என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு.
- ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும்.
சந்திரன் ரிஷப ராசியின் மூன்றாவது பாகையான கிருத்திகை நட்சத்திரத்தில் உச்சம் அடைகிறார். கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான். ஒரு ஜாதகத்தில் சூரியன் ஆன்மாவையும் ஆன்ம பலத்தையும் குறிப்பவர். ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடலையும் மனதையும் குறிப்பவர்.
உடலையும் மனதையும் பற்றி கூறும் சந்திரன் ஆன்மாவை பற்றி கூறும் சூரியனின் நட்சத்திரத்தில் உச்சம் அடைந்தால் மனமும் ஆன்மாவும் புனிதம் அடையும். உடலாலும் உள்ளத்தாலும் ஒருவர் உயரும் போது லவுகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அடைய முடியும். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் ஆன்ம பலம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் சுப வலிமை பெற வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு திடகாத்திரமான மனநிலை உண்டு. மதிநுட்பத்துடன் செயல்படுவார்கள். நல்ல தோற்ற பொலிவு உள்ளவர்கள். எந்த சூழ்நிலையிலும் அஞ்ச மாட்டார்கள். தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தாய்மை உணர்வுடன் வழிநடத்துவார்கள்.
எளிதில் நோய்கள் அண்டாது. சந்திரன் காலபுருஷ நான்காம் அதிபதி என்பதால் சந்திரன் பலம் பெற்றால் ஸ்திர சொத்துக்கள் இருக்கும். இனி 12 லக்னங்களுக்கும் உச்ச சந்திரன் என்ன பலனை வழங்குவார் என்று பார்க்கலாம்.
மேஷ லக்னத்திற்கு 4-ம் அதிபதியான சந்திரன் 2ம்மிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் நிரம்பப் பெற்றவர்கள்.
தாயின் மூலமாக திரண்ட சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய அமைப்பு உண்டு. பலர் வாடகை வருமானம் தரக்கூடிய சொத்துக்கள் உள்ளவராக இருப்பார்கள். கற்ற கல்வியின் மூலம் பயன் உண்டு. படித்ததை உடனே புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். தான் கற்றதை பிறருக்கு உபதேசிக்கும் வல்லமை நிரம்பியவர்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பது பண்ணை தொழில் போன்றவற்றில் ஜாதகருக்கு ஆர்வம் மிகுதியாக உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழிலில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களின் அனுசரணை இருக்கும். இடத்திற்கு தகுந்தார் போல் தனது பேச்சை மாற்றுவார்கள்.
ரிஷப லக்கனத்திற்கு 3-ம் அதிபதியான சந்திரன் ராசியில் உச்சம் பெறுவது மிகச் சிறப்பான அமைப்பாகும். ஜாதகர் பிறந்தவுடன் குடும்பத்திற்கு மாற்றம் தரக்கூடிய நல்ல இடப்பெயர்ச்சி நடக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
ஜாதகருக்கு உடன்பிறந்த இளைய சகோதர சகோதரிகள் இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஜாதகருக்கு வருமானம் உண்டாகும். அடிக்கடி தொழில் வேலை உத்தியோகத்தை குடியிருப்பை மாற்றிக் கொண்டே இருப்பார். விடா முயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். வேலை ஆட்கள் யோகம் நிறைந்தவர்கள். பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
மிதுன லக்னத்திற்கு தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதியான சந்திரன் தன் வீட்டிற்குப் பின் வீடான 12ம் இடத்தில் உச்சம் பெற்றால் ஜாதகருக்கு மறைமுக வருமானம் அதிகமாக இருக்கும். ஜாதகர் கற்பனையில் கனவுகளில் வாழ்வார்கள். குடும்ப வாழ்க்கை ரகசியம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். சிலர் உண்ண உறங்க நேரமில்லாமல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டே இருப்பார்கள். கஞ்சத்தனம் அதிகமாக இருக்கும்.
ஆதாயம் இல்லாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். உலகில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை அனுபவிக்காமல் பணத்தையும் சொத்து சுகத்தையும் கட்டிக் காத்துக் கொண்டு இருப்பார்கள். தானும் அனுபவிக்க மாட்டார்கள் தன்னை சார்ந்தவர்களையும் அனுபவிக்க விடமாட்டார்கள்.
கடக லக்னத்திற்கு ராசி அதிபதியான சந்திரன் 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் நின்றால் மிகப்பெரிய பொருளாதார அமைப்பு நிறைந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் உள்ளவர்கள். குடும்ப தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்வார்கள். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். கடக லக்னத்திற்கு 11ம்மிடம் பாதகஸ்தானம் என்பதால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அது ஜாதகரை சார்ந்தவர்களுக்கு தான் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நல்ல நட்புகள் உண்டு பேச்சில் பெருமிதம் இருக்கும். வாக்கு சம்பந்தமான தொழிலை அதிகம் விரும்புவார்கள்.
வாக்கு வன்மை உண்டு. கொடுத்த வாக்கை எந்த சூழ்நிலையிலும் தவற விட மாட்டார்கள். தாய் பாசம் பற்றி அடிக்கடி பேசுவார்கள்.
சிம்ம லக்னத்திற்கு விரயாதிபதியான சந்திரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. சிம்ம லக்னத்திற்கு சந்திரன் உச்சம் பெறுவது சுமாரான பலன்களை தரும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காக பிரயாணம் செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். அதிக முதலீடு உள்ள தொழில்களை தவிர்ப்பதால் வீண் விரயங்களை கட்டுப்படுத்த முடியும். இடது கண் பாதங்களில் பாதிப்பு இருக்கும். எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் இரவில் நிம்மதியாக உறங்குவார்கள். சிலர் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பார்கள். அயல்நாட்டு வாழ்க்கையை விரும்புவார்கள். சிலர் அந்திம காலத்தில் வெளியூர் வெளிநாடு வெளி மாநிலத்தில் பிள்ளைகளுடன் கழிப்பார்கள்.
கன்னி லக்னத்திற்கு லாப அதிபதியான சந்திரன் 9-ம் மிடமான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிகச்சிறந்த அமைப்பாகும். ஜாதகர் அந்தஸ்து, கவுரவம், உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஜாதகருக்கு வருமானம் வந்து கொண்டே இருக்கும். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்புடனே வசிப்பார்கள். பல தொழில் வல்லுநராக இருப்பார். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகமாக இருக்கும். ஆயிரம் பேருக்கு மத்தியில் ஜாதகர் தனித் திறனுடன் மிளிர்வார்கள். எந்த சூழ்நிலையிலும் பிறரிடம் கையேந்தி வாழ மாட்டார்கள். இரண்டு குடும்ப வாழ்க்கை உண்டு. கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார். மூதாதையர்களின் சொத்து ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ஜாதகரின் எண்ணங்களும் விருப்பங்களும் உடனுக்குடன் நிறைவேறும்.
துலாம் லக்னத்திற்கு தொழில் ஸ்தான அதிபதியான சந்திரன் 8ம் இடத்தில் உச்சம் பெறுவது நல்லது. முதலீடு உயர்ந்து கொண்டே இருக்கும். முதலீட்டை விட அதிக வருமானம் வந்து கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பிய வாழ்க்கை துணை அமையும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக வருமானம் உண்டு. பேச்சில் கனிவு கவுரவம் இருக்கும். அறநெறி தவறாமல் வாழ்வார்கள். உயர் கல்வி வாய்ப்பு உண்டு. அறக்கட்டளை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். தந்தைக்கு இருதார யோகம் உண்டு. ஜாதகர் தாய் வழி பாட்டி வீட்டில் வளர்ந்தவராக இருப்பார். தந்தையை விட தாத்தாவின் மேல் பிரியம் அதிகமாக இருக்கும். தாய்வழி தந்தை வழி சொத்து உண்டு. வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ஜாதகர் பிறந்த பிறகு தாய், தந்தைக்கு பொருளாதார மேன்மை உண்டாகும்.
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதி பதியாகி ராசிக்கு ஏழாம் இடத்தில் பெறுவது சற்று சுமாரான பலனை தரும். பரம்பரை கூட்டுத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையில் சம்பந்தம் இல்லாத நபர்களால் நிம்மதி குறைகிறது. ஏழில் சந்திரன் உச்சம் பெற்ற விருச்சிக லக்னத்தினர் திருமணம் ஏன் நடந்தது என்று வருந்தும் வகையில் திருமண வாழ்க்கை இருக்கிறது. பாதகாதிபதி ஏழில் உச்சம் பெறுவதால் கூட்டுத் தொழில் வஞ்சிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குறைவுபடும். ஜாதகரின் சந்திர தசை காலங்களில் விருச்சிக லக்னத்தவரின் தாய், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என அனைத்தும் பாதிப்படைகிறது. பொதுவாக விருச்சிக லக்னம் கால புருஷ எட்டாமிடம் என்பதால் எளிதில் எந்தப் பிரச்சினையும் எளிதில் வெளியில் தெரிவிக்காத பிரச்சினை நன்றாக தீவீரமடைந்த பின்பே வெளியில் தெரியும். கடுமையான பாதகம் உருவாகும்.
தனுசு லக்னத்திற்கு அஷ்டமாதிபதியான சந்திரன் மற்றொரு மறைவு ஸ்தானமான ஆறாம் இடத்தில் உச்சம் பெறுவது சிறப்பு அல்ல. கெட்டவன் கெடுவது நல்லது. கெட்டவன் உச்சம் பெறுவது ஜாதகருக்கு உச்சகட்ட கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகம் அதிகப்படுத்தும். உத்தி யோகம் சிறப்பாக இருக்காது அல்லது அடிக்கடி உத்தியோகத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சிலர் நடக்காததை நடந்ததாக நினைத்து கற்பனை பயத்தை வளர்த்துக் கொள்வார்கள். சந்திரனுக்கு ராகு கேது சம்பந்தம் இருந்தால் புத்தி தடுமாற்றம் மிகையாக இருக்கும். சிலர் அடிப்படை தேவைக்கு கூட போராட வேண்டிய நிலை இருக்கும். மிகச் சுருக்கமாக சந்திர தசை காலங்களில் ஜாதகரின் உடலில் உயிரை மட்டும் விட்டு வைத்து மனிதனை நிர்கதியாக்குகிறது. பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவில் சென்று குடியேறுவார்கள்.
மகர லக்னத்திற்கு சந்திரன் களத்திர ஸ்தான அதிபதியாகும். அவர் 5ம் மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால்
ஜாதகருக்கு மிகச்சிறப்பான வாழ்வியல் மாற்றத்தை ஏற்படும். பூர்வீகம், குலதெய்வம், குழந்தை அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் ஜாதகருக்கு நன்மை தரும்.ஜாதகர் திறமையான அணுகு முறையுடன் கூடிய சாமார்த்தியசாலியாக திகழ்வார்கள். பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். ஜாதகர் உயர்ந்த குலத்தில் பிறந்தவராக இருப்பார். தன்னைத் தானே உணரும் வலிமை படைத்தவராக இருப்பார்கள். காதல் திருமணம் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் பல மடங்கு உயரும். கூட்டு தொழில் பல மடங்கு நன்மை தரும். குடும்ப உறவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பார்கள். நிச்சயமாக சொத்து வாகன வசதிகள் இருக்கும். இயல் இசை நாடகப் பிரியர்கள்.
கும்ப லக்னத்திற்கு 6ம் அதிபதியான சந்திரன் 4-ம்மிடத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன் அல்ல. கடன், நோய், வம்பு, வழக்கு எதிரியை உருவாக்கி தரக்கூடிய கிரகமான சந்திரன் நான்காம் இடத்தில் உச்சம் பெறுவதால் ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும். கல்வியில் தடை உண்டாகும். அல்லது அதிகமாக கல்லி கடன் பெற்று உயர் கல்வி படிப்பார்கள். நான்காம் அதிபதிக்கு ஆறாம் அதிபதி சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு முதல் சொத்து விரயமாகும் அல்லது சொத்தை விற்று கடன் தீர்ப்பார்கள். சொத்தின் மதிப்பை விட கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும். 6ம் இடத்திற்கு லாப ஸ்தானம் நான்காம் இடம் என்பதால் இது போன்ற அமைப்பு இருப்பவர்கள் சொத்து வாங்கும் முன்பு தாயிடம் அல்லது தாய் மாமாவிடம் யாசகம் பெற்று சொத்து வாங்க வேண்டும்.
மீன லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சந்திரன் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் உச்சம் பெறுவது மிக உயர்வான அமைப்பாகும். ஆன்மீக நாட்டம் தியாக சிந்தனை மிகுந்தவராக இருப்பார். பிறருக்கு உபதேசம் செய்து கொண்டே இருப்பார்கள். புனித யாத்திரை செய்யும் பாக்கியம் உள்ளவர்கள். முதலீடு இல்லாத கமிஷன் தொழில்கள் பல மடங்கு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொடுக்கும். வயது கூட கூட ஜாதகருக்கு வருமானம் கூடிக் கொண்டே இருக்கும். குல கவுரவம் நிரம்பியவர்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு பூர்வீகத்தை விட்டு வெளியேறி முன்னேறுவார்கள் ஆதாயம் இல்லாத விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தொழில் உத்தியோகத்திற்காக அடிக்கடி இடம் மாறுவார்கள். சாதாரண மனிதனாக இருந்தால் கூட சாதனை மனிதனாக மாறுவார்கள். பொதுவாக ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் ஜாதகரின் சிந்தனை ஓட்டம் நல்ல விதமாக இருக்கும். உச்ச சந்திரனால் இன்னல் களை அனுபவிப்பவர்கள் பவுர்ணமி அன்று பால் சாதம் தானம் வழங்க மேன்மையான பலன்கள் உண்டாகும்.
செல்: 98652 20406
- கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
- மது, புகை வேண்டவே வேண்டாம்.
2026-ம் ஆண்டினை நாம் நெருங்கி வருகின்றோம். ஒரு பேப்பர் எடுத்து 2025-ல் என்ன வெல்லாம் செய்தீர்கள் என 15 நிமிடங்கள் உங்களுக்காக செலவழித்து எழுதிப் பாருங்கள். அநேகருக்கு சில செய்திகளே இருக்கும். இந்த ஊருக்குப் போனேன், கோவிலுக்கு போனேன். டிரஸ் வாங்கினேன் என சிலரும் பல வகையான வேதனைகளை பகிரும் சிலரும் இருப்பர். மற்றும் சிலர் காலை முதல் இரவு வரை வேலை மட்டும் தான் இருந்தது என்பர். இப்படி பல பிரிவுகளில் சொல்லலாம்.
ஆனால் முன்னேற்றத்தினை அடைந்ததாக சிலரே கூறுவர். அநேகர் செல்போன், சீரியல், யூடியூப் என அன்றாட நேரத்தினை உபயோகமற்று செலவழித்து இருப்பர். பரவாயில்லை. எதுவும் குற்றம் இல்லை. ஆனால் கிடைக்கும் காலத்தினை நமக்காகவும், நம் ஆரோக்கியத்திற்காகவும், நம் குடும்பத்திற்காகவும் செலவழிக்கலாமே என்ற முறையில் எழுத முற்படுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.முயன்று பார்ப்போமே.
