search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "P Chidambaram"

    • 2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும்.

    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மோடி சர்கார் போய்விட்டது. சில நாட்களாக பிஜேபி சர்கார் தான். அதுவும் நேற்றிலிருந்து என்.டி.ஏ., சர்கார்.

    ஏப்ரல் 19 முதல் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றத்தை கவனித்தீர்களா?

    ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 19 வரை காங்கிரசின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியால் புறக்கணிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் அறிக்கை புதிய அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

    நன்றி, பிரதமரே! எனக்கூறியுள்ளார்.

    மற்றொரு பதிவில்,

    நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் காங்கிரசுக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

    2019-ல் போன்றே தற்போதும் சிறப்பானதொரு வெற்றியை ஐக்கிய ஜனநாயக முன்னணி பெறும் என எதிர்பார்க்கலாம்.

    கர்நாடகாவில் நேற்று தேர்தல் நடந்த 14 தொகுதிகளில், 2019ல் காங்கிரஸ் தனது 1 மதிப்பெண்ணில் இருந்து பெரும் முன்னேற்றம் அடையும்.

    ராஜஸ்தானில் காங்கிரஸ் பல இடங்களை வென்று அமோக வெற்றி பெறும் என பதிவிட்டுள்ளார்.

    • இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லை
    • பிரதமர் தனது முன்னோடிகள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்க வேண்டும்

    இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லைராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    மோடியின் இந்த பேச்சிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,

    "இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியைப் போல் அடாவடியாகப் பேசியது இல்லை. அவரின் ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மன்மோகன் சிங்கின் பேச்சைத் திரித்து மோடி பேசுவது விஷமத்தனமானது

    பொதுமக்களின் நிலம், தங்கம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்போம் என்று காங்கிரஸ் எப்போது, எங்கு கூறியது?

    தனிநபர்களின் சொத்துக்கள், பெண்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்குச் சொந்தமான வெள்ளி ஆகியவற்றை எப்போது, எங்கு மதிப்பிடுவது என்று கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியது?

    தனிநபரின் சொத்துகளையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் என காங்கிரஸ் எப்போது கூறியது ? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் என காங்கிரஸ் எப்போது பேசியது?

    பிரதமர் தனது முன்னோடிகள் மீது கொஞ்சம் மரியாதை வைத்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் டிசம்பர் 2006 இல் ஆற்றிய உரையை இன்று இந்தியன் எக்ஸ்பிரஸில் மறுபதிப்பு செய்துள்ளது. இந்தியாவின் வளங்கள் மீதான முதல் உரிமை இங்குள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தான் உள்ளது என்று மன்மோகன் சிங் கூறினார்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.

    இந்தியாவின் மிகப்பெரிய சவால் வேலையின்மை. சிலர் இதை குறைத்து மதிப்பிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாகும். எனது அனுபவத்தில் இவ்வளவு அதிகமான வேலையின்மை விகிதம் இருந்தது இல்லை. பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. பட்டதாரிகளின் வேலையின்மை 42 சதவீதமாக உள்ளது.

    14 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை உருவாக்கியது. அது தேர்தல் அறிக்கை என்று பெயரிடப்படவில்லை. அதை மோடியின் உத்தரவாதம் என்கிறார்கள்.

    பா.ஜ.க. நீண்ட காலத்துக்கு அரசியல் கட்சியாக இருக்காது. அது ஒரு வழிபாடாக மாறிவிட்டது. அந்த வழிபாடு நரேந்திர மோடியை வணங்குகிறது. இந்தியாவில் அந்த வழிபாடு வலுப்பெற தொடங்கியதும் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும்.

    மோடி மீண்டும் 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்பை திருத்தலாம். 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பேசாமல் இருக்கிறது.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பாராளுமன்ற முதல் அமர்விலேயே குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி.

    காரைக்குடி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வாக்கினை பதிவு செய்ய வந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று நான் உறுதியோடு நம்புகிறேன். நட்டாவும், அமித்ஷாவும் காரைக்குடிக்கு வரவில்லை, அவர்கள் வராமல் வருகை ரத்தானதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத் தன்மை காப்பாற்றப்படும். பன்முகத்தன்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை சீர் செய்து விடுவோம்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் அதனை யாராலும் உடைக்க முடியாது. அது ஒரு வலிமையான கூட்டணி. அமலாக்கத்துறை என்பது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
    • குழாய் மூலமாக எரிவாயு என்பது வேடிக்கையான அறிவிப்பு.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:-

    * பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

    * 5 கோடி மக்கள் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிதி அயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்?

    * குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில், எப்படி எரிவாயு வரும்.

    * குழாய் மூலமாக எரிவாயு என்பது வேடிக்கையான அறிவிப்பு.

    * உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்பாடு 3.7 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது.

    * எரிவாயு விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள்.

    * பா.ஜ.க. அரசு 4 கோடி வீடுகளைக் கட்டிக்கொடுத்துவிட்டதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு.

    * 4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு கட்டிக்கொடுத்த 52,000 வீடுகளைக் காட்ட முடியுமா?"

    * அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரெயில் இயக்கப்படும் என்ற பா.ஜ.க. வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரெயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பா.ஜ.க. அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும்.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.

    காரைக்குடி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால் தங்கள் கொள்கைகளுக்கு முரணான பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.

