என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஐ"

    • பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
    • கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

    டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார்.

    இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார்.

    * எந்த தேதியில் விஜய் மீண்டும் ஆஜர் என்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை.

    * விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது.

    * சி.பி.ஐ. விசாரணையில் த.வெ.க. தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை அளித்திருந்தார்.

    * பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.

    * ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது.

    * கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு 12-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதையடுத்து அவர் நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மதிய உணவு இடைவேளைக்கு அவர் வெளியே விடப்படவில்லை. அவருக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது.

    பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே நடத்திய விசாரணையின் அடிப்படையில் விஜய்யிடம் கேட்பதற்கு கேள்விகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட 100 கேள்விகள் தயாரிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

    விஜய் விசாரணைக்கு சென்ற நேரத்தை ஒட்டியே கரூர் சம்பவம் நடந்தபோது சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவரும், தற்போது ஆயுதப்படை டி.ஜி.பி.யாக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த (தற்போது தலைமையக கூடுதல் கமிஷனர்) ஜோஷி நிர்மல்குமார் ஆகியோரும் ஆஜர் ஆகினர். விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளை ஒப்பிட்டே அவர்களிடமும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

    சம்பவத்துக்கு முழு காரணமும் த.வெ.க.தான் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் த.வெ.க. இதனை மறுத்து போலீஸ் தரப்பை குற்றம் சாட்டியுள்ளது.

    எனவே, சி.பி.ஐ. விசாரணை இருபக்கமும் கூர்மையாக செல்கிறது. சி.பி.ஐ. அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணையை கொண்டு செல்கிறார்கள். ஒன்று, கட்சியிடம் நடத்தப்படுகிறது. மற்றொன்று காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்படுகிறது. இன்னொன்று சி.பி.ஐ. அதிகாரிகளின் கள ஆய்வு மூலம் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த 3 கோண விசாரணையையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஒப்பீடு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள் என கூறப்படுகிறது.

    த.வெ.க. மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நேற்றைய விசாரணையில் விஜய் மறுத்துள்ளார். சம்பவத்துக்கு த.வெ.க. பொறுப்பல்ல என அவர் உறுதிபட கூறியுள்ளார்.

    அவரை 2-வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மதித்து உள்ளனர்.

    இந்நிலையில சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு விஜய் புறப்பட்டார்.

    ஜன. 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரத்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
    • பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது.

    கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி சென்றார். அங்கு பஸ்சில் நின்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி உத்தரவிட்டது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரத்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.

    கரூரில் பல கட்டங்களாக விசாரணை நடந்து வரும் நிலையில் த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்கள் கடந்த மாத இறுதியில் 3 நாள் டெல்லி அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களுடன் கரூர் மாவட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்தநிலையில் கரூர் சம்பவத்தின் பெருங்கூட்டத்துக்கு காரணமான விஜய்யிடம் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைப்போல போலீஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்த சம்மன் தொடர்பாக வக்கீல்கள் மூலம் பதில் தெரிவிக்கலாமா? என த.வெ.க. நிர்வாகிகள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதாகவும், ஆனால் விஜய் நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்பாக தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக விஜய் தனி விமானம் மூலமாக நேற்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டார். அவருடன் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் சென்றனர். இந்த விமானம் காலை 10 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. அங்கிருந்து சி.பி.ஐ. அலுவலகத்துக்கு விஜய் காரில் புறப்பட்டார். காலை 11.30 மணி அளவில் லோதி ரோடு பகுதியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்றார்.

    உள்ளே சென்ற அவர் முதலில் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காத்திருக்க வைக்கப்பட்டார். சிறிதுநேரம் கழித்து விசாரணைக்குழு முன் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளைக்கு அவர் வெளியே விடப்படவில்லை. அவருக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது.

    பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    விஜயை 2-வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மதித்து உள்ளனர்.

    இந்நிலையில், சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு விஜய் புறப்பட்டார்.

    ஜன. 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.

    சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், விசாரணை முடிந்து ஆதவ் அர்ஜூனாவுடன் விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். மேலும், விஜயிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியானது. இன்றிரவு டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி நாளையும் விஜய் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜயிடம் நாளை நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தரப்பில் வைத்த கோரிக்கைக்கு சிபிஐ அனுமதி அளித்துள்ளது.

    விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    • டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.

    சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விசாரணை முடிந்து ஆதவ் அர்ஜூனாவுடன் விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார்.

    மேலும், விஜயிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றிரவு டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி நாளையும் விஜய் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார். சிபிஐ அதிகாரிகள் மேலும் சில கேள்விகளை கேட்பதற்காக நாளையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    • விஜய்க்கு ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    • விஜய் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானதையொட்டி டெல்லியிலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர்.

    இந்த நிலையில் கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    சென்னை பழைய விமான நிலையத்தில் 6-ம் எண் நுழைவு வாயிலில் வந்து இறங்கிய விஜய்யை மத்திய விமான பாதுகாப்பு படையினர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அவர் விமான நிறுவனத்தின் காரில் ஏறி தனி விமானம் நிற்கும் பகுதிக்கு சென்றார்.

