி, நீல நிறத்தில் மாறத் தொடங்கியது. இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் கைக்கு கட்டுப்போட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளனர்.

    புதிதாகப் பிறந்த குழந்தையின் கை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டு அழுகும் நிலையில் இருப்பதால், கையை துண்டிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் நர்சிங் ஹோம் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கை அளிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு (CMO) காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

    • தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.

    தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.

    தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
    • பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    2026 மார்ச் மாதத்திற்குள் சாத்தியமான ஒரு பெரிய நெருக்கடிக்குத் தயாராகும்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரான்ஸ் அரசு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    போர்க்காலத்தில் காயமடையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால், விழிப்புடன் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உக்ரைன் - ரஷியா போர் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், பிரான்சின் இந்த அறிவிப்பால் ஐரோப்பாவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.
    • பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்தார்.

    பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூற்றுப்படி, மீரட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் சுனில் குமார் என்ற நபர் படுகாயமடைந்தார். சுனில் குமாரை அவரது உறவினர்கள் உள்ளூர் லாலா லஜ்பத் ராய் நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அவரை ஸ்ட்ரெச்சரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு டாக்டர் பூபேஷ் ராய், ஏசியை ஆன் செய்து நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். சுனில் குமாரின் மனைவி மருத்துவரிடம் சென்று அவரை எழுப்ப முயன்றார்.

    சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை.

    பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் சுனில் குமார் இரத்தப்போக்கால் ஸ்ட்ரெச்சரிலேயே இறந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் டாக்டர் பூபேஷ் தூங்குவதையும், சுனில் குமாரின் மனைவி கெஞ்சுவதையும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

    இந்த வீடியோ வைரலானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் டாக்டர் பூபேஷ் ராய் இடைநீக்கம் செய்யப்பட்டு, சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

    • தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த 7 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் அவ்வப்போது வந்து பார்த்து பேசி விட்டு சென்றனர்.

    இருப்பினும், மருத்துவமனையில் இருந்த படியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.வீடு திருபெமினார்.

    மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட முதலமைச்சருக்கு வழிநெடுக திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடரலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஒருவன் கொண்டு வந்துள்ளான்.
    • மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காயமடைந்த புறாவை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் ஒருவன் கொண்டு வந்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி புறா உயிரிழந்தது. இதனை தாங்கி கொள்ள முடியாத அந்த சிறுவன் மருத்துவமனையிலேயே கதறி அழுதான்.

    புறா உயிரிழந்ததால் மருத்துவமனையில் கதறி அழுத சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த வீடியோ நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    • கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை செயல்பட தடை விதித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி புதுப்பித்தல் சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கல்லீரல் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை என்று அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண்கள் பேசியுள்ளனர்.
    • சாசாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா உறுதியளித்தார்.

    மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள காதி குர்த் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு சாலை அமைக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் பேசியுள்ள கர்ப்பிணி பெண்கள், எங்கள் கிராமத்தில் தார் சாலைகள் இல்லை. நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு மருத்துவமனைகளை சேறு, சகதி நிறைந்த சாலையில் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே எங்கள் கிராமத்திற்கு தார் சாலைகளை அமைக்க வேண்டும்" என்று பேசியிருந்தனர்.

    சமூக ஊடகங்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட லீலு ஷா என்பவர் 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை டேக் செய்து இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "மத்தியப் பிரதேசத்திலிருந்து 29 எம்.பி.க்களையும் வெற்றி பெறச் செய்தோம். இப்போது எங்களுக்கு ஒரு சாலை கிடைக்குமா?" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், அப்பகுதியில் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக சித்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா ஆகியோர் உறுதியளித்தனர்.

    இது தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, "ஒவ்வொரு பிரசவத்திற்கும் ஒரு தேதி உண்டு. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பணிகளை முடித்துவிடுவோம். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்குவோம்.

    இதுவரை சாலை மோசமாக இருந்த காரணத்தால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்ட்டுள்ளார்களா? தேவைப்பட்டால், எங்களிடம் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் உள்ளன. எங்களிடம் ஆஷா பணியாளர்கள் உள்ளனர். எங்களிடம் ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வனத்துறையின் ஆட்சேபனைகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருகிறது" என்று தெரிவித்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய மத்தியபிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் ராகேஷ் சிங், "சமூக ஊடகங்களில் யாராவது ஒரு பதிவை போட்டால் அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டுமா? பட்ஜெட்டுகள் குறைவாகவே உள்ளன. சமூக ஊடகங்களில் கூறப்படும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது" என்று தெரிவித்திருந்தார்

    • திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
    • மாணவியை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.

    நேற்று மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.

    இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தினர்.

    இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.

    • இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது.

    ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

    தொடர்ந்து 7 ஆவது நாளாக இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மருத்துவமனையில் சில பகுதிகள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தின் மூலம் ஜானிடெப் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.
    • தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

    ஜானிடெப் தற்போது 'டே ட்ரிங்கர்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயினில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜாக் ஸ்பேரோ உடையில் ஜானிடெப் சென்றுள்ளார்.

    மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசிஜானிடெப் விளையாடியுள்ளார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

    ×