என் மலர்
நீங்கள் தேடியது "worship"
- முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது.
- இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர்
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவியங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது. மேளதாளங்கள் முழங்க குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.
இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்து சென்றனர்.
இதை தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக்கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டி கொண்டு, வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக்கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேள தாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடி கொண்டே வந்தனர்.
இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.
இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நாளை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
- 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பார்கள்.
- கணபதி ஹோமத்தை 'விநாயகர் வேள்வி' என்றும் அழைப்பர்.
எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி விட்டு தொடங்குவது தான் இந்துக்களின் வழக்கம். கணபதிக்குரிய பூஜைகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்த பிறகு தொடங்கும் காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி வெற்றிகரமாக நடைபெறும் என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
ஒரு கடிதத்தை எழுத தொடங்கும் முன்பு கூட பிள்ளையார் சுழி போட்ட பின்பு தான் எழுத தொடங்குகிறோம். எந்த செயலையும் கணபதியை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். ஆனால், ஒரு சமயம் சிவபெருமான் முப்புரங்களை அழிக்க புறப்பட்டபோது, கணபதியை வணங்க மறந்துவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. கணபதியை வணங்காமல் புறப்பட்ட ஈசனுக்கே இந்த நிலைமை ஏற்பட்டது. இதில் இருந்து கணபதியை வணங்குவதன் முக்கியத்துவத்தை அறியலாம்.
'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பார்கள்.
எந்தவொரு காரியத்துக்கும் தொடக்கம் நன்றாக இருந்தால் தான் நாம் நினைக்கும் வெற்றியை பெற முடியும். எனவேதான், எல்லா சுப நிகழ்ச்சியையும் முதலில் கணபதி ஹோமம் செய்து தொடங்குகிறார்கள்.
கணபதி ஹோமத்தை 'விநாயகர் வேள்வி' என்றும் அழைப்பர். நம் வீட்டில் நடக்கும் கிரகப்பிரவேசம், காது குத்துதல், கல்யாணம் என எந்த சுபகாரியமாக இருந்தாலும் கணபதி ஹோமத்தை செய்த பிறகு தொடங்குவது சிறந்த பலனை தரும். சுபகாரியங்கள் மட்டும் இன்றி, நம் முன்னோர்களை நினைவுப்படுத்தும் தை அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்களிலும் கணபதி ஹோமத்தை நடத்தலாம்.
கணபதி ஹோமத்தை எப்போதும் அதிகாலையில், அதுவும் சூரிய உதயத்திற்கு முன்பாகவே செய்வது தான் வழக்கம். கணபதி ஹோமத்தை மேற்கொள்ளும்போது, விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்களை உச்சரித்து, அவரை புகழ்ந்து பக்தி பாடல்களைப் பாட வேண்டும்
- நத்தம் மாரியம்மன் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
- வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
3-ந் தேதி (செவ்வாய்)
* பவுர்ணமி.
* ஹோலி பண்டிகை.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர், திருச்செந்தூர் முருகப் பெருமான் தலங்களில் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் பொங்கல் விழா, மாலை பூக்குழி விழா.
* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (புதன்)
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் மஞ்சள் நீராடல்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.
* வேதாரண்யம் சிவபெருமான் பவனி.
* காரமடை அரங்கநாதர் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
6-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* சங்கடகர சதுர்த்தி.
* திருவாரூர் தியாகராஜர் விழா தொடக்கம்.
* காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (சனி)
* திருவாரூர் தியாகராஜர் பவனி.
* வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
8-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* மன்னார்குடி ராஜகோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* காங்கேயம் முருகப் பெருமானுக்கு லட்சதீபம்.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (திங்கள்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
- வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மகா தீபாராதனையும், மாலை 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவமும் நடைபெறுகிறது. இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெறுகிறது.
- ஈசன் அன்று முதல் இத்தலத்தில் தம்மை வணங்கும் அடியார்களுக்குப் பேரருள் புரிந்து வருகின்றார்.
