என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய தேர்தல் ஆணையம்"
- விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம்.
- தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம்.
தமிழகத்தில் 6.24 கோடி வாக்காளர்களுக்கு 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்களிடம் பெறப்பட்ட 4.53 கோடி (70.70%) விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70.70% விண்ணப்பங்கள் BLO-க்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
- இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- VVPAT-ல் வேட்பாளர்கள் முகம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.
- மேற்குவங்கத்தில் தேர்தல் பணிகள் துவக்கம்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மத்தியப் பிரதேசத்தில் SIR பணிகள் நடைபெற்று வரும்நிலையில், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பயிற்சி மற்றும் வாக்களிப்பு ஒத்திகைப் பயிற்சியை இன்று தொடங்கி உள்ளது.
துணைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் பாரதி தலைமையில் கொல்கத்தாவில் முதல் நிலை சோதனை (FLC) குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் SIR, EVM இருப்பு, VVPAT இருப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையத்திடம் அனைத்து இயந்திரங்களின் இருப்பும் போதுமான அளவு உள்ளதாக தெரிவித்தது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த வகையான படங்கள் இடம்பெற வேண்டும் எனவும் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். இம்முறை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது. VVPAT-ல் வேட்பாளர்கள் முகம் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை.
நடந்து முடிந்த பீகார் தேர்தலில் இருந்து இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. வாக்களிப்பு ஒத்திகை பயிற்சியின்போது இது அப்படி இருக்கும் என காட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திர சரிபார்ப்பு பயிற்சி அனைத்து பொத்தான்களும் சரியாக வேலை செய்கிறதா; வாக்குச் சீட்டு-கட்டுப்பாட்டு அலகு சரியாக பதிலளிக்கிறதா; VVPAT காகிதமும், படமும் சரியாக வெளிவருகிறதா என்பதை உறுதிசெய்து சரிபார்க்கும் நோக்கம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.