* உங்களுடைய உற்ற நண்பர் யாராக இருக்க வேண்டும் தெரியுமா? நீங்கள் தான். நீங்கள் மட்டும்தான். உங்களுக்கு உற்ற நண்பராக நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
* உங்கள் வாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். மாறாக சண்டை, விரோதம் வளர்ப்பதாக இருக்க வேண்டாம்.

* கணவன்-மனைவி, பிள்ளைகள், நல்ல உறவுகள் போன்ற உறவுகளை பொது இடத்தில் மட்டம் தட்டி பேசக் கூடாது. ஆறாத காயத்தினை இது ஏற்படுத்தும்.
* சிலரை பற்றி குறைவான எண்ணங்களில் மட்டுமே மூழ்க வேண்டாம். இது மனதில் ஆழப்பதிந்து அதனை நீக்குவது கடினமாகி விடும்.
* உங்கள் குழந்தைகளுடன் கட்டாயம் தினமும் பேச வேண்டும். நேரம் செலவழிக்க வேண்டும். சிறு குழந்தைகள் என்றால் விளையாட வேண்டும்.
* நம் குழந்தைகள் நம் வேலையினை விட முக்கியம்தான்.
* தினமும் உங்கள் நிதி நிலைமையினை வரவு செலவினை கணக்கு பார்க்க வேண்டும். இது நம்மை அறியாமல் எத்தனை தண்ட செலவினை தினமும் செய்கின்றோம் என்பதனைக் காட்டும்.
* முடிந்த வரை கடன்களை தீர்த்து விடுங்கள். கடன் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய பணக்காரராக இருப்பதாகும்.
* ஏதாவது சிறு முயற்சி செய்து சிறு தொழில் செய்து வருமானத்தினை கூட்ட முடியுமா? என்று யோசித்து செயல்படுங்கள்.
* வயதான காலத்திற்காக இன்றே சேமிக்க ஆரம்பிக்க வேண்டும்.
* வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிந்தால் நேரமும், பணமும் மிச்சமாகும்.
* எந்த ஒரு வேலையிலும் திறமையை கூட்டிக் கொள்ளுங்கள்.
* விழிப்புணர்வு ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும்.
* இந்த வாழ்வில் நாம் என்ன பெற வேண்டும் என்பதில் தெளிவு தேவை.
* 3 முதல் 6 வரை மாத வருமானம் இல்லாவிடினும் வீட்டை நடத்தும் அளவு தனி சேமிப்பு இருக்க வேண்டும்.
* அன்றாடம் 10 நிமிடங்களாவது தியானம் செய்வது அவசியம்.
* வாய் விட்டு சிரியுங்கள்.
* எந்த செயலிலும் முறையாகவும், ஒழுக்கமாகவும் இருங்கள்.
* அன்றைய நாளில் எது முக்கியமோ அதனை முதலில் செய்யுங்கள்.
உடல் நலம்- சாப்பிடுவதற்கு 10 நிமிடம் முன்பு உணவைப் பற்றி யோசித்தால் சத்தான உணவு கிடைக்காது. கிடைக்கும் எதனையோ கொண்டு வயிறு நிரப்பினால் ஆரோக்கியம் கெடும். முதல் நாளே மறுநாளைக்கான உணவு பட்டியலை தயார் செய்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலம் இதிலேயே 50 சதவீதம் முன்னேற்றம் பெறும்.
* ஒருமுறை வறுத்த, பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது 24 மணி நேரத்திற்கு வயிறு சங்கடமாகவே உணர்வீர்கள். 24 மணி நேரம் வறுத்த, பொரித்த, மசாலா பொருட்களை தவிருங்கள். நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் என்று உணர்வீர்கள்.
* உடற்பயிற்சி என்பதற்கு மனம் போனபடி லீவு கொடுக்க வேண்டாமே. பால், பால் சார்ந்த உணவுகள் அளவோடு இருந்தால் ஜீரணம் சீராக இருக்கும்.
* ஏதாவது ஒன்றினை விட்டு விடலாமே- அதிக காபி, டீ, மது போன்றவற்றை விட்டு விடலாமே.
* உடற்பயிற்சி செய்யுங்கள். எளிதாக ஒரு மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படச் செய்யலாம்.
* தினமும் சற்று வியர்க்கும் அளவு உடற்பயிற்சி செய்யுங்கள்.
* மது, புகை வேண்டவே வேண்டாம்.
* செல்போன் சார்ஜ் ஆவது உங்கள் படுக்கையில் இருந்து தள்ளி இருக்கட்டும்.
* ஒரு ரூமிலேயே அடைந்து கிடக்க வேண்டாம்.
* ஒவ்வொரு உணவிலும் நார்சத்து, புரதம் இல்லாமல் உண்ணாதீர்கள்.
* அன்றாடம் இறைவனுக்கு, பெற்றோர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
* உங்கள் நாளை தினமும் காலையில் வரையறுத்து செயல்படுங்கள்.

கமலி ஸ்ரீபால்
* சுத்தமாக, நேர்த்தியாக உடை அணிபவர் மதிக்கப் படுகின்றார்.
* எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று இல்லாமல் எளிமையாய் இருந்தால் அவர் மதிக்கப்படுவார்.
* வெற்றி இருக்கும் இடத்திலேயே கூட்டம் கூடும்.
* எதிலும் அதிக ஆசை வைக்காது இருப்பது ஒருவரின் மரியாதையினை உயர்த்தும்.
* எங்கோ, யாரோ- மருத்துவ மனையில் இருக்கும் தன் உறவின் உயிருக்காக கடும் பிரார்த்தனை செய்கின்றனர். அப்படியென்றால் அந்த உயிரில் இருக்கும். அதன் அருமையினை நாம் உணர்ந்து வாழ வேண்டும்.
* சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.
* படிப்பை விட முக்கியமானது பண்பு.
* யாரை பற்றியும் குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டாம்.
* வெதுவெதுப்பான நீரில் ஒரு முறை நாள் ஒன்றுக்கு குளிக்கலாம்.
* 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது நமக்குத் தெரிந்தது தானே.
* 7000 முதல் 10000 அடிகள் அன்றாடம் உங்கள் நடையில் இருக்க வேண்டும்.
* 10 நிமிடமாவது சூரிய ஒளி உடலில் பட வேண்டும். இரவு 9 மணிக்கு தூங்கச் செல்கின்றீர்களா? நீங்கள் இளமையாய் இருப்பீர்கள்.
* 10 மணிக்கு தூங்கச் சென்றால் மூளை செயல்பாடு பாதிக்காது. சீராக இருக்கும்.
* 11 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு முடி கொத்து கொத்தாய் கொட்டும்.
* 12 மணிக்கு தூங்கச் செல்பவர்களுக்கு எடை கூடுகின்றது.
* 1 மணிக்கு தூங்கச் செல்பவர்கள் அன்றாடம் சிறிது சிறிதாக நஞ்சு அருந்துவதற்கு சமம்.
நாம் எப்படி இருக்கின்றோம் என்பதனை நாமே அறிந்து கொள்ளலாம்.
* மிக அதிக நேரம் தூங்குபவர்களுக்கு மனதினுள் ஏதோ துக்கம், கவலை இருக்கும்.
* சின்ன ஜோக்குக்காக விழுந்து விழுந்து அதிகம் சிரிப்பவர்கள் மனதினுள் தனித்து இருக்கின்றார்கள்.
* டி.வி., சினிமா பார்த்து மற்றும் நிகழும் சிறு செயல்களுக்காக அழுது விடுபவர்கள் உள்ளத்தில் மிகவும் தூய்மையானவராக இருப்பர்.
* முறையற்று மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ சாப்பிடுபவர்கள் ஏதோ மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள்.
* சிறு நிகழ்வுகளில் சுணங்கி விடுபவர்கள் மனதில் அன்புக்காக ஏங்குகின்றனர்.
* ஒருவரது துன்ப காலத்தில் உடன் நிற்பவர் எப்போதும் அவருக்கு உண்மையாக இருப்பவர் ஆவார்.
இதனை அறிந்தால் நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளலாமே.
சிலவற்றினை நாம் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.
* உடல் அளவில், மனதளவில், பண அளவில் நீங்கள் பலவீனமாக இருக்கும்போது யாரையும் எதிர்க்கக் கூடாது. நமது பலம் கூடட்டும்.
* நம்மை நாமே காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. திட்டிக் கொள்ளக் கூடாது.
* கண் மூடித்தனமாக யாரையும் முழுமையாய் நம்பக் கூடாது.
* தவறானவர்களுடன் நட்பினை தொடரவே கூடாது.
* யாராவது அழுகின்றார்கள் அல்லது சிரிக்க சிரிக்க பேசுகின்றார்கள் என்பதால் எல்லை மீறிய கருணை, எல்லை மீறிய நட்பு வேண்டாம்.
* யாரிடமும் இரண்டாம் முறையாக கெஞ்சி உதவி கேட்கக் கூடாது. உங்கள் சுய மரியாதை காக்கப்பட வேண்டும்.
* சோக பாட்டுகளை கேட்பதினை, ரசிப்பதனை தவிருங்கள்.
சில பழக்கங்கள் ஒருவரை அமைதியாய் கொல்கின்றன.
* போதுமான தூக்கமின்மை என்பது தொடர்ந்து தேவையான அளவு தூக்கம் இல்லாதது.
* அளவுக்கு அதிகமாக தொடர்ந்து தூங்கும் பொழுது உடலில் அதிக தாக்குதல்கள் நிகழும்.
* தொடர்ந்து காலை உணவினை தவிர்க்கும் பொழுது,
* தொடர்ந்து இரவில் மிக காலம் தாழ்த்தி உண்ணும் பொழுது.
*அதிகம் பதப்படுத்திய உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் என ஓயாது உட்கொள்ளும் பொழுது.
* அதிகம் சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்தும் பொழுது.
* அதிக காபி, டீ, மது எடுத்துக் கொள்ளும் பொழுது.
* தேவையான அளவு அன்றாடம் நீர் எடுத்துக் கொள்ளாத பொழுது.
* அசையாது 'இடித்த புளி' போல் ஒரே இடத்தில் வெகுநேரம் அமரும் பொழுது.
* முறையற்று கோணல், மாணலாக அமரும் பழக்கம் கொண்டவராக இருக்கும் பொழுது.
* ஓய்வில்லாது வேலை செய்யும் பொழுது.
* உடற்பயிற்சி இல்லாத பொழுது, யோகா பயிற்சி இல்லாத பொழுது.
* 'ஸ்ட்ரெஸ்' அதிகம் உள்ளவர்களுக்கு
* விஷ உறவுகள், எதனையும் வெளியில் சொல்லாமல் மனதினுள் புழுங்குபவர்கள்.
* அஷ்டாவதானி போல் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள்.
* தனக்கு தானே அழிவுப்பூர்வமாக பேசிக் கொள்பவர்கள்.
* எதனையும் மிக மிக அதிகமாக யோசிப்பவர்கள்.
* தனக்கென நேரம் ஒதுக்காத–வர்கள்.
* எல்லாவற்றிற்கும் 'சரி, சரி' என தலையாட்டி வேலை செய்பவர்கள்.
* பழைய சோகங்களில் மூழ்கி கிடப்பவர்கள்.
* பணத்தினை முறையாக கையாளாதவர்கள்.
* 'பரபர'வென வேகமாக சாப்பிடுபவர்கள்.
* டாக்டர் பரிசோதனையினை தவிர்ப்பவர்கள்.
* எரிமலை போல் எப்பொழுதும் கோபமாக இருப்பவர்கள்.
* ஊர் வம்பு மட்டுமே பேசுபவர்கள்.
* உணவினை நன்குமென்று விழுங்காதவர்கள்.
* பிடிக்காத வேலையில் தொடர்ந்து இருப்பவர்கள்.
* எப்பொழுதும் பயத்தோடு வாழ்வது.
* சதா ஏதாவது சாப்பிடுவது.
* முறைப்படி அன்றாட வேலைகளை செய்யாது இருப்பது.
* நன்றி உணர்வு இல்லாது இருப்பது.
* ஏதோ வாழ்க்கை என வாழ்வது.
* மனநலம் இல்லாமல் இருப்பது.
இவை அனைத்துமே மெதுவாய் ஒருவரை கொல்லும் விஷங்கள். ஆக எத்தனையோ விஷயங்களை நம் வாழ்வில் நாம் மாற்ற வேண்டி உள்ளது. சில நீக்கப்பட வேண்டும். சில உருவாக்கப்பட வேண்டும். இந்த புது வருடத்தில் இவைகளை செயல்படுத்த ஆரம்பிக்கலாமா.
- பொய் என தெரிந்தும் சிலவற்றை நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பத்திற்காக
- டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார்.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பர். பண்டிகை முடிந்தாலும், இனி வர இருப்பதாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் என்றாலே அதிகம் பேசப்படுபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. அதாவது சாண்டா கிலாஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சாண்டா தாத்தா மான்பூட்டிய வண்டியில் வானத்தில் இருந்து இறங்கிவந்து நமக்கு பிடித்தவற்றை பரிசாக வழங்குவார் என்று நீண்டகாலம் பேசிவருகிறோம்.
சிறுவயதாக இருக்கும்போது மட்டுமில்லை, பரிசு கிடைக்காவிட்டாலும் பெரியவர்களாக ஆனாலும் நாம் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஏன்? கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
அதாவது சுற்றி இருப்பவர்களே நம் தேவையை, ஆசையை உணராதபோது சாண்டா கிலாஸ் அதனை அறிந்து அதனை நிறைவேற்றும்போது ஒரு மகிழ்ச்சி. பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்க்கும் நன்மை பயக்கும் எனில், அந்தப் பொய் நன்மையை விளைவிப்பதாக இருந்தால் அதைக் கண்டு மகிழலாம் என வள்ளுவர் கூறுவது போல, சில கற்பனைகள் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன. அதுபோலத்தான் இதுவும்.
சரி கதைக்கு வருவோம். உண்மையில் சாண்டா கிலாஸ் இருக்கிறாரா? ஆம். இப்போது இருக்கிறாரா என்றால் இருக்கிறார், இருந்தார். செயிண்ட் நிக்கோலஸ், இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறித்தவ ஆயர். நிக்கோலஸ் இரக்கம், நல்லுணர்வு மற்றும் குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டும் குணம் நிறைந்தவர். மேலும் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ரகசியமாக பரிசுகளை வழங்கும் குணம் கொண்டவர். இவர் இறந்தபின் இவர்குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. அதில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகொடுப்பது.
காலப்போக்கில், டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார். இப்போதும் அப்படியே தொடர்கிறார். ஆக சாண்டா கிளாஸ் இருந்தார். மேலே குறிப்பிட்டவாறு இப்போதும் இருக்கிறார். நம் தேவைகளை, நினைப்பவகளை பூர்த்தி செய்யும் அனைவரும் சாண்டா கிலாஸ்தான். பெண்களுக்கு அவரது தந்தை சாண்டா கிலாஸாக இருப்பதுபோல அனைவருக்கும் அவரவர்களது தாய் அல்லது அன்புக்குரியவர்கள் எப்போதும் சாண்டா கிலாஸ்தான்.
