என் மலர்
நீங்கள் தேடியது "ஏ ஆர் டெய்ரி"
- ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
- தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
உரிமம் நிறுத்தி வைப்பு மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை அமர்வில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஏர்.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு பரிசீலனை செய்யும்படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
- திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
- திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என கூறியதையடுத்து, கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12 -ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெய் வினியோக நிறுவனங்களில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினரும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






