என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உத்தரப் பிரதேசம்
- உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன
- 2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதற்கு முன்னதாக இந்த தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என சமாஜ்வாதி கட்சி அறிவித்திருந்தது.
2000, 2004,2009 ஆகிய ஆண்டுகளில் கன்னோஜ் தொகுதியில் இருந்து அகிலேஷ் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 2012 இல் அவர் முதலமைச்சரான பிறகு அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அத்தொகுதியில் டிம்பிள் வெற்றி பெற்றார். ஆனால் அவர் 2019 இல் பாஜகவின் சுப்ரத் பதக்கிடம் அவர் தோல்வியடைந்தார்.
இந்த தொகுதிக்கு மே 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்கு உள்ள 80 இடங்களில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது, மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் அதன் சிறிய கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
- கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவருக்கு திருமணமாகி சாபி என்ற மனைவி உள்ளார். மிஸ்ராவின் தங்கை திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெற இருந்தது. இதையடுத்து தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டி.வி., ஒன்றை பரிசாக வாங்கி கொடுக்க சந்திர பிரகாஷ் முடிவு செய்தார். இதனை அறிந்த அவரது மனைவி கோபமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது.
இதனால் கோபமடைந்த சாபி, கணவருக்கு பாடம் கற்பிக்க தனது சகோதரர்களை அழைத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் வந்து நடத்திய பேச்சுவார்த்தை முற்றி தகராறாக மாறியுள்ளது. இதில் சந்திர பிரகாஷை சாபியின் சகோதரர்கள் சுமார் 1 மணிநேரமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திர பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சந்திர பிரகாஷின் மனைவி சாபி உள்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட சுமார் 70 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூக வலைதளங்களில் மாணவியை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
- சாதனை படைத்த மாணவியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கேலி செய்யாதீர்கள் என பலரும் பதிவிட்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவியை சமூக வலைதளங்களில் உருவ கேலி செய்து பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்தின் சீதாபூரில் உள்ள சீதாபால் வித்யா மந்திர் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிராச்சி நிகாம் ஆண்டு இறுதி தேர்வில் 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இதனால் மாணவியின் கல்வித்திறனை பாராட்டி பலரும் அவரை வாழ்த்தினர்.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் மாணவி பிராச்சி நிகாமை உருவ கேலி செய்து பதிவிட்டனர். அந்த மாணவிக்கு முகத்தில் ஆண்கள் போன்று மீசை வளர்ந்திருக்கும் என குறிப்பிட்டு ஏராளமானோர் பிராச்சி நிகாமுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதால் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாணவியை விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். எக்ஸ் தளத்தில் ஒரு பயனரின் பதிவில், மாணவி பிராச்சி நிகாமின் கல்வி, புத்திசாலிதனம் தான் கவனத்தை ஈர்க்க தகுதியானது. அவரது தோற்றம் அல்ல என மாணவிக்கு ஆதரவாக பதிவிட்டார். இதே போல சாதனை படைத்த மாணவியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கேலி செய்யாதீர்கள் என பலரும் பதிவிட்டனர்.
Prachi Nigam brilliantly was the best in her exams and is being celebrated
— AskAubry ? (@ask_aubry) April 22, 2024
And this dude pretty much dismisses her achievement in order to announce it doesn't really matter because he doesn't find her attractive. pic.twitter.com/zwk4NNNaqc
- ஊடுருவல்காரர்களுக்கு உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ?
- இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
ராஜஸ்தானில் நேற்று பரப்புரை செய்த பிரதமர் மோடி, இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்புக் கருத்துகளை பேசிய நிலையில், இன்று உ.பி. அலிகாரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய சகோதரிகளின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று பேசிய பிரதமர் மோடி," அதிக பிள்ளைகள் பெறுபவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் உங்கள் செல்வத்தை கொடுக்கப் போகிறீர்களா ? என கேட்டிருந்தார்.
நேற்று சர்ச்சையாக பேசிய நிலையில் இன்று இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி பேசியதாவது:-
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
முன்பு குறைவான ஹஜ் ஒதுக்கீட்டால், லஞ்சம் கொடுத்த அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக சவுதி இளவரசியிடம் நான் பேசி இஸ்லாமியர்கள் ஹன் பயணம் மேற்கொள்வதற்கான கோட்டாவை அதிகரித்து கொடுத்தேன். விசாவும் எளிதாக்கப்பட்டது.
ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியே ஹஜ் செல்ல முடியும் என்பதால், இஸ்லாமிய சகோதரிகள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-
அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டார்.
- வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்டமாக 8 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் ஒரு வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ என்ற பெண் இணையத்தில் வைரலானார்.
அம்மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் வாக்குச்சாவடியில் அதிகாரியாக பணியாற்றிய இஷா அரோரோ ஓட்டுப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளுக்கு சென்று மேற்பார்வையிட்டார். இது தொடர்பான வீடியோவை பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் அவர் திடீரென இணையத்தில் பிரபலமானார். அம்மாநிலத்தில் உள்ள அரோரோ கங்கோங் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஹாங்கிர் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரியாக பணிபுரிபவர் ஆவார். இவர் தனது விடா முயற்சியுடன் பணிபுரிந்தற்காக பயனர்களால் பாராட்டப்பட்டார்.
இதுகுறித்து இஷா அரோரோ கூறுகையில், நான் எனது கடமையை சரியாக செய்கிறேன் என்றார்.
#WATCH | Saharanpur, UP: Polling Agent Isha Arora says, "I think that if you get any duty, you should be punctual and that's the reason I have assumed my duty on time. Every man and woman should be punctual to let the functioning be smooth."
— ANI (@ANI) April 19, 2024
Regarding her video going viral, she… pic.twitter.com/Xo44vVeYyQ
- பூமிகா என்ற ரசிகை டோனியின் பேட்டிங்கை பார்த்த பிறகு அவருக்கு சிறப்பு செய்தியுடன் கூடிய பிளக்ஸ் கார்டை காட்டிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலானது.
- புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது டோனியின் ரசிகையான பூமிகா என்ற ரசிகை டோனியின் பேட்டிங்கை பார்த்த பிறகு அவருக்கு சிறப்பு செய்தியுடன் கூடிய பிளக்ஸ் கார்டை காட்டிய புகைப்படம் எக்ஸ் தளத்தில் வைரலானது.
மேலும் பூமிகா தனது வலைதள பக்கத்தில் அந்த படத்தை பகிர்ந்து, மஹேந்திர சிங் டோனியின் பேட்டிங்கை நான் கண்டேன் என எழுதி இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றது.
Mahi ki vintage batting dekh li?? pic.twitter.com/v6fZdlXVSa
— Bhumika (@thisisbhumika) April 19, 2024
- இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்.
- ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது.
மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.
நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் அம்ரோஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் கன்வர் சிங் தன்வாரை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ளவர்கள் பசியுடன் போராடும் போது, இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்" என்று கூறினார்.
மேலும், " 23- 24 கோடி மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான், 1947-ல் பிரிவினைக்குப் பிறகு உருவானது. இன்று பட்டினியால் வாடுகிறது. இதுவும் ஒரு உதாரணம்.
பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
ஒரு பக்கம் பாகிஸ்தான் இவ்வாறு உள்ளது. மறுபுறம், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி.
ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது- 'மீண்டும் மோடி அரசு' என்று.." என்றார்.
லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மேற்கு உத்தரபிரதேசத்தில் எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், பேரணியில் ஆதித்யநாத் உரையாற்றினார். அம்ரோஹாவில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது.
- சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது.
- இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பகுதிகளில் உள்ள 8 தொகுதிகளில் நடைபெற்றது. அந்த இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது பா.ஜனதா பொய்களை அள்ளி வீசியது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
சூறையாடுதல் மற்றும் பொய்களை பா.ஜனதா கடந்த 10 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சியை போன்று அதிக அளவில் பொய் சொல்ல வேறு கட்சிகள் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பா.ஜனதா மிகப்பெரிய பொய்யர்.
மேற்கு திசையில் இருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இந்த முறை பா.ஜனதாவை முற்றிலும் அகற்றிவிடுவது போல் உணர்த்துகிறது. இது பா.ஜனதாவின் முதல் நாளின் முதல் ஷோ பிளாப் போன்று உள்ளது.
பா.ஜனதா திரும்ப திரும்ப சொல்லுவதை பொதுமக்கள் யாரும் கேட்க விரும்பவில்லை. தற்போது வரை அவர்கள் புனைந்துள்ள கதை, யாரும் கேட்க விரும்பாத வகையில் உள்ளது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
- சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை.
2014 தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டியிட்டனர். ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். அப்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.
தற்போது ஸ்மிரிதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.
வயநாட்டில் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதி நடைபெற இருக்கிறது. அமேதியில் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி குடும்பத்தை மாற்றிவிட்டார் என ஸ்மிரிதி இரானி என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-
ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும். சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 26-ந்தேதிக்குப் பிறகு அவர் இங்கு வரும்போது, நம்மை மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்வார்.
அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பது தெரிந்த பிறகும், ராமபக்தர்கள் அவரை ராம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்தனர். அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் (எம்.பி.) ஆணவத்தால் அழைப்பை மறுத்தது வருத்தமளிக்கிறது" என்றார்.
ராகுல் காந்தியை விமர்சனம் செய்திருந்த நிலையில், அமேதி தொகுதிக்காக ஸ்மிரிதி இரானி செய்த ஐந்து பணிகளை தெரிவிக்கட்டும் என காங்கிரஸ் தலைவர் சவால் விட்டுள்ளார்.
- விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
- இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் பிரியங்கா காந்தி.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது? விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால் பா.ஜ.க. 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்