அப்படி சாண்டா கிலாஸ் மாற்று உருவத்தில் இல்லையென்றாலும், நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நாமும் நமக்கான சாண்டாதான்.
- உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.
- வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
அனைவருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தானே ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கான சில முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் அல்லவா? அந்த முயற்சிகளைப் பற்றி இங்கு பார்ப்போம்.
* நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை நல்ல ஆரோக்கியம்தான். ஆக முதல் முயற்சியாக அன்றாடம் 20 முதல் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பிக்கலாமே. சாதாரணமாகத் தெரிந்தாலும் இதன் பலன்கள் ஏராளம்.
* வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் ஒழுக்கம் அவசியம். பேசும் பேச்சு, உண்ணும் உணவு என அனைத்திலும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம்.
* ஒருநாளில் ஒவ்வொரு நிமிடமும் எப்படி செலவழிக்கின்றோம் என்பதனைப் பொறுத்தே ஒருவரின் வருங்காலம் நிர்ணயிக்கப்படுகின்றது. இதனை ஒவ்வொரு நொடியிலும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
* அப்பா, அம்மா வாழ்வில் மிக முக்கியம். அவர்களோடு நேரம் செலவழியுங்கள். சேர்ந்து உணவு உண்ணுங்கள். அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
* மிஷின் போன்று ஒரே மாதிரியாக வாழாதீர்கள். வெளியில் செல்லுதல், படித்தல், நண்பர்கள் என வாழ்விற்கு சுவை சேருங்கள்.
* மருத்துவரிடம் எந்த பொய்யும் கூறாதீர்கள். எதனையும் மறைக்காதீர்கள்.
* நேரம், காலத்தில் நல்ல முதலீடு செய்தால் அதன் பலன் மிக சிறப்பாக இருக்கும்.
* உடற்பயிற்சி நல்ல மன நிலையினையும் தரும்.
* புன்னகையும் அவசியம்.
* தைரியம் அவசியம்.
* உள்ளுணர்வு சொல்வதை உற்றுக் கேளுங்கள்.

* பிறரது நேரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* ஒருவர் மன்னிப்பு கேட்ட பிறகு 2 மணி நேரம் அதைப் பற்றியே பேசாதீர்கள்.
* முக்கியமான குறிப்புகளை எழுதி வைக்கலாம்.
* நம்பிக்கையோடு இருங்கள்.
* ஒருவரால் நமக்கு எந்த உதவியும் இல்லை என்றாலும் அவரை மதிக்க வேண்டும்.
* எதிலும் அதிக 'துல்லியம்' என எதிர்பார்த்தால் அந்த செயலை முடிப்பது கடினமாகி விடும்.
* சொல்ல வேண்டியதனை தெளிவாக சொல்லப் பழகுங்கள். முயற்சி செய்வோமே.
சில மாற்றங்களை நாம் செய்தால் வாழ்க்கையும் மாறும்.
* சிறு சிறு அடிகளாக வைத்தாலும் சரியான பாதையில் சென்றால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். குறுக்கு வழி, முன்னேற்றம் என்ற பெயரில் எகிற குதித்து தவறான வழியில் சென்று விடாமல் இருப்பது நல்லது.
* நடைபயிற்சி என்பது வேறு, காலாற நிதானமாய் நடப்பது என்பது வேறு. நடைபயிற்சி என்பது கைகளை சற்று வீசி பேசாமல், துரித நடை செல்வது. காலாற நடப்பது என்பது நிதானமாய் இயற்கையை ரசித்து நம் உறவுகள், நண்பர்களோடு பேசிக் கொண்டோ அல்லது தனியாகவோ நடப்பது, காலாற நடப்பது மனதிற்கு அத்தனை மகிழ்ச்சி தரும்.
* வாழ்வில் திடீர் திடீர் என ஏதோ, எப்படியோ தடங்கல்கள் ஏற்படுகின்றது. வாழ்க்கை நன்கு செல்லும் பொழுதே இந்த தடங்கல்கள், தாக்குதல்களை மனதில் கொண்டு பாதுகாப்புகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
* ரொம்ப சவாலாக இருக்கும் செயல் என்றாலும் அதில் உடல், மனம் உறைந்து விட வேண்டாம். அதனையும் மனதில் சற்று எளிதாகவே எடுத்துக் கொண்டுதான் செயல்பட வேண்டும்.
* நல்ல மனம், திறந்த சிரிப்பு, அழகான சூரிய உதயம், மாலை நேர மென்மை இவைகளை அனுபவிக்க ஒருவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அனுபவியுங்கள்.
யார் நல்ல மன மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள்:
* அதிக பந்தா காண்பிக்க மாட்டார்கள்.
* அளவாக பேசுவார்கள்.
* தேவையானவர்களுக்கு உதவுவார்கள்.
* ஊர் வம்பு, தவறான செய்திகளுக்கு காது கொடுக்க மாட்டார்கள்.
* மனம் விட்டு சிரிப்பார்கள்.

கமலி ஸ்ரீபால்
* அன்றாடம் ஏதேனும் கற்பார்கள்.
* நம்மை நாமே பார்த்து பார்த்து செதுக்கிக் கொள்ளும் போது வாழ்க்கை அமைதியாய் இருக்கின்றது.
* நம் துன்பங்களை அதிகம் பகிராமல், புலம்பாமல் அனுபவிக்கும் போது வாழ்வின் நுணுக்கத்தினை நன்கு கற்றுக் கொள்கின்றோம்.
* யாராவது தேவையில்லாமல் உங்களை காயப்படுத்தினால் பதிலுக்கு தொண்டை கிழிய கத்தி சண்டை போட வேண்டாம். அழ வேண்டாம். முடங்க வேண்டாம். அவர்களைப் பார்த்து 'நீங்க நன்றாகத் தானே இருக்கின்றீர்கள். எந்த பிரச்சினையும் இல்லையே?' எனக் கேட்டு விட்டு நகர்ந்து விடுங்கள். எதிராளி புழுங்கி போய் விடுவார்.
* மிக அதிகமாக நண்பர்களை நம்ப வேண்டாம். இது இருவருக்குமே நல்லது. அதே போல் பகைவரையும் எதிரியாகவே நினைக்க வேண்டாம். அவர்களை ஏதேனும் ஒரு நல்ல செயலுக்கு பயன்படுத்துங்கள்.
* யாரேனும் பொய் சொன்னால் அவர்கள் கண்களை சில நொடிகள் உற்று பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுங்கள். இது அவர்கள் மனதினை மணல் போல் உறுத்தி விடும்.
* வாதமான பேச்சு வார்த்தையில் ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாகவே பேசலாம்.
* செயல்களின் மூலம் உங்கள் திறமையினை, வெற்றியினை காண்பித்தால் உங்கள் மதிப்பு உயரும்.
* ஒருவர் எந்த மனவேதனையில் இருக்கின்றார் என்பது தெரியாது. ஆகவே யாரிடமும் பண்பாகவே பேசுங்கள்.
* வாழ்வில் கஷ்ட நேரத்தில் உதவியவர்களை எந்த நாளும் கைவிடக்கூடாது.
* நீங்கள் படிக்கும் புத்தகத்தின் தரம் உங்கள் பேச்சில் தெரியும்.
* நீங்கள் உண்ணும் உணவு உங்கள் சக்தியில் ஆரோக்கியத்தில் தெரியும்.
* உங்கள் கவனக் கூர்மை உங்கள் வேலையின் முடிவில் தெரியும்.
* குளிர்ந்த குழாய் நீரில் தினம் 2 முதல் 3 முறை முகத்தில் வேகமாக அடியுங்கள். உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும்.
* டென்ஷனா இருக்கா? ஆழ் மூச்சு பயிற்சி செய்யுங்கள். மனம் அமைதிப்படும்.
* கண்களை வேகமாய் ஒரு நிமிடம மூடி திறங்கள். தூக்கம் நன்கு வரும். முயற்சி செய்து தான் பார்ப்போமே.
சில நபர்களை இவர்கள் 'அரகண்ட்' என்று குறிப்பிடுவர். அதாவது 'திமிர் பிடித்தவர்' என்று பொருள் கொள்ளலாம். இந்த குணம் ஒருவரின் வெற்றியினை தடைப்படுத்தும். அவர்களுக்கே அவர்கள் இப்படி முரட்டுத்தனமாக இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கலாம்.
இந்த குணங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர்கள் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.
* அவர்கள் தகுதியானவர்கள் சொல்வதினை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.
* அறிவுரை, ஆலோசனை இவர்களுக்குப் பிடிக்காது.
* இவர்கள் அகராதியில் 'Borry' என்ற வார்த்தையே இருக்காது.
* அவர்களது மூளை, உழைப்பை மட்டுமே கொண்டு வெற்றி பெற்றதாக கர்வம் கொள்வார்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுப்பது என்பது மருந்துக்கு கூட இவர்களிடம் இருக்காது.
* மற்றவர்களை விட தானே எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று நினைப்பார்கள்.
* தானே அனைத்திற்கும் தலைமை வகிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
* கோபம் மட்டுமே இருக்கும்.
* தற்பெருமை மிக அதிகம்.
* கேள்வி கேட்டாலே பிடிக்காது.
* உதவியாளர்களை உதறி எறிவார்.
* பிறரின் சாதனைகளை பாராட்டவே மாட்டார்.
இவைகள் எல்லாம் கண்டிப்பாய் ஒருவர் மாற்றிக் கொள்ள வேண்டிய குணங்கள் ஆகும்.
வாழ்க்கையில் அறிய வேண்டிய சில உண்மைகள்:
* பயம் மரணத்தினை நிறுத்தாது. ஆனால் வாழ்வினையே நிறுத்தி விடும்.
* நம் மன நிம்மதியினை கொடுக்கும் எதுவும் விஷ பாதிப்பே.
* நம்மால் பல விஷயங்களை செய்ய முடியும். ஆனால் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எனவே ஒவ்வொரு விஷயத்திலும் முழு கவனம் தேவை.
* நாம் எதிர்பார்த்தபடி வாழ்வில் அநேக நிகழ்வுகள் நடப்பதில்லை. ஆகவே கனவு, எதிர்பார்ப்புகள் அதிகம் வேண்டாம். இயல்பான வாழ்க்கையோடு ஒத்து செல்ல வேண்டும்.
* 20 வயதில் நிறைய கற்க வேண்டும். நிறைய முன்னேற வேண்டும்.
* அமைதியினை விட பேச்சு உதவும் என்றால் மட்டுமே பேச வேண்டும்.
* உங்கள் எண்ணங்கள் மிக வலிமையானவை. ஆகவே அவை ஆக்கப்பூர்வ மாகவே இருக்கட்டும்.
* நீங்கள் வேலை செய்யும் இடத்திலும், பழகும் இடத்திலும் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்காதீர்கள்.
மனநலம் பெற்றவராக எப்படி மாற முடியும்?
* அனைவருக்கும் கவனம் கொடுங்கள். பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன என இருக்கக் கூடாது.
* பிறர் பேச அதிகம் கேளுங்கள். இது பல விஷயங்களை புரிய வைக்கும்.
* துரோகங்களை தலை விதி என ஏற்கக் கூடாது. மன்னிக்கலாம். ஆனால் மறக்கக் கூடாது.
* அதிக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
* சில கடின சூழ்நிலைகளில் வேலை செய்யும் போது உங்களை நீங்களே உணர முடியும்.
* குறைவாக பேசுங்கள். அதிகம் கவனம் செலுத்துங்கள்.
* உறுதியான மனநிலை வேண்டும்.
* கெட்ட நண்பர்கள் மட்டும் வேண்டாம். வாழ்வு வீணாகி விடும்.
* நல்ல சுத்தமான ஆடை, தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிட வாழ்வும் பரிசே.
* ஒருவரை திருத்த முடியவில்லை என்றால் அவர் அந்த எல்லையை மீறி விட்டார் என்றே பொருள்.
* நல்ல மனிதர்களோடு தொடரவும் தவறான மனிதர்களிடமிருந்து நகர்ந்து விடுவதையும் மன பலம் பெற்றவர்கள் செய்வார்கள். மேலும் முன்னேற்ற பாதையில் மட்டுமே செல்வார்கள். உணர்ச்சி வசப்படும் மன பலம் இல்லாதவர்கள் நிலை தடுமாறுவார்கள்.
* புகை பிடிக்கவே மாட்டார்கள்.
* முறையற்ற உணவு இருக்காது.
* புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும்.
* மிக சத்தமாக இசை கேட்க மாட்டார்கள்.
* எப்போதும் மன உளைச்சல் என்று மூழ்க மாட்டார்கள்.
இவையெல்லாம் 'நல்ல வாழ்க்கை'க்காக கடை பிடித்து பயன் பெறலாமே.
- பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது
- தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
வாய் விட்டு மனதார சிரித்தால் நோய் எதிர்ப்பு சக்தி 20 சதவீதம் கூடுகின்றதாம்.
* குளிர்ந்த நீர் (சாதாரண நீரில்) ஷவர் முறையில் குளிக்கும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் கூடுகிறது.
* சூயிங்கம் மெல்லுவது மூளையின் ஞாபகத்திறனை கூட்ட கூடுதலாக 35 சதவீதம் பலன் அளிக்கின்றது.
* வாழைப்பழம் சாப்பிட்டால் மன அமைதி, மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
* பாட்டு பாடுவது நுரையீரலுக்கான ஏரோபிக் பயிற்சி.
* சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கிளாஸ் நீர் குடித்தால் 13 சதவீதம் உங்கள் உணவில் கலோரி சத்து அளவு குறையும் நிலை ஏற்படும்.
* பச்சை பசேல் என்ற இயற்கை சூழ்நிலையில் 20 நிமிடங்கள் இருந்தால் மன உளைச்சல் 20 சதவீதம் வரை குறைகின்றது.
* தினமும் மஞ்சள் உணவில் சேர்க்கப்படும் பொழுது வீக்கங்கள், உள் வலிகள் குறைகின்றன.
* மருத்துவர் ஆலோசனைப்படி மக்னீசியம் கிளைசினேட் எடுத்துக் கொள்ளும் பொழுது தசைகளின் டென்ஷன் நீங்கும். மைக்ரேன் பாதிப்பு குறைகின்றது.
* இஞ்சி டீ அஜீரண கோளாறுகளை சீர் செய்கின்றது.
* எளிதில் உடையும் நகம், முடி இவை பயோடின் குறைபாடாகக் கூட இருக்கலாம்.
* வாய் ஓரத்தில் வெடிப்பு, புண் இருந்தால் இரும்பு சத்து வைட்டமின் பி பிரிவு சத்துகள் குறைபாடாக இருக்கின்றதா என்பதனை அறிய வேண்டும்.
* அடிக்கடி தசை பிடிப்பு ஏற்படுகின்றதா? கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் குறைபாடு இருக்கின்றதா என மருத்துவர் மூலம் அறிய வேண்டும்.
* காயங்கள் மெதுவாக ஆறுகின்றதா? பல காரணங்களுடன் துத்தநாகம் குறைபாடு கூட காரணமாக இருக்கலாம்.
* இரவில் பார்வை குறைபாடு உள்ளவதற்கு வைட்டமின் 'ஏ' குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம்.
