என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worship"

    • மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது.
    • இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

    மாசி மாதம் மகத்துவமான மாதம். மாசி மாதத்தில் கலைகளையும் கல்வியையும் கற்றறியலாம். உபநயனம் முதலான விசேஷங்கள் செய்யலாம். தீர்த்த நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்றெல்லாம் ஞானிகள் கூறுகிறார்கள்.

    மாசி மாத அமாவாசையை பால்குண அமாவாசை என்றும், பால்குண மாதத்தின் நிறைவு நாள் என்றும் சொல்லுவது உண்டு. மாசி அமாவாசைக்கு முன்பாக சிவன் மற்றும் அன்னை பார்வதியை போற்றும் மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்து, சிவனின் அருளை பெற்ற கையோடு அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களின் ஆசியை பெற்றால் பித்ருதோஷங்களில் இருந்து விடுபட முடியும்.

    இந்த மாசி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து ஒரு புனித நதியிலோ அல்லது வீட்டிலோ புனித நீராடுவது நல்லது. இந்த நாளில் பசுவிற்கு தீவனம் கொடுப்பது நல்லது. அமாவாசை நாட்கள் கிரக பிரவேசம், மொட்டை அடிப்பது, திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தம் உட்பட எந்த மங்களகரமான சடங்குகளையும் யாரும் செய்வதில்லை.

    ஆனால் அமாவாசை நாட்களில் புனித கங்கையில் நீராடுதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தான தர்மங்கள், பித்ரு தர்ப்பணம், பித்ரு பூஜை செய்து முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளை மேற்கொள்வதோடு, சனியுடன் தொடர்புடைய பரிகாரங்களையும் செய்யலாம்.

    அதேபோல் குலதெய்வத்துக்கு பொங்கலிட்டு வழிபடலாம். அன்று புடவை, ஜாக்கெட், பழங்கள், மங்கலப் பொருட்கள் வைத்து வேண்டி அந்தப் புடவை முதலான மங்கலப் பொருட்களை யாரேனும் சுமங்கலிக்கு வழங்கி ஆசிபெற்றால் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இல்லத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.

    • நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார்.
    • நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும்.

    சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்கங்களுக்கு விளக்கமளிப்ப வரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது… மெத்தப் படித்திருந்தாலும், நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோவில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது.

    அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

    சனிப்பிரதோஷ நாளில் நந்தியை வழிபட்டால் சனி பகவானின் தொல்லைகள் தீரும். நந்தி குருவடிவானவர். சிவபெருமான் நந்திக்கு உபதேசம் செய்தார். நந்தியே சிவரகசியங்களை முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே இந்த உலகத்தில் முக்தி அடைய விரும்பும் ஆன்மாக்கள் நந்தியை வழிபட வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள்.

    பிரதோஷ நேரத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பரிசி நெய் விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும். சனிப்பிரதோஷ நாளில் ஆலயம் செல்பவர்கள் நந்தி அபிஷேகத்துக்குப் பசும்பால் வாங்கித் தந்து வழிபடுவது சிறப்பு. நந்திக்குப் பஞ்சாமிருதம் செய்யப் பழங்கள் வாங்கிக் கொடுத்தால் நம் வறுமை நீங்கி செல்வ வளம் சேரும். நெய் விளக்கேற்றி வழிபட்டால் அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் உண்டாகும். இளநீர் சமர்பித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    நல்லெண்ணையில் விளக்கேற்றி வழிபட்டால் சனி தோஷம் நீங்கி சுகமான வாழ்வு கிடைக்கும். ஆலயங்களுக்கு நல்லெண்ணை தானமாகக் கொடுப்பதன் மூலம் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை அடையலாம். குறைந்தபட்சம் சில வில்வ இலைகளையாவது நந்திக்கு சமர்ப்பித்து வேண்டிக் கொண்டால் போதும். நந்தி உங்களின் வேண்டுதல் பரிபூரணமாக நிறைவேற அருள்புரிவார்.

    நந்தி தேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபா ராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

    • நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார்.
    • சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்சிினை ஏற்பட்டது. அவர்களது சண்டையை தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.

    தேவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவ பெருமானுக்கு மிகப்பெரிய நெருப்பு பிழம்பமாக தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு விண்ணிற்கும், மண்ணிற்கும் பரவி மிகப் பெரிய வடிவமாக காட்சி அளித்தது. அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண விஷ்ணுவும், முடியை காண பிரம்மாவும் புறப்பட்டனர்.

    அடியையும், முடியையும் முதலில் கண்டறிந்த வருபவரே உலகில் பெரியவர் என்றார் சிவபெருமான். அன்னப்பறவையாக மாறி பல யுகங்கள் பிரயாணம் செய்த பிரம்மாவின் அகந்தை குறையாததால் ஒரு தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வந்தார். அதன் படி தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. நெருப்பு பிழம்பாக இருந்த சிவ பெருமானுக்கு கோபம் வந்தது.

