என் மலர்
நீங்கள் தேடியது "TN Assembly election"
- சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
- கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. -பா.ஜ.க. அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளது.
234 தொகுதிகளிலும் விருப்ப மனு விநியோகத்தை த.வெ.க. தொடங்கி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் தி.மு.க. சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில்,
* தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் நடத்தவில்லை.
* கூட்டணி குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது.
- தி.மு.க.வும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அமைதி காக்கிறது.
சென்னை:
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தலை போல் 25 தொகுதிகளை ஏற்க முடியாது. கூடுதல் தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன் வைத்துள்ளதால் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதிப்பங்கீட்டை முடிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைத்ததும் பேசி முடிவு செய்யலாம் என்று தி.மு.க.தரப்பில் கூறப்பட்டது. எனவே பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 5-ந்தேதிக்குள் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கும்படி காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரீஷ்சோடங்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் தி.மு.க. தரப்பில் அதை கண்டு கொள்ளவில்லை.
இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை அடிமட்ட தொண்டர்கள் முதல் ஒவ்வொரு மட்டத்திலும் எதிரொலிக்கவும் தொடங்கி உள்ளது. புதுவையில் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை காங்கிரசை அழைக்காமலேயே தி.மு.க. நடத்தியது. பாராளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் காங்கிரசுடன் தி.மு.க. எம்.பி.க்கள் கை கோர்க்கவில்லை.
இதற்கிடையே காங்கிரஸ் -த.வெ.க. இடையேயும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் 70 தொகுதிகள் வரை காங்கிரசுக்கு வழங்க த.வெ.க. முன்வந்திருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் த.வெ.க. தரப்பிலும், உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் உடனே சொல்லுங்கள். 14-ந்தேதிக்கு பிறகு நாங்கள் வேட்பாளர் தேர்வுக்கு செல்ல வேண்டி உள்ளது என்று காங்கிரசிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
ஆனால் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது. தி.மு.க.வும் என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று அமைதி காக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோரை ராகுல் அழைத்து விவாதித்துள்ளார். அப்போது கூட்டணியை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள், கட்சியின் பலம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை அவர் விவாதித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக ராகுல்காந்தி நாளை டெல்லியில் கே.சி. வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் கிரீஷ்சோடங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தப்போவதாக டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆலோசனைக்கு பிறகு ராகுல்காந்தி முக்கிய முடிவுகளை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் வருகிற 10-ந்தேதி டெல்லி செல்கிறார். அன்றைய தினம் காங்கிரசில் புதிதாக நியமிக்கப்பட்ட 692 மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி பட்டறை டெல்லியில் நடக்கிறது. இதில் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள். டெல்லியில் அவர்களையும் அழைத்து மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கூட்டணி சர்ச்சைகளுக்கு முடிவு வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
- இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
- தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
த.வெ.க.வில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.100 கொடுத்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முதல் நாளான நேற்று 10 ஆயிரம் படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.
முதல் நாளிலேயே ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து மனுக்களை வாங்கினார்கள். அதில் பலர் விஜய் பெயரிலேயே மனுக்களை வாங்கினார்கள். 10 ஆயிரம் மனுக்களும் 1½ மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.
கூட்டம் அதிக அளவில் திரண்டு சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் யாரும் விருப்ப மனு வாங்க நேரில் வர வேண்டாம். இணையதளத்தில் இருந்து இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.
பெயர், தந்தை-கணவர் பெயர், பிறந்ததேதி (வயது), பாலினம், கல்வி தகுதி, தற்போதைய கழகப் பதவி, எந்த ஆண்டில் இருந்து உறுப்பினராக இருக்கிறீர்கள், ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், அலை பேசி எண், மாற்று அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, தாய்மொழி, பேசும் திறன் உள்ள மொழிகள்,
உங்கள் வெற்றி வாய்ப்புகளை சுருக்கமாக விவரிக்கவும், சட்டமன்ற அல்லது பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருந்தால், அது பற்றிய தகவல்கள், கழகத்தில் இணைவதற்கு முன்பு வேறு ஏதாவது கட்சியில், கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், தங்கள் பெயரின் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அதுபற்றிய தகவல்கள், தங்களின் குடும்ப உறுப்பினர் மீது காவல் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்
டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களின் விபரம், தொழில், ஆண்டு வருமானம், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், கணவர், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் -குடும்ப விபரம், நீங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்றத் தொகுதி, நீங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியில் எஸ்.ஐ.ஆர்.க்கு பின் உள்ள மொத்த வாக்காளர்களின் விவரம், நீங்கள் இதே தொகுதியில் வசித்து வருகிறீர்களா?