* வெளிறிய சருமம்- இரும்பு சத்து, குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

கமலி ஸ்ரீபால்
* ஈறுகளில் ரத்தம்- வைட்டமின் 'சி' குறைபாடாக இருக்கலாம்.
* அடிக்கடி கிருமி தாக்குதல்- சிங்க், வைட்டமின் 'சி' குறைபாடு இருக்கலாம்.
பார்லி தண்ணீர்:
நம் வீட்டில் பெரியவர்கள் இன்றும் பார்லி அரிசி தண்ணீர் குடிப்பதனை அடிக்கடி செய்வர். அவர்கள் என்ன காரணத்திற்காக செய்தனரோ- இன்று அதில் விஞ்ஞானப் பூர்வமாக அநேக நன்மைகள் கூறப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இதனை அடிக்கடி குடிக்கின்றனர்.
* இது வைட்டமின் போலேட், இரும்பு, காப்பர்மங்கனீஸ் சத்து நிறைந்தது.
* கொலஸ்டிராலினை குறைக்கின்றது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.
* எடை குறைப்பிற்கு உதவுகின்றது.
* புற்று நோய் தாக்குதல் அபாயத்தினை குறைக்கின்றது.
* உடல் கழிவுகள் வெளியேற உதவுகின்றது.
* குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.
* நீர் சத்து குறைவதினை தடுக்கின்றது.
* சிறு நீரக நச்சுகளை வெளியேற்றுகின்றது.
சில குடல் பிரச்சினைகள், அலர்ஜி உள்ளவர்கள் பார்லி எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
* டீ, காபி என்பதனை விட சீரக தண்ணீர், பார்லி தண்ணீர் போன்றவை நன்மை பயப்பவை ஆகும். ஆனால் எதனையும் அளவோடு செய்வதே நல்லது.
* பார்லி கலோரி சத்து குறைந்தது. வைட்ட மின்கள் பி2, பி3, பி6 கொண்டது. நார்சத்து கொண்டது. ஓட்ஸ் பாஸ்பரஸ், சிங்க், காப்பர், மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் வைட்டமின் பி1, பி5 கொண்டது. க்ளூடன் இல்லாதது. 'ஸ்டீல் கட் ஓட்ஸ்' என வாங்கி இதனையும் பயன்படுத்துங்கள்.
ரத்தக் கொதிப்பு- உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது.
கீரை வகைகள்- பொட்டாசியம் சத்து உள்ளது.
பீட்ரூட்- நைட்ரேட் சத்தை நைட்ரிக் ஆக்சைடாக மாற்றும்.
வாழைப்பழம்- சோடியம் முறைப்படும்
பூண்டு- ரத்த நாளங்களுக்கு நல்லது

மீன் உணவு- ஒமேகா 3
பொரி வகைகள்- ஆண்டி ஆக்சிடண்ட்
போன்றவற்றினை எடுத்துக் கொள்வோம். கீழ்கண்ட உணவுகளை தவிர்த்து விடுவோம்.
அதிக உப்பு, வறுத்த, பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட அசைவம், சோடா, அதிக உப்பு சேர்த்த சீஸ் பேக்கரி உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றினை தவிர்த்து விடுவோம்.
பாதங்கள் சில்லென இருந்தால்- தைராய்டு பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த சோகை இருக்கலாம்.
பாதம் எரிச்சலாக இருந்தால் - சர்க்கரை நோய், நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, பித்த வெடிப்பு, நீர் பற்றாகுறை, தைராய்டு பிரச்சினை, சரும பாதிப்பு, சத்து குறைபாடு இருக்கலாம்.
ஆறாத புண்
சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சீரான ரத்த ஓட்டம் இன்மை, வலி ஆர்த்ரைட்டிஸ், பிற கோளாறுகள். உதாரணம் எலும்பு முறிவு என இவையெல்லாம் இருக்கக் கூடும். மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
* ஜீரண சக்தி சீராய் இயங்க
* ஒவ்வாத உணவுகளை ஒதுக்கிவிட வேண்டும்.
* நன்குமென்று, பொறுமையாய் உண்ண வேண்டும்.
* அமர்ந்து உண்ண வேண்டும். அந்நேரத்தில் அரட்டை, போன், டிவி, இவற்றினை தவிர்த்திட வேண்டும்.
* நார் சத்து அவசியம்.
* தேவையான அளவு நீர் அருந்த வேண்டும்.
* வேக வைத்த காய்கறிகள் சிறந்தது.
* 'ஸ்ட்ரெஸ்சில் மூழ்க கூடாது.
* வெறும் உடற்பயிற்சி மட்டுமே போதாது. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.
தண்ணீர் இப்படியும் குடிக்கலாம்.
* தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தலாம்.
* சில துளி இஞ்சி சாறு சேர்க்கலாம்.
* சில புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்.
* மோர் குடிக்கலாம்.
* வெள்ளரி சாறு எடுத்துக் கொள்ளலாம்.
* சுத்தமான தேன் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கலாம்.
* வெது வெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கலாம்.
* இளநீர் நல்லது.
* ஒரு டீஸ்பூன் சோம்பினை நன்கு நீரில் கொதிக்க வைத்து பருகலாம்.
* சீரகத் தண்ணி நாள் முழுவதும் குடிக்கலாம்.
உடல் உறுப்புகள்
* வெகு நேரம் பசியுடன் நீர் கூட அருந்தாமல் இருந்தால் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்.
* போதுமான அளவுநீர், தாகம் எடுக்கும் பொழுது நீர் அருந்தாமல் இருந்தால் சிறு நீரகமும் பாதிக்கப்படலாம்.
* அதிக ஸ்ட்ரெஸ் அறிவுப் பூர்வமான எண்ணங்கள், மூளை நலத்தினை, மன நலத்தினை பாதிக்கும்.
* இருட்டில் போனில் பிரகாசமான ஒளி, டி.வி. இவற்றினை பார்ப்பது கண்களை பாதிக்கும்.
* துரித உணவு, மது- கல்லீரலை பாதிக்கும்.
* எண்ணெய், கொழுப்பு உணவு குடலை பாதிக்கும்.
* அதிக உப்பு, எண்ணை உணவு இருதயத்தினை பாதிக்கும்.
* தலையை பிளக்கும் சத்தத்தில் பாட்டு கேட்பது காதுகளை பாதிக்கும்.
* புகை பிடிப்பது நுரையீரலை அழித்து விடும்.
இவைகளும் நம் பழக்கத்தில் இருப்பவைதான்.
* சில்லென்ற நீரினை மருந்தோடு சேர்த்து அருந்துவதில்லை.
* மாலை 5 மணிக்கு பிறகு கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.
* செல்போன் சார்ஜ் 10 சதவீதம் மட்டுமே இருந்தால் சார்ஜ் செய்யுங்கள். அந்த 10 சதவீதம் தீரும் வரை பேச வேண்டாம்.
* காலை உணவினை தவிர்க்கக் கூடாது. * உணவுக்குப் பின் உடனே டீ, காபி வேண்டாமே. * ஒரு மணி நேரம் அமர்ந்து இருந்தால் எழுந்து கை, கால்களை நீட்டி மடக்குங்கள். * உணவுக்குப் பின் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். * உபயோகித்த எண்ணையை அடிக்கடி சூடு படுத்தி சமைப்பது நஞ்சு.
உறுப்புகள் பலம் பெற:
* வயிறு பலம் பெற- வயிற்று மசாஜ் செய்வது ஜீரண சக்தியினை அதிகரிக்கும். வயிறு உப்பிசம் குறையும்.
* நுரையீரல் பலம் பெற- வாய் விட்டு பாடுங்கள், இசை பயிலுங்கள், தினமும் பாட்டு பயிற்சி செய்யுங்கள், மூச்சும் சீராய் இயங்கும்.
* சிறுநீரகம் பலம் பெற- கால் விரல் நுனிகளில் நிற்கும்படி பாதத்தினை உயர்த்தி, இறக்கி பயிற்சி செய்யுங்கள். ரத்த ஓட்டம் முன்னேற்றம் தரும்.
* மூளை பலம் பெற- தினமும் 20 நிமிடம் தியானம் செய்யுங்கள்.
* கல்லீரல் பலம் பெற- தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடை பயிற்சி செய்யுங்கள். * இருதயம் பலம் பெற- ஆழ்மூச்சு பயிற்சியும் உதவும். * குடல் பலம் பெற- இடுப்பு பயிற்சிகளை முறையாய் கற்று பயிற்சி செய்ய வேண்டும். * கண்கள் பலம் பெற- கண் பயிற்சியும் அவசியம்.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை மட்டுமே பாதிப்பிற்கு தீர்வாக அமையாது. தீர்விற்கான பலம், தடுப்பு முறை சக்தி என விளங்கும். மருத்துவர் ஆலோசனை, சிகிச்சை என்பது அவசியம். ஆனால் நாம் அறிந்த வற்றினை ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோமே.
- ஒருவரின் ஆயுளைப் நிர்ணயிக்கும் சக்தியை பிரபஞ்சம் தனக்குள் ரகசியமாகவே வைத்துக் கொண்டு உள்ளது.
- 12-ம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துக்கம், துயரமாகும்.
ஜோதிடம் பல்வேறு புதிர்களையும் சூட்சுமங்களையும் தன்னுள் அடக்கி உள்ளது. மத்திம வயதிற்கு மேல் ஜாதகம் பார்க்க வருபவர்கள் அனைவரும் தமது ஆயுளைப் பற்றி கேட்காமல் போவது கிடையாது. தமது ஆயுட்காலம் பற்றிய பய உணர்வு அனைவருக்கும் உண்டு. அதேபோல் தனது ஆன்மா முக்தி அடையுமா மோட்சம் அடையுமா என்பதையும் அறிய விரும்புவார்கள். ஒருவரின் ஆயுளைப் பற்றி தீர்மானிப்பது மிகவும் சவாலான விஷயம். முக்தி மோட்சம் என்பது ஆராய்ச்சிக்கு உட்பட்ட மிகப்பெரிய தலைப்பு. இதில் பலருக்கும் பலவிதமான மாற்றுக் கருத்துக்கள் உள்ளது. எனினும் என் சிற்றறிவுக்கு எட்டிய சில தகவல்களை இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மறுபிறவி
ஒருவரின் ஆயுளைப் நிர்ணயிக்கும் சக்தியை பிரபஞ்சம் தனக்குள் ரகசியமாகவே வைத்துக் கொண்டு உள்ளது. அனைத்திற்கும் அப்பாற்பட்டு உள்ள பிரபஞ்ச சக்தியால் மட்டுமே ஒருவரின் ஆயுளை கூட்டவோ குறைக்கவோ முடியும். உலகில் ஒவ்வொரு நொடியும் விதவிதமான அரிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும் மனிதர்களுடைய பிறப்பு மற்றும் இறப்பும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அதே போன்று நம்முடைய மறு பிறவிகளும் எத்தனை என்பது நாம் அறிந்து கொள்ள இயலாதது. இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மா என்பது அழியாதது மேலும் அது மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கக்கூடியது என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. கடந்த பிறவிகளில் ஒருவர் வாழ்ந்திருந்தால் கடந்த கால வாழ்க்கையினை உள்ளுணர்வால் அறிய முடியும்.ஒரு ஜாதகத்தில் லக்னத்திற்கு பன்னிரெண்டாம் இடமே ஒருவரின் முக்தியை மோட்சத்தை பற்றி உணர்த்தும் ஸ்தானமாகும்.
12-ம் பாவகம்
12-ம் பாவகத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் செய்த பாவ புண்ணியத்தின் பலன் என்ன? என்பதை கூறுமிடமாகும். இதையே விரிவாக சொன்னால் முக்தி அல்லது மோட்சம் என்ற பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா? போன்றவற்றை அறிய முடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, தற்கொலை, ராஜ துரோகம், ஜாதிமாறுதல், தந்தையின் தாய், தாயின் தந்தை, பிரிவினை, தலைமறைவாகுதல் போன்றவற்றையும் அறிய முடியும். இதனை விரயஸ்தானம் அல்லது அயன, சயன போகஸ்தானம் என்றும் அழைக்கலாம். 12-ம் பாவகம் என்பது ஒருவரின் சாபத்தால் ஏற்படும் துக்கம், துயரமாகும். இது தலை முறைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
12-ம் பாவகம் விரய ஸ்தானம்
12-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெறக்கூடாது. 12-ம் அதிபதி 12-ல் இருந்தால் கட்டுக் கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். தூர தேசத்தில் வாழும் நிலை ஏற்படும். 12-ம் பாவகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்தல், அந்த கிரகங்களுக்குரிய நோய்கள் தாக்கும், மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை சந்திப்பார்கள். 12-ம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் திசையும் நடக்கக் கூடாது. நோயின் தன்மையை எளிதில் அறிய முடியாது.
எந்த மருந்தை சாப்பிடுவது என்று தெரியாமல் குழம்புவார்கள். அந்த ஜாதகர் பரம்பரை நோயால் துன்பப்படுவார். இவர் செய்யும் வேலைகளின் மூலம் நோய்கள் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்திகள் குறைவு என்பதால் தொற்று நோய்கள் உடனே வரக்கூடும். மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி, மூல நோய், இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
எனவே ஒரு ஜாதகத்தில் 12-ம்மிடம் காலியாக இருப்பது நலம். 12-ல் சுப கிரகம் இருந்தால் சுப விரயமும் என்றும் அசுப கிரகம் இருந்தால் வீண் விரயமும் ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. அது தவறான கருத்து. 12-ல் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம் பெற்ற கிரகம் இருந்தால் 50 சதவீத பலனும், 12-ல் நிற்கும் கிரகம் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம் பெற்று குரு பார்வை பெற்றால் 100 சதவீதம் சுப விரயமும் ஏற்பட வாய்புள்ளது. மற்றபடி 12-ல் நிற்கும் கிரகம் என்றுமே மதில் மேல் பூனை தான். 12-ல் சுப கிரகம் இருந்தால் நிம்மதியான தூக்கம் அல்லது படுத்தவுடன் தூக்கம் வரும். அசுப கிரகம் இருந்தால் கண் மட்டும் மூடி இருக்கும். சிந்தனைகள் அலைபாயும். எண்ண ஓட்டங்கள் மிகுதியாக இருக்கும்.
ஏதாவது ஒரு கிரகம் 12-ம் இடத்தில் நின்றாலோ 12-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்றாலோ அல்லது 12-ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலோ அந்த ஜாதகர் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் இருப்பார். சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கை அமையும். வெளிநாட்டில் தங்கி வேலை, தொழில் செய்யும் நிலை உருவாகும். 12-ம் இடத்தின் அதிபதியை சுப கிரகங்கள் பார்த்தால் வெளிநாடு யோகம், வெளிநாடு தொழில் அமைக்கும் யோகம், வெளிநாட்டு பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கொண்டே இருப்பது, வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே செட்டிலாகுவது போன்ற பலன்கள் நடக்கும். முழுமையான தாம்பத்ய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் கனவில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்து பேசுவது போன்ற பலன்கள் நடக்கும். இதற்கு அசுப கிரக பார்வை இருந்தால் சிறைவாசம் அல்லது தீராத நோய்கள் ஏற்படும். ஜாதகர் வரவுக்கு மீறி செலவு செய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். கடன் பெற்றும் வீண் செலவு செய்ய தயங்க மாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன் சொந்த ஊரை விட்டு அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்யும் தொழிலில் இருப்பார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள். சிலருக்கு கடுமையான திருமணத் தடை உண்டாகும். திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். தர்மம், கர்மம், காமம், மோட்சம்.
ஒருவரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருந்தால் துன்பம், கவலை, மறு ஜென்மம் பற்றிய எண்ணங்கள் இருக்காது. மிகுந்த சிரமத்துடன் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் போது மறுபிறவியே வேண்டாம் என்ற வகையில் வாழ்க்கையைப் பற்றிய ஒரு அவநம்பிக்கை இருக்கும். அதே போல் ஆன்மீக நாட்டம் அதிகமாக உள்ளவர்களுக்கும் மோட்சம் பற்றிய எண்ணம் மிகுதியாக இருக்கும். மனித வாழ்க்கை காசு, காமம், சொத்து என்ற மூன்று மாய வலைகளில் சுற்றிக் கொண்டே இருக்கும். இந்த மூன்று விஷயங்களில் உழன்று சலிப்படையும் மோட்சம் அடைய விரும்புவார்கள். ஒரு சிலர் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அடுத்த பிறவியிலாவது எனது ஆசைகள் பூர்த்தி அடைய வேண்டும் என்று மறுபிறவி பற்றிய என்ற ஆர்வத்தில் இருப்பார்கள்.
ஒரு ஜாதக 12 கட்டங்கள் இருக்கும். இந்த 12 கட்டங்களும் ஒருவரின் வாழ்வியல் முறைகளையும் பலன்களையும் சம்பவ காலங்களையும் நிர்ணயிக்க மிக முக்கியமாகும். இந்த 12 கட்டங்களும் தர்மம்,கர்மம், காமம் மோட்சம் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் தர்ம (1, 5, 9 ) திரிகோணத்தில் அடங்கும்.இந்த பாவகங்கள் மூலமாக ஜாதகரின் எண்ணங்களையும் சிந்தனையும் அறிய முடியும். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளும் கர்ம (2, 6, 10) பலன்களை வெளிப்படுத்தும் ஸ்தானங்களாகும். இந்த பாவகங்கள் மூலம் ஜாதகரின் தொழில் மற்றும் பொருளீட்டுதல் பற்றி அறிய முடியும். மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளும் காமத் 3, 7, 11 திரிகோணத்தில் அடங்கும். ஒருவரின் ஆசையையும் விருப்பங்களையும் அடைய உதவும் ஸ்தானமாகும்.
கடகம் விருச்சகம் மீனம் மூன்று ராசி ஆகிய மூன்று ராசிகளும் மோட்சத்தை 4, 8, 12 பற்றி கூறுமடங்கள். இந்த ஸ்தானங்களின் மூலமாக பாவத்தில் இருந்து விடுபடுவதையும் மோட்சம் பற்றிய எண்ணங்களையும் அறிய முடியும். இதை மேலும் புரியும் படி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் தர்மத்தின் வழியில் வாழ்க்கை நடத்தி பொருளீட்டினால் அவனது விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறி எளிதாக மோட்சத்தை அடைய முடியும் என்பதாகும். அதர்மமாக வாழ்ந்து பொருள் ஈட்டி விருப்பங்களை நிறைவு செய்யபவர்கள் மறுபிறவி எடுத்து நற்கதி அடைய முயல வேண்டும். ஒருவரின் கர்மாவில் தனிப்பட்ட ஒருவரின் பாவ புண்ணியங்கள் மட்டும் இருக்காது. அதில் ஜாதகரைச் சார்ந்தவர்களின் கர்மாவும் இணைந்து இருக்கும்.
முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் அவர்களின் சந்ததிகள். அதாவது ஒருவரின் உடலில் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் மரபணுக்கள் தான் இருக்கிறது. பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல் பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி, நோய் , கர்மா ஆகிய அனைத்தும் மரபணு மூலம் சந்ததிகளுக்கு அனுப்படுகிறது. அவர்கள் வழியாக வந்த நமது தீய வினைகளை அனுபவிக்க ஏற்ற வகையிலேயே ஒருவரின் உடல் வடிவமைக்கப்படும்.
திரிகோணம்
திரிகோணம் என்பது ஒரு ஆத்மாவின் பிறவிப் பயனை விவரிக்க கூடிய ஸ்தானமாகும். கர்ம வினைகளின் அடிப்படையில் ஜாதகரின் சந்ததி விருத்தியை தீர்மானிப்பதால் மிக முக்கியமான ஸ்தானமாக ஐந்தாம் பாவகம் திகழ்கிறது. ஐந்திற்கு ஐந்தாமிடமான ஒன்பதாம் பாவகம் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களையும் அவர்கள் செய்த கர்மவினையை பற்றிக் கூறுமிடம் என்பதால் மூன்றாவது திரிகோணமாகும். இந்த மூன்று திரிகோணஸ்தானங்களிலும் கேதுவின் நட்சத்திரம் உள்ளது.
அஸ்வினி மகம் மூலம் இந்த கேதுவின் நட்சத்திரங்களில் தான் ஒரு தலைமுறையின் மொத்த கர்மப் பிணைப்புகள் உள்ளது. இந்த நட்சத்திரங்கள் சென்ற ஜென்மத் தொடர்ச்சியே இந்த பிறவி என்பதை நமக்கு உணர்த்துகிறது. கடந்து வந்த ஜென்மத்தில் நிறைவேற்ற தவறிய நிறைவேற்ற முடியாமல் விட்டுப் போன கடமைகளை முடிக்கவே ஒரு ஜனனம் நிகழ்கிறது. அந்த விட்டுப் போன சம்பவங்களை தொடரும்போது புதிய சம்பவங்கள் பதிவாகும். கர்மா, கர்ம வினை, மறுபிறவி, மோட்சம் ஆகியவற்றிற்கும் சனி, ராகு கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால் தான் கோச்சாரங்களில் சனி ராகு கேது பெயர்ச்சி என்றால் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கம் வருகிறது. இந்த மூன்று கிரகங்களும் வினை ஊக்கிகள். பிறப்புக்கும், இறப்புக்கும், மறு பிறவிக்கும் சனி, ராகு, கேதுவின் சம்பந்தம் உண்டு.
செல்: 98652 20406
- சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
- பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது புத்தரின் வாக்காகும். ஆனாலும் ஆசைப்படாத மனிதர்களே உலகத்தில் இருக்க முடியாது. 50 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்கு ஐந்தாயிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வரும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசையும் விருப்பங்களும் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவரின் ஆசையும் விருப்பமும் நிறைவுபெறுமா? என்பதை ஒரு ஜாதகத்தில் 11-ம் மிடமான லாப ஸ்தானத்தின் மூலமே அறிய முடியும். ஒருவர் தன் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் அடைய லாப ஸ்தானம் உதவ வேண்டும். எந்த ஒரு பாவக பலனை ஒரு ஜாதகர் அடைய விரும்புகிறாரோ அந்த பாவகத்திற்கு 11-ம்மிடம் சுபத்துவமாக இயங்கினால் மட்டுமே ஜாதகருக்கு கைமேல் பலன் கிடைக்கும். உதாரணமாக ஒரு ஜாதகரின் செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், தோற்றப் பொலிவு, வாழ்க்கை நிலை போன்றவற்றை லக்ன பாவகத்தின் மூலமே அறிய முடியும்.
லக்ன பாவத்திற்கு லாப ஸ்தானமான 11-ம்மிடம் வலிமையாக செயல்பட்டால் மட்டுமே ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவம், போன்றவைகள் நிலைத்து நிற்கும். ஒருவரது விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் ஆசைகள், பலவிதமான வழிகளில், லாபங்கள், செல்வ செழிப்பு, நல்ல வருமானம் நிலை, பலமொழி தேர்ச்சி ஆகியவற்றை கூறுவது 11-ம்மிடமான லாப ஸ்தானமாகும். 11-ம் பாவக பலன்களை ஒருவர் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு லாப ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் அதற்கான கொடுப்பினை பதியப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒன்பதாம் இடம் என்பது ஜாதகரின் பாக்கியஸ்தானம்.
ஜாதகரின் முன்னோரும் ஜாதகரும் கடந்து வந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் ஜாதகர் செல்வந்தராக பல தொழில் வித்தகராக வாழ முடியும். அதேபோல் ஒருவருக்கு குழந்தை பிராப்தம் இல்லை எனில் 5-ம், 9-ம்மிடத்தையும் குருவின் நிலையையும் பார்க்க கூடாது. இந்த 5,9-ம் பாவகம் மூலம் பூர்வ புண்ணிய ஸ்தானப்படி. பாக்கிய ஸ்தான பலப்படி இந்த ஜாதகருக்கு குழந்தை பாக்கியத்தை அனுபவிக்க கூடிய கொடுப்பினை உள்ளதா என்பதை அறிய முடியும். ஆனால் வீரியம் (3ம் பாவகம்) இருந்தால் மட்டுமே 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலப்படி குழந்தை பிறக்கும். 5-ம் பாவகத்திற்கு லாப ஸ்தானம் 3-ம்மிடம் சிறப்பாக இயங்கினால் ஜாதகர் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். பல்வேறு சூட்சுமங்களையும் அடக்கியது ஜோதிடம். கீழ்கண்ட சில அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் நிச்சயமாக அந்த ஜாதகர் தனவானாக தர்ம பிரபுவாக கோடீஸ்வரனாக வாழ்வார்கள்.
11-ம் அதிபதி சர ராசியில் நின்றால் தடையில்லாத பண வரவு இருக்கும். 11-ம் அதிபதி ஸ்திர ராசியில் நின்றால் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் மாத வருமானம் அல்லது வருட வருமானமாக இருக்கும்.
11-ம் அதிபதி உபய ராசியில் நின்றால் வரக் கூடிய வருமானம் நிலையற்றதாக இருக்கும். 11-ம் அதிபதியின் சாரத்தில் ஏதாவது ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு உபரியான சரளமான பணப்புழக்கம் உண்டு.
11-ம் பாவகத்தை ஏதாவது ஒரு கிரகம் பார்த்தாலும் நின்றாலும் தேவைக்கு அதிகமாக பணம் வரும். 11-ம் பாவக அதிபதி யோகியின் நட்சத்திரத்தில் இருந்தால் சிறப்பான பொருளாதாரம் உண்டு.

'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
11-ம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் தொடர்ச்சியாக நல்ல வருமானம் வந்து கொண்டே இருக்கும். 11-ம்மிடத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற கிரகம் நின்றாலும் தாராளமான தனவரவு இருக்கும்.
கிரகச் சேர்க்கையை பொருத்தவரை 11-ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குரு+சுக்ரன், குரு+சந்திரன், சனி + சுக்ரன், சனி + குரு சேர்க்கை சம்பந்தம் இருந்தால் ஜாதகருக்கு பொருளாதாரத்தில் மேன்மையான பலன்கள் உண்டாகும். ஒருவருக்கு சுய ஜாதக ரீதியான பணம் வரக்கூடிய அமைப்பு இல்லை என்றால் கோட்ச்சார கிரகங்கள் 11-ம் மிடமான லாபஸ்தானத்திற்கு சம்பந்தம் வரும்போது பணவரவை ஏற்படுத்தி தரும்.
ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதி பதியும் சேர்ந்து 11-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் அதன் தசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு அதிகப்படியான பணம் வரும். இதில் 11ம் மிடம் பாதகஸ்தானமாக இருந்தால் தேவைக்கு அதிகமாக பணம் இருந்தாலும் ஜாதகரால் அதை பயன்படுத்த முடிவதில்லை. அது ஜாதகரைச் சார்ந்தவர்களுக்கே பெரும்பான்மையாக பயன்படும்.
9-ல் குரு 11-ல் சுக்கிரன் ஜாதகர் மிகப்பெரிய தனவானாக இருப்பார். தன அதிபதி 11-ல் நின்றால் ஜாதகர் எப்பொழுதும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருப்பார்.
ஒருவர் எந்த ராசியாக இருந்தாலும் லக்னத்திற்கும் தனஸ்தானத்திற்கும் முன்பின் ராசிகளில் சுப கிரகங்கள் இருந்தால் வாழ்நாள் முழுவதும் உபரி லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும். பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவற்றை குறிப்பது 11-ம் மிடமான லாப ஸ்தானம்.
ஒரு ஜாதகத்தில் லாபாதிபதி சாரத்தில் அதிக கிரகம் இருக்கலாம். 11-ம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் பலம் பெற்ற கிரகம் நின்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள்.
அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். கூட்டுத் தொழில் வெற்றி தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். சிலருக்கு இரண்டாவது குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை ழூலதனமாக கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். அடுத்தவர் பிரச்சினையை தீர்த்து வைப்பவர். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயம் உண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் அதீத பொருளாதார வளர்ச்சி உண்டு.
லாப ஸ்தான அதிபதியின் நட்சத்திர சாரத்தை எந்த கிரகமும் பெறவில்லை எனில் பொது வாழ்க்கையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்து வைக்கவே முடியாது. பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
இருதார யோகமும் லாப ஸ்தானமும் ஒரு காலத்தில் இலை மறைவு காய் மறைவாக நடந்த இரண்டாம் திருமணங்கள் அல்லது சட்டத்திற்கு உட்படாத மறைவான திருமண வாழ்க்கை இருந்து வந்தது. தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் வெகு சாதாரணமாகிவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபு மறைந்துவிட்டது.
இதற்குக் காரணம் சமூக சீர்கேடா அல்லது ஜாதகமா என்று ஆய்வு செய்தால் சமூகச் சீர்கேடு தான் என்பது என்னுடைய கருத்து. சுமார் 20 வருடங்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் பெரியவர்களின் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். தற்போது ஆண் பெண் இருவரும் படித்து வேலைக்கு செல்வதால் சுய முடிவு எடுத்து தமது வாழ்க்கை சீரழிவதற்கு தாமே காரணமாகிறார்கள்.
7-ம் அதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்தம் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு. வருமானம் எந்த வழியில் வருகிறது என்று உணர முடியாத வகையில் குபேர சம்பத்து கிடைக்கும். பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். நல்ல வசதியான வாழ்க்கைத் துணை அமையும். அல்லது திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நிலையான பொருளாதார வளர்ச்சி வீடு, வாகன யோகம் உண்டு. வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள்.
நல்ல வாடிக்கையாளர்கள் அமைவார்கள். ஏழாமிடம் பலம் குறைந்தால் இருதார யோகத்தைத் தந்து விடும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சிலருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இரண்டாம் திருமணம் நடக்கும். பொதுவாக 7,11 சம்பந்தம் உள்ளவர்கள் ஊருக்கு ஒன்று, உல்லாசத்திற்கு ஒன்று என்று தான் வாழ்கிறார்கள். இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எத்தனை திருமணம் நடத்தாலும் திருமண வாழ்க்கை நரகமாகவே இருக்கும். ஊரார் மத்தியில் நன்றாக வாழ்வது போல் தோன்றினாலும் வெறுமையே மிஞ்சும்.
ஒரு ஜாதகத்தில் 7,11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இருதார யோகம் உண்டாகும்.
