என் மலர்
நீங்கள் தேடியது "Election Commission of India"
- 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
- சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.
பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.
2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.
இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
- புலம்பெயர்ந்த தொழிலாளி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
- சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 6.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க போகிறார்கள் என்று வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக "சேர்ப்பது" பற்றி வெளிவந்துள்ள செய்திகள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தலையீட்டை ஏற்படுத்தும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி ஏன் பீகார் (அல்லது அவர்களது சொந்த மாநிலத்தில்) மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்" என்று எப்படி கருதப்பட முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
- பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
- பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை நிறைவுப் பெற்றுள்ளது.
பீகாரில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
பீகாரில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
குஜராத், கேரளா, பஞ்சாப், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் காடி, விசாவதர், கேரளாவின் நீலாம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதேபோல், பஞ்சாபின் லூதியானா மேற்கு, மேற்குவங்கத்தின் கலிகஞ்ச் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் என்றும் வாக்குகள் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை.
- பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளிக்க அனைத்து கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலையும், தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்தால் தலா 20 பேர் கொண்ட பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் முடியும் தேதிக்குள் இந்த பட்டியலை அளித்திருக்கவேண்டும்.
அதன்படி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை அளித்துள்ளன. தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தே.மு.தி.க. பட்டியலில் அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 40 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.ம.மு.க., புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4-ந்தேதி மாலை நிலவரப்படி, அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் பட்டியலை இன்றுவரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேலும் பல கட்சிகள் அதற்கான பட்டியலை அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-
நட்சத்திர பேச்சாளர் பட்டியலை பல்வேறு கட்சிகள் வழங்கி உள்ளன. அ.தி.மு.க.வை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல்களில் யாருக்கு அனுமதி அளிப்பது என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டது.
அந்த 2 பட்டியல்களையும் தங்களது பார்வைக்கு அனுப்பும்படி தேர்தல் ஆணையம் கேட்டது. எனவே அவற்றை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். அ.தி.மு.க. கட்சி சார்பில் எந்தப் பட்டியலுக்கு அனுமதி தர வேண்டும்? என்ற முடிவை இந்திய தேர்தல் ஆணையம் தான் எடுக்கும்.
எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொடுத்த பேச்சாளர் பட்டியல் ஏற்கப்படுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.
- இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது.
- பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.
சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
அதில், பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சுக்பீர் சந்துவையும் ஞானேஷ் குமாரையும் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களாக நியமித்திருக்கிறார் மோடி. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை உருவாக்க முக்கியப் பங்காற்றியவர் ஞானேஷ் குமார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்காக அமித் ஷாவுக்குக் கீழ் பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களும் இதை விமர்சித்துள்ளார். அதில்,
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து, தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே புதிய தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையர் பதவிகளில் பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
- இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திம் வருகிறது.
- மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும்.
சென்னை:
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சத்யபிரத சாகுவுக்கு மாநில அரசுப் பணியான கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுகிறார். புதிய தேர்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்ய பிரதசாகுவுக்கு பதிலாக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இதற்காக தமிழக பிரிவு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 3 பேரின் பெயர்களை கொண்ட பட்டியலை மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு செயலாளர் அளவிலான 3 பேர் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியே, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை நடத்துவார். எனவே அதற்கேற்ப தேர்தலை மனதில் வைத்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி குறித்த அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- 3 மாநிலங்களில் வரும் 13-ந்தேதி நடைபெற இருந்த 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* 3 மாநிலங்களில் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* இந்த 3 மாநிலங்களில் வரும் 13-ந்தேதி நடைபெற இருந்த 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவ.20-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
- தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சந்தித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம்.
* வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.
* நாம் 99 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கையை கடந்த கொண்டிருக்கிறோம்.
* பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 48 கோடியை எட்டியுள்ளது.
* நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும்.
* டெல்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர்.
* குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.
* வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது.
* ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை.
* தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.
* 2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன.
* படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது என்றார்.
- தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை.
- ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான்.
சாதி, மதம் அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரம், சாதி, மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் இந்தியா குழந்தைதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண்கள் 2 நபர்களுக்கு கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
- போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜக சதி செய்வதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அட்டை EPIC எண்கள், ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாபில் வசிக்கும் மக்களின் வாக்காளர் அட்டை EPIC எண்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
EPIC எண்கள் என்பது ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் 10 இலக்க வாக்காளர் அடையாள அட்டை எண்ணாகும்.
இந்நிலையில், மமதா பானர்ஜி குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
"வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல. EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி, பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட பிற விவரங்கள் வேறுபட்டிருக்கும். ஆகவே ஒரே ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும் ஒருவர் அவருடைய தொகுதியில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும்" என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.






