என் மலர்
நீங்கள் தேடியது "TN Assembly election"
- காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
- மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
அந்த வகையில் ஆளும் கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் இடம்பெற்று உள்ளன.
இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.
இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இக்குழுவினர் சந்தித்து பேசினார்கள். காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
காங்கிரசில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது போன்று தி.மு.க.விலும் விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது.
இன்றைய சந்திப்பின் போது கூட்டணி கட்சிகள் இணக்கமாக செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் பேசுவதற்கு தி.மு.க. நேரம் ஒதுக்க உள்ளது.
- இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.
மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
- தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.
- மூன்று வாய்ப்புகளில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும்.
2026 தேர்தல் களம்...
இப்படித்தான் இருக்கும் என்று அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் கருதும் அளவுக்கு அரசியல் சூழ்நிலைகள் மாறி உள்ளன. கடந்த 1967-க்கு பிறகு தமிழக தேர்தல் களத்தில் பல தேர்தல்களில் மூன்று முனை போட்டிகள் உருவானாலும் கடைசியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகள் தான் இறுதிப் போட்டியில் இருக்கும். இதில் ஏதாவது ஒரு கட்சி தான் வெற்றிக் கோப்பையோடு ஆட்சியையும் பிடிக்கும். இதுதான் இத்தனை ஆண்டு காலம் அரசியல் களத்தில் தமிழ் நாட்டு மக்கள் பார்த்து வருவது.
ஆனால் வருகிற தேர்தல் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் விதைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தான்.
அவரை சுற்றித்தான் அரசியல் களம் சுழலும்.... என்பது மட்டும் தெளிவாகிவிட்டது. தனது கொள்கை எதிரியாக பா.ஜ.க.வையும் அரசியல் எதிரியாக தி.மு.க.வையும் அவர் சித்தரித்துள்ளதால் விஜய் இந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டார் என்பதும் உறுதி.
அதே நேரம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என்று அவர் சொன்ன வார்த்தை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அதாவது கூட்டணிக்கு அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் கூட்டணிக்கு தலைமை த.வெ.க.வாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. தற்போதைய நிலையில் விஜயின் முன் இருப்பது மூன்று வாய்ப்புகள் தான்
முதலாவது வாய்ப்பு தனது தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்குவது. அவ்வாறு ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என்றால் தி.மு.க. கூட்டணி உடைய வேண்டும். அந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட ஓரிரு கட்சிகள் வெளியேற வேண்டும்.
ஆனால் இப்போது அதற்கான சாத்திய கூறுகள் இல்லை. திரை மறைவில் த.வெ.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மேற்கொண்ட முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதை காட்ட தி.மு.க.வுடன் பேச்சு நடத்த டெல்லி மேலிடம் தனியாக 5 பேரை கொண்ட குழுவையும் அமைத்து விட்டது.
இரண்டாவது வாய்ப்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது. அப்படி ஒரு கூட்டணி உருவானால் அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டு என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது.
இப்படி ஒரு கூட்டணி உருவாக பிள்ளையார் சுழி போடப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால் விஜய்-அ.தி.மு.க. கூட்டணி ஏற்படப்போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க.வும் இருப்பதால் இதற்கான சாத்தியக்கூறு இல்லை என்பது இப்போதைய நிலை. ஏனெனில் கொள்கை எதிரியோடும், அரசியல் எதிரியோடும் கூட்டணி கிடையாது என்பதை விஜய் தெளிவுபடுத்தி விட்டார்.
மூன்றாவதாக எந்த கட்சி வராவிட்டாலும் பரவாயில்லை. தனித்து தேர்தலை சந்திப்பது. அப்படி விஜய் தனித்துப் போட்டியிட்டால் அது பலமான மும்முனை போட்டியை உருவாக்கும்.
தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி சிதையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளே வெற்றிக்கு போதுமானது. அதிருப்தி ஓட்டுகள் விஜய் பக்கம் போகும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது என்று தி.மு.க. கருதுகிறது. ஆனால் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்கும்.
இந்த மூன்று வாய்ப்புகளில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பும். அரசியல் களத்தை பொறுத்தவரை கடைசி வரை கூட்டணி முயற்சிகள் நடக்கும். கடைசியில் ஒன்று கூட்டணி அல்லது தனியாக போட்டி என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றுக்கு விஜய் தயாராக இருப்பார். அவரது முடிவின் அடிப்படையில் தான் தேர்தல் முடிவும் இருக்கும்.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.
- சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு மேற்கொண்டு வருகிறார். இந்த சந்திப்பின் போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முதல், கிளை கழக செயலாளர்கள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, கோவையில் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
- புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
அதேநேரம் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த பீகார் மாநிலத்திலும் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் செய்து முடித்து தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இதற்கிடையில் 2-ம் கட்டமாக 2026-ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கடந்த 27-ந்தேதி முதல் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த மாநிலங்களில் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள், முகவரிகள் சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால் இந்த பணிகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக தொடர்ந்து பல கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உதவி வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசியல் ரீதியாக எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு சிறப்பு திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு திருத்த பணிகள் நடந்து வரும் 12 மாநிலங்களிலும் உண்மையான கள நிலவரம் என்ன? வாக்காளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? என்பது பற்றி ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா பவனில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி 12 மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், சூரஜ்ஹெக்டே ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மாநில தலைவர் வைத்திலிங்கம், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் அனந்தராமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதற்காக டெல்லி மேலிடம் அமைத்துள்ள 38 பேர் கொண்ட குழுவுடனும் ராகுல்காந்தி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் 38 பேரையும் டெல்லிக்கு வரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் உருவாகி இருக்கும் கூட்டணி சர்ச்சைகள் தொடர்பாகவும் டெல்லி மேலிடத்தில் பேசுவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்து உள்ளார்கள். அதற்காக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகிய 3 பேரும் இன்று பிற்பகலில் டெல்லி செல்கிறார்கள்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அவர்கள் தங்குவதற்கு அறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலையில் இந்த தலைவர்கள் தமிழக பொறுப்பாளர்கள் கிரீஸ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்கள்.
காங்கிரஸ்-த.வெ.க. கூட்டணி ஏற்படலாம். இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் விஜய்யுடன் பேசி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தி.மு.க.வுடனான கூட்டணி முறியலாம் என்ற கருத்தும் காங்கிரசுக்குள் பரவி வருகிறது. தற்போதைய சூழலில் தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்புகிறார்கள். இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை டெல்லி தலைவர்களிடம் விளக்குவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் என்கிற ரெயில் வேகமாக புறப்பட்டு விட்டது.
- கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.விற்கு கைவந்த கலை.
திருப்பூர்:
திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகார் தேர்தலை போல தான் தமிழ்நாட்டில் 2026 தேர்தல் அமையும். அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். தி.மு.க. ஆட்சி கடந்த 4½ ஆண்டு காலமாக தமிழக மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார்கள். ஆனால் அதற்கு பாடம் புகட்டும் வகையில் பீகாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.
அதே போல தமிழகத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலரும். கூட்டணி கட்சியினரும் வெற்றியடைவார்கள். எடப்பாடி பழனிசாமி எக்ஸ்பிரஸ் என்கிற ரெயில் வேகமாக புறப்பட்டு விட்டது. அதில் பயணித்தவர்கள் அனைவரும் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வார்கள்.
இதில் ஏறாமல் நின்றவர்கள் காணாமல் போய்விடுவார்கள். மேலும் வாக்காளர் சீர்திருத்தத்தை மக்கள் மிகவும் வரவேற்கின்றனர். கள்ள ஓட்டு போடுவது தி.மு.க.விற்கு கைவந்த கலை. சீர்த்திருத்தம் செய்தால் திருட்டு ஓட்டு போட முடியாது என்பதால் மு.க.ஸ்டாலின் அலறுகிறார் என்றார்.
- அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி இன்று முதல் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
- கட்சியின் நிர்வாகிகள் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு வழங்கியுள்ளனர்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக பொதுச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொதுச்சின்னம் கோரி இன்று முதல் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுச்சின்னம் கோரி த.வெ.க. மனு அளித்துள்ளது.
தங்களது கட்சிக்காக 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலை வழங்கி அவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கீடு செய்யுமாறு த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் டெல்லி தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் சென்று மனு வழங்கியுள்ளனர்.
- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
- கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல அறிவுரைகளை வழங்க உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.
இதன்படி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு நிர்வாகிகளோடு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்றும், இன்றும் அவர் ஆலோசனை நடத்தினார்.