இல்லை எனில், தாங்கள் வசிக்கும் தொகுதி, உங்கள் வாக்குரிமை இதே தொகுதியில் உள்ளதா? இல்லை எனில், தங்கள் வாக்குரிமை உள்ள தொகுதி, நீங்கள் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள், தங்களின் சொத்து விவரம், குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரம், தங்கள் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை ஏதேனும் தயார் செய்துள்ளீர்களா? ஆம் எனில், குறிப்பிடவும்.
கழகத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள், கழகப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குச் சென்றுள்ளீர்களா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், கழக விதிகளுக்கு எதிராக நடந்ததற்காக உங்கள் மீது ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள், சாதிச் சங்கங்கள் அல்லது சமூக அமைப்புகளுடன் உங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? ஆம் எனில், அது பற்றிய தகவல்கள்.
மேலும் தெரிவிக்க விரும்பும் வேறு ஏதேனும் கூடுதல் விவரங்கள், தற்போது வசிக்கும் முகவரி, நிரந்தர முகவரி ஆகிய விபரங்களுடன் கட்டண தொகைக்கான டி.டி. எண்ணும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த விபரங்களை பூர்த்தி செய்து புகைப்படத்தையும் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வித் தகுதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், கடந்த 3 ஆண்டுகளின் குடும்ப உறுப்பினர்களின் வருமான வரித் தாக்கல் ஆவணங்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவண நகல்களையும் இணைக்க வேண்டும்.
- மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
- வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கிறது. 234 தொகுதிகளிலும் களம் இறங்கும் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டு உள்ளார்.
ஆட்சியை பிடித்தே தீருவோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
விஜய் போட்டியிட போகும் தொகுதி பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள். விஜய் கட்சி தொடங்கும் போதே வெற்றியை குறிக்கும் வகையில் முதல் எழுத்தான 'வி'யில் தொடங்கும் ஊர்களை தேர்வு செய்து மாநாட்டை நடத்த முடிவு செய்தார்.
அதன்படி விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் விக்கிரவாண்டி தொகுதியை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள வி.சாலையில் தான் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது.

மாநாடு நடந்த இடத்தில் விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் அதில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. வயல் வெளியில் வானளாவிய உயரத்தில் த.வெ.க. கொடி பறக்கும் இந்த கம்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயனிக்கும் பலர் வி.சாலை வழியாக அங்கு சென்று கொடிக்கம்பத்தை பார்வையிட்டும் விஜய் படத்துடன் இடம் பெற்றுள்ள கல்வெட்டு அருகே நின்று புகைப்படம் எடுத்தும் செல்கிறார்கள்.
த.வெ.க. வரலாற்றில் முதல் முத்திரை பதித்த இந்த தொகுதியையே விஜய் முதல் தேர்வாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் போட்டியிட்டால் தனது தொகுதியில் பிரசாரம் செய்வதோடு மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் எளிதாக பிரசாரம் செய்ய சென்று வரலாம் என்று கருதுவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி. 103 ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கி உள்ளன.
2011 தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து தற்போதைய விக்கிரவாண்டி தொகுதி செயல்பட்டு வருகிறது.
- தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது.
- விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்தது.
அதன்படி, இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் பனையூரில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது.
விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனுக்கள் பெறுவதற்காக தொண்டர்கள் யாரும் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு வரவேண்டாம். விருப்ப மனுக்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருப்ப மனுவை பூர்த்தி செய்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் என தெரிவித்துள்ளார்.
- த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு அக்கட்சி இன்று முதல் விருப்ப மனு வழங்குவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இன்று மதியம் 12.00 மணி முதல் விருப்ப மனு வழங்கப்பட்டது. த.வெ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் விருப்ப மனு விநியோகம் நிறுத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு காலியானதால் தொண்டர்களை நாளைக்கு வரும்படி நிர்வாகிகள் அறிவுறுத்தினர்.
விருப்பமனு விநியோகம் 12 மணிக்கு தொடங்கப்பட்ட நிலையில் 2.30 மணிக்குள் மனுக்கள் காலியானதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் சுமார் 2.30 மணி நேரத்திற்குள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட த.வெ.க.வினர் ஆர்வமுடன் விருப்ப மனுக்களை வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருப்ப மனுக்கள் காலியானதைத் தொடர்ந்து தொண்டர்கள் வருகையை தவிர்க்கவும், ஏற்கனவே கூடியவர்கள் அங்கிருந்து புறப்பட ஏதுவாகவும் த.வெ.க. தலைமை அலுவலகத்தை அக்கட்சி நிர்வாகிகள் பூட்டி தொண்டர்களை அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இன்று முதல் 12-ந் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
- விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.
