என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியல் திருத்தம்"

    • SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள்.
    • அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள்.

    பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால் படிவத்தை விநியோகித்து, திரும்பப்பெற்று, பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் SIR எதிர்ப்பு பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி,

    "பாஜக SIR ஐ வைத்து குறித்து மத அரசியலில் ஈடுபடுகிறது. ஆனால் SIR தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். எனவே நீங்கள் அமர்ந்திருக்கும் கிளையையே (இந்துக்கள்) வெட்ட வேண்டாம்.

    நான் மேற்கு வங்கத்தில் தேசிய குடிமை பதிவேட்டை (NRC), மக்களை அடைத்து வைக்கும் தடுப்பு முகாம்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்

    என் கழுத்தை அறுத்தாலும் சரி, இங்கிருந்து யாரும் விரட்டப்பட மாட்டார்கள். மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும்.

    மேலும் வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனது பொறுப்பு என்றும் உறுதியளிக்கிறேன்.

    சில விஷமிகள், மாநில அரசு மத வழிபாட்டுத் தலங்களை மசூதிகள் அல்லது கல்லறைகளாகப் பதிவு செய்ததாக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது ஒரு பொய்.

    ஏஐ தொழில்நுட்பம் இப்போது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் ஒருபோதும் கூறாத அறிக்கைகளைப் பரப்ப என் முகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

    அவர்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஊழலால் நிறைய பணம் சம்பாதித்தவர்கள். பீகாரில், அவர்கள் தந்திரமாக ஒவ்வொரு தொகுதியிலும் நான்கு சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தினர். இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. சுயேச்சைகள் வாக்குகளைப் பிரித்தால், இழப்பு உங்களுடையது, நன்மை அவர்களுடையது.

    நான் இன்னும் SIR படிவத்தை பூர்த்தி செய்யவில்லை. உங்கள் அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்ட பின்னரே நான் அதை செய்வேன். உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உதவி முகாம்களை அமைக்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.  

    • நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை.
    • 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் இதன்போது பணிச்சுமை மற்றும் மூத்த அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பல BLOக்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணி அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் சர்வேஷ் சிங் (46) தற்கொலை செய்து கொண்டார்.

    உதவி ஆசிரியரான சர்வேஷ் சிங், அக்டோபர் 7 ஆம் தேதி பிஎல்ஓ ஆக நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பான பணிகளுக்கான அவரது முதல் பணி இதுவாகும்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வீடியோவில், சர்வேஷ் சிங், "கடினமாக உழைத்தாலும், என் வேலையை முடிக்க முடியவில்லை. நான் துயரத்தில் இருக்கிறேன். கடந்த 20 நாட்களாக என்னால் தூங்க முடியவில்லை. மற்றவர்கள் வேலையை முடித்து வருகிறார்கள். அம்மா, சகோதரி என்னை மன்னித்து விடுங்கள். எனது மகள்களை பார்த்துக்கொள்ளுங்கள். நான் தேர்தல் பணியில் தோற்று விட்டேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். 

    ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சர்வேஷ் சிங் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பாப்லி தேவி அதிர்த்துப்போனார். தவலறிந்த போலீசார் சம்பவ இடதிற்கு விரைந்தனர்.

    சம்பவ இடத்தில் இரண்டு பக்க கையால் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டது.  இதற்கிடையே நாடு முழுவதும் 29 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களை கொலை செய்த ரத்த கரை பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் கைகளில் படிந்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

    • பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
    • கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்தார்.

    ராஜஸ்தானின் பாரா பகுதியில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் 42 வயதான அனுஜ் கார்க். அவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக தோல்பூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார்.

    அந்த வகையில் நேற்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகியிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    தமிழகம், மேற்கு வங்கம், உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.  

    • ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
    • வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.

    SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .

    BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.

    கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.

    தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.  

    • பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.
    • NRC,CAA ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.

    தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)  மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் வாக்காளர்கள் அரசாங்கத்தை தேர்தெடுக்கும் நிலை மாறி அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே SIR என்று பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பராகலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார்.

    மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "SIR-ன் முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.

    அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் என்ற நிலையை மாற்றி, வாக்காளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயல். 

    தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) ஆகியவற்றை மக்கள் எதிர்பால் தொடர முடியாததால் அவற்றை SIR வடிவத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டுவரும் முயற்சி இது.

    வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும்போது, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுகிறார்கள். இதுவே SIR-ன் அடிப்படை இலக்கு.  ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறுபான்மையின மக்கள் பெயர்களை நீக்குவதே SIR-ன் இலக்கு.

    இதற்கு அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதாரணம். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே SIR மூலம் தக்கவைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரியம்" என்று தெரிவித்தார். 

    • Electors Help Desk செயல்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் 18.11.2025 முதல் 25.11.2025 வரை வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் உதவி மையங்கள் (Electors Help Desk) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட தேர்தல் அலுவலரும் சென்னை மாநகராட்சி ஆணையாளருமான ஜெ.குமரகுருபரன் இதை அறிவித்துள்ளார். 

    கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் எனவும் சம்மந்தப்பட்ட பகுதி வாக்காளர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

    கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பையன்னூர் அருகே ஏவுனுக்கு கண்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அனீஸ் ஜார்ஜ் பையன்னூர் அரசு பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் தொடங்கிய நிலையில் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக அனீஸ் ராஜ் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே நேற்று முன்தினத்துக்குள் அனைத்து வாக்காளர்களிடமும் கணக்கீட்டு படிவங்களை வழங்க வேண்டும் என்று அனீஸ் ஜார்ஜூக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் ஓய்வின்றி இரவு பகலாக படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டார். இருப்பினும் கொடுத்த கால அவகாசத்துக்குள் அவரால் 200 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனீஸ் ஜார்ஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தகவலறிந்து போலீசார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    தனது மகன் நள்ளிரவு 2 மணி வரை வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டதாகவும், அதீத பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாகவும் ஜார்ஜ்ஜின் தந்தை தெரிவித்தார். இந்த ச,சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மாநில தேர்தல் ஆணையர் விளக்கம் கேட்டுள்ளார். 

    • SIR-க்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். 

    அந்த வீடியோவில் விஜய் கூறியதாவது:-

    * கொஞ்சம் ஏமாந்தா.. நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்.

    * வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் SIR படிவம் எப்படி சென்று சேரும்?

    * SIR பணியால் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு போகும் பெண்கள்தான்.

    * FORM கொடுக்க வருவீர்கள் என்பதற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருக்க வேண்டுமா?

    என்று தெரிவித்தார். 

    • சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
    • சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.

    சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    ஆனால் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இடவசதி போதாது. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.

    அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

    இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.

    பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    • அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
    • உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்தி வைக்கக் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் அடுத்த மாதம் 9, 11-ல் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து அரசு தாக்கல் செய்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அதை ஒத்திவைக்க மட்டுமே கோருகிறோம் என்றார்.

    இதையடுத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிற மாநிலங்களில் SIR-ஐ எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்க மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றார்.

    இதையடுத்து இந்த இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

    முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒத்திவைக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக உள்ளது.

    கோவை:

    தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. பருவமழை பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு, அந்தந்த மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

    தி.மு.க.வினருக்கு சார் என்றாலே ஒரு அலர்ஜி. தற்போது வந்துள்ள சாரால் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினர் நடுக்கத்தில் உள்ளனர்.

    முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் பட்டியலில் விடுப்பு, சேர்ப்பு, இறந்தவர்கள் பெயரை நீக்குவது நடந்து தான் வருகிறது. பீகார் மாநிலத்தில் 60 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் 28 லட்சம் பேர் இறந்தவர்கள். மற்றவர்கள் குடி பெயர்ந்தவர்கள்.

    தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் வாக்குகள் அதிகமாக உள்ளது. அதிக அளவில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்து அவர்கள் பயத்தில் உள்ளனர்.

    தி.மு.க அமைச்சர்கள் தாங்கள் பொய்யாக சேர்த்த வாக்காளர்களை பட்டியலில் நீக்கி விடுவார்களோ, அதனால் தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்கள் வாக்காளர் பட்டியல் குறித்து பொய்யான தகவலை கூறி வருகிறார்கள்.

    வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவது தமிழக அரசு அதிகாரிகள் தான். பிறகு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவி பணத்தை சிலர் திருப்பி அனுப்பி உள்ளதாக கேட்கிறீர்கள். சிலர் பணம் வாங்குவார்கள். சிலர் அதை விருப்பப்பட மாட்டார்கள். எனவே விருப்பமில்லாதவர்கள் அதை திருப்பி அனுப்பியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், ஏ.பி.முருகானந்தம் மற்றும் பலர் இருந்தனர்.

    ×