- அகத்திய மகரிஷியின் வேண்டுதலை ஏற்ற அம்மையப்பன், அவ்வாறே ஆகட்டும்!’ என்று திருவாய் மலர்ந்தருளினார்.
திருக்கயிலாய மலையே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. கரையிலாத கருணைப் பெருங்கடலாக அருளும் கயிலை நாதனுக்கும் மலையத்துவசன் பெற்ற மாமகள் அன்னை பார்வதி தேவிக்கும் திருமணம் என்பதாலேயே இவ்விழாக் கோலம்!
ஈசனின் திருமண வைபவத்தைக்காண தேவர்களும் மகரிஷிகளும் வட திசை நோக்கிக் குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகம் சமநிலை பெறத் திருவுள்ளம் கொண்டார் சர்வேஸ்வரன், சர்வ வல்லமை பொருந்திய தவ முனியாம் குறுமுனி அகத்திய மகரிஷியை அழைத்து தென்திசையில் உள்ள பொதிகை மலை நோக்கிச் செல்ல ஆணையிட்டார்.
உலகத்தைக் காத்து ரட்சிக்கும் உமாதேவிக்கும் பொன்னார் மேனியனுக்கும் நடைபெறும் திருமணக் காட்சியைக் கண்டு தரிசிக்க இயலவில்லையே என்ற ஏக்கம் கொண்ட அகத்திய மகரிஷி 'ஐயனே! அடியேன் தங்களது ஆணையினை சிரமேற்று இக்கணமே தென்திசை நோக்கிப் பொதிகை மலைக்குச் செல்கிறேன்.
ஐயன் எமக்கு ஒரு வரமளித்து அருள வேண்டும். இப்புண்ணிய பூமியில் அடியேன் பயணிக்கும் வழியில் எங்கெல்லாம் உமா மகேஸ்வரப் பெருமானின் திருமணக்கோலத்தைக் காண விழைகின்றேனோ, அங்கெல்லாம் அம்பிகை சமேதராக எனக்குத் திருக்காட்சி தந்து அருள்பாலிக்க வேண்டும் என்று மனமுருக வேண்டினார். அகத்திய மகரிஷியின் வேண்டுதலை ஏற்ற அம்மையப்பன், 'அவ்வாறே ஆகட்டும்!' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஈசனின் ஆணைப்படி தென்திசை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்த அகத்திய மகரிஷி, புனித பூமியான புதுவையில் பாயும் சங்கராபரணி நதியில் நீராடி, ஈசனின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க எண்ணினார். தமது திருக்கரங்களினால் ஒரு ஷோடச லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, உமையொரு பாகனைத் தன் சிந்தையில் நிறுத்தித் தவம் செய்து தியானிக்க, திரு நீலகண்டன் தன் தேவியோடு கோடி சூர்யப் பிரகாசனாகத் தோன்றி அகத்திய மகரிஷிக்குத் தன் திருமணக்கோலத்தைக் காட்டியருளினார்.
'நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடனாவார்' என்ற வாக்கிற்கு ஏற்ப உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் இதயக்கமலத்தையே கோவிலாகக் கொண்டு எழுந்தருளி நித்யவாசம் செய்யும் ஈசன் அன்று முதல் இத்தலத்தில் தம்மை வணங்கும் அடியார்களுக்குப் பேரருள் புரிந்து வருகின்றார்.
அகத்திய மகரிஷிகளின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசனின் திருமேனி இத்தலத்தில் அருள்பாலிப்பதால் இத்தலம் ஸ்ரீ அகத்தீஸ்வரம்' என்றும் பூஜிக்கப்படுகின்றது.