    நோய் நாடி நோய் முதல் நாடி என்பது வள்ளுவர் வாக்கு. அதற்கு ஏற்ப ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்வதற்கு பதிலாக செஸ் வரியை சீரமைத்தாலே பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகளை வெகுவாக குறைக்கலாம்.

    மாநிலத்திலும் மத்தியிலும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைவது மிகவும் அபூர்வம். தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து எங்களது தேர்தல் பிரசாரம் அமைந்திருக்கும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்றைய இந்தியாவின் அவல நிலையை படம் பிடித்து காட்டுவது போல் உள்ளது.

    ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. எனவே தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள் சமரசம் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
    • மறுநாள் அதே பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ப. சிதம்பரம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ப.சிதம்பரம் வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி அவர் காரைக்குடி அருகே மித்ரா வயல் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து திடீரென ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் கூறினர். அதோடு மித்ராவயலில் செயல்படும் டாஸ்மாக் கடையால் இப்பகுதி இளைஞர்கள் மதுவுக்கு அடிமை யாகும் சூழல் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஒரே குரலில் கோரிக்கை வைத்தனர்.

    குறிப்பாக கூட்டத்தில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ப.சிதம்பரத்திடம் 'ஐயா எங்கள் பகுதியில் மதுக்கடைகள் இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மதுக்கடை இருப்பதால் என் மகனுக்கு யாரும் பெண் தர மறுக்கின்றனர். எனவே அதனை அகற்ற வேண்டும்'என கோரிக்கை வைத்ததோடு வாக்குவாதமும் செய்தார்.

    சிதம்பரத்திடம் மதுக்கடையை மூட வேண்டும் என பெண் வாக்குவாதம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே காங்கிரஸ் நிர்வாகிகள் சமரசம் செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மறுநாள் அதே பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த பெண் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். மேலும் மதுகடை அகற்றுதல் கோரிக்கை தொடர்பாகவும், இதுகுறித்து ப.சிதம்பரத்திடம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன் என அந்த பெண், அ.தி.மு.க. வேட்பாளரிடம் கூறினார். அந்த பெண்ணின் இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது
    • இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை

    வருமான வரித்துறை சார்பில் சுமார் 1,823 கோடி ரூபாய் செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1,823 கோடி ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் முயற்சிகளே அன்றி வேறில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் நம் நாட்டு மக்கள் பாஜகவுக்கு இதற்காக பதிலையே வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

    பாஜகவின் 8,250 கோடி தேர்தல் பத்திர ஊழல் இந்திய நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்களது நண்பர்களிடம் இருந்து பணத்தை பெரும் அதே சமயத்தில், வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியை குறிவைத்து 1800 கோடி அபராதம் விதித்துள்ளது.

    தேர்தல் நேர்மையாக நடைபெறவேண்டும் என்பதையே ஜனநாயகம் விரும்புகிறது. வரி பயங்கரவாதத்தை அல்ல. ஒரு கட்சி பல ஆயிரம் கோடிகளை மிரட்டி வசூலித்துவிட்டு, மற்றொரு கட்சிக்கு பல ஆயிரம் கோடியை அபராதமாக செலுத்த உத்தரவிடுவது எப்படி நியாயம்?. பாஜக அரசு வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது" என்று ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை.
    • 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?

    புதுடெல்லி:

    2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீடு மற்றும் அபராதம், வட்டி ஆகியவை தொடர்பாக 1823 கோடி ரூபாய் கட்ட காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை அழிக்க சதி நடப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:- அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு வரி கிடையாது என்பதே இதுவரையிலான நடைமுறை. 8 ஆண்டுகளாக நோட்டீஸ் கொடுக்காமல் தேர்தல் நேரத்தில் கொடுப்பது ஏன்?. 139 ஆண்டுகால பழமை வாய்ந்த காங்கிரஸ் முடக்க சதி நடக்கிறது என கூறியுள்ளார்.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "இந்த நோட்டீஸ் நிதி ரீதியில் எங்களை முடக்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வரி தீவிரவாதம். காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இது நிறுத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்
    • பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியிருந்தார்.

    இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "வேலையில்லாமைப் பிரச்சனைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருக்கிறார்

    இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது பா ஜ க அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. பா ஜ க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும்

    வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?
    • சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 663 நாட்களாக மாறாமல் இருந்த நிலையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படும் என மத்திய மந்திரி அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை முதல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் சமையல் சிலிண்டர் விவகாரத்தில் பா.ஜனதா என்ன செய்ததோ? அதே சாதுரியத்தை இதிலும் கடைபிடித்துள்ளனர் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மாநிலங்களவை எம்.பியும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் நான் ஊடக சந்திப்பின்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறியிருந்தேன். அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தலுக்குப் பிறகு இதன் விலை உயர்த்தப்படமாட்டாது என்று இந்த அரசு சொல்லுமா?

    பா.ஜனதா அரசால் சமையல் சிலிண்டர் விலை 700 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தேர்தலுக்கு முன்னதாக 100 ரூபாய் குறைத்துள்ளது.

    அதே சாதுரியத்தை பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் கையாண்டுள்ளது.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?
    • அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?

    தேர்தலுக்காக 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு கூட்டமாட்டோம் எனச் சொல்லட்டும். தேர்தலுக்காக குறைக்கிறேன் என்றால்... வேண்டாம் என்று சொல்லல.. மக்களுக்கு பயன்.

     தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட்டமாட்டேன் என்று பிரதமர் மோடி சொலலட்டும்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    ×