    அந்த நெருப்பு பிழம்பில் இருந்து வெடித்து வெளியே வந்து, லிங்க வடிவாக காட்சி தந்தார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு பூவுலகில் வழிபாடுகளே இருக்காது என்றும், தாழம்பூ எந்த பூஜைக்கு பயன்படாமல் கொடிய நாகங்கள் குடியிருக்கும் இடமாக மாறும் என்றும் சாபம் அளித்தார். அதே சமயம் சிவனிடம் அடி பணிந்து நின்ற விஷ்ணுவிற்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை கொடுத்தார்.

    இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் தான். மகாசிவராத்திரி மட்டுமல்ல லிங்க வழிபாடும், உலகில் முதன் முதலில் அக்னி தோன்றியதும் திருவண்ணாமலை திருத்தலத்தில் தான். இந்த அக்னியில் இருந்த தான் சூரியன், சந்திரனின் பிரகாசங்களும், தீப ஒளியும் தோன்றியதாக புராணங்கள் சொல்கின்றன.

    அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி அளித்தார். இந்த நிகழ்வு மாசி மாத தேய்பிறை சதுர்த்தியில் நடைபெற்றதாலேயே இந்த நாள் மகா சிவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது.

    திருவண்ணாமலை தலத்தில் இருந்து தான் லிங்க வழிபாடும், மகாசிவராத்திரி வழிபாடும் மற்ற பகுதிகளுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

    • கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு.
    • சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

    காலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவ நாமத்தை சொல்லிய படி இருக்க வேண்டும். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.

    நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டாம்.

    கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ விரதம் இருந்து, சிவ வழிபாட்டினை செய்யலாம். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை சிவபெருமான் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.

    • கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஓட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில் பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.

    இந்த சங்கானது வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறி வருகின்றனர்.

    புராணக் கதையின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுகிறது. பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்குச் செல்ல வனத்துறையிடம் பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

    • சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
    • சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம்.

    மகாசிவராத்திரியின் நேரடி அர்த்தம் 'சிவனின் மகா இரவு' என்பதாகும். மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்க ஆசீர்வதிக்கிறது. திருமணமான பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.

    மகாசிவராத்திரி என்பது சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.

    தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடுவதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

    திருமணம் தாமதமாகிறவர்கள், திருமணம் தடைபடுபவர்கள் இந்த நாளில் எளிய பரிகாரம் செய்தால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என்பது நம்பிக்கை. யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தங்கள் கைகளால் மஞ்சளை சிவன் மற்றும் பார்வதியின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் கணவன்- மனைவியும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.

    மஞ்சளை படைத்து, சிவன்-பார்வதியை வேண்டிக் கொண்டு முடிந்த வரை சிவ மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள வேண்டுதலை சொல்லி வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களின் திருமணம் நடைபெறுவதில் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் ஆகியவை நீங்கி, மனதிற்கு விருப்பமான திருமண வாழ்க்கை அமையும்.

    சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம். அன்று 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ திருமணம் தள்ளிப் போகிறது என்றாலும் அன்னதானம் செய்து, சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தி ஆகி மகிழ்வான வாழ்க்கை அமையும்.

    • பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது.
    • காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது.

    நாம் எந்தவொரு செயலை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவோம். இதற்கு காரணம், விநாயகரை வணங்கி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.

    அவ்வாறு மன்னன் கோவில் கட்ட பாதுகாவலாக இருந்து வெற்றிகரமாக கட்டி முடிக்க அருள்புரிந்தவர் தான் தலையாட்டி விநாயகர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, தலையாட்டி விநாயகர் ஆலயம். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்துள்ளன. இதன் காரணமாகவே இவ்வூர், 'ஆற்றூர்' என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் 'ஆத்தூர்' என்று மருவியுள்ளது.

    முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர், சிவ தல யாத்திரை சென்றார். அவ்வாறு வசிஷ்ட நதிக்கரைக்கு வந்த வசிஷ்ட முனிவர், அங்கு பல இடங்களில் தவம் இயற்றினார். மேலும் அவர் தவம் இயற்றிய இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன்படி இத்தலம் வந்து தவம் இயற்றிய வசிஷ்ட முனிவர், திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவதை போல, இங்கும் ஜோதி வடிவில் சிவபெருமானின் தரிசனத்தை காண விரும்பினார்.

    அவ்வாறு, அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்பகுதியை கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். மிகுந்த சிவ பக்தனாக இருந்த மன்னன், தினமும் சிவபெருமானை வணங்கிய பிறகே தனது அன்றாட வேலைகளை செய்வான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், "நான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் புதைந்து இருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபடு" என்று கூறினார். அதன்படி இவ்விடத்தை தோண்டும் போது, அதில் ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் ஒரு புதையலும் இருந்தது. அந்த புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். அவ்வாறு இக்கோவிலை கட்டும் முன்பு, இத்தலத்தில் உள்ள விநாயகரிடம் உத்தரவு வாங்கிய பிறகே மன்னன் கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளான். மேலும் இந்த விநாயகரே கோவில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோவில் பணிகள் முடிந்த பிறகு, மன்னன் இந்த விநாயகரிடம் வந்து, "கோவில் பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா" என்று கேட்டான். அதற்கு விநாயகர், 'நன்றாக கட்டி இருக்கிறாய்' என்றும் சொல்லும் விதமாக, 'ஆம்' என்று தனது தலையை ஆட்டினாராம். அதனால் தான் இத்தல விநாயகர், 'தலையாட்டி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள தலையாட்டி விநாயகர், தனது தலையை சற்று இடதுப்புறமாக சாய்த்தபடி அருள்பாலிக்கிறார். இவர் 'காவல் கணபதி' என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள், இவருக்கு வஸ்திரங்கள் சாற்றியும், பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். எந்தவொரு புதிய காரியங்கள் தொடங்கும் முன்பும், இத்தல விநாயகரை வணங்கி வேண்டிக் கொண்டால், அச்செயல் வெற்றி அடையும் வரை நம்முடன் இருந்து சிறப்பாக செய்து முடித்து தருவார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

    திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கிரக தோஷங்கள் விலகவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்துக்கு அருகிலேயே தலையாட்டி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

    • சிவராத்திரி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.
    • சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை விலகும். சிவராத்திரி விரதம் யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். 100 அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் (குறியல்) செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்துக்கு ஈடாகாது. சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். தொடர்ந்து, சிவன் கோவிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

    அன்றைய தினம் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். இரவு சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ தூங்க வேண்டும். மறுநாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவ சிந்தனையோடு சிவாலயத்திற்கு போய் ஈசனை வணங்க வேண்டும். மாலையில் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் ருத்திராட்ச மாலையுடன் சிவ அர்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    கோவிலில் 4 காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நான்கு கால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம். சிவராத்திரியில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ஜாம பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

    மகா சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் நீராடி அன்னதானம் அளித்து விட்டு விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று கண் விழித்த பின்னர் மறுநாள் பகல் பொழுதில் தூங்கக்கூடாது. சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைக்கும். 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.

    • பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி.
    • சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி.

    சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. மாசி மாத சிறப்புகளின் மகுடம் மகாசிவராத்திரி. தேய்பிறை சதுர்தசி திதி நாள் சிவராத்திரி ஆகும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

    சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கின்றனர்.

    பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை சிவபெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.

    உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதலும் இந்த நாளில்தான் நடக்கும் என்கின்றன புராணங்கள்.

    மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவன் மீது மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.

    மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

    • மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.
    • சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    மலையே சிவன். சிவனே மலை. ''வானனை, மதி சூடிய மைந்தனை, தேனனை, திருவண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புர மூன்றெய்த ஆனனை, அடியேன்மறந்து உய்வனோ?" என்று உருகுகிறார் நாவுக்கரசர். நெருப்பு தலமான இங்குதான் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதும் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி நாளிலேயே குபேரன் கிரிவலம் வந்து, அனைத்து செல்வங்களையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.

    மகா சிவராத்திரி நாளில் கிரிவலம் வந்தால் இரு மடங்கு பலன் கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது. சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் தீபத்தை வைகுண்ட வாசல் வழியே கொண்டு வருவர். பஞ்சபூத தலங்களில் இது அக்னி தலம் என்பதால், பெருமாளும் ஜோதி வடிவில் எழுந்தருளுவதாகச் சொல்கின்றனர்.

    மகா சிவராத்திரியின் போது, கோவில் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் மலையைச் சுற்றி வருகிறார்கள். சிவராத்திரி விழா உருவானதும் இங்கு தான் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரியில் கிரிவலம் வருவது விசேஷம்.

    • இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெறுகிறது.
    • சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி வருகிற 15-ந்தேதி வருகிறது. இதையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு இரவு முழுவதும் கண்விழித்து விடியவிடிய வழிபாடு நடத்துவார்கள். மேலும் மறுநாள் கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜையிலும் பங்கேற்பார்கள்.

    பழனி மலைக்கோவிலில் இரவு 8 மணிக்கு முதற்கால பூஜையும், 11 மணிக்கு 2-ம் கால பூஜையும் நடைபெறுகிறது. நள்ளிரவு 1 மணிக்கு 3-ம் கால பூஜையும், அதிகாலை 3 மணிக்கு 4-ம் கால பூஜையுடன் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. வழக்கமாக ராக்கால பூஜைக்குப்பின் கோவில் நடை சாத்தப்படும். ஆனால் சிவராத்திரி இரவு முழுவதும் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    இதேபோல் பெரியாவுடையார் கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பட்டத்து விநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில், வேளீஸ்வரர் கோவில், சன்னதி வீதி மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் உள்ள சிவன் சன்னதிகளில் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    • மார்ச் 6 காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார் சனிபகவான்.
    • சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    திருநள்ளாறு கோவிலில் மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

    புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சனிப் பெயர்ச்சி விழா மிக விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். மார்ச் 6-ந் தேதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    அதன்படி திருநள்ளாறு கோவிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    இதனையொட்டி தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் மங்கலவாத்தியங்கள் முழங்க பந்தக்கால்கள் பிரகார உலாவாக கொண்டு வரப்பட்டு கோவில் உள் பிரகாரத்தில் பைரவர் சன்னதி மற்றும் ராஜ கோபுரம் அருகில் நடப்பட்டது.

    இதில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ. ராஜ சேகரன், கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் மற்றும் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×