சங்கராபரணி நதியின் புதுப்புனலால் செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து வளம் பெற்ற திருக்காஞ்சி திருத்தலத்தில் தமிழாய்ந்த தவமுனி அகத்தியப் பெருமான் ஸ்ரீ கங்க வராக நதீஸ்வரப் பெருமானைக் குறித்து தவம் செய்வதற்கு ஏதுவாகவே ஊழிப்பெரு வெள்ளத்தில் இருந்து உலகம் காத்த ஸ்ரீவராகப் பெருமானின் திருவருளால் சங்கராபரணி உத்தரவாகினியாக வடக்கு நோக்கித் திரும்பி பின்னர் வங்கக் கடலில் சங்கமிக்கின்றது.
ஸ்ரீராமபிரான் இலங்கைக்குச் செல்லும் போது சங்கராபரணி நதியில் நீராடித்தம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து இத்தல ஈசனை வழிபட்டுள்ளார். மகரிஷி ஸ்ரீ ஓதர் இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்து தம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுள்ளார்.
- நாளை மாலை 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது.
- சந்திர கிரகணம் நிகழும் நாளன்று பெரும்பாலான கோவில்களில் நடை அடைப்பது வழக்கம்.
மாசி மாத பவுணர்மியையொட்டி நாளை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
மாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணி வரையில் உள்ள நிலையில் நாளை மாலை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது.
சந்திர கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்லலாமா? என்பது குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் பி.டி.ரமேஷ் குருக்கள் கூறுகையில், சந்திர கிரணத்தின் போது கிரிவலம் செல்லலாம். கிரகணம் சமயத்தில் கிரிவலம் சென்றால் இருமடங்கு பலன் தரும்.
கர்ப்பிணிகள் மட்டும் கிரகணம் சமயத்தில் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும். கிரகணம் என்பது மனிதனுக்கு மட்டுமே. சாமிக்கு கிடையாது. தேவர்கள் கிரகணம் சமயத்தில் தவம் செய்வார்கள். அந்த சமயத்தில் தவம் செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே நதிகள், தீர்த்த குளங்களின் கரையில் தவம் செய்யலாம் என்றார்.
- செல்வத்தின் தெய்வமான குபேரனிடம் இருக்கும் ஒரு தெய்வீக நிதியாகக் கருதப்படுகிறது.
- சங்க நிதி செல்வத்தை வழங்கினால், பதும நிதி அறிவை வழங்குகிறது.
பதும நிதி குபேரனின் ஒன்பது வகையான செல்வங்களில் (நவ நிதிகள்) முக்கியமான ஒன்றாகும். இந்து புராணங்களின்படி, இது செல்வத்தின் தெய்வமான குபேரனிடம் இருக்கும் ஒரு தெய்வீக நிதியாகக் கருதப்படுகிறது.
பதும நிதியின் சிறப்புகள் இதோ:
அறிவை அருளுதல்: பதும நிதி 'வெண்தாமரை' வடிவில் உருவகப்படுத்தப்படுகிறது. இது பக்தர்களுக்கு வெறும் பணத்தை மட்டும் தராமல், அந்தச் செல்வத்தை நல்வழியில் பயன்படுத்துவதற்கான அறிவையும் (புத்தி) அருளக்கூடியது.
வளம் மற்றும் சந்ததி: இந்த நிதியைப் பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களும், புத்திர பாக்கியம் மற்றும் பேரக்குழந்தைகள் போன்ற குடும்ப வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது.
சத்துவ குணம்: பதும நிதி சத்துவ குணத்தைக் (உண்மை மற்றும் தூய்மை) குறிக்கிறது. அறநெறிகளின்படி (தர்மம்) ஈட்டப்படும் செல்வத்தை இது குறிக்கும்.
சங்க நிதியுடன் தொடர்பு: பொதுவாகக் கோவில்களின் நுழைவாயில்களில் (எ.கா: தஞ்சை பெரிய கோவில்) சங்க நிதி மற்றும் பதும நிதி ஆகிய இருவரும் துவாரபாலகர்கள் போலச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். சங்க நிதி செல்வத்தை வழங்கினால், பதும நிதி அறிவை வழங்குகிறது.
