என் மலர்
நீங்கள் தேடியது "ev velu"
- லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீரக நோயால் கடந்த 14-ந்தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய மனைவி வசந்தா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லாமல் அவருடைய மகள்கள் லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா (17), மகன் அபினேஷ் (13) ஆகியோர் பரிதவித்தனர். அவர்கள் குடும்ப வறுமையை கண்டு கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து கமலக்கண்ணனின் இறுதி சடங்கை செய்தனர்.
நெஞ்சை உருக்கும் இந்த செய்தி பத்திரிகையில் நேற்று வெளியானது. இந்த செய்தி பலரது மனதை கலங்கடிக்க செய்தது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த செய்தியை படித்து பார்த்து கலங்கி உள்ளார். உடனே அவர், கமலக்கண்ணின் மூத்த மகள் லாவண்யாவிடம் செல்போனில் உருக்கமாக பேசி ஆறுதல் கூறி தன்னம்பிக்கை அளித்தார்.
மாணவி லாவண்யாவுக்கு செல்போனில் ஆறுதல் கூறிய உரையாடலை சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும். இந்த செய்தியை 'தினத்தந்தி'யில் படித்ததுமே, மாவட்ட கலெக்டரை அழைத்து அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் அவர்களை சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ரீனா ஐ.டி. படித்து இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை விரும்புகிறார். ரிஷிகா 10-வதோடு இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை தொடர விரும்புகிறார். அபினேஷ் படிக்க விரும்புகிறார்.
மாவட்ட ஆட்சியரும் நானும் ஆலோசனை நடத்தி, ரிஷிகாவையும், அபினேஷையும் அன்புக்கரங்கள் திட்டத்தில் சேர்த்து படிக்க வைக்க உள்ளோம். ரீனா ஐ.டி. படிப்பை தொடருவார்.
அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு நிரந்தர பணி ஏற்பாடு செய்யப்படும். அரசு சார்பாக இந்த பணிகளை செய்துள்ளோம்.
அந்த குடும்பத்தினரின் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் பொருளாதார உதவி அளித்துள்ளோம்.
இந்த குடும்பத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆலோசனைப்படி அரசு சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகளை செய்வோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
- விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.
அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
- கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது என்று பேசினார்.
இந்நிலையில் அப்பா, அம்மா என்ற பெயரை மாற்றி விடாதீர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வு மிக்கவர்.
* ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
* தன்னை போலவே அனைவரையும் எண்ணுகிறார் இ.பி.எஸ்.
* மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.
* கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.
* பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள்.
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம்.
- எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான்.
தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவிற்கு, த.வெ.க. நிர்வாகி பண மாலை அணிவித்து பின் மன்னிப்பு கேட்ட நிலையில் இதுதொடர்பாக எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்னை புதுமனை புகுவிழாவிற்கு அழைத்தவரின் குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம். அவர் அண்ணன், தம்பிகள் எல்லாம் தி.மு.க.வில் உள்ளனர். எனக்கு நெருக்கமான குடும்பம். அவரும் எனக்கு நெருக்கமானவர்தான். சென்ற முறை எனக்கு ஓட்டு போட்டவர் தான். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழாவிற்கு, ஐயா நீங்கள் வந்துதான் ஆக வேண்டும் என்று சொன்னார்கள்.
நான் பொதுவாக கட்சி பார்ப்பதில்லை. திருவண்ணாமலையை பொறுத்தவரை யார் எனக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்தாலும் சரி, நான் அந்த சட்டமன்ற உறுப்பினர். எனக்கு யார் வாக்களித்தார்கள். வாக்களிக்கவில்லை என்று பார்க்க முடியாது.
என்னை மதித்து அழைத்ததின்பேரில் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி விட்டு வந்தேன். அவ்வளவுதான். அவர் என்ன செய்தார் என்று என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும் என்று கூறினார்.
- தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது.
- புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு., பி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
தி.மு.க. அரசு யானை பலம் கொண்டது. தமிழகத்தில் எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் வளர்ச்சி பெறுகிறது. தி.மு.க. ஆட்சியின் போது தான் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் மட்டும் மதுரை-திண்டுக்கல் புறவழிச்சாலை, வைகை ஆற்றில் குறுக்கு பாலம், ஆண்டாள்புரம் பகுதியில் ரெயில்வே மேம்பாலம், திருப்பரங்குன்றம் சாலையில் மேயர் முத்துபாலம், மதுரை மாநகராட்சி கட்டிடம் அறிஞர் அண்ணா மாளிகை, மேலூர் சாலையில் ஒருங்கிணைந்த ஐகோர்ட்டு வளாகம் கட்டியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.
அதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மட்டுமல்லாது தென்தமிழகமே பயன்படும் வகையில் ரூ.120 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக மாவட்ட செயலாளர் மணிமாறன் முயற்சியால் மேம்பாலம் அமைய உள்ள இடத்தினை கையகப்படுத்த ரூ.22.88 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும் மேம்பாலம் கட்ட ரூ.33.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டிலேயே ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும். தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர் பயனடைந்து உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனா காலத்தில் கடனை செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2400 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கியவர் மு.க.ஸ்டாலின். இது மக்கள் ஆதரிக்கும் திராவிடமாடல் ஆட்சியாக உள்ளது.
