என் மலர்

    உத்தரப் பிரதேசம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
    • இச்சம்பவத்தை எம்.எல்.ஏ. ஜெய்வீர் சிங் கவனிப்பதும் பதிவாகியுள்ளது

    பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அலிகாரின் கோல் பகுதியில் ஸ்ரீராம் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல் சட்டசபை உறுப்பினர் அனில் பராசர் ஏற்பாடு செய்திருந்தார். அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் முன்னாள் மேயர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

    இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சதீஷ் குமார் கவுதம் (51). கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த சதீஷ், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவரின் தோளில் கை போட்டார். இந்த அநாகரீகமான செய்கையை அடுத்து அப்பெண் எம்.எல்.ஏ. தனது இருக்கையை மாற்றி அதே மேடையில் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சி அங்கிருந்த சிலரால் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், எம்.பி.யின் அத்துமீறலை அந்த பெண் எம்.எல்.ஏ. தடுக்க முற்படுவதும் இந்த சம்பவத்தை பா.ஜ.க.வின் பரோலி எம்.எல்.ஏ.வான தாகுர் ஜெய்வீர் சிங் கவனிப்பதையும் காண முடிகிறது.

    இந்நிகழ்ச்சி வைரலானதை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.யின் அநாகரீக செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய ஊடக பொறுப்பாளர் சுரேந்திர ராஜ்புத், "இதுதான் கலாச்சார பெருமை பேசும் பா.ஜ.க.வின் உண்மையான கலாச்சாரம்" என விமர்சித்துள்ளார்.

    இதுவரை இச்சம்பவம் குறித்து பா.ஜ.க.வின் தரப்பிலிருந்து எந்த அறிக்கையோ அல்லது அந்த எம்.பி. மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த செய்தியோ வரவில்லை.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் கூட்ட தொடரில் பெண்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளில் 33% இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை பா.ஜ.க. கொண்டு வந்தது. ஆனால், மேடையில் பெண் எம்.எல்.ஏ.வை நிம்மதியாக அமர கூட விடவில்லை என இந்நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.
    • உடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வாகனம் ஏற்பாடு செய்வதற்குள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கிரோர் நகரில் 12-ம் வகுப்பு படித்த மாணவி பாரதி. இவர் காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் அந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.

    அதையடுத்து அவரை ஒரு மோட்டார்சைக்கிளில் ஏற்றி வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் மோட்டார்சைக்கிளில் ஏற்றப்பட்ட நிலையில் அந்தச் சிறுமி இறந்துவிட்டார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரியின் தவறான சிகிச்சையால்தான் சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வாகனம் ஏற்பாடு செய்வதற்குள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர் என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமான பிரஜேஷ் பதக் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'சிறுமி மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, அங்கிருந்த மற்ற நோயாளிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

    இந்த மாத தொடக்கத்தில், அமேதியில் உள்ள, சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் இதுபோல அலட்சியம் காரணமாக ஒரு நோயாளி இறந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை மூட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.

    ஆஸ்பத்திரியை திறக்க அனுமதிக்க கோரி காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
    • இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரெயில் பிளாட்ஃபாரத்தின் மீது ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ரெயில் விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதன்படி ரெயிலை இயக்கி வந்த லோக்கோ பைலட், ஒருகட்டத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேறியதும், சில நொடிகளில் மற்றொரு லோக்கோ பைலட் ரெயிலில் ஏறுகிறார்.

    ஏறும் போதே தனது மொபைல் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த அவர் உள்ளே நுழைந்ததும், கதவை இழுத்து மூடினார். பிறகு, உள்ளே வந்த அவர் தனது பையை ரெயிலை இயக்கும் ஸ்விட்ச் மீது வைத்து, தொடர்ச்சியாக மொபைல் போனை பயன்படுத்துகிறார். இந்த சூழலில் தான் திடீரென ரெயில் வேகமெடுத்தது.

    உடனே சுதாரித்துக் கொண்ட அவர் ரெயிலை நிறுத்தும் முன்பு அது, பிளாட்ஃபாரத்தின் மீது ஏறியது. இதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஐந்து பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக நேற்று மாலை அவளது குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியபோது சிறுமி அவளது பக்கத்து வீட்டுக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து பக்கத்தை வீட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை கொலை செய்ததாக கூறினார். சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன். சிறுமி சிப்ஸ் வாங்கி வந்து தின்றாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொலை செய்தேன் என்றான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனது சகோதரர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்.
    • மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி நின்றது.

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மயக்கம் அடைந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்துக்கு வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த 16 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அவளை மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்ய வருமாறு அழைத்து சென்றார்.

    அந்த சமயம் அதே பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் 3 பேரும் அந்த சிறுமியை கத்திமுனையில் காரில் கடத்தி சென்றனர். ஓடும் காரில் 3 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    இதையடுத்து மயக்கம் அடைந்த சிறுமியை மாட்டுத் தொழுவத்துக்கு வெளியில் வீசி விட்டு சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி அவருக்கு கிடைத்தது. அவர் மூலம் ஆன்லைனில் இலவச பயிற்சி பெற்றார்.
    • கல்விக்கு மட்டும்தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிர யாக்ராஜ் பகுதியில் உள்ள பராய் ஹராக் கிராமத்தை சேர்ந்தர் ஷோத் அகமது (வயது50). இவர் தனது கிராமத்தில் ஒரு குடிசையில் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் போடும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அப்சானா பேகம் (47). இவர் பெண்க ளுக்கு துணி தைத்து கொடுக்கிறார். இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் சமத் (30) சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இளைய மகன் வஜாகத் (24) தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். ஷேசாத் அகமதுவின் 2-வது மகன் அஹத் அகமது (26).