7-ம் அதிபதி பலம் குறைந்து 11-ம் அதிபதி வலுப்பெறும் போது வெகு சுலபமாக மறு திருமணத்திற்கு அழைத்துச் செல்லும். 2,7-ம் அதிபதிகள் 11-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுதல்,11-ம் அதிபதி 2,7-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறுவது, வலுவான தார தோஷம் ஆகும்.
11-ம் பாவகத்திற்கு திரிகோணதிபதிகள் சம்பந்தம் பெறும் போது சட்டப்படியான மறுமணமாகவும், அசுப மற்றும் லக்ன பாவிகள் சம்பந்தம் பெறும் போது சட்டத்திற்கு புறம்பான உறவும் ஏற்படுகிறது.
11-ல் இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தாலும் 1, 11-ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெறும் போது இரு தாரம் ஏற்படுகிறது.
7-ம் அதிபதிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் கிரகம் சம்பந்தம் பெறுவது இரண்டுக்கும் மேற்பட்ட திருமணத்தை கூட தரும். கூட்டுத் தொழிலும் லாப ஸ்தானமும் நான்காவது உப ஜெய ஸ்தானம் 11-ம் பாவகம். 3-ம் பாவகத்திற்கு பாக்கிய ஸ்தானம் 11-ம் பாவகம். 10-ம் பாவகத்திற்கு தன ஸ்தானம் 11-ம் பாவகம். லாப ஸ்தானம் பலம் பெற்றால் பல தொழில் வித்தகர்கள். அண்ணன், தம்பி என குடும்பமே முன்னேற்றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.
தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11ம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து, வெற்றி பெறுவது 11-ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது. கூட்டுத் தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு. பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள். பொதுச் சேவையில் ஆர்வம் அதிகம். அரசாங்க, அரசியல் ஈடுபாடு, ஆதாயம் அதிகம் உண்டு.
ஒரு ஜாதகத்தில் 11-ம்மிடமான லாப ஸ்தானம் பலம் பெற்று இருந்தால் தீராத நோய், தீர்க்க முடியாத கடன், வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் பலன் தரும். வாழ்க்கையில் வெற்றி பெற 11-ம் இடம் பலம் பெற வேண்டும். 11-ம்மிடமான லாபஸ்தானம் பலம் குறைந்தால் வாழ்க்கை நித்திய கண்டம் பூரண ஆயுளாகவே இருக்கும்.
மனிதனாக பிறந்தவர்கள் அனைவரின் பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்பத்தான் பணம் வரும். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் விதி பயனுக்கு மீறிய பலன் யாருக்கும் நடக்கப்போவது இல்லை. எனவே அவரவரின் ஜாதகத்தில் 11-ம் பாவகத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நடந்து கொண்டால் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும். சுய ஜாதக ரீதியாக 11-ம்மிடம் வலிமை இல்லாதவர்கள் வியாழக்கிழமை குபேரனை வழிபாடு செய்வதால் மேன்மையான பலன்களை பெற முடியும்.
செல்: 98652 20406
- உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் பருகக் கூடாது
- புரதமிக்க காலை உணவு
எது நடந்தாலும் அது உங்கள் மனதினை பாதிக்கும்படியாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
* பிறரது முறையற்ற செயல்கள் அவர்கள் குணத்தினை காட்டுகின்றது. அது உங்களுடையது அல்ல.
* எல்லோரும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணாதீர்கள்.
* நீங்கள் சில இடங்களில் ஒதுக்கப்பட்டால் அது உங்கள் மதிப்பினை குறைக்காது.
* ஒருவருக்கு அவரவர் மன நிம்மதியே முக்கியம்.
* மவுனமாய் இருப்பது தவறாகாது.
* எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
* பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்று ஏன் எடை போடுகின்றோம்.
* அழிவுப்பூர்வமான சிந்தனைகளில் மூழ்கக் கூடாது.
நீங்கள்
* நாள் முழுவதும் வீட்டின் அறையின் உள்ளேயே அடைந்து கிடக்கின்றீர்களா?
* நாள் முழுவதும் அதிகம் நகராது உட்கார்ந்தோ, படுத்தோ இருக்கின்றீர்களா?
* சம்பாதிப்பதனை விட அதிகம் செல வழிக்கின்றீர்களா?
* பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
* பிறருடன் உங்களை ஒப்பிட்டு வருந்துகின்றீர்களா? இந்த மேற்கூறிய அறிகுறிகள் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதனைக் காட்டுகின்றது.
இதனை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க
* தினமும் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள்
* நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்.
* தேவையானதிற்கு மட்டும் செலவழியுங்கள்.
* பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.
* 5 நிமிடமாவது தினம் ஓடுங்கள், படியுங்கள், எழுதுங்கள்.
* உங்கள் சுற்று சூழ்நிலை, உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் நண்பர்கள், உங்கள் பொழுது போக்குகள் இவற்றினை வைத்தே உருவாகுகின்றது.
Gut Feeling: இதனை உள்ளுணர்வு. என்று சொல்லலாம். திடீரென தோன்றும். யோசிக்காமல், ஆராயாமல் வேகமாக வரும் உள்ளுணர்வு பல முக்கியமான, ஆபத்தான தருணங்களில் இது ஒரு வழி காட்டியே. பலருக்கு ஏதோ வயிற்றில் சங்கடம், படபடப்பு என வெளிப்படுத்தும் நன்மையோ, தீமையோ அறிகுறியாய் உணர்த்துவது.
தியானம், யோகா, முறையான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகம் இருக்கும். ஆன்மீகத்தில் இந்த உணர்வினை ஆன்மாவோடு தொடர்பு உடையது என்பர்.
உங்களிடம் நீங்களே பொய் சொல்வதிைன நிறுத்துங்கள் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதில் சில வரிகளைப் பார்ப்போம்.
நான் இன்னமும் கூடுதலாக, மிகச் சரியாக இருந்தால் தான் மற்றவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று தன்னைத் தானே குறை சொல்வது தீராத மன உளைச்சலை உண்டாக்கும். வாழ்வில் முன்னேற்றம் தேவை என்ற உண்மையினை இவர்கள் உணர வேண்டும்.
* 'எனக்கு நேரமே இல்லை' இது பொதுவில் அநேகர் சொல்வதுதான். சிலருக்கு இது உண்மையானதாக இருக்கலாம். ஆனால் பலருக்கு தன் சக்தி, கவனம் இதனை முறையாக செலவழிக்காததால் ஏற்படும் குறைபாடுதான் இது. கவனம், சக்தி இதனை சீராக செலவழித்தால் நேரமில்லை என்று நாம் சொல்ல மாட்டோம்.
* நான் இந்த பொறுப்பை ஏற்க வேலையைச் செய்ய தகுதி இல்லாதவன் என்று அநேகருக்கு மனதில் இந்த எண்ணம் வேரூன்றி இருப்பதால் சில முயற்சிகளைப் பற்றி சிந்திக்காது கூட இருப்பார்கள்.
நம்மை நாம் ஆய்ந்து அளவிடுவது சரியே. ஆனால் பல நேரங்களில் குறைத்து மதிப்பிட்டு ஒரு வட்டத்தினை விட்டு வெளிவர மறுக்கின்றோம்.

* என்னால் மாற முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது என்பதும் நாம் அடிக்கடி கேட்கும் பொதுவான வார்த்தைகள். சிறு விஷயங்களில் கூட மாற முயற்சிக்காத இவர்கள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவர்கள் தான்.
இவ்வாறு அநேக செய்திகள் இதில் உள்ளன. நான் படித்த சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சிந்தித்துப் பார்ப்போமே.
பலர் எதற்கெடுத்தாலும்அதிக கவலைப் படுவார்கள். இவர்களை மாற்றுவது மிக கடினமாக இருக்கும். இவர்கள் தானே தன்னை மாற்றிக் கொள்ள அல்லது அதிகம் கவலைப்படாமல் இருக்க சில முயற்சிகளை செய்ய வேண்டும்.
* முறையான தூக்கமின்மை கவலையின் தாக்கத்தினை அதிகப்படுத்தும். தினம் 8 மணி நேர தூக்கம் என்பது அவசியம்.
* காபி, டீ பானங்கள் உடல் பாதிப்பினை ஏற்படுத்தி கவலையின் அழுத்தத்தினைக் கூட்டும்.
* சக்திக்கு மீறிய மிக அதிக உழைப்பு உடல், மனம் இரண்டினையும் பாதிக்கும்.
* சர்க்கரை அதிகம் சேர்ப்பது, உயர் சர்க்கரை, குறைந்த சர்க்கரை இவை மன பதட்டத்தினையும் ஏற்படுத்தும்.
* ஆல்கஹால்- இதனால் ஏற்படும் உடல் நலக்ேகடு எண்ணற்றது. கூடவே இவர்கள் எப்போதும் மனநல பாதிப்புடன் இருப்பார்கள்.
* மேற்கூறியதே புகைப்பிடிப்பவர்களுக்கும் பொருந்தும்.
* உடற்பயிற்சி செய்யாதவர்கள் காரணமின்றி கவலையுடன் இருப்பர்.
* அதிகமாக 'டயட்'டில் இருக்கிறேன் என்ற பெயரில் மிகக்குறைந்த கலோரி, சத்தில்லா உணவு என எடுத்துக் கொள்பவர்கள் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பார்கள்.
* மிக அதிகம் டி.வி., செல்போன் என மூழ்குபவர்கள் மனமகிழ்ச்சி இன்றி வாழ்வில் ஏதோ இழந்தது போல் இருப்பார்கள்.
* ஒமேகா-3 உடலில் தேவையான அளவு சேராதபோது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இல்லாது இருப்பர்.
* வைட்டமின் 'டி' சத்து குறைபாடாலும் மனச்சோர்வு, உடல் சோர்வு, கவலை என ஏற்படும்.
* ஆழ் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
* 20 நிமிட சூரிய ஒளி அவசியம்
* 20 நிமிடமாவது போனில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.
* 20 நிமிடங்களாவது சுறுசுறுப்பாய் நடக்க வேண்டும்.
* புரதமிக்க காலை உணவு
* வெதுவெதுப்பான நீர் காலையில் அருந்துதல்
* கண் பயிற்சி ஆகியவைகளை கடைப் பிடிப்பது உடல் ஆரோக்கியத்தினை கூட்டுவதோடு கவலைப்படும் குணத்தினையும் வெகுவாய் குறைக்கும்.
மேலும்
* காபியினை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது
* கிரீன் டீ இரவில் குடிக்கக் கூடாது
* சக்தி பானம் என அடிக்கடி குடிக்க வேண்டாம்.
* மது எப்பொழுதும் வேண்டாம். உடற் பயிற்சி செய்தவுடன் சிலர் மது பருகுகின்றனர். இது மிகவும் தீங்கானது.
* உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் பருகக் கூடாது
இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாழ்வில் பல துறைகளில் உள்ள பிரபலங்களைப் பார்த்து அதைப்போல் தானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. அவர்களின் தோற்றம், கம்பீரம், ஸ்டைல், நடை, உடை, பேச்சு என பல விஷயங்களில் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் வாழ்வின் போராட் டங்களை கவனிக்கத் தவறி விடுகின்றார்கள். அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் இவர்கள் கண் களுக்குத் தெரிவதில்லை.
* அவர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. மாறாக எடை மட்டுமே போடுகின்றார்கள்.
* அவர்களுக்கு பிரச்சினையே இல்லை என்று நினைக்கின்றார்கள்.
* பிறரின் பொறுமை அவர்களை படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை.
* 24 மணி நேரமும் அவர்கள் கண்காணிக்கப் படும்போது அவர்கள் மனமும் சோர்வடையும்.
* தேவையில்லாமல் அதிக வெளிச்சம் அவர்கள் மீது விழுகின்றது.
* எப்போதும் 'ஷோ கேஸ்' பொம்மை போல் சிரித்தபடி பொலிவாக இருக்க வேண்டும்.
* உண்மையான நண்பர்கள் அரிது
* தன் சோகங்கள், வேதனைகள் வெளியே தெரியாது வாழ வேண்டும்.
* நிம்மதி, மகிழ்ச்சி என்பது புத்தகத்தில் காணும் சொல்லாகி விடும்.
* அவர்களுக்கும் 'மனம்' என்ற ஒன்று இருக்கின்றது.
* ஆக இவர்களைப் பற்றிய கற்பனைகள் வேண்டாம்.
உங்களால் மேடையில் கோர்வையாக இரண்டு வரிகள் பேச முடியுமா? நெருப்பு வெய்யிலில் தொடர் பயணம் செய்ய முடியுமா? வயிறு, வாயினை கட்டி உடலை கட்டுப்கோப்பாக வைத்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
மாறாக நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் கவனம் சிதறாத வழியில் உங்கள் வாழ்வினை முன்னேற்றிக் கொள்ளுங்கள்.
லட்சியத்தினை அடைய விரும்புபவர்கள் செய்யும் சில தீர்க்கமான முடிவுகள்
* எதெல்லாம் அவர்களது கவனத்தினை திசை திருப்புகின்றதோ அதனை முதலில் 'லிஸ்ட்' எடுக்கின்றனர். ஒவ்வொன்றாக கடும் முயற்சி செய்து அவைகளை நீக்குகின்றனர். முடியவில்லை என்ற சாக்குபோக்கே கிடையாது.
* உடல் ஆரோக்கியத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உடல் உறுதி, தன்னம்பிக்கை இவை இரண்டும் வாழ்க்கை முழுவதும் அவசியம் என்பதனை அறிந்து வைக்கின்றனர்.
* தனக்கு இருக்கும் ஏதேனும் பலவீனத்தினை நன்கு உணர்ந்து அதனை குழி தோண்டி புதைக்கின்றனர்.
* குறுக்கு வழியில் வெற்றிகள் அடைய எப்போதும் நினைக்க மாட்டார்கள்.
* எளிதில் மனதளவில் காயப்படாத உறுதி கொண்டவர்கள்.
* தனிமை அவர்களை பாதிப்பதில்லை.
* நல்ல உதாரணமான உயர் மனிதர்களை மனதில் பதிய வைக்கின்றனர்.
* வேலை செய்வதை 10 யானை செய்வது போல் செய்வார்கள். நல்ல முடிவுக்காக மிக பொறுமையாக காத்திருப்பார்கள்.
* நல்ல தரமான, திறமை மிக்க மனிதர்களின் அறிவுரையினை மட்டுமே ஏற்பார்கள்.
* தனது தீர்மானங்களை தானே முடிவெடுக்கும் திறன் இவர்களிடம் உண்டு.
* தன் சுற்றுப்புற சூழ்நிலையினை சீராக தானே அமைத்துக் கொள்வார்கள்.
* டி.வி., செல்போன் இவற்றில் கண்டிப்பாக மூழ்க மாட்டார்கள்.
* எதிலும் ஒரு கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கும்
* வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்களை ஆக்கிரமித்து இருக்கும்.
- கடகம் நன்மைகள் நடக்கும் வாரம்.
- கன்னி நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும்.சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும்.இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம்.ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியி னருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும். திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.வேலைப்பளு குறையும்.புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
மிதுனம்
மறைமுக எதிர்ப்புகள் குறையும். வாரம்.ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீ கத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறி யாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும்.தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.
