என் மலர்
மதுரை
- மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது.
மதுரையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். ரூ.150 கோடி மதிப்பிட்டீல் மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மக்களின் நீண்ட கோரிக்கையையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
டிசம்பர் 7-ம் தேதி மதுரை மேலமடையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும்.
அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்துகள் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் உள்ள வளைவுகளில் அமெரிக்கா தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாலங்களின் வளைவுகளால் மட்டுமே விபத்துகள் நடைபெறுகிறது.
மதுரை தெற்குவாசல்- வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.
பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.
இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 8 முறை நடைபெற்றுள்ளதால் எஸ்.ஐ.ஆர்.ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கவில்லை.
எஸ்.ஐ.ஆர்.ஐ மேற்கொள்ள காலமும் நேரமும் போதாது என்பதைத்தான் கூறுகிறோம். வடகிழக்கு பருவமழை, பொங்கல் விழா, தேர்தல் தேதி அறிவிப்பு இருப்பதால் தற்போது எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறோம்.
கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா? அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்.
நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர் கருத்துதான் கூறுவார். இந்தியாவில் உள்ள அனைவரும் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து கருத்து சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?
பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளதால் அதன் செயல்பாடுகளுக்கு ஒத்து ஊதுகிறது. தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக ஓ.பி.எஸ். பதவி வகித்துள்ளார்.
மனோஜ் பாண்டியனுக்கு புரியாமலா தி.மு.க.விற்கு வந்திருப்பார். தமிழக அரசியலில் அண்ணா, பெரி யார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார்.
அதனையே மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திராவிட கொள்கையை தி.மு.க. மட்டும் தான் கடைப்பிடிப்பதால் பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.விற்கு வருகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி சங்கி கொள்கையை தாங்கி பிடிக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க.விலிருந்து, தி.மு.க.விற்கு வருகிறோம் என செல்கிறார்கள். தி.மு.க.விற்கு வருபவர்கள் அதன் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகி றார்கள்.
திராவிட மாடல் ஆட்சி யில் ஏழை, எளிய மக்க ளுக்காக முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்ப டுத்துவதால் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க. விற்கு நீண்ட காலமாக உழைப்பவர்களுக்கு பதவி கள் வழங்கப்பட்டுள்ளது.
துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என தி.மு.க.விற்கு உழைத்த வர்களுக்கு பதவி வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வார். திறமை உள்ளவர்கள் தி.மு. க.வில் உள்ளவர்களா? அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களா? என பார்க்க மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் சிறையை கண்காணிக்க தமிழ்நாடு சிறைத்துறை தலைவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட, மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் மூலம் சிறைகள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மத்திய சிறைச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மின் இணைப்பில் முறைகேடு செய்து வருகின்றனர்.
மதுரை மத்திய சிறை, கோவை மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் இது போன்று மின் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். சிறைச் சாலைகளில் உள்ள பல அதிகாரிகள் வீட்டில் மின் இணைப்பு இல்லை. இருந்த போதும் அதிகளவில் மின்சாதனங்களை வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மின்கட்டணம் இல்லை.
குறிப்பாக மதுரை சரக கூடுதல் இயக்குனர் டி.ஐ.ஜி. பழனி, கோயம்புத்தூர் சரகம் டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ஊர்மிளா ஆகியோர் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.
எனவே மத்திய சிறையில் நடைபெறும் மின்சார திருட்டு முறைகேட்டை தடுக்க மின்வாரிய மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து எதிர்மனுதாரர் தரப்பில் பதில் அளிக்காமல் கால அவகாசம் கேட்பது ஏற்கத்தக்கது அல்ல. மனுதாரரின் குற்றச்சாட்டு தீவிரமானது. எனவே இந்த வழக்கை டிசம்பர் 3-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதற்கு முன்னதாக சிறைத்துறை மற்றும் மின்வாரிய துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க நேரிடும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
- அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது :-
கடந்த 2022-ம் ஆண்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்து உத்தர விட்டது. மேலும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் வீட்டில் நள்ளிரவில் புகுந்து சோதனை செய்வது போன்ற நடவடிக்கைகள் எதிர்த்து 28.9.2022 அன்று அதிராமபட்டினம் பஸ் நிலையம் முன்பாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.
