என் மலர்
நீங்கள் தேடியது "madurai court"
- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
- முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.
மதுரை:
மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு-செசன்சு கோர்ட்டு தொடக்க விழா மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் இன்று நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் மாவட்ட கோர்ட்டு வளாகத்திற்கு காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்டோரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து விழா தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட கோர்ட்டு கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். விழாவிற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு மற்றும் செசன்சு கோர்ட்டுகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா வரவேற்று பேசினார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பாராட்டி பேசினர்.
மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ, அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஸ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட அங்கு கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ParliamentEelection #HCMaduraiBench
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் பொட்டு சுரேஷ் இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ல் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு அவரை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.

ஆனால் அட்டாக்பாண்டி தொடர்ந்து 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். பின்னர் 2015-ம் ஆண்டு மும்பையில் அவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தனக்கு ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்த மனுக்களை 5க்கும் மேற்பட்ட முறை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சபா ரத்தினம் என்பவர் கடந்த 5 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று காலையில் அவர் மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.
சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி எஸ்.ஜே. வசிப்தார் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஜே. வசிப் தார் பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாவார்.
நீதிபதி வசிப்தார் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிடு மனு தாக்கல் செய்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா கூறுகையில், நீதிபதி வசிப்தார் பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ஆனால் அவர் தன்னிச்சையாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதை ஏற்க முடியாது என்றார். #ThoothukudiIncident #SterliteProtest
சிவகாசி விவேகானந்தர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் பாலமுருகன் (வயது 25). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தனது நண்பர் சதீஷ்குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆலமரத்துப்பட்டி அருகே அவர்களை 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து பாலமுருகனை கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் செங்மலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை அருகில் பாலமுருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவலின்பேரில் அவரது உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை கடத்தி சென்றது யார் என்பது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் முத்துராமலிங்கபுரம்காலனியை சேர்ந்த சித்திரைவேல், மணி என்ற பள்ளமணி, ஜோதி, கார்த்திக் என்ற குட்டைகார்த்திக் உள்பட சிலர் மீது சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாலமுருகன் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகாசி விவேகானந்தர்காலனியை சேர்ந்த ராஜபாண்டி மகன் சிவசக்திபாண்டியன்(23), சர்க்கரை மகன் கிருஷ்ணன் (25), முருகன் மகன் பாலமுருகன் (24), ராமசாமி மகன் சித்திரைவேல் (30) ஆகிய 4 பேரும் நேற்று மதுரை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு கவுதமன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை மதுரை சிறையில் அடைத்தனர்.
மானாமதுரை அருகே ஆவரங்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் கொலை தொடர்பாக பழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய சுமன், அருண்குமார், அக்கினி, ராஜேஷ், அஜய் தேவன் ஆகிய 5 பேர் இன்று மதுரை மாவட்ட ஜே.எம்.(எண்.4) கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இதையடுத்து நீதிபதி கவுதமன், 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். #tamilnews