என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
    • இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

    உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் சந்தைக்குச் சென்றபோது ஒரு பானி பூரி தள்ளுவண்டி கடையில் நின்று பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.

    பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடம்பெயர்ந்தது. பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.

    இதனால் அவர் கடுமையான வலியை சந்தித்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

    எனவே அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடப்பெயர்வை அங்குள்ள மருத்துவர்கள் நீண்ட முயற்சியின் பின் சரி செய்தனர்.  

    • நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை.
    • 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் இதன்போது பணிச்சுமை மற்றும் மூத்த அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல BLOக்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணி அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் சர்வேஷ் சிங் (46) தற்கொலை செய்து கொண்டார்.

    உதவி ஆசிரியரான சர்வேஷ் சிங், அக்டோபர் 7 ஆம் தேதி பிஎல்ஓ ஆக நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பான பணிகளுக்கான அவரது முதல் பணி இதுவாகும்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோவில், சர்வேஷ் சிங், "கடினமாக உழைத்தாலும், என் வேலையை முடிக்க முடியவில்லை. நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. மற்றவர்கள் வேலையை முடித்து வருகிறார்கள். அம்மா, சகோதரி என்னை மன்னித்து விடுங்கள். எனது மகள்களை பார்த்துக்கொள்ளுங்கள். நான் தேர்தல் பணியில் தோற்று விட்டேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர்வேஷ் சிங் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாப்லி தேவி அதிர்த்துப்போனார். தவலறிந்த போலீசார் சம்பவ இடதிற்கு விரைந்தனர்.

    சம்பவ இடத்தில் இரண்டு பக்க கையால் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.  இதற்கிடையே நாடு முழுவதும் 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, துருக்கியின் நல்ஜியான் இன்சி-பென்கிசு எர்டின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையான லோ சின் யானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர்.
    • பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார்.

    உத்தர பிரதேசத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் கங்கா காட் பகுதிக்கு நான்கு பேர் ஒரு இறந்த உடலை தகனத்திற்காக கொண்டு வந்தனர்.

    சடங்குகளின்படி இறுதிச் சடங்கை செய்வதற்குப் பதிலாக, உடலை நேரடியாகச் சிதைக்கு எடுத்துச் சென்று தகனத்தைத் தொடங்கினர்.

    நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர். உடலில் இருந்த துணிகள் அகற்றப்பட்டபோது, ஒரு பிளாஸ்டிக் போலி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவர்களில் இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் பிடிபட்ட இருவரை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

    கைது செய்யப்பட்ட டெல்லியின் கைலாஸ்புரியைச் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி ரூ.50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க, அவர் தனது நண்பர் ஆஷிஷ் குரானாவுடன் ஒரு திட்டம் தீட்டினார்.

    இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கமல் சோமானி, முன்பு தன்னிடம் பணிபுரிந்த அன்ஷுல் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பய்னபடுத்தி ஒரு வருடம் முன்பு, அன்ஷுலின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கி, பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார். காப்பீட்டுத் தொகையைப் பெற, அன்ஷுல் இறந்துவிட்டதாகக் காட்ட போலி இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.

    பின்னர், நண்பர்களின் உதவியுடன், தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைக்க போலி இறுதிச் சடங்கு செய்ய முயன்றார்.

    போலீசார் அன்ஷுலைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது பெயரில் பாலிசி இருப்பது கூட தெரியாது என்றும் கூறினார்.

    இதன் மூலம், கமல் சோமானி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். 

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சக நாட்டின் ஜெனித் அபிகைல்-லிதிகா ஸ்ரீவஸ்தவா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-17, 21-12 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாட்டு வீரர் சனீத் தயானந்த் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-6, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத் 21-16, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ராகௌல் பரத்வாஜை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷ்ரேயா லீலேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்ரையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, சக நாடு வீரர் கவின் தங்கம் உடன் மோதினார்.

    இதில் கிடாம்பி அதிரடியாக ஆடி 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 21-15, 21-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான ஷஷ்வத் தலாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

    லக்னோ:

    சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன்களான இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி- மலேசியாவின் செங் சூ ஹை- தன் ஜிங் யீ ஜோடி உடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 19-21 என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்.
    • பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்.

    அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடித்த நிலையில், கோவில் கோபுர உச்சியில் 30 அடி உயர் கொடிமரத்தில் புனித காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்று வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    * 2047-ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, நாம் ஒரு வளர்ந்த இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்

    * நமது ராமர் பாகுபாடு காட்டுவதில்லை, நாமும் அதே மனப்பான்மையுடன் முன்னேறி வருகிறோம்

    * இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ராமர் கோயில் கட்டுமானத்தில் எந்த வகையிலும் உதவிய அனைத்து ராமர் பக்தர்களை நான் வாழ்த்துகிறேன்.

    * பொய்யை இறுதியில் உண்மை வெல்லும் என்பதற்கு இந்த புனிதக் கொடி சான்றாக நிற்கும்

    * அயோத்தி அதன் வரலாற்றில் மற்றொரு சகாப்த நிகழ்வைக் காண்கிறது. முழு நாடும், உலகமும் ராமரில் மூழ்கியுள்ளது.

    * 100 ஆண்டுகளின் காயங்களும் வலிகளும் இன்று குணமடைகின்றன. 500 ஆண்டுகால உறுதிமொழி நிறைவேறி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கொடி ஏற்றுதல் விழா நடக்கிறது.
    • அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ளார். அயோத்தி சென்ற அவர் சாலை மார்க்கமாக ராமர் கோவில் செல்கிறார். அவர் செல்லும் வழியில் இரு பக்கத்திலும் மக்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்.

    கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது.

    ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    ×