நாங்கள் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக கூறி அதிராமபட்டினம் போலீசார் எங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 143, 341, 188, 290 மற்றும் 291 ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
காவல்துறை சட்டத்தின் பிரிவு 30(2)-ன் படி அதிராமபட்டினம் போலீசார் அரசியலமைப்பின் வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு குடிமகனுக்கு பேச்சு சுதந்திரத்தையும் நியாயமான கட்டுப்பாடுகளுடன் வெளிப்பாடுகளையும் வழங்குகிறது.
அந்த வகையில் எங்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கலந்த ஆசிக் அகமது ஆஜராகி, மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக போலீசார் இது தொடர்பான புகார் குறித்து முதல்கட்ட விசாரணையை நடத்தாமல் நேரடியாக வழக்கு பதிவு செய்தது ஏற்புடையதல்ல என வாதாடினார்.
விசாரணை முடிவில், போராடியதற்காக வழக்கு பதிந்தால் எந்த ஒரு குடிமகனும் ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்த முடியாது. அரசுக்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்த ஒன்று கூடுவதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க முடியாது. அந்த வகையில் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
- நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
- டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
மதுரையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் மேலும் கூறியதாவது:-
ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது.
நீ என்னப்பா பைத்தியம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை போல் டிடிவி தினகரன் பேசி வருகிறார்.
டிடிவி தினகரனை நம்பி சென்றவர்கள் நிலை பற்றி அவர் யோசித்தது உண்டா?
டிடிவி தினகரனுடன் இருந்த தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திமுக சென்றபோது ஏன் கவலைப்படவில்லை?
பொதுவெளியில் டிடிவி தினகரன் எதை வேண்டுமானாலும் பேசிவிடலாமா?
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
- பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்.
மதுரையில் த.வெ.க. கூட்டணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். 43 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் தான் பின்னடைவு. இப்படி தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததே தவிர,
ஐந்தரை கோடி வாக்காளர்களில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருந்தால், எந்த உள்குத்தும், வெளிகுத்தும், ஊமைகுத்தும் இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் எல்லோரும் ஜெயிச்சிருப்போம்.
உள்குத்து, ஊமைக்குத்து என்றால் என்ன என்று கேட்காதீர்கள். அது வாங்கியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இது ஒரு பருவமழை காலம். மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கு பிறகு கூட்டம் குறித்து கேள்வி கேளுங்கள். அப்போது சொல்கிறோம்.
நான் சொல்லியோ.. நீங்கள் சொல்லியோ ஒன்றும் நடக்காது. பேச வேண்டியவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும். நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.
- துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம்.
திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது- நீதிமன்றம்/ true essence of marital relationship lies in reciprocity, respect, friendship and kindness Court
திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது- நீதிமன்றம்/ true essence of marital relationship lies in reciprocity, respect, friendship and kindness Court
உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தன்னை தாக்கிய வழக்கில் கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து இந்திரா என்ற பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் "இந்திராவின் கணவனர் தனசீலனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 6 மாத சிறைத்தண்டனையைமாற்ற குறைக்க தேவையில்லை. குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது" எனத் தெரிவித்தது.
மேலும், "திருமண உறவின் உண்மையான சாராம்சம் பரஸ்பரம், மரியாதை, நட்பு மற்றும் கருணையில் உள்ளது. திருமணத்தின் புனிதம் என்பது அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக தாங்கிக்கொள்வதில் இல்லை.
துன்புறுத்தலின்போது அமைதியாக இருப்பது சகிப்புத்தன்மை அல்ல. அது அடக்குமுறையை நிலைநாட்டும் அடிமைத்தனம். வீட்டிற்குள் நடக்கும் துன்புறுத்தல் பல நேரங்களில் நான்கு சுவருக்குள் மட்டுமே நிகழ்பவையாக இருக்கும். ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் எனக் கூறுவது அந்த சட்டப்பிரிவின் நோக்கத்தையே சிதைக்கும்" எனக் கருத்து தெரிவித்தது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
- நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி,
மதுரை:
மதுரை அழகர்கோவில் துைண மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
நாயக்கன்பட்டி, அழகர் கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளியங்குன்றம்புதூர், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர்பட்டி, தொப்பவாம்பட்டி, கொடிமங்கலம், கருவனூர், தேத்தாம்பட்டி, மந்திகுளம்.
மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் பொற்செல்வன் தெரிவித்துள்ளார்.
- 2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன.
- பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அங்கு ரூ.2000 கோடி அளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது.
சுற்றுச்சூழல் முக்கியதுவம் வாய்ந்த சதுப்பு நிலத்தில் சட்ட விரோதமாக கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எப்படி அனுமதி வழங்கி உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எடப்பாடியார் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெற்ற பின்னர் ரூ.100 கோடியளவில் முறைகேடு, லஞ்சம் கரைபுரண்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச அளவில் ஈரப்பகுதிகளை காக்கும் வண்ணம் 1922 ஆண்டு ஈரானில் ராம்சார் என்ற சர்வதேச உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டனர்.
2022 ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன. தற்பொழுது 1,247 ஹேக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலையில் ஈர பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் 4-வது பிரிவுபடி ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலங்களில் எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது அனுமதி வழங்க முடியாது.
இந்த சூழ்நிலையில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப்பகுதிகளில் 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி ஆகும்.
குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் கைமாறியதாக சொல்லப்படுகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது தலைநகரில் உள்ள ஒரே ஒரு ஈரப்பகுதியாகும். வடகிழக்கு பருவமழையில் நீரை உள்வாங்கி நிலத்தின் நீர் தன்மையை உயர்த்தும்.
தற்போது பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய முதல்வர் ஸ்டாலின் என்ன கூற போகிறார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் பலன் அடையப்போவது யார்? ஆகவே இன்றைக்கு முறைகேடு செய்து, ஊழல் செய்த இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட தயாராகி விட்டனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மாவின் ஆட்சி வரும். அப்போது இது போன்று சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்படும் என்றார்.
- செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
- ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.
மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* இ.பி.எஸ்.-ஐ விட செங்கோட்டையன் வயதில் மூத்தவர் அவ்வளவு தான்.
* ராகுல் காந்தி கூட தான் வயதில் சிறியவர், ஆனால் தலைவர்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள்.
* செங்கோட்டையனை விட வயதில் சிறியவரானாலும் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
* கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி A1 குற்றவாளி என்றால் சிறையில் தள்ளி விடலாமே?
* ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட துரோகி தான் டி.டி.வி. தினகரன்.
* டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடுவில் செங்கோட்டையன் மாட்டிக்கொண்டார்.
* இங்கு ராஜாவாக இருந்த செங்கோட்டையன் அங்கு கூஜா தூக்குவது போல் ஆகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்கிறார்கள். இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் இ-மெயில் மூலமாக மதுரை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக ஐகோர்ட்டின் நுழைவாயில் மூடப்பட்டது. உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழையாதவாறும் போலீசார் தடுப்பு காவலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு சோதனை தொடங்கியது. இந்த சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் ஐகோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி இதே போல ஐகோர்ட்டு பதிவாளர் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், சோதனைக்கு பின்பு புரளி என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.
- எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
மதுரை மாவட்டம் கப்பலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக இணைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இபிஎஸ் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
துரோகிகளாகல் தான் கடந்த தேர்தலில் அதிமுகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. கட்டுப்பாட்டை மீறினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வரும் என சொன்ன ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி ஒன்றாகி இணைய முடியும்.
எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் துரோகிகள் இருந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருவரும் திமுகவின் பி டீம்.
பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள களைகள் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வந்து ஆட்சியை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.
- 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
மதுரை மாவட்டம் கப்பலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
* அ.தி.மு.க.வும் த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. த.வெ.க.வும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை.
* 2026-ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் பங்கேற்றது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, வீட்டிற்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் தங்கள் ஊருக்கு வந்த என்னை த.வெ.க. தொண்டர்கள் வரவேற்றுள்ளனர் என்று அவர் பதில் அளித்தார்.






