search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gandhi"

    • அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார்.
    • 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நீங்கள் பிரதமர் மோடியின் பேச்சை கேட்டிருப்பீர்கள். அவர் பயப்படுகிறார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். அக்னிவீர் திட்டத்தை கொண்டு வந்து இளைஞர்களிடம் இருந்து ராணுவ பணியை பறித்தார். 20 முதல் 25 பேரை கோடீஸ்வரர்களாக்கி, அவர்களுக்கு நாட்டின் வளத்தை கொடுத்துள்ளார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    400 இடங்களில் வெற்றி என்பதை இலக்காக வைத்து பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. முதல் கட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் பா.ஜனதா பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்கிறது என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. பாஜனதாவுக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது.

    • மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
    • ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.

    மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.

    • மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
    • வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.

    தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.

    மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.

    ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.
    • ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பத்தின் கோட்டையாக ரேபரேலி தொகுதி இருந்து வருகிறது. கடந்த 1999-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இத்தொகுதி எம்.பி.யாக உள்ளார். சென்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஒரே தொகுதி ரேபரேலி ஆகும்.

    ஆனால் இம்முறை சோனியா காந்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் மேல்- சபை எம்.பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் வருகிற தேர்தலில் ரேபரேலியில் யார் போட்டியிட போகிறார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை காங்கிரஸ் சார்பில் இங்கு போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    நேரு குடும்பத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இத்தொகுதியில் சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வரும் பிரியங்கா முதல் முறையாக தேர்தலை நேரடியாக சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    உத்தரபிரசேதத்தின் மற்றொரு தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் தற்போது எம்.பி.யாக இருந்து வரும் ராகுல் காந்தி கடந்த தேர்தலில் அமேதி தொகுதியிலும் போட்டியிட்டார்.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்த அவர் சென்ற தேர்தலில் தற்போதைய மத்திய மந்திரியான ஸ்ருமிதி இரானியிடம் தோல்வியை தழுவினார். இருந்தபோதிலும் இம்முறை பாரதிய ஜனதாவை வீழ்த்தி வெற்றி கனியை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி அமேதியில் களம் இறங்க உள்ளார். இன்னும் ஓரிரு நாளில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராகுல் காந்தியும், பிரியங்காவும் மே மாதம் 1-ந்தேதியில் இருந்து 3-ந்தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக இருவரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளனர்.

    அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் 2-ம் கட்டமாக மே மாதம் 20-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 26-ந்தேதி தொடங்கி மே மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.
    • இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்

    பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். அதில்,

    "இந்த ₹16 லட்சம் கோடி பணத்தை வைத்து,

    16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்.

    16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்.

    இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்.

    10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்.

    20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கேஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்.

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார்.
    • காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என அன்வர் எம்.எல்.ஏ. பேசினார்.

    திருவனந்தபுரம்:

    தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள், கேரள மாநிலத்தில் தற்போதைய மக்களவை தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அவர்கள் அனைத்து தொகுதிகளிலும் இரு கூட்டணிகளாக இருந்து களம் காணுகின்றனர்.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதனால் இரு கட்சியினரும் எதிரும் புதிருமாக இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரசாரம் செய்தார்கள். ராகுல் காந்தி தனது பிரசாரத்தின் போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை அதிகமாக தாக்கி பேசினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில் கேரள மாநிலம் நீலம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அன்வர் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். காந்தி என்ற குடும்ப பெயருடன் அழைக்க தகுதியற்ற நான்காம் தர குடிமகனாக ராகுல் காந்தி மாறிவிட்டார். காந்தி என்ற குடும்ப பெயரை விடுவித்து ராகுல் என்று தான் அவரை அழைக்க வேண்டும். ராகுலின் டி.என்.ஏ.வை ஆய்வு செய்யவேண்டும் என்று பேசினார்.

    அவரது இந்த பேச்சுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆதரித்திருக்கிறார். மேலும் அவர், 'ராகுல் முதிர்ச்சியற்றவர், சுதந்திரமாக சிந்திக்க முடியாதவர். உள்ளூர் தலைவர்களின் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்கிறார். அதனால் தான் தனது பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ராகுலிடம் கேட்டுக்கொண்டேன்' என்றார்.

    இந்நிலையில் அன்வர் எம்.எல்.ஏ. மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கருத்து தெரிவித்த அன்வர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஹாசன் புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் அவர் தனது புகாரில், 'மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்டேவின் மறு அவதாரம் அன்வர். கோட்சேவின் தோட்டாக்களை விட அன்வரின் வார்த்தைகள் பெரிய ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. அன்வரின் கருத்துக்கள் பினராயி விஜயனின் ஆதரவுடன் கூறப்பட்டவை. ராகுல் காந்தியை அவமதித்தது மட்டுமின்றி ராஜீவ்காந்தியின் தியாகத்தையும் அவர் அவமதித்துள்ளார்' என்று கூறியிருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
    • மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கண்ணூரில் உள்ள வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அவர்கள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமப் பகுதிக்குள் அவ்வப்போது வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானாந்தவாடி பகுதியில் உள்ள வன அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் அதிரடியாக புகுந்த மாவோயிஸ்டு கும்பல், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியது. மேலும் அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடியது.

    இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள வனப்பகுதிகள் மட்டுமின்றி தமிழக வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்டு வேட்டை நடத்தப்பட்டது. மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட கம்பமலை பகுதிக்குள் இன்று காலை 4 மாவோயிஸ்டுகள் புகுந்தனர். துப்பாக்கியுடன் வந்த அவர்களை பார்த்த கம்பமலை பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்களை பார்த்து வருகிற மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தினர்.

    மேலும் அரசுக்கு கோஷங்களும் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களிடம் தங்களது கருத்துக்களை வெகுநேரம் தெரிவித்தப்படி இருந்த மாவோயிஸ்டுகள் பின்பு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    மாவோயிஸ்டுகள் வந்த தகவலை அறிந்த வனத்துறையினர் கம்பமலை பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் துப்பாக்கியுடன் வந்த மாவோயிஸ்டுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாவோயிஸ்டுகள் கம்பமலை கிராமத்திற்கு துப்பாக்கியுடன் சென்று பொதுமக்களை சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோ காட்சியில் மாவோயிஸ்டுகள் 4 பேரின் முகமும் தெளிவாக தெரிகிறது.

    அதன் மூலம் மாவோயிஸ்டுகள் 4 பேர் யார்? என்பதை வனத்துறையினர் அடையாளம் கண்டு உள்ளனர். அதன் அடிப்படையில் கிராமத்துக்குள் வந்த மாவோயிஸ்டுகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகள் தெரிவித்தார்.
    • இது அவர் பக்குவமற்ற அரசியல்வாதி என காட்டுகிறது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

    இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

    ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

    • 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 26 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 23 இடங்களிலும், அதன் இந்திய கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    • ராஜஸ்தானில் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது
    • அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,

    "சர்வாதிகாரியின் உண்மையான முகம் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களிடமிருந்து பறிப்பதும் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை அழிக்கும் வேலைதான்.

    மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் - இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் அல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல், அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான தேர்தல்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • 2-வது கட்ட வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்ற மக்களவைக்கான ஓட்டுப்பதிவை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. மொத்தம் உள்ள 543 இடங்களுக்கு முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    64 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. திரிபுராவில் அதிகபட்சமாக 80 சதவீதமும், பீகாரில் குறைந்தபட்சமாக 49 சதவீதமும் பதிவானது.

    2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன் விவரம்:-

    கேரளா-20, கர்நாடகம்-14, ராஜஸ்தான்-13, மகாராஷ்டிரா-8, உத்தரபிர தேசம்-8, மத்தியபிரதேசம்-7, அசாம்-5, பீகார்-5, சத்தீஸ்கர்-3, மேற்கு வங்காளம்-3, திரிபுரா-1, ஜம்மு காஷ்மீர்-1, மணிப்பூர்-1 ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவரது தொகுதிக்கான வாக்குப்பதிவு 2-வது கட்டத்தில் வருகிறது. ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஆனி ராஜாவும், பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் கே.சுரேந்திரனும் போட்டியிடுகிறார்கள். இதேபோல திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் சசிதரூரும், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகரும் களத்தில் உள்ளனர்.

    பாலிவுட் நடிகையான ஹேமமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியும் (உத்தரபிரதேசம்) 2-வது கட்டத்தில் வருகிறது. அவர் 3-வது முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். ராமாயணம் புகழ் அருண் கோவில் போட்டியிடும் மீரட் தொகுதியிலும் இரண்டாவது கட்டத்தில் தேர்தல் நடக்கிறது.

    2-வது கட்ட வாக்குப்பதிவுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதா, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தேர்தல் பரபரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவர் ஜாலோர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதேபோல மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அங்கு மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகள் 2-வது கட்ட தேர்தலில் வருகிறது.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சத்தீஸ்கரிலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கேரளாவிலும் பிரசாரம் மேற்கொண்டனர்.

    தலைவர்களின் தீவிர பிரசாரத்தால் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பிரதமர் மோடி இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.
    • காங்கிரசின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

    வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்கள் பலன் தராததால், அச்சத்தின் காரணமாக, அவர் இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப விரும்புகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் 'புரட்சிகர தேர்தல் அறிக்கை'க்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது.

    வேலைவாய்ப்பு, எதிர்கால நலன் போன்ற விஷயங்களை மனதில் வைத்துதான் இந்த தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    இந்தியா தவறான பாதையில் செல்லாது!

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×