2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியை தே.மு.தி.க. இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை பெறும் முன், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை இன்று முதல் 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.
மேலும், தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
- பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் த.வெ.க. விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. த.வெ.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.100 மட்டும் செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம்.
விருப்ப மனு திருப்பி அளிக்கும்போது பொதுத்தொகுதிக்கு ரூ.10,000 செலுத்த வேண்டும். 14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.
மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.
- நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர்கள் நாங்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'ஆனைக்கு அறம்' என்றால் 'குதிரைக்கு குர்ரம்' என்று சொல்வதையும், 'பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்' வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் 'பொம்மை முதலமைச்சர்' மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.
2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம். கவர்ச்சிகரமாக பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் இந்த விடியா அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் 'திமுக-வின் உருட்டுக்கடை அல்வா' ஒன்றை தமிழக மக்களிடம் வழங்கினோம்.
மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர வக்கற்ற ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, ஒன்றிய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது.
* கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தவறிய திராணியற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு, தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை; ரெயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது.
* ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.
* 'பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்' என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.
'சேற்றிலும், அசிங்கத்திலும் கல் வீசினால் அந்த சேறும், அசிங்கமும் தன்மீதுதான் படும்' என்பதையும்; 'மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் அது தன் மார்பில்தான் விழும்' என்பதையும் உணராமல், தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவத்தையும், மரியாதையையும், தகுதியையும் எண்ணிப் பார்க்காமல் உளரித் திரிவதை, ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
* தமிழக மக்களை, தேர்தல் களத்தில் நெஞ்சுரத்தோடு தலை நிமிர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சந்திக்கும்.
* எங்களுடைய ஆட்சியின் மாட்சிமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்கும் வல்லமை எங்களுக்கு உண்டு.
* நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், கள்ளமில்லா உள்ளமும் கொண்டவர்கள் நாங்கள்.
கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில், ஒருசில மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் '0'தான் என்று கூறியுள்ளார்.
- பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. தற்போது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் த.வெ.க. ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், தேர்தலை தனித்து சந்திப்பதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்று த.வெ.க. முடிவு செய்யாத நிலையில் இருந்து வருகிறது.
இந்தநிலையில், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் இன்று முதல் பெறப்பட இருக்கிறது.
இதற்கான பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வாங்கப்பட உள்ளது.
14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுக்களை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வாங்குவதற்காக மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் தொண்டர்கள், நிர்வாகிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.
முதல் நாளான இன்று, மாவட்ட செயலாளர்கள் விருப்ப மனுக்களை வழங்க இருக்கிறார்கள்.
- திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை பாராளுமன்றம் வரை எதிரொலித்தது.
- அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கூட்டணி உறுதியாகி விட்டதால் அடுத்த கட் டத்தை நோக்கி இந்த கூட்டணி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
மீண்டும் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகிறார்.
வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) அவர் மதுரையில் பிரசாரம் செய்கிறார். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தை மதுரையில் நடத்தவே திட்டமிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தை மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடல், வலையல்குளம், உத்தல்குடி ஆகிய 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். போலீஸ் அனுமதி வழங்கும் இடத்தில் கூட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். கூட்டணி கட்சி தலைவர்களையும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை பாராளுமன்றம் வரை எதிரொலித்தது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தையே அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். எனவே மதுரை பிரசாரத்தின்போது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கும் சென்று அவர் சாமி தரிசனம் செய்வார் என்று கூறப்படுகிறது.
மேலும் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு-ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக் கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2-ம் கட்டமாக மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதனால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளார்கள். பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவும் தமிழ்நாட்டில் பிரசாரத்துக்கு வருகிறார்.
சேலம் விமான நிலையம் அருகே உள்ள திடலில் நடக்கும் கூட்டத்தில் அவர் பேசுகிறார். சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்பட 25 ஆயிரம் பேர் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்படுகிறார்கள்.
அமித்ஷா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.
மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகளை உடனே தொடங்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள புதுவை மாநிலத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.
வருகிற 21-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் பாதை, சாரதாம்பாள் நகரில் உள்ள நீச்சல்குளம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 14-ந் தேதி புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு வருகிறார்.
அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். பின்னர் அவர் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் வழிபடுகிறார்.
காரைக்கால் வருகை தரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வார் என கூறப்படுகிறது.
- சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
- விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
* சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
* நாளை முதல் பிப்ரவரி 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.
* விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
* பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.15 ஆயிரமாகவும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