குபேரனின் சேவகர்கள்: குபேரன் இந்த நிதிகளைத் தனித்தனி தேவகணங்களாக மாற்றித் தனது செல்வத்தைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்துகிறார்.
பதும நிதி மற்றும் சங்க நிதி ஆகிய இருவரையும் வணங்குவதன் மூலம் ஒருவருக்கு அழியாத செல்வமும், அதைச் சரியாகப் பயன்படுத்தும் ஞானமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- மகம் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நாளை மாசி மகம் கொண்டாடப்படுகிறது.
- மாசி மகத் தினத்தில் சிவபெருமான் வழிபாட்டுடன் அம்பாள், முருகன், மகாவிஷ்ணு வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது.
நாளை (திங்கட்கிழமை)
மாசி மகம்...
மாசி மாதத்தில் வரும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மாசி மகம். மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படுவது வழக்கம். கோவில்களில் மட்டுமல்ல, நீர் நிலைகளிலும் பக்தர்கள் விழா எடுத்து கொண்டாடும் பண்டிகையாக மாசி மகம் கருதப்படுகிறது.
நாளை காலை 8.17 மணிக்கு தொடங்கி, மறுநாள் 3-ந்தேதி காலை 8.07 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் நாளை மாலை 6.29 மணிக்கு தான் பவுர்ணமி தொடங்குகிறது. 3-ந்தேதி மாலை 5.52 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது.
மகம் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நாளை மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தன்று நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், கடற்கரைகள் என அனைத்து நீர் நிலைகளிலும் தெய்வீக சக்தி அதிகரித்து காணப்படும் நாள் மாசி மகம் ஆகும். இந்த நாளில் பெரும்பாலான கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படும். மாசி மகத்தில் கும்பகோணம் நகரில் உள்ள மகாமகம் குளத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, சிந்து உள்ளிட்ட புண்ணிய நதிகள் எழுந்தருளுகின்றன என்று நம்பப்படுகிறது. இதனால் அன்றைய தினம் மகாமகம் குளத்தில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும் என்றும், முன்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
இதனால் தான் மாசி மகம் 'கடலாடும் நாள்', 'தீர்த்தமாடும் நாள்' என அழைக்கப்படுகிறது. நீர் நிலைகளில் தெய்வீக தன்மை அதிகம் உள்ளதால் தெய்வங்களே தங்களின் ஆற்றலை புதுப்பிக்கும் நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களும் பக்தர்களை ஆசீர்வாதம் செய்வதற்காக பூமிக்கு வரும் நாளாக மாசி மகம் கருதப்படுகிறது.
இதனால் இந்த நாளில் புதிய விஷயங்கள் தொடங்குதல், தர்ம காரியங்கள் செய்வது, விழா எடுத்து கொண்டாடுவது என எதை செய்தாலும் அது தெய்வீக அருளால் பல மடங்கு அதிக பலனை தரும்.
பார்வதி தேவி 'தாட்சாயிணி' என தட்சனின் மகளாக அவதரித்ததும் மாசி மகம் அன்று எனப்படுகிறது. அதனால் இந்த நாளில் அம்பிகைக்கு குங்குமம், சரஸ்வதி தேவிக்கு வாசனை மலர்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டால் மகிழ்ச்சி, வெற்றி, ஞானம் ஆகியவை பெருகும் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.
அதேபோல் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்ததும் மாசி மகத் தினத்தில்தான் எனச் சொல்லப்படுகிறது. எனவே, மாசி மகத் தினத்தில் சிவபெருமான் வழிபாட்டுடன் அம்பாள், முருகன், மகாவிஷ்ணு வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மகத்தில் விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து புனித தீர்த்தங்களில் நீராடி சிவாலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். மதியம் ஒருவேளை சாப்பிட்டு, இரவில் பால், பழம் எடுத்துக்கொள்ளலாம். அன்றைய தினம் தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாராயணம் செய்து இறை சிந்தனையில் ஈடுபடுவது சிறப்பாகும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம், குடும்ப ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தியுடன் புண்ணியம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மாசி மகம் என்பது சதுர்த்தசி பிரதானம், நட்சத்திரப் பிரதானம், பவுர்ணமி பிரதானம் என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் நீராடி வழிபடுவது கூடுதல் பலனை அளிக்கும்.