தமிழக கவர்னர் விரும்புவது மனுதர்மம், மனுநீதி. ஆனால் தமிழக முதலமைச்சர் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அனைவரும் சமம் என்ற சமூக நீதியை விரும்புகிறார்.
தமிழகத்தில் பா.ஜனதா வளரவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியை வைத்துக்கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் பணியை செய்கின்றனர். பா.ஜனதா வின் சலசலப்பு தமிழகத்தில் எடுபடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைய வேண்டும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். பணிகள் தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 4-வது முறையாக மைதான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
இதுவரை 35 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது. தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல் தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி, வீரர்கள், உரிமையாளர்கள் ஓய்வு ஆறை, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பிட்ட நாளில் பணிகள் நிச்சயம் முடிவு பெறும். மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடையிடையே பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அனைத்து பணிகளும் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே இந்த மைதானம் திறக்கப்படும். புதிய சாலை அமைக்கும்போது தனியார் நிலங்களும் கையகப்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது.
வழக்கம் போல் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் ஆங்காங்கே வழக்கம்போல் நடக்கும். தமிழர்களின் வீர விளையாட்டை அடையாளப்படுத்தவும், பெருமைப்படுத்தவும் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசை மக்கள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
- சென்னையில் தி.நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சோதனை
- திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகள் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே எ.வ. வேலுவின் வீடு மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 கல்வி நிறுவனங்கள், அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் என 5 இடங்களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி அளவில் 10 கார்களில் சென்ற 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அருணை என்ஜினீயரிங் கல்லூரி உள்பட கல்வி நிறுவனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். கல்வி நிறுவனங்களில் மாணவ- மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட கல்வி கட்டணங்கள் எவ்வளவு? என்பது பற்றி கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
கல்வி நிறுவனங்கள் சார்பில் முறையாக வருமான வரி கட்டப்பட்டு உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கல்லூரிகளில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.
இதேபோன்று சென்னை, கோவை, கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்புடையதாக கருதப்படும் இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தம் 80 இடங்களில் வருமானவரி சோதனை நடந்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, தி.நகர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2 கட்டுமான நிறுவனங்களில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமாக தி.நகர் பகுதியில் 2 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. இங்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
80 இடங்களில் நடத்தப்படும் சோதனையில் சுமார் 50 சதவீத இடங்கள் பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களாகும். ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான 40 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.
பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெறும் பல்வேறு கட்டிட பணிகளை இந்த ஒப்பந்ததாரர்கள்தான் மேற்கொண்டு வருகிறார்கள். அதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா? அவர்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
- அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.
- சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலைக்கல்லூரியில் சோதனை நடந்தது.
உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடந்தபோதிலும் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் அடையாள அட்டையை சரிபார்த்த பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
- அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்:
தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமைச்சருக்கு தொடர்புடைய கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனைத்து அனெக்ஸ் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், வையாபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும், தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள தி.மு.க. முன்னாள் சேர்மன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 வாகனங்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சென்று துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் எ.வ.வேலு கரூரில் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக வெளியான தகவலின் பேரில் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.
இந்த சோதனை கரூர் மாவட்டத்தில் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
வேங்கிக்கால்:
தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப்பணி ஒப்பந்தாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட், ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்தது.
- அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
- மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை:
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது. மேலும் கோவையில் உள்ள அமைச்சரின் நெருக்கமான பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.
சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவலை வருமான வரித்துறை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுப்பணி ஒப்பந்ததாரர் வீடுகள் அலுவலகங்கள், பிரபல கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், காசா கிராண்ட் ஆகியவற்றிலும், கரூரில் உள்ள தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வான வாசுகி முருகேசன் சகோதரி பத்மா வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் எ.வ.வேலு வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளராக இருப்பவர் மீனா ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இவரது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக 2 கார்களில் வந்தனர்.
மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அருகே வசிக்கும் அவரது மகன் ஸ்ரீராம் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் சவுரிபாளையத்தில் உள்ள ஸ்ரீராமின் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவுக்கு பிறகு எஸ்.எம்.சாமியை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதுதவிர சிங்காநல்லூர் அடுத்த கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீடு, சவுரி பாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இதில் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம் மற்றும் தி.மு.க. பிரமுகர் எஸ்.எம்.சாமி வீட்டில் சோதனை நிறைவடைந்து விட்டது.
மற்ற இடங்களில் 3 நாட்களை கடந்து சோதனை சென்று கொண்டிருக்கிறது.
இன்று 4-வது நாளாக மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வீட்டில் இருப்பவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நடந்தது.
சிங்காநல்லூர் கள்ளிமடையில் உள்ள காசா கிராண்ட் முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்தது.
இதேபோல் சவுரிபாளையத்தில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்திலும் 4-வது நாளாக சோதனை நீடிக்கிறது.
சோதனை நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.
- அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேங்கிக்கால்:
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியிலும் இன்று 5-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.
இது தவிர காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