கடகம்
நன்மைகள் நடக்கும் வாரம்.ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.
சிம்மம்
சாதகமான வாரம்.ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும்.உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
கன்னி
நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.
துலாம்
சங்கடங்கள் விலகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
திறமைகளால் மதிப்பு உயரும் வாரம்.ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். நோய் தொந்தரவுகள் அகலும்.சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும்.5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.
தனுசு
எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார்.திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.
மகரம்
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும்.கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும்.பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
கும்பம்
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும்.எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும்.வரா கடன்கள் வசூல் ஆகும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள்.மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
மீனம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும்.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்.சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
- தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும்.
ஒரு மனிதனை சமுதாயத்தில் தலைசிறந்த குடிமகனாக உயர்த்துவது அவருடைய தொழிலாகும். சாதாரண மனிதன் முதல் சாதனை மனிதன் வரை அனைவரும் ஜீவிக்க தொழில் அல்லது உத்தியோகம் வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தின் மூலம் ஒருவரின் தொழில் பிராப்தம் பற்றி அறிய முடியும். ஒரு ஜாதகத்தில் பத்தாமிடத்தில் நிற்கும் கிரகம் ஜாதகருக்கு வாழ்க்கையில் மேன்மையை தரும். ஒன்பதாமிடமான கொடுப்பினை ஸ்தானத்திற்கு இரண்டாம் இடமாக பத்தாமிடம் வருகிறது. அதாவது ஒருவருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதன் மூலமாகவே ஒருவர் ஜீவனம் நடத்துவார். முன்னோர்கள் நல்ல பலன்கள் சேர்த்து வைத்திருந்தால் ஜாதகருக்கு எளிய உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். முன்னோர்கள் பாவம் சேர்த்து வைத்திருந்தால் கடின உழைப்பில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். பத்தாம் இடத்தில் எத்தகைய கிரகம் வேண்டும் என்றாலும் இருக்கலாம். பத்தில் ஒரு பாவியாக இருக்க வேண்டும் என்று தான் ஜோதிடம் கூறுகிறது.
பத்தாமிடத்தை தொழில் ஸ்தானம் என்று மட்டும் கூற முடியாது. கர்மம் செய்ய புத்திரன் உண்டா என்று சொல்லக்கூடிய ஸ்தானமும் பத்தாமிடம் தான். பத்தில் ஒரு கிரகம் நின்றால் நிச்சயமாக ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் உண்டு. ஒரு ஜாதகத்தில் 5, 9ம் அதிபதிகள் பலம் பெறாவிட்டாலும் பத்தாமிடம் வலுப்பெற்றால் ஜாதகருக்கு இறுதி காரியம் செய்ய குழந்தை பிறக்கும். இதில் ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் பத்தாம் இடமான தொழில் ஸ்தானம் மூலம் பல கோடி சம்பாதிப்பவர்கள் புத்திர பாக்கியத்திற்காக மருத்துவ உதவியை நாடுகிறார்கள்.
பத்தாமிட பலவீனத்தால் நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு பெயர் சொல்ல மழலை செல்வம் அதிகமாக இருக்கிறது. பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வழி வேண்டி கடவுளை நோக்கி ஒரு கூட்டம் செல்கிறது. சம்பாதித்த சொத்தை அனுபவிக்க அடுத்த தலைமுறை உருவாக வேண்டும் என்று ஒரு பிரிவினர் ஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் நோக்கி செல்கிறார்கள்.
கால பகவானின் கணக்கை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மனிதனாகப் பிறந்தவர்கள் உயிர் காரகத்துவ ரீதியான பலனை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருள் காரகத்துவத்தை இழப்பார்கள். அதே நேரத்தில் பொருள் காரத்துவத்தை அதிகப்படியாக ஒருவர் அனுபவித்தால் அவருக்கு பயந்து உறவுகள் எட்ட நிற்பார்கள். ஒட்டி உறவாட மாட்டார்கள். அல்லது உறவுகள் பணம் கேட்பார்கள் என்று பயந்து உறவுகளிடம் பழக மாட்டார்கள். இன்று பணமா பாசமா என்று பட்டிமன்றம் நடத்தி வாதிடும் வகையில் உலகம் உள்ளது. பதவியும் செல்வமும் ஒரு காலகட்டத்தில் உயர்ந்தும் மற்றொரு கால கட்டத்தில் குறைந்தும் சந்திரன் போல் வளர்ந்தும் தேயும் தன்மை கொண்டது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்று நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தொழிலை பற்றியதாகும் என்பதால் அதைப் பார்க்கலாம்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
தொழில்
ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொழில் செய்தனர். பெரும்பான்மையானவர்கள் குலத்தொழிலையே நம்பி வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது ஒருவர் வாழ்க்கையில் முன்னேற அரசாங்கமும் வங்கிகளும் நிதி உதவி அதிகமாக வழங்குகிறது. நிதி உதவி பெற்று தொழில் தொடங்க பல இளைய தலைமுறையினர் முன்வருகிறார்கள். தொழில் தொடங்கும் அனைவரும் வெற்றியை நிலை நாட்டுவதில்லை. அதேபோல் ஒருவருடைய தொழிலை முதலீடு அடிப்படையான தொழில்கள் முதலீடு இல்லாத தொழில்கள் என்று இரண்டு விதமாக பிரிக்கலாம். சிலருடைய ஜாதக அமைப்பு படி முதலீடு செய்யக்கூடிய தொழில்கள் நல்ல வருமானத்தை பெற்று தரும். ஒரு சிலருடைய ஜாதக அமைப்பு முதலீடு இல்லாத தொழில்கள் அதிகப்படியான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
முதலீடும் அடிப்படையான தொழில்
எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும் தனது சந்ததியினருக்காகவும் சேர்த்து வைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் செய்தாலும் எட்டாம் பாவக வலிமை வேண்டும். போட்ட முதலீடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை. தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் வீக். ஜோதிடத்தில் பல்வேறு சூட்சமங்கள் உள்ளது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானம் எட்டாமிடமாகும். ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்ல பாரம்பரிய முறைப்படி பல்வேறு முறைகள் உள்ளது. மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருப்பதால் அவர்களின் முதலீடுகள் பலமடங்காக பெருகுகிறது. பெரும் பணக்காரர்களின் வாழ்க்கையும் , முதலீடும் யாரும் அறிய முடியாத வண்ணம் மறைபொருளாக ரகசியமாக இருக்கும். 5.10 சம்பந்தம் இருந்தால் அரசு உத்தியோகம், அரசியல் பதவி, அரசு வகை ஆதாயம் உண்டு. புகழ், அந்தஸ்து, கவுரவம் என ஒரு மனிதன் வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களும் தேடி வரும்.
முதலீடு இல்லாத தொழில்கள்
லக்னாதிபதி, பத்தாம் அதிபதியை விட ஆறாம் பாவகம் வலுத்தால் முதலீடு இல்லாத தொழில்கள் அல்லது பேச்சை மூலதனமாகக் கொண்ட தொழில்கள் அல்லது உத்தியோகமே சிறப்பான பலனைத் தரும். பேச்சை மூலதனமாக கொண்ட, முதலீடு இல்லாத தொழில், ஆலோசனை தொழில் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பார்கள். பேங்கிங், ஆடிட்டிங், டீச்சிங், மார்க்கெட்டிங், ஜோதிடம், புரோகிதம் போன்ற துறையில் வாழ்வாதாரம் உயரும். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவார்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பார்கள்.
ராசி சக்கரம்
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பத்தாம் இடத்தில் நின்றால் ஜாதகர் சுயமாக உழைத்து தொழிலை வளர்ப்பார்.
ஜாதகரின் சிந்தனைகள் தொழில் பற்றியதாகவே இருக்கும். அவர்களின் மூச்சுக்காற்று கூட தொழில் எண்ணம் மிகுதியாக இருக்கும். அதே நேரத்தில் பத்தாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்தால் தொழில் வாய்ப்புகள் ஜாதகரை தேடிச் செல்லும். தொழிலைத் தேடி ஜாதகர் செல்ல வேண்டிய தேவை இல்லை. தொழில் சார்ந்த அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். 1, 5, 9 என்னும் திரிகோணங்கள் ஒரு ஜாதகத்தில் வலுத்தால் உழைத்து 30 முதல் 50 வயதிற்குள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். 1, 4, 7,10 எனப்படும் கேந்திரம் வலுத்தால் 25- 40 வயதுக்குள் வாழ்க்கையில் செட்டிலாக தேவையான அனைத்து பொருளாதாரத்தையும் தொழில் மூலமாக சம்பாதிப்பார். 2,5,8,11 எனும் பண பரஸ்தானம் பலம் பெற்றால் 20-30 வயதுக்குள் பொருளாதாரத்தில் தன்னிறைவு தொழில் மூலமாக உண்டாகும்.
சனிபகவான்
கால புருஷ பத்தாம் அதிபதி சனிபகவானே ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்கிறார். ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதியும் சனி பகவானும் லக்னமும், லக்னாதிபதியும் என்ற நிலைக்கு ஏற்பவே தொழிலில் ஒருவர் வெற்றி பெற முடியும். பத்தாம் பாவகம் வலிமையாக இருந்து சனிபகவான் வலிமையாக இல்லாவிட்டால் சுமாரான வருமானம் வரும். நல்ல வருமானம் தரக்கூடிய வகையில் தொழிலை வழி நடத்த தெரியாது.
ஒரு ஜாதகரின் அனைத்து கர்மாவும் சனிகிரகத்திலேயே பதியப்பட்டு இருக்கிறது. சனிபகவான் தன் பணியை திறம்படச் செய்ய ராகு கேதுக்கள் உதவியாக இருப்பார்கள். வினையூக்கி கிரகங்களான ராகு கேதுக்கள் சனி கிரகத்தில் பதிவாகி இருக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பலன் வழங்குவார்கள்.
சந்திரன்
ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும் விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்ப்பது மதியெனும் சந்திரனாகும். ஆக விதிக்கு துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும் விதியால் ஏற்படப் போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன் தான். ஜனன கால ஜாதகத்தில் தொழில் காரகனாகிய சனி சிறப்பாக இருந்தாலும் ஒருவர் தன் தொழிலை திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம். சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப் போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள்.
சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 6,8,12ல் சந்திரன் மறையக் கூடாது. சந்திரன் மறைந்தவர்கள் தனது சுய முதலீட்டை இழப்பார்கள். தொழிலால் பெரிய நன்மையை அடைய முடியாது.
தசாம்சம் டி10
இவை எல்லாவற்றிற்கும் மேலாக டி10 எனும் தசாம்ச வர்க்கசக்கரத்தின் மூலம் ஒருவரின் தொழில் அமைப்பை தெளிவாக விரிவாக அறிந்து கொள்ள முடியும். ராசி சக்கரம் உணர்த்தும் மேலோட்டமான பலனை விட தசாம்ச சக்கரம் மூலம் அறியும் தொழிலுக்கான பலன் தெள்ளத் தெளிவாக இருக்கும். 30 பாகைகள் கொண்ட ஒரு ராசி சக்கரத்தை பத்து சம பங்காக பிரிக்கும்போது ஒரு பங்கிற்கு மூன்று பகை வரும்.
இதன் மூலம் ஒருவரின் சரியான தொழில் நிலை வகிக்கும் பதவி செயல்திறன் ஆகியவற்றை அறியலாம். ஒரு ஜாதகத்தில் ஜீவனம் எனும் தொழில் நிலையை அறிய 1,10-ம் பாவக ஆய்வு மிக முக்கியம். அதேபோல் தசாம்ச சக்கரத்தில் 1,10-ம் பாவக அதிபதிகளைக் கொண்டு தொழிலை நிர்ணயிக்கலாம். ராசி சக்கரத்தினை விட மிக தெள்ள தெளிவாக தொழிலை நிர்ணயிக்கலாம். தசாம்ச சக்கரத்தில் 1,10 பாவகத்தில் நிற்கும் கிரகங்களில் எந்த கிரகம் வலிமை உள்ளதாக உள்ளதோ அந்த கிரகத்தின் தொழில் ஜாதகர் செய்வார்.
தசாம்ச சக்கரத்தின் லக்னாதிபதி பலம் பெற்றால் தொழிலில் ஸ்திரத்தன்மை இருக்கும். ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் பலன் கொடுக்கக் கூடிய தொழில் அமையும்.
ராசி சக்கரத்தின் பத்தாம் அதிபதியும் சனிபகவானும் தசாம்ச சக்கரத்தில் சுபவலிமை பெற்றால் ஜாதகத்தின் தொழில் மூலமாக பலருக்கு வேலை கொடுப்பார். தசாம்ச லக்னத்தில் ராகு இருந்தால் ஜாதகரின் தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். அல்லது பேராசையால் குறுக்கு வழியில் செல்வார். தசாம்ச சக்கரத்தில் சூரியன் பலம் பெற்ற ஜாதகருக்கு நிர்வாகத் திறமை உண்டு. அரசியல் ஈடுபாடு அரசாங்க ஆதரவு உண்டு. சூரியன் பலம் குறைந்தால் தொழிலுக்கு அரசாங்க ஆதரவு கிடைக்காது. நிலையற்ற வருமானம் இருக்கும். நிர்வாக திறமை இருக்காது. தசாம்ச சக்கரத்தில் சனி வலுவாக இருந்தால் ஜாதகரின் தொழிலுக்கு உதவியான வேலையாட்கள் கிடைப்பார்கள்.
தசாம்ச சக்கரத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் ஜாதகருக்கு தெளிவான மனநிலை இருக்கும். எத்தகைய சூழ்நிலையிலும் தன்னை முழுமையாக தொழிலில் ஈடுபடுத்திக் கொள்வார். தசாம்ச சக்கரத்தின் 10-ம் இடத்தைக் கொண்டு ஒருவரின் கர்மாவை பற்றியும் கர்மவினை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். மனிதராய் பிறந்த அனைவரும் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து வாழ வேண்டும் என்பது விதி. மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளிலும் ஒருவரின் ஜாதகம் பலம் பெற்றால் பணத்திற்காக ஜாதகர் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பணம் ஜாதகருக்காக வேலை செய்யும்.
மேலே கூறிய நிலைகளில் சில குறைபாடுகள் இருந்தால் பணத்திற்காக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும்.
பரிகாரம்: சுய ஜாதக ரீதியான பத்தாம் பாவக வலிமை குறைவால் டி10 எனும் தசாம்சம் பலம் குறைந்தால் சனிக்கிழமை காலபைரவரை வழிபடுவதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
- மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
- உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.
இன்றைய கால கட்டத்தில் அன்றாடம் எல்லோரும் உடலில் ஏதோ ஒரு சிறிய பாதிப்போ அல்லது பெரிய பாதிப்புடனோ உள்ளனர். தலைவலி, சைனஸ், மூட்டுவலி, முதுகு வலி, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை தன் குடும்ப உறுப்பினர்போல் அதனுடன் கைகோர்த்து வாழ்ந்து வருபவர்கள் ஏராளம். ஆனால் அநேகர்
* உடல் ரீதியான பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
* காய்ச்சல் வந்து விட்டாலே உடல் சோர்ந்து விடும்.
