என் மலர்
நீங்கள் தேடியது "வர்த்தக ஒப்பந்தம்"
- இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
- இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்தநிலையில் இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என அதிபர் டிரம்ப் சொல்லி வருகிறார். மேலும், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒருவர் கூறும் போது,"இந்தியாவுடன் எங்களுக்கு 2 விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நிச்சயமாக எங்களுக்குள் ஒரு பரஸ்பர பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்" என தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை.
- பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது.
இந்தியா- அமெரிக்கா இடையே பரிந்துரை செய்யப்பட்ட இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டும் இருநாட்டு தலைவர்களும் அவரவர் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் இருநாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்டத்திற்கான 5 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில் இந்தியா- அமெரிக்கா, இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் மிக அருகில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய தீர்மானத்திற்காக மிகப்பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஒப்பந்தம் தெடர்பான பேச்சுவார்த்தையில் தடங்களுக்கான எந்த பிரச்சினையும் இல்லை. பெரும்பாலான பிரச்சினையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செல்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் "ஒப்பந்தத்திற்கான அவசரம் காட்டமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
- அரிய மண் தாதுக்களை வைத்து சீனா எங்களை அச்சுறுத்தியது.
- நிறைய நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரியை விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. இப்பிரச்சனையை தீர்க்க இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்ததால் அதிருப்தி அடைந்த டிரம்ப், வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் சீனாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
சீனா எங்களுக்கு மிகவும் மரியாதை அளித்து வருவதாக நான் நினைக்கிறேன். அவர்கள் வரிகள் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பணத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் 55 சதவீதம் வரி செலுத்துகிறார்கள். சீனாவுடன் ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நாங்கள் செய்யப்போகிறோம் என்று நினைக்கிறேன்.
இது ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் அருமையாக இருக்கும். மேலும் இது முழு உலகிற்கும் அருமையாக இருக்கும். நவம்பர் 1-ந்தேதிக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன்.
அரிய மண் தாதுக்களை வைத்து சீனா எங்களை அச்சுறுத்தியது. நான் அவர்களை வரி விதிப்புகளால் அச்சுறுத்தினேன். அதே வேளையில் சீன அதிபர் ஜின்பிங்குடனான எனது நல்ல உறவால் மிகவும் நியாயமான ஒப்பந்தம் ஒன்று உருவாகும். வரும் நாட்களில் தென்கொரியாவில் சீன அதிபரை சந்திக்க உள்ளேன்.
நிறைய நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டன. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறையும் வாய்ப்பு
- கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், வர்த்தக பேச்சுவார்தைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் இன்று இந்தியா வந்தடைந்தார்.
கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு 190 மில்லியன் யூரோ பங்களிக்கும் என்றும் அதாவது இந்தியாவிற்கு ஆண்டுக்கு £1 பில்லியன் யூரோ அளவுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் குறித்து பேசிய ஸ்காட்லாந்திற்கான இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், "இங்கிலாந்து - இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மூலம் ஸ்காட்ச் விஸ்கி தொழில் வளர்ச்சியடையும். இந்த ஆண்டு இந்தியாவுடன் இங்கிலாந்து அரசாங்கம் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் ஸ்காட்லாந்திற்கும், குறிப்பாக நமது விஸ்கி தொழிலுக்கும் ஒரு சிறந்த செய்தியாகும். ஆனால் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளது.
இந்தியாவுடனான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தில் ஸ்காட்ச் விஸ்கி ஒரு பெரிய வெற்றியாளராக உள்ளது. இது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரத்துடன் இதுவரை எந்த நாடும் ஒப்புக் கொள்ளாத சிறந்த ஒப்பந்தமாகும்.
- ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலில் வர்த்தகம், ஃபென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவுக்குச் செல்வதாகவும், தொடர்ந்து ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு வருகை தருவார் என்றும் அவர் தெரிவித்தார்.
டிக்டாக் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காகவும் டிரம்ப் தனது நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக மோதல் காரணமாக இருதரப்பும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்தன.
