என் மலர்
நீங்கள் தேடியது "Draft Voter List"
- தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது
- BLO முன்பு ஆஜராகி பெயரை சேர்க்க ரத்தன் கேல்கர் விண்ணப்பம் அளித்தார்.
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் SIR பணிகளுக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரத்தன் கேல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2002 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், தற்போது SIR பணியின்போது பெயர் நீக்கம். இந்நிலையில் BLO முன்பு ஆஜராகி பெயரை சேர்க்க ரத்தன் கேல்கர் விண்ணப்பம் அளித்தார்.
- 1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்றவர் அருண் பிரகாஷ்
- அருண் பிரகாஷ் 2004 முதல் 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார்
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கோவாவின் SIR திருத்தத்தின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷ் நேரில் ஆஜராகி தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 12 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கணினி பிழை காரணமாக முன்னாள் கடற்படை தலைவர் அருண் பிரகாஷுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அருண் பிரகாஷ் அதிருப்தி தெரிவித்தார்.
1971 இந்திய-பாகிஸ்தான் போரில் ஆற்றிய பங்கிற்காக வீர சக்ரா விருது பெற்ற அருண் பிரகாஷ், ஜூலை 31, 2004 முதல் அக்டோபர் 31, 2006 வரை கடற்படைத் தளபதியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கடல்சார் அறக்கட்டளை ஆகியவற்றில் பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
- அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிக்பார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களிலும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் தனித்தனியே வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனால் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50.90 கோடியாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 44.40 கோடியாக குறைந்துள்ளது.
இதில், தமிழகத்தில் மட்டும், 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.89 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இதில் பெரும்பாலும் இரட்டைப் பதிவுகள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது.
- ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாக்களர்கள் நீக்கம் அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"தமிழ்நாட்டில் SIR கணக்கீட்டுப் பணிகள் முடிவுற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அஇஅதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த SIR தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது.
எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது. அன்பார்ந்த வாக்காளர்களே- வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6, அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும்.
இதற்கு உங்களுக்கு நம் அதிமுக கழகத்தின் BLA-2 பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். முதலமைச்சரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் வாக்கு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள். அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது. என் உயிருக்கு உயிரான நம் தொண்டர்களே- SIR கணக்கீட்டுப் பணிகளில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும். ஆனால், இப்போது தான் நமக்கு மிக முக்கியமான வேலை இருக்கிறது.
ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை.
அதேபோல், போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களை அறிவுறுத்துகிறேன். மாவட்டக் கழகச் செயலாளர்கள் வழிகாட்டுதலோடு, SIR பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் இப்பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த உரிமையான நம் வாக்குகள் உண்மையானதாக இருப்பதை உறுதி செய்ய நடைபெறும் இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், தமிழ்நாட்டின் உண்மையான வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்ற, 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திடும் வகையில் பணியாற்றிடுவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர், இடம் பெயர்ந்தவர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14.25 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்த நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை 40.04 லட்சமாக இருந்தது.
இது, எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.79 லட்சமாக இருந்தது.
- கோவையில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
- அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்பதால் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தில் மொத்தம் 98 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.அதன் முழுவிவரம் குறித்து பார்க்கலாம்..
கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என மொத்தமாக 6.50 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிக்கு முன் கோவையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 32.25 லட்சம், இது SIR பணிகளுக்கு பின் வாக்காளர் எண்ணிக்கை 25.74 லட்சம் என உள்ளது.
இதேபோல்,சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்க வௌியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 3.62 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை- 14,25,018 வாக்காளர்கள் நீக்கம்
திருவள்ளூர்- 6.19 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
காஞ்சிபுரம்- 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கல்பட்டு- 7,01,871 வாக்காளர்கள் நீக்கம்
தஞ்சாவூர்- 2.06 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நெல்லை - 2.16 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
திருச்சி- 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
கரூர்- 79.690 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
நாமக்கல்- 1.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தென்காசி- 1.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தேனி- 1.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
விழுப்புரம்- 1.82 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அரியலூர்- 24,368 வாக்காளர்கள் நீக்கம்
ஈரோடு- 3,25,429 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பூர்- 5,63,785 வாக்காளர்கள் நீக்கம்
கோவை- 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்
கன்னியாகுமரி- 1,53,373 வாக்காளர்கள் நீக்கம்
சிவகங்கை- 1,50,828 வாக்காளர்கள் நீக்கம்
விருதுநகர்- 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்
பெரம்பலூர்- 49,548 வாக்காளர்கள் நீக்கம்
தூத்துக்குடி- 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்
கடலூர்- 2,46,818 வாக்கார்கள் நீக்கம்
நாகை- 57,338 வாக்காளர்கள் நீக்கம்
மதுரை- 3,80,474 வாக்காளர்கள் நீக்கம்
தருமபுரி- 81,515 வாக்காளர்கள் நீக்கம்
ராமநாதபுரம்- 1,17,364 வாக்காளர்கள் நீக்கம்
திண்டுக்கல்- 3,24,894 வாக்காளர்கள் நீக்கம்
கிருஷ்ணகிரி- 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்
திருவாரூர்- 1,29,480 வாக்காளர்கள் நீக்கம்
சேலம்- 3,62,429 வாக்காளர்கள் நீக்கம்
திருப்பத்தூர்- 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்
நீலகிரி- 56,091 வாக்காளர்கள் நீக்கம்
திருவண்ணாமலை- 2,51,162 வாக்காளர்கள் நீக்கம்
மயிலாடுதுறை- 75,378 வாக்காளர்கள் நீக்கம்
ராணிப்பேட்டை- 1,45,157 வாக்காளர்கள் நீக்கம்
புதுக்கோட்டை- 1,39,587 வாக்காளர்கள் நீக்கம்
கள்ளக்குறிச்சி- 84,329 வாக்காளர்கள் நீக்கம்
வேலூர்- 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்
மொத்தம்- 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார்.
- காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது .
திருப்பூர் :
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் கடிதத்தின்படி,மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான சாதாரணத் தேர்தல்களைநடத்திடுவதற்கு அறிவுரைகள் வரப்பெற்றுள்ளது. இதில் முதல் கட்ட பணியாக மேற்படித்தேர்தலுக்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிக்கான வாக்காளர் பட்டியலை 1999ம்ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்டத் திட்டமிடும் குழு உறுப்பினர்கள்தேர்தல்) விதி 10ல் குறிப்பிட்டுள்ளவாறு தயாரித்து வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழுஉறுப்பினர்கள் தேர்தல்) விதிகள் 1999-ன் விதி 6ன்படி மாவட்ட தேர்தல் அலுவலர் -மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கானவாக்காளர் பட்டியல் தயாரித்தல், வெளியிடுவதற்கான பதிவு அலுவலர் ஆவார். மேற்படிதேர்தலுக்கான வாக்காளர் பட்டியலினை இணைப்பு -அ-வில் உள்ளவாறு படிவம் -1தயாரித்து, இணைப்பு-ஆ-வில் உள்ள அறிவிப்பில் (படிவம்-2) வெளியிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை 2.5.2023 அன்று காலை 10.30 மணிக்குதிருப்பூர் மாவட்ட ஆட்சியரக அறை எண்: 238 –ல் மாவட்ட பதிவு அலுவலர் மற்றும்மாவட்ட கலெக்டரால் வீனித்தால் வெளியிடப்பட உள்ளது .
தமிழ்நாட்டில் வாக்காளர் வரைவு பட்டியல் கடந்த 31-ந்தேதி வெளியிடப்பட்டது.
ஊத்துக்கோட்டை தாலுகாவில் கடந்த 6 மாதங் களுக்கு முன்பு 1 லட்சத்து 9 ஆயிரத்து 120 வாக்காளர்கள் இருந்தனர். 6 மாதங்களுக்கு முன்பு 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிதாக தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.
இதில் 4 ஆயிரத்து 228 பேரின் பெயர்கள் வாக்காளர் வரைவு பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து ஊத்துக்கோட்டை தாலுக்காவில் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 54 ஆயிரத்து 951 பேர். பெண் வாக்காளர்கள் 58 ஆயிரத்து 389 பேர். 8 பேர் இதர பால் இனத்தவர்கள்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பிரிவுக்கு சென்று தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய விரும்புவோர் மற்றும் முகவரி மாற்றம் கோருவோர் வருகிற 9, 23-ந்தேதிகளில் மற்றும் அக்டோபர் 14, 31-ந்தேதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாம்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம். வருகிற 8-ந்தேதி, 22-ந்தேதி மற்றும் அக்டோபர் 6-ந்தேதி, 13-ந் தேதிகளில் ஊராட்சிகளில் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபா கூட்டங்களில் வாக்காளர்கள் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.