வருணனின் சாபக்கட்டை சிவபெருமான் அவிழ்த்துக் காத்ததால் அன்று நீராடி, சிவ பெருமானை வணங்கினால் அருமையான பலன்கள் கிட்டும். குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களும் மகம் நட்சத்திரத்துக்கு உரியவர்களும் நீராடி சிவபெருமானை வழிபடுதல் நல்லது. மாசி மகம் அன்று நதிகளில் நீராடுவதை 'பிதுர்மகா நீராடல்' என்றும் கூறுவார்கள். மகம் நட்சத்திரத்துக்கு 'பித்ருதேவா நட்சத்திரம்' என்ற பெயரும் உண்டு. இந்தப் பித்ருதேவா தான் முன்னோர்களுக்கு ஆன்ம சாந்தியை அளிப்பவர்.
முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்குமென்பது நம்பிக்கை. மற்ற தினங்களில் பித்ருக்களை வழிபடாவிட்டாலும், மாசிமகத்தின் போது நீராடி பித்ருக்களை வணங்கினால் முன்னோர்கள் ஆத்ம சாந்தி பெற்று, நமக்கும் நம் சந்ததியினருக்கும் அருள்புரிவார்கள்.
- பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும்.
- அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.
தமிழ் மாதங்களில் 11-வது மாதமாக அமைவது மாசி மாதம் ஆகும். சூரியன் கும்ப ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நொடி, 24 விநாடி கொண்ட கால அளவே இந்த மாதமாகும். புராணங்களின் படி, மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும். ஆனால், மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு வகையிலும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.
மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். முருகப் பெருமானை தகப்பன் சுவாமி என அழைக்கிறோம். அப்படி முருகப் பெருமான், தனது தந்தை சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது மாசி மாத பூசம் நட்சத்திர நாளில் தான்.
அதனால் தான் மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது, உயர்கல்வி தொடங்குதல் போன்றவை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் தெய்வ அருள் பெற்ற நட்சத்திர நாளாகும். அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி பூசம் முருகனின் துணைவி தெய்வானைக்குரியது. அம்மையிடம் வரம் கேட்டால் அப்பனும் சேர்ந்து தருவார் அல்லவா. அந்த வகையில் மாசி பூசமும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்.

மாசி பூசம் நாளான நாளை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விரும்பிய பலன்களை உண்டாக்கும். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு மாசி மாத பூசம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி 34 நிமிடம் 58 நொடிகளில் தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி 34 நிமிடம் 18 நொடிகளில் நிறைவடைகிறது. பூசம் சனியின் ஆதிக்க நட்சத்திரம் என்பதால், திருநள்ளாறு போன்ற சனி தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய தலம் ஆகும். பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
பூசம் என்பதன் வடிவங்கள் மகுடி, புற்று, அம்பு கூடை, முருகனின் வேல், மயில்தோகை கொத்து, பசுவின் மடி. கோமாதா. ஆகவே மேற் கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே நாம் வழிபாடு செய்வதும் தினமும் பார்த்து தியானம் செய்து வருவதும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை, நல்ல சிந்தனையும், யோசிக்கும் திறனையும், ஆற்றலையும் நமக்கு கொடுக்கும்.
மாசி பூசம் நட்சத்திர நாளான நாளை புட்லூரில் இருக்கும் பூங்காவனத்தம்மன், சங்கரன்கோவிலில் இருக்கும் கோமதியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், மலேசியா பத்துமலை முருகன் கோவில், அறுபடை வீடு முருகன் கோவில்கள், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி வழிபடுவது சிறப்பாகும். மாசி பூச வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து உங்களுக்கு வாழ்வில் வெற்றியை பெற உதவும்.
- பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது.
- பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
தமிழ் மாதங்களில் 11-வது மாதமாக அமைவது மாசி மாதம் ஆகும். சூரியன் கும்ப ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நொடி, 24 விநாடி கொண்ட கால அளவே இந்த மாதமாகும். புராணங்களின் படி, மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும். ஆனால், மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு வகையிலும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.

மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். முருகப் பெருமானை தகப்பன் சுவாமி என அழைக்கிறோம். அப்படி முருகப் பெருமான், தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது மாசி மாத பூசம் நட்சத்திர நாளில் தான்.
அதனால் தான் மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது, உயர்கல்வி தொடங்குதல் போன்றவை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் தெய்வ அருள் பெற்ற நட்சத்திர நாளாகும். அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி பூசம் முருகனின் துணைவி தெய்வானைக்குரியது. அம்மையிடம் வரம் கேட்டால் அப்பனும் சேர்ந்து தருவார் அல்லவா. அந்த வகையில் மாசி பூசமும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்.

மாசி பூசம் நாளான நாளை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விரும்பிய பலன்களை உண்டாக்கும். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு மாசி மாத பூசம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி 34 நிமிடம் 58 நொடிகளில் தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி 34 நிமிடம் 18 நொடிகளில் நிறைவடைகிறது. பூசம் சனியின் ஆதிக்க நட்சத்திரம் என்பதால், திருநள்ளாறு போன்ற சனி தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய தலம் ஆகும். பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
பூசம் என்பதன் வடிவங்கள் மகுடி, புற்று, அம்பு கூடை, முருகனின் வேல், மயில்தோகை கொத்து, பசுவின் மடி. கோமாதா. ஆகவே மேற்கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே நாம் வழிபாடு செய்வதும் தினமும் பார்த்து தியானம் செய்து வருவதும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை, நல்ல சிந்தனையும், யோசிக்கும் திறனையும், ஆற்றலையும் நமக்கு கொடுக்கும்.
மாசி பூசம் நட்சத்திர நாளான நாளை புட்லூரில் இருக்கும் பூங்காவனத்தம்மன், சங்கரன் கோவிலில் இருக்கும் கோமதியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், மலேசியா பத்துமலை முருகன் கோவில், அறுபடை வீடு முருகன் கோவில்கள், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி வழிபடுவது சிறப்பாகும். மாசி பூச வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து உங்களுக்கு வாழ்வில் வெற்றியை பெற உதவும்.
- நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.
- வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா 22-ந்தேதி கொடியேற்றத்துடன், கோலாகலமாக தொடங்கியது. விழாவில் தினமும் உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமான கிரி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார். நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது. 3-ந்தேதி கொடியிறக்கம். 4-ந்தேதி தியாகராஜ சாமி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் மாசி பெருவிழா நிறைவுபெறுகிறது.
- மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.
- ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர்.
பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களை விடவும் மிகவும் புண்ணியம் வாய்ந்தது. ஒருவர் வாழ்நாளில் ஒரே ஒருமுறை ஏகாதசி விரதம் கடைபிடித்தாலும் அவரது வாழ்நாளில் மட்டுமின்றி, அடுத்த பிறவியிலும் கூட அவனுக்கு அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை.
மாசி மாதம் வளர்பிறை சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலகி ஏகாதசியாக கொண்டாடுகிறோம். ஆமலகி என்றால் நெல்லிக்கனி என்று அர்த்தம். அதனால் இந்த ஏகாதசி அன்று நாம் நெல்லி மரத்தை வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களும் அழிந்த பிறகு விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்டு பூமியில் விழுந்த ஒரு நீர் துளி தான் நெல்லி மரமாக வளர்ந்தது என்று புராணங்களில் கூறப்படுகிறது.