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அலகாபாத் ஐகோர்ட்டில் உள்ள ஒரு வக்கீலிடம் ஜுனியராக சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்கினார். இந்நிலையில் அஹத் அகமது, நீதிபதியாக வேண்டும் என்று விரும்பினார். அதுவே அவரது லட்சியமாகவும் இருந்தது. இந்நிலையில் கொரோனா முழு அடைப்பின் போது அஹத் அகமது நீதிபதி தேர்வுக்காக பயிற்சி பெற விரும்பினார். ஆனால் அவரால் ஏழ்மை காரணமாக பயிற்சி நிறுவனத்தில் சேர முடியவில்லை. இதையடுத்து இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி அவருக்கு கிடைத்தது. அவர் மூலம் ஆன்லைனில் இலவச பயிற்சி பெற்றார்.

    இந்நிலையில் பயிற்சியை முடித்ததும் அஹத் அகமது நீதிபதி பதவிக்கான தேர்வை எழுதினார். 303 பதவிகளுக்கான தேர்வில் அவர் 157-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அஹத் அகமது கூறுகையில், எங்கள் வீடு மிகவும் சிறிய வீடுதான். குடிசையில் வசித்த எங்களை பெற்றோர் கஷ்டப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வைத்தனர். கல்விக்கு மட்டும்தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி உள்ளது. கல்வி மீது உள்ள நம்பிக்கையால் எங்களுக்கு பலன் கிடைத்துள்ளது" என்றார்.

    அஹத் அகமதுவின் தாயார் அப்சானா பேகம் கூறுகையில், எனது கணவரின் வருமானம் எங்களுக்கு உணவுக்கே போதுமானதாக இல்லை. ஆனால் எங்கள் மகன்களை படிக்க வைக்க விரும்பினோம். எனவே நான் தையல் தொழிலில் ஈடுபட்டேன். நானும், கணவரும் கடினமாக உழைத்தோம். எங்கள் முயற்சி வெற்றி அடைந்துள்ளது என்றார். குடிசையில் வாழ்ந்த அஹத் அகமது தற்போது தனது தாயார் மற்றும் தந்தையை தனக்கு கிடைக்கப் போகும் வசதியான நீதிபதிகள் குடியிருப்புக்கு மாற்றும் நாளுக்காக காத்திருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
    • பிரதமர் கான்வாய் குறுக்கே ஓடி வந்த நபர், பா.ஜ.க.-வை சேர்ந்தவர்.

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் இடையூறு ஏற்பட்டது. மர்ம நபர் ஒருவர் பிரமதர் நரேந்திர மோடியின் கான்வாயை இடைமறித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பிரதமர் மோடியின் கான்வாய் வாரணாசியின் ருத்ராக்ஷ் செண்டர் வந்த போது, இந்த சம்பவம் அரங்கேறியது.

    பிரதமர் கான்வாய் குறுக்கே ஓடி வந்த நபர், பா.ஜ.க.-வை சேர்ந்த கிருஷ்ண குமார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசியாப்பூரை சேர்ந்த கிருஷ்ண குமார், பிரதமர் மோடியின் கான்வாய் அருகே செல்ல முயன்ற நிலையில், பாதுகாப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரை விரைந்து சென்று பிடித்தனர். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர் ஓடி வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    "பா.ஜ.க. கட்சியின் மூத்த உறுப்பினர் பரத் குமாரின் மகன், கிருஷ்ண குமார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார், மேலும் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க விரும்பியுள்ளார்," என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    முன்னதாக வாரணாசியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்திருந்தார். இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் டிசம்பர் 2025 வாக்கில் நிறைவுபெறும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டில் தங்கியிருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்துள்ளார்.
    • விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.

    இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.

    குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மகாதேவுக்கே அர்ப்பணிக்கிறேன்.
    • வீரர்களின் திறமையை வளர்ப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.

    வாரணாசி தொகுதியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதனை சிவபெருமானுக்கே அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார்.

    "மகாதேவ் நகரில் அமையவிருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மகாதேவுக்கே அர்ப்பணிக்கிறேன். இந்த மைதானத்தால், இங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயன்பெற முடியும். மேலும் இது பூர்வான்ச்சல் பகுதியில் புகழ்பெற்ற இடமாக மாறும். விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்புகள் உருவாகும் போது, அது இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதோடு உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்," என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

     

    புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வெங்சர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி, பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா மற்றும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த மைதானம் அமைப்பதற்கான இடத்தை கையகப்படுத்த மாநில அரசு ரூ. 121 கோடியை செலவிட்டு இருப்பதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த மைதானத்திற்கான கட்டுமானத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 330 கோடி செலவிடப்பட இருக்கிறது. இந்த மைதானத்தில் 30 ஆயிரம் பேர் அமர முடியும்.

     

    மைதானத்தை அழகுப்படுத்தும் விதமாக ஆங்காங்கே உடுக்கை, வில்வம் இலைகள் போன்ற வடிவம் கொண்ட ரூஃப் கவர்கள் மற்றும் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. பார்வையாளர்களின் அரங்கம் வாரணாசி நதியோரம் இருக்கும் படிக்கட்டுகளை போன்று காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இந்த மைதானம் 2025 டிசம்பர் மாதம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print