என் மலர்

    நீங்கள் தேடியது "P Chidambaram"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.
    • இதில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.

    ஐதராபாத்:

    காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.

    இதைச் செயல்படுத்தக் குறைந்தது 5 அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வில் போதிய அளவில் எம்.பி.க்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.

    இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது
    • பாரத் பெயர் மாற்றம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். திடீரென இந்தியா மீது என்ன கோபம்?.

    எதிர்க்கட்சிகள் கூட்டணி I.N.D.I.A. என சுருக்கி இந்தியா என எழுதுவதால் கோபம் வந்துள்ளது. நாங்கள் Bharat என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?
    • சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி!

    சமையல் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வரும் என மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்தார். மேலும் ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளையொட்டி இது பெண்களுக்கு மோடி அரசு அளிக்கும் பரிசு. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாலும், இன்னும் மூன்று மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், ஆறு மாதங்களில் மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதை கருத்தில் கொண்டு விலையை குறைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களை எம்.பி.யும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?

    சமையல் காஸ் விலையை ரூ.200 குறைத்திருப்பதே அறிகுறி!

    ரூ. 1100-க்கு மேல் விலை வைத்து மக்களை கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!

    வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!

    இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்.
    • சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை.

    புதுக்கோட்டை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    3 குற்றவியல் சட்டங்களை மறுசீரமைத்து அதற்கு இந்தியில் பெயர் மாற்றம் செய்து புதிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். நான் இந்தியில் பெயர் வைப்பது கூடாது என்று சொல்லவில்லை. ஆங்கிலத்தில் சொல்லும்போது ஆங்கில பெயர் இருக்க வேண்டும். இந்தியில் சொல்லும்போது இந்தி பெயர் இருக்க வேண்டும்.

    இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தை எழுதும்போது ஆங்கிலத்தில் தான் எழுதப்படுகிறது. பிறகு இந்தியில் மொழி பெயர்க்கின்றனர். நீதிமன்றங்களில் ஆங்கில கடிதம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. இந்தி மொழி பெயர்ப்பை யாரேனும் எடுத்து சொன்னால் கூட அதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல், என்ன பிரிவு என்று நீதிபதிகளே கேட்கின்றனர். அதனால் ஆங்கிலத்தில் இருப்பது தான் எல்லோருக்கும் பழக்கமானது.

    ஆங்கில மொழி சட்ட வரைவுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும். அதனை இந்தியில் மொழி பெயர்த்துக்கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கின்றனர். அது வாயிலேயே நுழையவில்லை. 'நீட்' தேர்வு விலக்கு தொடர்பாக தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சாத்தியம் ஆகும். 'நீட்' தேர்வு ஏன் தமிழகத்திற்கு கூடாது என்று நான் பல காரணங்களை சொல்லியிருக்கிறேன். ஆனால் மத்திய அரசு அசைத்து கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி சமூகவலைத்தளத்தில் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். அதில் என்ன வியப்பு இருக்கிறது. 2023-ல் இருப்பதை விட 2033-ல் அதிகமாக தான் இருக்கும். 2033-ல் இருப்பதை விட 2043-ல் அதிகமாக தான் இருக்கும்.

    பொருளாதார உயர்வு என்பது எந்த ஆண்டு தான் உயராமல் இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை. 2 சதவீதம், 3 சதவீதம், 4 சதவீதம் என உயர்ந்து கொண்டு தான் செல்கிறது. ஆண்டு ஒன்று போனால் வயதொன்று கூடும். அதுபோல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநில அரசை டிரிபிள் என்ஜின் அரசு என்கிறார்
    • அஜித் பவார் உள்ளிட்ட 9 பேருக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, அக்கட்சியை தனக்குரியதாக்கிக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் கைக்கோர்த்து முதலமைச்சராக உள்ளார். பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே அரசில் ஐக்கியமாகி துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே அரசில் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் குரூப் இணைந்தது, மூன்று கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

    இருந்தாலும் அஜித் பவார் இணைந்த பிறகு முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, ''இரண்டு என்ஜின் அரசு தற்போது டிரிபிள் என்ஜின் அரசாகியுள்ளது. இதனால் மாநில வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். தற்போது நாங்கள் ஒரு முதல்வர், இரண்டு துணைமுதல்வர்களை பெற்றுள்ளோம். இது மாநில வளர்ச்சிக்கு உதவும்'' எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் இந்த கூட்டணியை கிண்டல் அடித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு துணைமுதல்வர்கள், அவர்கள் அரசை டிரிபிள் என்ஜின் அரசு எனக் கூறி வருகிறார்கள். ஆனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று கால்களை உடைய விலங்கு ஓடுவதைபோல் நான் பார்க்கிறேன்.

    மகாராஷ்டிரா அரசில் இணைந்த 9 மந்திரிகளுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு எந்த இலாகாக்களும் ஒதுக்கப்படவில்லை.

    தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 20 மந்திரிகளும் தங்களுடைய இலாகாக்களை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஒரு தீர்வு உள்ளது. அது, 9 பேரும் இலாகா இல்லாத மந்திரி என அறிவிக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான்.
    • இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்தும் அந்த தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நான் முன்பு கூறியதை மீண்டும் சொல்கிறேன்.

    இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு (வாய்மொழி அவதூறு) வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. வழக்கு பற்றிய அனைத்தையும், கோர்ட்டு தீர்ப்பும் அந்த உண்மையை கூறுகிறது. ஒரு நாள் நீதி கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார்.
    • பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை.

    புதுடெல்லி :

    காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஆகிய மூன்றும் பா.ஜ.க.வின் தேர்தல் இலக்கு திட்டங்களாக இருந்து வந்தது.

    இவற்றில் முதல் இலக்கை நிறைவேற்றி விட்டது. இரண்டாவது இலக்கை நிறைவேற்றி வருகிறது. மூன்றாவது இலக்கான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில்தான் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    அடுத்த சில மாதங்களில் நாடு மக்களவை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு இப்போது கையில் எடுத்துள்ளது.

    அந்த வகையில், சமீபத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக 22-வது மத்திய சட்டக்கமிஷன், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதே நேரத்தில் 21-வது மத்திய சட்டக்கமிஷன், இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் என்பது தேவையற்றது, விரும்பத்தக்கது அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நேற்று முன்தினம் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது அவர், "2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது, பொது சிவில் சட்டம் அவசியம்" என ஆணித்தரமாக குறிப்பிட்டது, பெரும் அதிர்வுகளை அரசியல் அரங்கில் உருவாக்கி உள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி கருத்து வெளியிட்ட மரியாதைக்குரிய பிரதமர் நாட்டை ஒரு குடும்பத்துக்கு சமமாகக் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக அர்த்தப்படுத்தினால், அவரது ஒப்பீடு உண்மையாக இருக்கலாம். ஆனால் உண்மை மிகவும் மாறுப்பட்டது.

    குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு, அரசியல், சட்ட ஆவணமான அரசியல் சாசனத்தால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குடும்பத்தில்கூட பன்முகத்தன்மை இருக்கிறது. இந்திய அரசியல் சாசனம், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது.

    பொது சிவில் சட்டம் என்பது ஒரு அபிலாசை. அதை ஒரு செயல் திட்டத்தால் நாட்டை வழிநடத்தும் பெரும்பான்மை அரசால், மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வருவது ஒரு எளிதான நடவடிக்கை என்பது போல பிரதமர் அதை தோன்றச்செய்துள்ளார். அவர் கடந்த சட்டக்கமிஷன் அறிக்கையில், "இந்த தருணத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல" என்று கூறி இருப்பதை வாசிக்க வேண்டும்.

    நாடு தற்போது பா.ஜ.க.வின் வார்த்தைகளாலும், செயல்களாலும் பிளவுபட்டுள்ளது. பொதுமக்களிடம் பொது சிவில் சட்டத்தை திணித்தால் அது பிளவுகளை விரிவுபடுத்தி விடும்.

    பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதன் நோக்கம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வெறுப்புணர்வு குற்றங்கள், பாகுபாடு, மாநிலங்களின் உரிமைகளை மறுத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதுதான். மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    நல்லாட்சி தருவதில் தோல்வி கண்டுவிட்டு, பா.ஜ.க. இப்போது வாக்காளர்களை பிளவுபடுத்தி, அடுத்த தேர்தல்களில் வெற்றிபெற பொது சிவில் சட்டத்தை களம் இறக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • பயண கட்டணங்கள் உயர்வுக்கு விமான நிறுவனங்களை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    சென்னை:

    சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி - சென்னை பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் விஸ்தாராவில் 6,300 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 5,700 ரூபாய்க்கும் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    மன்னிக்கவும், விஸ்தாராவில் 63,000 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 57,000 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுவாக சுதந்திர சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விநியோகமும் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விலை அதிகரிக்கிறது.

    விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை விரிவாக்கம் செய்துவிட்டு, பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏகபோக முதலாளித்துவத்தில் மட்டும் உலகிற்கே இந்தியா விஷ்வகுருவாக மாறும் என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு மத்திய பாரதிய ஜனதா அரசு மோதிக்கொண்டே இருந்தால் மோதல் தான்.
    • நாள்தோறும் மோதல் என்றால் எப்படி இந்த மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

    வில்லிவாக்கம்:

    சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் வே.வாசு தலைமையில் அயனாவரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ப.சிதம்பரம், சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் கே.பாலபாரதி, வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. வெற்றி அழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    அரசியல் சாசனத்தை படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள், மத்திய அரசு இருக்கும். மாநில அரசுகளும் இருக்கும். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. சளைத்த அரசு அல்ல.

    குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களோடு மத்திய பாரதிய ஜனதா அரசு மோதிக்கொண்டே இருந்தால் மோதல் தான். நாள்தோறும் மோதல் என்றால் எப்படி இந்த மாநிலங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியும். இன்றைக்கு அதன் காரணமாகவே பல வகையிலே தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்கள் பல புறக்கணிக்கப்படுகின்றன. பா.ஜனதா அல்லாத அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பல மாநிலங்களின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    சென்னை:

    மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.

    முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம் அவரிடம் சொல்லி உள்ளது. எனவே ப.சிதம்பரம் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.

    தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த சோனியாவுக்கு எனது உளமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்று பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர் பெயரை முன்மொழிந்து கையெழுத்து போட்டனர். மற்ற எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print