அதனால் நெல்லி மரத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் பரிபூரணமாக குடியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நெல்லிக்கனியை தானமாக தருவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் கிடைக்கும். அதே போல் நெல்லிக்கனியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அப்படிப்பட்ட நெல்லி மரத்தை இந்த மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளான நாளை(வெள்ளிக்கிழமை) வழிபாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலன்களை தரக் கூடியதாகும். அதே போல் ஒவ்வொரு ஏகாதசியில் பெருமாள் ஒவ்வொரு பொருளிளும் எழுந்தருளி அருள் செய்வதாக ஐதீகம். அப்படி திருமால், நெல்லிக்காய் மரத்தில் எழுந்தருளி வாசம் செய்யும் ஏகாதசி என்பதால் இதற்கு ஆமலகி ஏகாதசி ஆகும். அதனால் தான் இந்த நாளில் நெல்லி மரத்தை பெருமாளாகவும், மகாலட்சுமியாகவும் கருதி பூஜை செய்து, வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.
வீட்டில் நெல்லி மரம் இல்லை என்றால், நெல்லி மரம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். வீட்டில் நெல்லி மரம் இருந்தால் வீட்டிலேயே இந்த பூஜையை செய்து கொள்ளலாம்.
இதற்காக நெல்லி மரத்திற்கு அடியில் கூட்டி சுத்தம் செய்துவிட்டு, நெல்லி மரத்தை சுற்றி மஞ்சள் தண்ணீரை தெளித்து விடவும். பிறகு நெல்லி மரத்திற்கு மஞ்சள் சந்தனம் தடவி, குங்கும பொட்டு வைத்து மரத்திற்கு கீழே அரிசிமாவால் சின்னதாக கோலம் போட வேண்டும்.
கோலப்பொடியை பயன்படுத்தாமல் அரிசி மாவால் கோலம் போட்டுவிட்டு கொஞ்சம் உதிரிபூக்களை எடுத்து அந்த நெல்லி மரத்திற்கு மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.

கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த பூஜையை செய்துவிட்டு அந்த மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் பழம், பிரசாதம் என்ன வேண்டுமென்றாலும் வைத்து பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள் 108 ஒரு ரூபாய் நாணயங்கள்.
ஒரு சிறிய கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அந்த மரத்திற்கு அடியில் வைத்து மனம் உருகி விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியும் வேண்டிக் கொண்டால், உங்களுக்கான அருள் ஆசி உடனடியாக கிடைக்கும். இறுதியாக கணவன் மனைவி இருவரும் தம்பதியராக அந்த மரத்திற்கு நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்து இந்த பூஜையை செய்து பூஜை நிறைவடைந்த உடன் பூஜையில் வைத்த பொருட்களை வீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூ, பழம், பிரசாதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கிண்ணத்தில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.
ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர். ஒரு பசு தானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்ற நிலையில், ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். கடன் தீரவும் பணப்பிரச்சனை தீரவும் பெருமாள் ஆசியுடன் லட்சுமியின் அருளும் நமக்கு சேர்த்தே தான் கிடைக்க வேண்டும். எனவே அவர்களுக்கே உகந்த ஆமலகி ஏகாதசி நாளில் இந்த வழிபாடு செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம்.
குபேரனுக்கே அருள் கொடுத்த நெல்லி
நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை குறித்து புராணங்கள் கூறும் தகவல்கள்...
செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்த போது சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். "நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.
செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமானின் கட்டளை என்பதால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தார். நாள்கள் கடந்து விட்டன. நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன. காய் காய்த்து காய்களெல்லாம் இனித்தன.
குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பியது. சூழ்ச்சி செய்து செல்வம் பறித்தவர்கள் அவற்றை எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன. குபேரனைவிட பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத் தொடங்கினார்கள்.