* உடல் வலி, மூட்டு வலி என்று சொல்லாதவர்கள் மிகக்குறைவே.
* எளிதில் பலவீனப்பட்டு இருப்பார்கள்.
* உணவு சாப்பிட பிடிக்காத உணர்வு இருக்கும்.
* இதுவே மன அழுத்தத்தினையும், கவலையையும் கொடுத்து விடும்.
* தூக்கத்தில் தொந்தரவு இருக்கும்
* செய்ய வேண்டிய வேலைகள் மறந்து போகும்.
* சிகிச்சைக்கு பின் உடல்தேறுவதற்கு காலம் பிடிக்கும்,
* சிலருக்கு மருத்துவமனை, இடைவிடாத கவனிப்பு அவசியம் தேவை என்ற சூழ்நிலை ஏற்படலாம்.
* சிலருக்கு நோய் முழுமையாக குணமடையாது இருக்கலாம்.
* மருந்துகள் முறையாய் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
* குடும்ப ஆதரவு அவசியம்.
* நோயின் தீவிரத்தன்மைக்கேற்ப அவசர சிகிச்சை தேவைப்படலாம்.
* உடல் இயக்க குறைவு, உறுப்புகள் செயலிழப்பு ஏற்படலாம்.
* ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
* சுகாதார பராமரிப்பு அவசியம்.
* நோயின் வகையையும், நிலைமையையும் பார்க்க வேண்டும்.
* பரம்பரை வகை பாதிப்புகள் இருக்கலாம்.
* உடல்நிலை பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
* மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.
* வல்லுநர்கள் ஆலோசனை தேவைப்படலாம்.
* அத்தியாவசிய உதவிகள் அவசியம்.
* ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது நல்லது.
* மருத்துவமனை அருகிலேயே இருப்பது நல்லது.
* நிரந்தர கண்காணிப்பு தேவைப்படலாம்.
* தடுப்பூசிகள் அவசியம்.
* அறுவை சிகிச்சை அவசியப்படலாம்.
* பேச்சு குறையலாம்.
* பயிற்சிகள் தேவை.
* நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும்.
ஆக ஒரு நோய் பாதிப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இந்த உடலோடு விடாமல் போராடினால்தான் ஆரோக்கியம் பெற முடியும். அதற்கான விழிப்புணர்வுடன், வழி முறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும்.
உடல் நலம் பற்றி மேலும் சில செய்திகளை பார்ப்போம்
* மிகவும் மனச்சோர்வு இருக்கும்போது ஒரு கப் காபி உதவும். ஒரு கப் மட்டும் போதும். அடிக்கடி பருகுவதையும் அதையே பழக்கமாக்கிக் கொள்வதும் வேண்டாம்.
* அமெரிக்காவின் இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஒரு செல்லப் பிராணி வைத்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகின்றது. இருதய பாதிப்பு குறைகின்றது என்று கூறியுள்ளது.

கமலி ஸ்ரீபால்
* ஸ்ட்ரெஸ் அதிகமானால் இருதய பாதிப்பு கூடுகின்றது. சர்க்கரை நோய் பிரிவு, 2 பாதிப்பு வரவும் வாய்ப்புகள் அதிகம். காரணம் உடலில் கார்டினால் அளவு அதிகமாவது தான்.
* மனித மூக்கு 50 ஆயிரம் வகை வாசனைகளை உணர முடியும்.
* நல்ல உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை தரும்.
* முறையான தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியினை கெடுக்கும்.
ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியத்தினையும் பாதிக்கும்.
சில அறிகுறிகளை சற்றும் காலதாமதிக்காமல் உடனடியாக கவனிக்க வேண்டும்
* நெஞ்சில் வலி, நெஞ்சில் அழுத்தம்.
* மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, இருமல்.
* திடீரென வேகமாக எடை குறைதல்.
* திடீரென பொறுக்க முடியாத தலைவலி.
* திடீரென தடுமாறி குளறி பேசுதல்.
* கை, கால்களில் குறும்பு, திடீரென மரத்து போகுதல்.
* பார்வை தெளிவின்மை.
* சிறுநீர், கழிவுப் பொருள் வெளியேற்றத்தில் ரத்தம்.
* அடிக்கடி வயிற்று வலி.
* தொடர்ந்து அதிக ஜுரம்.
* சக்தியின்மை, தொடர்ந்து சோர்வு.
இந்த அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடாமல் உடனடியாக கவனிக்க வேண்டும்.
நமக்கு நன்மை பயப்பவர்களை எந்நாளும் நாம் காயப்படுத்தக் கூடாது
* யாரிடம் இருக்கும் பொழுது நீங்கள் பத்திரமாக, கவலை இன்றி உணருகின்றீர்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். உங்கள் செயல்களை எடை போட்டு பாருங்கள்.
* யார் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவியாய் இருக்க முயற்சி செய்கின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* யாரை உங்களால் முழுமையாக நம்ப முடியுேமா அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களுக்காக அன்பு, அக்கறையை யார் முழுமையாக கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களுக்கு கொடுக்கும் வாக்குகளை யார் நிறைவேற்றுகின்றார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்கள் கருத்துக்கு யார் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* வார்த்தை, செயல் மாறாது இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்கள் பேச்சை யார் முழு கவனத்துடன் கேட்கின்றார்களோ. அவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்கள் நியாயமான கனவு, லட்சியங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களை ஊக்கப்படுத்துபவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களுடன் உபயோகமாக முன்னேற்றமான வழியில் நேரம் செலவழிப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* தவறு செய்து விட்டால் மன்னிப்பு கேட்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களுக்குரிய எல்லைகளில் தலையீடு செய்யாதவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களுடன் மனம் விட்டு உண்மையாய் பேசுபவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* உங்களுடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருப்பவர்களை காயப்படுத்தாதீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் 99 சதவீதம் உங்கள் பெற்றோர்கள்தான். அவர்களை எந்நாளும் எந்த நேரத்திலும் கைவிடக்கூடாது.
இப்படிப்பட்ட பல பெற்றோர்கள் இன்று பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு மனஉளைச்சலுக்கு ஆளாகி நோய் வாய்பட்டு காலம் தள்ளுகின்றனர். இவர்கள் இனியாவது அவர்கள் பிள்ளைகளால் நன்கு கவனிக்கப்பட வேண்டும்.
குடும்ப மருத்துவர்
சிலரின் ஒரு பொதுவான குறை என்ன வென்றால் ஒரு சின்ன உடல்நல கோளாறு என்றாலும் நிறைய பரிசோதனைகள் செய்து செலவு வைத்து விடுகின்றார்கள் என்பதுதான். சில சின்ன அறிகுறிகள் உடனடியாக கவனிக்கப் படாவிட்டால் ஆபத்தில் கூட கொண்டு விடலாம். இதுவும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது. ஆகவேதான் 'குடும்ப மருத்துவர்' என்று இருந்தால் உங்களுக்கு அநேக நன்மைகள் நடக்கும். அவருக்கு உங்கள் உடல் ஆரோக்கியம், பாதிப்பு என்பது நன்கு தெரியும்.
அமைதியாய் சிறு அறிகுறிகளுடன் ஒருவரைத் தாக்கும் பெரிய பாதிப்புகளை பாருங்கள்.
'மாரடைப்பு' - இது முதியோர்கள், பெண்கள், சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்களுக்கு ஏற்படும். இதன் அறிகுறிகள் சில நேரங்களில் ஜீரண கோளாறு, சோர்வு என்று சிறிதாக தெரியும். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களே கவனமின்றி இருந்து விடலாம். ஆனால் சிறுவேலை செய்தாலும் அதிக சோர்வு, ஓய்வில் கூட மூச்சு வாங்குதல், வயிற்றுவலி, வயிற்று பிரட்டல், ஜீரணமின்மை, தலைசுற்றல், தூக்கமின்மை, சர்க்கரை நோய் பாதிப்பு என இருந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்.
* அடிக்கடி கிருமி, பூஞ்சை பாதிப்பு. கை, கால்களில் குறுகுறுப்பு இவை இருந்தால் உங்கள் டாக்டர் சர்க்கரைநோய் பரிசோதனையை செய்வார்.
* உடல் சதா அரிப்பு, வறண்ட சருமம், கால், கணுக்கால் வீக்கம், கண்ணை சுற்றிய உப்பிசம், நுரைத்த சிறுநீர், பசியின்மை போன்றவை இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்யப்படும்.
மேலும் சில பாதிப்புகளை குறிப்பிடலாம். ஆனால் அது அச்சத்தினை தரக் கூடாது என்பதற்காக எந்த சிறு அறிகுறியினையும் அலட்சியம் செய்யாது குடும்ப மருத்துவரை அணுகுங்கள் என்று வலியுறுத்தப்படுகின்றது.
இவைகளை நாம் அன்றாட உணவில் அடிக்கடி பயன்படுத்துகின்றோமா?
முட்டை: இன்று அசைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்ணும் பலரும் உணவில் இதனை சேர்த்துக் கொள்கின்றனர்.
சிறந்த புரத சத்து கொண்டது. இதன் மஞ்சள் கருவில் உள்ள சத்து கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. எடை குறைக்க விரும்புபவர்களுக்குக் கூட இது பரிந்துரைக்கப்படுகின்றது.
பருப்பு வகைகள்: புரதம், நார்சத்து, போலேட், இரும்புசத்து கொண்டது. செரிமானம் எளிதானது. சுண்டல் வகைகள் எளிதாக சமைக்க முடியும். வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அவசியமானது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருதயம், ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுவது.
புரோகலி: வைட்டமின் 'சி', 'கே' சத்து நிறைந்தது. நார் சத்து கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
பூண்டு: இது நம் நாட்டு சமையல் முறையில் அதிகம் சேர்க்கப்படுவது மிக நல்ல செயல். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். கெட்ட கொழுப்பு கட்டுப்படும். இருதய ஆரோக்கியம் கூடும். கிருமிகள் அழியும்.
வால்நட்: தினமும் இதனை 2 அல்லது 3 உண்பது மிகச் சிறந்தது. சில சில மாறுதல்கள் உணவில் ஏற்படும் பொழுது சிறந்த நன்மைகள் கூடும்.
- வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான்.
- தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும்.
"லதாவுக்கும் எனக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருக்கிறது" என்று ரஜினிகாந்த் அறிவித்தார்.
1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார். சில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடி விட்டனர்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் - லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை "தினத்தந்தி" தான். ரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, "தினத்தந்தி" வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்தச் செய்தி "தினத்தந்தி"யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் 'போன்' செய்து. 'இது உண்மையா என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.
அந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன்." இவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
"லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
வாழ்க்கையின் இன்ப - துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டைசுமந்து, 'மில்லி' அடித்து வாழ்க்கையின் மேடு- பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது. பிரபல நடிகை சவுகார் ஜானகியின் வீட்டில் தான். 7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் "தில்லு முல்லு" படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.
பகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா. "மிஸ்டர் ரஜினி! நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா?" என்று கேட்டார். நான் சம்மதித்தேன். பேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.

லதா திடீரென்று "மிஸ்டர் ரஜினி காந்த்! உங்கள் திருமணம் எப்போது?" என்று கேட்டார். "குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்" என்று பதிலளித்தேன். லதா மீது கண்களைப் பதித்தபடி. இப்படிச் சொன்னால் எப்படி! விளக்கமாகச் சொல்லுங்கள்!" என்றார் லதா. "உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்" என்றேன்.
நாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது. என் வாழ்க்கையில் ஒளிவு - மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் மனம் திறந்து, "என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?" என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன். லதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.
அதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். 'திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.
நான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார். 'அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது?" என்று கேட்டார். 'நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க' என்று சொல்லி விட்டு வந்தேன்.
பிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்து விட்டு, சம்மதம் தெரிவித்தார். லதா மட்டும், "உங்களை மணந்து கொள்ளமாட்டேன் என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச் சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.
திருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி? என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா? அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.
என் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன். என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்!
பெண்கள் என்பவர்கள் வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை, அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன. "
இவ்வாறு ரஜினி கூறினார்.
திருமணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, ரஜினிகாந்த் அதிரடியாக பதில் அளித்து, பரபரப்பு உண்டாக்கினார்.
தன் திருமணம் 26-2-1981 அன்று திருப்பதியில் நடைபெற இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஜினிகாந்த், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து கூறியதாவது:-
"எனது திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை. என்னோடு நெருங்கிப் பழகிய, என் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களைக்கூட, "வாருங்கள்! என் திருமண கோலத்தைக் கண்ணாரக் கண்டு ஆசீர்வதியுங்கள்" என்று அழைக்கவில்லை.
இதற்குக் காரணம் என்ன? அழைப்பிதழ் அச்சடித்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று கொடுப்பது, தபால், தந்தி, ரேடியோ வசதிகள் இல்லாத அந்தக் காலத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலத்தில் அது எதற்கு? என்னைப்போன்ற ஒரு நடிகனுக்குத் திருமணம் என்றால், அடுத்த நிமிடமே மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக நவீன வசதிகள் இருக்கின்றன. அதனால் அழைப்பிதழ் அச்சடிக்கவில்லை.
என் திருமணத்துக்கு உடன் பிறந்தவர்கள் தவிர, வேறு எவரையும் அழைக்கவில்லை. வயது முதிர்ந்த என் தந்தையிடம் கூட, மானசீகமாகத்தான் வாழ்த்து பெற்று இருந்தேன். கண்டக்டராக நான் பெங்களூரில் பணியாற்றினேனே! அப்போது என்னுடன் பழகி, என்னுடன் உண்டு உறங்கிய சில பஸ் கண்டக்டர்களை மட்டும் திருமணத்துக்கு அழைத்திருக்கிறேன்.
தெய்வத்தின் சந்நிதானத்தில் என் திருமணம் நடைபெறுகிறது. தெய்வம் என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்தால் அதுவே போதும். ரஜினி, தன் வீட்டில், வெறும் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியைத்தான் நான் லதா கழுத்தில் கட்டப்போகிறேன்.
தாலி கட்டுவது என்பது வெறும் சடங்கு. ஆனால், தெய்வத்தை சாட்சியாக வைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு பயந்து, ஒருத்தி கழுத்தில் கயிற்றைக் கட்டுவதே உண்மையான திருமணம். இன்று நான் இருக்கும் நிலையில் 4 ஆயிரம் பேர் என்ன. லட்சம் பேருக்கு அறுசுவை உணவு வழங்கி திருமணத்தை சிறப்பாக செய்ய முடியும்.
ஆனால், கோடீசுவரன் என்றாலும், திருமண விழாவுக்கு பணத்தை விரயம் செய்வதை நான் வெறுக்கிறேன். பசி அறியாதவர்கள் என் திருமணத்துக்கு வந்து விருந்துண்டு போவதைவிட, பசித்தவர்களுக்கு சோறு போட நினைக்கிறேன். எனவே, சென்னையில் உள்ள சில அனாதை விடுதிகளில் உள்ளவர்களுக்கு சீருடையுடன் உணவும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
திருப்பதியில் நடந்த ரஜினி-லதா திருமணம் பற்றி நாளை பார்க்கலாம்.