பேச்சுவார்த்தைக்கு பின் ஏற்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தின்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது. இந்த ஒப்பந்தம் நவம்பரில் முடிவடைகிறது.
- உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
- இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.
ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.
இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.
"இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
- இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி நாளை டெல்லி வருகிறார்.
- Fast-track வர்த்தக பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், வெள்ளை மாளிகைக்கான வர்த்தக ஆலோசகர் பீடடர் நவோராவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவை வரி மகாராஜா எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருக்கிறேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருதரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தைக்கான பணிகளி வளர்ந்து கொண்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அது அவர்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை இந்தியா- அமெரிக்கா இடையிலான் Fast-Track பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதை இந்தியாவுக்கான பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் "இந்தியா- அமெரிக்கா fast-track வர்த்த பேச்சுவார்தை நடத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நாளை ஒருநாள் பயணமாக வர்த்தக ஒப்பந்த ஆலோசனைக்காக இந்தியா வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
- வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
- 990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.
வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி ரேஷனாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த கோல்ஃப் மைதான திட்டத்தை Kinhbac City என்ற வியட்நாம் நிறுவனம், டிரம்ப் நிறுவனத்திற்கு $5 மில்லியன் உரிம கட்டணம் செலுத்தி செயல்படுத்த உள்ளது.
டிரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
அதிகாரிகள், ஒரு சதுர மீட்டருக்கு $12 முதல் $30 வரை இழப்பீடு தருவதாக தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை.
ஹங் யென் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு $3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு.
990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) இறுதியாக ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருவருக்கும் இடையே ஒரு பெரிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள தனது கோல்ஃப் ரிசார்ட்டில் ஞாயிற்றுக்கிழமை, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான குறைந்தபட்ச வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு குறைந்தபட்ச வரியை 30 சதவீதம் விதிக்க அமெரிக்க அரசாங்கம் முன்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது.
இதுவரை கண்டிராத மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆட்டோமொபைல்கள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 15 சதவீத வரி விதிக்கும் என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிலிருந்து 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் மேலும் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க இராணுவ தயாரிப்புகளையும் வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தலைவர் உர்சுலா, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அமெரிக்காவிடமிருந்து எல்என்ஜி, எண்ணெய் மற்றும் அணு எரிபொருளை வாங்குவோம் என்று அவர் கூறினார். இந்த கொள்முதல்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறும் என்று அவர் கூறினார். ரஷிய எரிபொருட்களிலிருந்து பிற ஆதாரங்களுக்கு மாறுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
விமானங்கள், சில வகையான இரசாயனங்கள், விவசாய பொருட்கள் மற்றும் பிற முக்கியமான மூலப்பொருட்களுக்கு இருதரப்பு வரிச் சலுகைகளையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். தற்போது, அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சுமார் 1.6 டிரில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
- லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும் என தெரிவித்தார்.
இங்கிலாந்து உடனான வரி குறைப்பின் எதிரொலியால் இந்தியாவில் என்னென்ன பொருட்கள் விலை குறையும்?
ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார் போன்ற கார்களின் விலை குறையும். பிரிட்டனை சேர்ந்த மதுபானங்கள் குறைவான விலைக்கு கிடைக்கும்.
மருந்துகள் இந்திய சந்தைக்குள் வரி இல்லாமல் நுழைவதால் அவற்றின் விலையும் குறையும்.
காஸ்மெடிக்ஸ் , சாக்லேட், பிஸ்கட் ஆகியவற்றின் விலை குறையும். மருத்துவ கருவிகளின் விலையும் குறைகிறது.
பிரிட்டனில் தயாராகும் குளிர்பானங்கள், அழகுசாதன பொருட்கள், சாக்லேட்கள், பிஸ்கட்கள் மற்றும் கார்கள் ஆகியவை இந்தியர்களுக்கு கிடைப்பது எளிதாகும். மேலும் மின்சார வாகனங்கள் மீதான வரி குறையும்.
- இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
- வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