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம். மீண்டும் சிவபெருமானிடம் சென்றார். "நெல்லி மரங்கள் வளர்ந்ததா? இழந்த செல்வம் கிடைத்ததா?" என்றார் சிவபெருமான். "நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரியத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே" என்றார் குபேரர்.
நீ வைத்தவை நெல்லி மரங்கள் அல்ல லட்சுமிதேவி. உரிய முறையில் அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின் அருளைப் பெற்றாய்" என்றார் சிவபெருமான்.
மேலும் ஒருநாள் தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள் என்கின்றன புராணக்கள்.
இழந்ததை மீட்டு தரும் நெல்லி சாதம் தானம்
பெருமாளின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ஹரிபலம் என்றும் பெயருண்டு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி உணவில் நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது அவசியம். நெல்லிமரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம். நெல்லி மரத்தை தானம் செய்தாலும் பலன்கள் அதிகம் கிடைக்கும். நெல்லி மரத்தை தானம் செய்வதன் மூலம், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
நெல்லிக்காயை தானம் செய்வதால் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பல கிடைக்கும். அதை தானம் செய்வதன் மூலம், நபர் செல்வமும் செழிப்பும் பெறலாம். நெல்லிக்காய் தானம் செய்வதன் மூலம், அறிவு பெற்று மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெல்லிக்காயில் செய்த நெல்லிக்காய் சாதம் பிரசாதமாக தயாரித்து கோவிலுக்குச் சென்று அங்குள்ள எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தானம் செய்யுங்கள். நெல்லி சாதம் தானம் செய்ய செய்ய நீங்கள் இழந்தவை யாவும் திரும்ப அடைவீர்கள். உங்களை ஏமாற்றி அடைந்த சொத்துக்கள் கூட திரும்ப கிடைக்கும். தொலைத்த பொருட்கள் உங்களை தேடி தானாக வந்து சேரும். விட்டு சென்ற உறவுகளும், உங்கள் பிரிவின் துயர் நீக்க உங்களை புரிந்து கொண்டு மீண்டும் உங்களை வந்தடைவார்கள். எளிய இந்த தானத்தை பரிகாரமாக ஆறு வாரங்கள் செய்து பாருங்கள், நல்ல பலன்கள் கிட்டும்.
நெல்லியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நெல்லிக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, அஜீரண பிரச்சனையையும் குறைக்கும். இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகி சருமத்தில் பொலிவு ஏற்படும்.
ஆன்மீக ரீதியாக நெல்லி நீரில் குளிப்பதை கங்கையில் நீராடி காசியில் வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர். நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது அதனால் தான் கோபுர உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள் அதற்கு ஆமலகம் என்று பெயர்.
ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, சஷ்டி, சப்தமி, நவமி திதிகளில் நெல்லிக்கனியை பயன்படுத்தக் கூடாது. நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மை சுற்றி உண்டாக்க கூடியது. அவ்வாறு நேர்மறை எண்ணங்கள் நம்ம சுற்றி அதிகம் ஓடும்போது நாமும் நல்லதை பற்றியே யோசிப்போம். மேலும் நெல்லி மரம் லட்சுமியின் அம்சம் என்பதால் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.
லட்சுமி அருள் தரும் தமிழ் மந்திரம்
நவகிரகங்களில் சுக்கிரனுடைய ஆளுமை பெற்றது நெல்லி. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிமரத்தை வழிபட்டு வந்தால் ஏற்றம் உண்டாகும் என்கின்றன ஜோதிட நூல்கள். பழனியில் உள்ள திருஆவினன்குடி முருகன் ஆலயத்தின் தல மரம் நெல்லி ஆகும். ஆமலகி ஏகாதசி அன்று நெல்லி மரத்துக்கு பூஜை செய்து கீழக்கண்ட லட்சுமி மந்திரத்தை கூற வேண்டும்.
அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே






