என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ரிக்ஷா டிரைவர் சட்டை பைக்குள் இருந்து பாம்பை எடுத்ததால் பரபரப்பு.
    • போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இ-ரிக்ஷா டிரைவர் ஒருவர், தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் தீபக் (வயது 39). இவர் இ-ரிக்ஷா டிரைவர் ஆவார். இன்று காலை மதுராவில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். திடீரென தனது பைக்குள் இருந்து சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள பாம்பை வெளியில் எடுத்தார். அப்போது பாம்பு படம் எடுப்பதுபோல் தலையை சற்று தூக்கியது.

    இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அதிர்ச்சி அளித்தனர். டாக்டர்கள் அவரிடம் பாம்பை வெளியில் விட்டுவிட்டு வரவும் எனக் கூறினர். இந்த பாம்பு தன்னை கடித்து விட்டதாகவும், விஷ முறிவு ஊசி போட வேண்டும் என்றும் டாக்டர்களிடம் அடம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பாம்பு மீட்கப்பட்டது. எனினும், அந்த பாம்பு தீபக்கிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

    • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
    • வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

    இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.

    இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

    • அந்த மாந்திரீகன், "உனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் உனது மகன் குணமடைவான்" என்று கூறியுள்ளான்.
    • சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

    உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்புவழங்கி உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தை சேர்ந்த அனூப் குமார் வர்மா தனது மகன் அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் ஒரு மாந்திரீகனை சென்று சந்தித்தார்.

    அந்த மாந்திரீகன், "உனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை நரபலி கொடுத்தால் உனது மகன் குணமடைவான்" என்று கூறியுள்ளான்.

    இதை குமார் வர்மா, தனது உறவினரின் மகனான 10 வயது விவேக் வர்மாவை கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் கடத்திச் சென்று நரபலி கொடுத்தார்.

    இந்த வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்து கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சுனில் பிரசாத் நேற்று தீர்ப்பு வாசித்தார்.

    இந்த வழக்கின் கொடூரத்தன்மை மற்றும் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனூப் குமாருக்கு மரண தண்டனை விதித்தார்.

    மேலும், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மாந்திரீகன் உட்பட இருவர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். 

    • தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
    • திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் முகேஷ் ஜா என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் ஜாவும் அனிதாவும் ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில காலத்திலேயே அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

    அனிதா தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.

    தங்களது திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.

    அன்று இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற அனிதாவை வழிமறித்த முகேஷ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தலைமறைவான முகேஷை, நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அவர் போலீசாரைச் சுட முயன்றபோது, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

    • உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்க இந்த நடவடிக்கை.

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் அசைவ உணவு விற்பனை மற்றும் விநியோகதிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    ஏற்கெனவே அயோத்தியின் பஞ்சகோசி மற்றும் கோசி பரிக்ரமா எல்லைகளுக்குள் மது மற்றும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் தடை 15 கி.மீ சுற்றளவிற்கு விரிவாக்கப்பட்டுள்ளது.

    ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் இந்தப் பகுதிக்குள் அசைவ உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது.

    மேலும், ராமர் கோயிலை மையமாக வைத்து 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு உட்பட்ட பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்யக் கூடாது என்று ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அயோத்தியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது மக்களின் தனிமனித உணவு உரிமையில் தலையிடும் செயல் என்றும், உணவு விநியோகத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

    • உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 12,55,56,025 பேர் இடம் பிடித்திருந்தனர்.
    • 18.70 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. டிசம்பர் 26-ந்தேதி வரை மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. பின்னர் அவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இன்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 27-ந்தேதி வரை உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் 15,44,30,092 பேர் இடம் பிடித்திருந்தனர். SIR படிவத்தை 12,55,56,025 வாக்காளர்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ளனர். இது 81.30 சதவீதம் வாக்காளர்கள் ஆகும். இதன் மூலம் 18.70 சதவீதம் வாக்காளர்கள் அல்லது 2.89 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதில் 46.23 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர். 2.57 கோடி வாக்காளர்கள் நிரந்தரமாக வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அல்லது படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்திருக்காதவர்கள். 25.47 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் இடம் பிடித்தவர்கள் என உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஆட்சேபனை தெரிவிப்பவர்கள், விடுபட்டவர்கள் ஜனவரி 6-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆசை வார்த்தை கூறி அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர்.
    • சிறுமியை மொட்டை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    உத்தரப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உ.பி.யின் புலந்த்ஷாஹரின் சகோட் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை அதே பகுதியால் வசிக்கும் ராஜு, வீறு காஷ்யப் என்ற 2 இளைஞர்கள் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு வைத்து இருவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    குற்றத்தை மறைக்க, வன்கொடுமை செய்தபின் அந்தச் சிறுமியை மொட்டை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசியுள்ளனர்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதைக் கண்டு குற்றவாளிகள் தப்பியோடினர்.

    பலத்த காயமடைந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான 2 போரையும் கைது செய்துள்ளனர்.

    அவர்கள் மீது போக்சோ மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • பெண் தனியாக இருப்பதை அறிந்த சுக்ராம் பிரஜாபதி, கதவை உள்பக்கமாகப் பூட்டியுள்ளார்.
    • உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்யமுயன்ற நபரை இளம்பெண் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் மாநிலம் பண்டா மாவட்டத்தில் தந்தையை இழந்த 18 வயது இளம்பெண் தனது தாயுடன் வசித்து வந்தார்.

    ஜனவரி 1 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்ற நிலையில் அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    மதியம் 3.30 மணியளவில் பக்கத்துக்கு வீட்டுக்காரரான சுக்ராம் பிரஜாபதி (50),பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

    இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்த அவர், கதவை உள்பக்கமாகப் பூட்டிவிட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

    அப்பெண் தன்னை தற்காத்துக்கொள்ள அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் சுக்ராம் அப்பெண்ணை தடுத்துள்ளார்.

    அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த இளம்பெண், தற்காப்பிற்காக அவரை வெட்டியுள்ளார். இதில் சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    கொலை செய்த பிறகு, அப்பெண் ரத்தம் படிந்த கோடாரியுடன் நேராக அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று நடந்ததைச் சொல்லி சரணடைந்தார்.

    உயிரிழந்த சுக்ராமின் மனைவியின் புகாரின் பேரில், காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

    முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண் தற்காப்பிற்காகவே இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தற்காப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் அவரை விடுவிக்கத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் தேடிவந்தனர்.
    • போலீசார் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றபோது துப்பாக்கிச்சூடு.

    உத்தர பிரதேசத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அம்ஜத் கான் (வயது 35) என்பவரை போலீசார் தேடிவந்தனர்.

    அம்ஜத் கான் பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அம்ஜத் கான், போலீசார் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட தொடங்கினான்.

    இதனால் போலீசார் தங்களை பாதுகாக்க பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அம்ஜத் கான் காலில் குண்டு பாய்ந்தது. குண்டு தாக்கி சுருண்டு விழுந்த அம்ஜத் கானை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    அம்ஜத் கானிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.
    • ஷாருக்கான் ஒரு முஸ்லிம் என்பதால் அவர் மீது இத்தகையத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சங்கீத் சோம், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை துரோகி என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.

    இதுகுறித்து அண்மையில் பேசிய பாஜக தலைவர் சங்கீத் சோம், "ஒருபுறம், வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம், ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள்.

    ஷாருக் கான் 9 கோடி ரூபாய் செலவழித்து ரஹ்மானை வாங்கியுள்ளார். இன்று, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பிரதமரை அவமதிக்கிறார்கள்.

    ஆனால் ஷாருக்கான் போன்ற துரோகிகள் 9 கோடி ரூபாய் செலவழித்து அவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை.

    முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற வங்கதேச வீரர்கள் இந்தியாவுக்கு விளையாட வந்தால், அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியாது. அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பும்" என்று தெரிவித்தார்.

    இதனை வெறுப்பு அரசியல் என்றும், ஷாருக்கான் ஒரு முஸ்லிம் என்பதால் அவர் மீது இத்தகையத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  

    • வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் கூறினர்.
    • அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர்.

    உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள குடிசைப் பகுதி ஒன்றில் அம்மாநில போலீசார் சிலர் அதிரடியாக நுழைந்து அங்கு யாராவது வங்கதேசத்தவர் சட்டவிரோதமாக வசிக்கிறீர்களா? என சோதனையிட்டனர்.

    இதன்போது ஒரு போலீஸ், அங்கு வசிக்கும் ஒருவரின் முதுகை தனது செல்போனில் ஸ்கேன் செய்து போல தேய்த்து நீ வங்கதேசத்தை சேர்த்தவன் என இதில் காட்டுகிறது என கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.

    வைரல் வீடியோவில், போலீஸ்காரர், அந்த நபரின் முதுகில் மொபைல் போனை வைத்து, சூப்பர் மார்க்கெட் பார்கோடு ஸ்கேனர் போல தேய்க்கிறார். அந்த நபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விலாசம் இதன் மூலம் தெரிந்துவிடும் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.

    இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ரோஷ்னி இன்று, செய்தியாளர்களிடம் பேசுகையில், டிசம்பர் 23 அன்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரி (SHO) தலைமையிலான போலீசார் எங்கள் பகுதிக்கு வந்தனர்.

    எங்களிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டனர். நாங்களும் ஆவணங்களைக் காட்டினோம்.

    வங்கதேசத்தவரைக் கண்டறியும் இயந்திரத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம் என்று போலீசார் எங்களிடம் கிண்டலாகக் கூறினர்.

    ஆனால் உண்மையில் அங்கே எந்த இயந்திரமும் இல்லை. அவர்கள் கையில் போனை வைத்துக்கொண்டு என் மைத்துனரின் முதுகில் தேய்த்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா என்பது தெரிந்துவிடும் என்று கூறினர்.

    நாங்கள் 1986 முதல் இங்கே வசிக்கிறோம். எங்கள் பூர்வீகம் பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் ஆகும். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு போலீசார் அங்கிருந்து சென்றனர்" என்று தெரிவித்தார்.

    போலீசாரின் இந்த செய்கை, மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களிடம் இருந்து உண்மையையே வரவழைக்கவே இவ்வாறு செய்ததாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் தனது செயலுக்கு நியாயம் கூறியுள்ளார். 

    • நோ-பார்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தியதால் தகராறு.
    • சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூட பார்க்காமல் பொது இடத்தில் வைத்து அடித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கவுன்சிலராக (ஹுகுல்கஞ்ச்) இருப்பவர் சந்திர ஸ்ரீனிவாஸ்தவா. இவரது மகன் நேற்று சவுக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

    அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் இங்கே வாகனத்தை நிறுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக் கொண்டிருக்கும்போதே, சற்றென்று சப்-இன்ஸ்பெக்டரை கவுன்சிலர் மகன் பளார் என அறைந்துள்ளார்.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டரும், அங்கிருந்த மக்களும் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் ஒன்று கூடி கவுன்சிலர் மகனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர்.

    கவுன்சிலர் மகன் மீது வழக்குப்பதிவு செய்து, சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    ×