39 மாவட்டங்களிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகவே விரைவாக கொண்டு சேர்க்க முடியும் என்பதால் அதனை செயல்படுத்துவதில் அ.தி.மு.க.வினர் முக்கிய பங்காற்ற வேண்டும் என்கிற வகையிலேயே 2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு எப்படி உள்ளது? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் முதலமைச்சராக இருந்தபோதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் சாதனை பட்டியலை தயாரித்து அதனை சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டு சேர்த்து மக்களின் ஆதரவை முழுமையாக பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது பற்றியும் ஐ.டி. பிரிவினரிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டு உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நாகரீகமான கருத்துக்களை பதிவிட்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணிகளை சேர்ந்தவர்கள் முழுமையாக களம் இறங்கி செயல்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த 2 நாட்கள் கூட்டத்திற்கு பிறகு நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
ஐ.டி. பிரிவு நிர்வாகிகளோடு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திரட்டி வைத்துள்ள தகவல்களை வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.
இந்த கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல அறிவுரைகளை வழங்க உள்ளார்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக இருந்து வரும் மக்கள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி ஐ.டி. பிரிவினர் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ள உள்ள பிரசாரங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இதை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவாக்க விரும்புகிறோம்.
- கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெற தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை ரகசியமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்நோக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணியில் இணையுமா? இல்லையா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க., பா.ஜ.க. பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை த.வெ.க. தரப்பில் மறுத்தாலும், அ.தி.மு.க.,பா.ஜ.க. தரப்பில் எந்த கட்சியும் இணையலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் த.வெ.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அமித்ஷா,
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் விரிவாக்க விரும்புகிறோம். கூட்டணி கட்சியுடன் ஆலோசனை செய்தே இறுதி முடிவு எடுக்கப்படும். கூட்டணிக்காக யார் வேண்டுமானாலும் எந்த கட்சியுடனும் பேசலாம் என்றார்.
- வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை.
- எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். ஆனால் பீகாரில் இருந்து வருபவர்கள் கோயம்புத்தூரில் இரண்டு மாதமும், திருப்பூரில் இரண்டு மாதமும் திருச்சி திருநெல்வேலியில் மூன்று மாதமும் வேலை பார்க்கிறார்கள்.
இப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் நிரந்தரமாக அங்கே இருக்கின்றனர்.
அதனால் நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியும்.
ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரந்தர வாசிகளாக இருப்பவர்கள் தான் வாக்களிக்க முடியும்.
2026 தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும்.
விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் பொழுது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார். புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை.
கேரளா பிஎம்சி திட்டத்தில் சேர்த்ததைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார்.
- ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பி.எல்.ஏ.-2 தி.மு.க. முகவர்களை நியமித்து உள்ளார். அவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வை பலப்படுத்தும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பு மூலம் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்த்துள்ளார்.
இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து அவற்றை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக பயிற்சி கூட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 'கான்புளூயன்ஸ்' அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தலைகுனியாது 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பரப்புரையை தி.மு.க. தொடங்கிடும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் இந்த பயிற்சிக் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மாவட்டக் கழக செயலாளர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர்கள், ஒன்றிய நகர பகுதி கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள் என சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தலைகுனியாது 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரை செய்யப்படும் விதம் குறித்து விரிவாக விளக்கம் அளித்து பேசினார். அப்போது ஒவ்வொரு 100 வாக்குகளுக்கும் ஒருவர் என 6 லட்சம் பூத் கமிட்டியினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு பிரசார விளக்க காணொலி திரையிடப்பட்டது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்புக்கான செயலியில் உள்ள அம்சங்கள் பற்றி விளக்கங்களும் செயலி விளக்க காணொலி மூலம் விளக்கப்பட்டது.
இந்த விளக்க காணொலியுடன் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. பயிற்சி அளித்தார்.
அதன் பிறகு மாவட்டச் செயலாளர், தொகுதி பார்வையாளர் ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
கூட்ட முடிவில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நன்றி கூறினார்.
- தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது.
- இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து மாநில தலைமையுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க. கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
இந்த கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் பைஜயந்த்பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக டெல்லி பா.ஜ.க. தலைமை நியமித்து உள்ளது. அவரும் 2 முறை தமிழகத்துக்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் கட்சிகளான அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய கட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அந்த கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசினார். ஆனால் எந்த கட்சியும் இதுவரை உறுதியான முடிவுகளை தெரிவிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருப்பதால் மெதுவாக முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்ய டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது. இதற்காக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி மற்றும் அனுராக் தாகூர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்க தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவினர் விரைவில் தமிழகம் வந்து மாநில தலைமையுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் தி.மு.க. அறிவித்து நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல்கள், சட்டம், ஒழுங்கு நிலைமை, போதைபொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை ஆதாரங்களுடன் தயாரிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தல் அறிக்கையை ஜனவரி மாதம் தை பொங்கலையொட்டி வெளியிடவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.