    விஜய்க்கு ஏற்கனவே 'ஒய்' பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    பின்னர் தனி விமானம் மூலம் விஜய் காலை 7.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தனி விமானத்தில் த.வெ.க. தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், இணை பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் சி.ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோரும் உடன் சென்றனர்.

    விஜய் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகம் செல்லும் வழியில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்கு வசதியாக இந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டது.



    டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற விஜய், பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.





    விஜய்யிடம் 2 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. இன்றைய விசாரணை முடிந்ததும் விஜய் தான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தங்கும் அவர் நாளையும் விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் கூறப்படுகிறது.

    விஜய் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானதையொட்டி டெல்லியிலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கிய போது அவருக்கு விமான பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு அளித்தனர்.

    மேலும் அவர் தங்கி இருந்த ஓட்டலிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் விஜய் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியிலும், ஓட்டலில் இருந்து விசாரணைக்கு ஆஜராக செல்லும் வழியிலும் டெல்லி போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரும் வந்துள்ளனர்.
    • மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் டெல்லி வந்தடைந்தார்.

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி வந்தடைந்தார். அவருடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமாரும் வந்துள்ளனர்.

    மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு அடிப்படையில் விஜய் செல்லும் அனைத்து இடங்களிலும் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறது.

    காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் விஜயிடம் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளதால் விசாரணை பல மணி நேரம் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. 

    • விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வந்திருந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

     

    தனி விமானத்தில் டெல்லி செல்லும் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.



    இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

    முன்னதாக இவ்வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 29,30,31-ந்தேதிகளில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும்.
    • முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார்.

    சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜன நாயகன் தணிக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "பராசக்தியை ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. மத்திய அரசு தடைசெய்யவேண்டும் என்றால், ரெட் ஜெயண்ட் படத்திற்குத்தான் தடைவிதித்திருக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு எதிரி திமுகதான். ஜன நாயகன் குறித்து பேசுபவர்கள் மூளையில் இருக்கும் அறிவைப் பயன்படுத்தமாட்டார்களா? குழந்தை அழுதால்கூட மோடியை காரணம் கூறுபவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும். அதுதான் அடிப்படை விதி. இது தயாரிப்பாளர்களின் தவறு. பின்னர் மத்திய தணிக்கை வாரியத்தை தவறு கூறாதீர்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்கள் இடையில் இருந்துள்ளன. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அவர்கள் 24 மணிநேரமும் உங்களுக்காக வேலைசெய்ய வேண்டுமா? ஒரு ரசிகையாக எனக்கும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது குறித்து வருத்தம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் எப்பொழுதும் மாறாது. இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும். குறைக்கூறுவதற்கு முன் யோசியுங்கள். " என தெரிவித்தார். 

    தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு, 

    கரூர் பிரச்சனை எழுந்தபோது முதலில் சிபிஐ விசாரணை கோரியது யார்? நாங்கள் கேட்டோமா? முதலில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது விஜய்தான். அவர்மீது தவறு இல்லை இல்லையா? முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார். அவர் கேட்டார்; விசாரணை நடக்கிறது; அவர் ஆஜராகிவிட்டு வருவார். என தெரிவித்தார். 


    • எங்கள் தந்தை மற்றும் சகோதரர் இறந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த வழக்கில் கைதானவர்கள் சுதந்திரமாக அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இந்த வழக்கு நேற்று நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால் அதற்கு அவர்கள், தாங்கள் எந்த குற்றச்சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு விசாரணையை காண்பதற்காக இறந்த ஜெயராஜின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

    வழக்கு விசாரணை முடிந்த பின்பு ஜெயராஜின் மகள் பெர்சிஸ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் தந்தை மற்றும் சகோதரர் இறந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடமாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சி.பி.ஐ விசாரணை திருப்திகரமாக இருந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திடீரென அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம். போலீசார் எங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் கைதானவர்கள் சுதந்திரமாக அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றனர். ஈவு இரக்கமின்றி என் தந்தையையும், தம்பியையும் காவல்துறையினர் தாக்கி இருக்கின்றனர். இதற்கு முழு காரணம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஜெயராஜ் பென்னிக்ஸ் இறப்பு சம்பந்தமாக ஆய்வு செய்த சுகாதாரத் துணை இயக்குனரின் அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கோரியதால், அந்த வழக்கை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி ஸ்ரீமதி ஒத்தி வைத்தார்.

    • காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
    • த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்து உள்ளனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. வரும் 12-ந்தேதி நேரில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள்.
    • சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.

    கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணை யில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்கள் நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பி ரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது.

    தொடர்ந்து இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.

    இதையடுத்து த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டெல்லியில் 3 நாட்களாக நடந்து வந்த விசாரணை நிறைவடைந்தது.

    * சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.

    * எங்களிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்துள்ளோம்.

    * தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் அழைப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    * 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×