என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.
    • மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசினார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான 'கர்மஸ்ரீ' க்கு மகாத்மா காந்தியின் பெயரைச் சூட்டப்போவதாக அறிவித்துள்ளார்.

    மத்திய அரசு தனது தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு "விபி ஜி ராம் ஜி" எனப் பெயர் மாற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய மம்தா, "தேசியத் தலைவர்களுக்குச் சில கட்சிகள் மரியாதை செலுத்தத் தவறினால், நாங்கள் அதைச் செய்வோம். தேசத் தந்தையின் பெயரையே நீக்குவது மிகுந்த அவமானமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக முறைகேடுகளைக் காரணம் காட்டி 2022-ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்திற்கான ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சுமார் 58 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 6,919 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

    மத்திய அரசு நிதி வழங்காத நிலையில், மேற்கு வங்க அரசு தனது சொந்த நிதியைக் கொண்டு 2024-இல் 'கர்மஸ்ரீ' திட்டத்தைத் தொடங்கியது.

    இது கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.

    மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும், எங்கள் சொந்த நிதியில் மக்களுக்கு வேலை வழங்குவோம். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல மம்தா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    இதற்கிடையே நேற்று மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் விரைவில் அகற்றப்படும் என பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துச் சென்றார். 

    • மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
    • அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.

    அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

    இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.

    அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.

    பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

    மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.

    • இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
    • பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்கம் வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் பகுதியில் நடைபெறவிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்.

    ஆனால் அங்கு நிலவும் அடர் மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் அவரது ஹெலிகாப்டர் கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியது.

    அடர் மூடுபணியால் தெரிவுநிலை குறைந்து சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்த ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருதி மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.

    இந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். 

    • பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
    • நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    கொல்கத்தா:

    தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து, இன்று மதியம் அசாம் செல்லும் பிரதமர் மோடி கவுகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?
    • வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    மேற்கு வங்கத்தில் உயிருடன் இருக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி கவுன்சிலர் ஒருவரை, தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தை போல மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், கொல்கத்தா அருகே உள்ள டங்குனி நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலரான சூர்யா தே என்பவரின் பெயர் இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.

    தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்கவும், தேர்தல் ஆணையத்தின் அலட்சியத்தை கண்டிக்கவும் கவுன்சிலர் சூர்யா தே தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக ஒரு மயானத்திற்குச் சென்றார்.

    அங்கிருந்த அதிகாரிகளிடம், "அரசு என்னை இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால், முறைப்படி இப்போது என்னை இங்கேயே தகனம் செய்துவிடுங்கள்" என கூறி வினோதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    "நான் ஒரு மக்கள் பிரதிநிதி, எனக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி என்ன?" என்று சூர்யா தே கேள்வி எழுப்பியுள்ளார்.

    நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற மெஸ்ஸி தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார்.
    • அதன்பின் சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    கொல்கத்தா:

    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்சி மூன்று நாள் பயணமாக 13-ம் தேதி இந்தியா வந்தார்.

    முதல் கட்டமாக கொல்கத்தா சென்ற அவர் தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். அதன்பின், அங்குள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைக் காண்பதற்கான பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரசிகர்கள் முண்டியடித்ததால் அரை மணி நேரத்திற்குள்ளாகவே மெஸ்சி அங்கிருந்து புறப்பட்டார்.

    இதனால் நீண்ட தூரத்திலிருந்து வந்ததாலும், ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் டிக்கெட் வாங்கியிருந்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அங்கிருந்த இருக்கைகளை உடைத்தனர், தடுப்பு வேலிகளைத் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைந்து போகச் செய்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கொல்கத்தா ஐகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம் குமார் ரே தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, முதன்மை நிகழ்ச்சி அமைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீசார் கைதுசெய்தனர்.

    மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாவே பொறுப்பெனவும், முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்காக அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தனது கைப்பட ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பினார். அதில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே பதவியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார். இந்த ராஜினாமாவை மம்தா பானர்ஜியும் ஏற்றுக்கொண்டார்.

    • மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11 ஆம் தேதி முடிவடைந்தது.

    இந்நிலையில் மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.

    நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.

    அர்ஜன்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். முதற்கட்டமாக மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவுக்கு சென்றார்.

    இன்று அங்கு சால்ட் லேக் விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் மெஸ்ஸி வருகை தந்த நிலையில் அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.

    ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் ஏராளமானோர் நின்றதால் அவரை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் பாட்டில்களை மைதானத்தில் வீசி அமளியில் ஈடுபட்டனர். போலீசார் தடையடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

    மெஸ்ஸி மைதானத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு உடனே வெளியேறினார். இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கால்பந்து சம்மேளனம் AIFF, "விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது ஒரு தனியார் PR நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு.

    அதன் திட்டமிடல், மேலாண்மை அல்லது செயல்படுத்தலில் AIFF எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த நிகழ்வின் விவரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, மேலும் எங்களிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.  

    • காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
    • முதலமைச்சர் மம்தா பானர்ஜி விசாரணை ஆணையம் அமைத்தார்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

    இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரசிகர்கள் ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்து டிக்கெட்டுகளை வாங்கினர்.

    அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை சுற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்து 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.

    அவர் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதற்கிடையே நிர்வாக குறைபாடு காரணமாக நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, முக்கிய அமைப்பாளரான சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டுள்ளார் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி ஜாவேத் சமீம் உறுதிப்படுத்தியுள்ளார். 

    • பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
    • முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள் நீக்கப்பட்டன.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    அதன்படி, பாஜக மாநில தலைவரும் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தொகுதியான நந்திகிராமில் 10,599 வாக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவப்படுத்தும் பவானிபூர் தொகுதியில், 44,787 வாக்குகள், அதாவது, நந்திகிராமை விட 4 மடங்கு அதிக வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.  

    ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வசம் உள்ள சௌரிங்கியில் 74,553 வாக்குகளும், கொல்கத்தா துறைமுக தொகுதியில் 63,730 வாக்குகளும் அதிகபட்சமாக நீக்கப்பட்டன.

    மாவட்ட வாரியாக, திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,16,047 வாக்குகளுடன் நீக்கப்பட்டன.

    இறப்புகள், வாக்காளர்கள் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்தல் மற்றும் போலி வாக்குகள் இருப்பது போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த மாதம் 16 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், முழு விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

    • ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடுகிறார்.
    • நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

    கொல்கத்தா:

    கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடக்கிறது. அங்குள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோரை சந்திக்கின்றார்.

    அதன்பின், நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து, ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியும் விளையாடுகிறார். மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.

    தொடர்ந்து, மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

    நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    • மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
    • உங்கள் பெயரை நீக்கினால் சமையலறைப் பொருட்களுடன் தயாராக இருக்கும்படி பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணா நகரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா?

    தேர்தலின் போது டெல்லியில் இருந்து காவல்துறையினரை வரவழைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் அச்சுறுத்துவார்கள்.

    தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இருக்கின்றன அல்லவா?

    உங்களிடம் சக்தி இருக்கிறது அல்லவா? உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை நீங்கள் சும்மா விடமாட்டீர்கள் அல்லவா?

    அப்போது பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.

    பெண்களா அல்லது பாஜகவா, யார் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன்.

    நான் மதவாதத்தை நம்புவதில்லை. நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் வரும்போதெல்லாம், பாஜக பணத்தைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்துவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர முயற்சிக்கிறது என தெரிவித்தார்.

    ×