என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worship"

    • நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு.
    • வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.

    நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம்.

    வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜயந்தியாகும். சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்ம ஜெயந்தி திங்கட்கிழமையிலும், நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல, ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது.

    இறைவனை வழிபட எந்நேரமும் உகந்ததே என்றாலும், நம் வசதி கருதி, சில நல்-நிகழ்வுகளோடு தொடர்புடைய நாட்களில் அல்லது நேரத்திலாவது வழிபட வேண்டும் என்பதற்காகவே சதுர்த்தியில்/ சஷ்டியில்; செவ்வாய்/வெள்ளியில்; காலை அல்லது மாலையில் என்று வெவ்வேறு சமயத்தில் வெவ்வெறு தெய்வங்களை வழிபடுவது மரபாக உள்ளது.

    அன்றாட நரசிம்மர் வழிபாட்டில், பிரதோஷ வேளை (சூரியன்மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும், சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.

    நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு.

    ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.

    • அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
    • கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானை யுத்தத்திற்கு அழைத்தான்.

    மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். இவை இரண்டும் கொண்டிருப்பதால் விஷ்ணுவை, 'சங்கு சக்கரதாரி' என்றும் அழைப்பார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ததன் பலனாக, இந்த சங்கு - சக்கரத்தைப் பெற்றார். அது பற்றி இங்கே பார்க்கலாம்.

    சங்கு பெற்ற கதை

    அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷமும், அதன் பின்னர் பல்வேறு தெய்வீக பொருட்களும், தெய்வ கன்னிகளும், தேவதைகளும், சில உப தெய்வங்களும் கூட வெளிவந்தனர். அப்படி கடலில் இருந்து தோன்றிய அற்புதப் பொருட்களில் ஒன்றுதான், சங்கு. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், 'பாஞ்ச ஜன்யம்' எனப்பெயர் பெற்றது.

    ஈசனின் திருக்கரத்தில் இருந்த அந்த சங்கினைப் பெற, விஷ்ணு விருப்பம் கொண்டார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, காலம் தவறாமல் சிவ பூஜை செய்தார். பல காலம் செய்த பூஜையின் பலனாக, விஷ்ணுவுக்கு ஈசனால் சங்கு வழங்கப்பட்டது. இப்படி ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், 'திருசங்கை மங்கை' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுக்கு சங்கநாதர், சங்கேசுவரர் ஆகிய பெயர்கள் உள்ளன.

    சக்கரம் பெற்ற கதை

    சமுத்திர ராஜனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவன், சலந்தரன். இவன் தன் செய்கையின் காரணமாக அசுரனாக வளர்ந்தான். தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இந்திரனை ஓடஓட விரட்டிய சலந்தரன், படைப்புக் கடவுளான பிரம்மனையும் தாக்க முற்பட்டான். அவனிடம் இருந்து தப்பிய பிரம்மன், விஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து சலந்தரனுடன் விஷ்ணு போரிட்டார். இருவராலும் ஒருவரை ஒருவர் வெல்லவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை. இருவரும் களைப்படைந்தனர்.

    பின்னொரு நாளில் கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானையும் யுத்தத்திற்கு அழைத்தான். அப்போது ஈசன், "உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் வென்றால் உன்னுடைய போரிடுகிறேன்" என்றார். சலந்தரனும் ஒப்புக்கொண்டான். உடனே சிவபெருமான், தரையில் தன் கால் கட்டை விரலால் ஒரு வட்டம் வரைந்தார். பின்னர் "இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம்" என்றார். சலந்தரனும் அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து, தன் தலை மீது வைத்தான். அப்போது அந்த வட்டம், சக்கரமாக மாறி சுழலத் தொடங்கியது. அது சலந்தரனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது.

    சிவபெருமானால் உருவான அந்த சக்கரம் எதிர்காலத்தில் பயன்படும் என்று கருதிய விஷ்ணு, அதனைப் பெறுவதற்காக பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை பூஜித்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள், ஆயிரம் பூவில் ஒரு பூ குறைந்தது. உடனே விஷ்ணு சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கண்களில் ஒன்றை தோண்டி எடுத்து, அதனை மலராக கருதி, சிவனுக்கு பூஜை செய்தார். அந்த பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த சக்கரத்தை, விஷ்ணுவுக்கு வழங்கினார்.

    • ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் இ-வங்கி சேவை தொடங்கப்பட்டது.
    • பக்தர்கள் இனிமேல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம்

    திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் இ-வங்கி சேவை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவிட்டம் திருநாள் ஆதித்ய வர்மா, கும்மனம் ராஜசேகரன் மற்றும் வங்கி அதிகாரிகள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பக்தர்கள் இனிமேல் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது.
    • இந்த கட்டண உயர்வு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமிமலை சாமிநாதசாமி கோவிலில் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தங்கரத புறப்பாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் சேவா கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். இதுவரை பக்தர்கள் செலுத்தி வந்த சேவா கட்டணங்களை 100 சதவீதம் உயர்த்தி நேற்று முதல் அமலுக்கு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி ரூ. 1500 செலுத்தி செய்யப்பட்ட அபிஷேக கட்டணம் தற்போது ரூ.3000 ஆகவும், சண்முகார்ச்சனை கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ. 6000 ஆகவும், திரிசதை கட்டணம் ரூ.3000-ல் இருந்து ரூ. 6000 ஆகவும், சந்தன காப்பு அலங்காரம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும், சுற்றுக்கோவில் அபிஷேக கட்டணம் ரூ. 300-ல் இருந்து ரூ.600 ஆகவும், தங்கரத புறப்பாடு கட்டணம் ரூ.1201-ல் இருந்து ரூ.2000 ஆகவும், சகஸ்ரநாமம் ரூ.100-ல் இருந்து ரூ.1000 ஆகவும், முத்தங்கி ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், உபநயன கட்டணம் 500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், காது குத்துதல் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.500 ஆகவும், சிறப்பு வழி கட்டணம் ரூ.50-ல் இருந்து விசேஷ காலகட்டங்களில் மட்டும் ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு கடந்த 7 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல்.
    • காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் சதயவிழா குழு தலைவர் து.செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய நாள் அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 ஆவது சதய விழா மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வருகிற 2-ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது.

    தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளு வன் தொடங்கிவைக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது.பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை,

    பரதம், நாதசங்கமம், வயலின் இன்னிசை, கவியரங்கம் உள்ளிட்டநிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.

    இரவு 8.30மணியளவில் நகைச்சுவை சிந்தனைப்பாட்டுபட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    சதய விழா நாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், 7.30 மணிக்குமாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறைத் திருவீதி உலா,காலை 8.30 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷே கம், பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.

    மாலையில் குரலிசை, திருமுறைப் பண்ணிசை அரங்கம், திருநெறி தமிழிசை நடைபெறவுள்ளன.

    இரவு 7 மணியளவில் நடைபெறும் நிறைவு விழாவில் தஞ்சாவூர் பெரிய கோயில் அகத்திய சன்மார்க்க சங்கச் செயலர்
    சிவ. அமிர்தலிங்கம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஓய்வு பெற்ற முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால் ஆகியோருக்கு மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்படவுள்ளது.

    இதையடுத்து, இரவு 8 மணிக்கு தேன்மொழி ராஜேந்திரனின் நையாண்டி மேள நிகழ்ச்சி, ஆந்திரப் பிரதேச கல்பனா குழுவினரின் குச்சிப்புடி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அரண்மனைதேவஸ்தான பரம்பரைஅறங்கா வலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே,

    உதவி ஆணையர் கவிதா, சதய விழாக் குழுத் துணைத் தலைவர் மேத்தா, முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், ஆடிட்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான்மை மக்களுக்கான வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பாக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    • வேளாங்கன்னி பேராலயம் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை.

    இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும்.

    தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.

    • சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு பவனியாக வந்தார்.
    • படித்துறையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனார் கால்வாயில் நேற்று மாலையில் ஆராட்டு விழா நடந்தது. இதற்காக மருங்கூர் கோவிலில் இருந்து சுப்பிரமணியசாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் மயிலாடிக்கு பவனியாக வந்தார். பின்னர் அங்குள்ள ஆராட்டு மடம் அருகில் உள்ள படித்துறையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புத்தனார் கால்வாயில் சுப்பிரமணியசாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.

    விழாவில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெசிம், மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன், மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, துணைத் தலைவர் ராஜு, செயற்குழு உறுப்பினர் சுதாகர், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பெருமாள், மயிலாடி பேரூராட்சி துணைத் தலைவர் சாய்ராம், பேரூர் பா.ஜனதா தலைவர் கவுன்சிலர் பாபு, மருங்கூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன், மயிலாடி பேரூர் அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், பேரூர் மாணவரணி செயலாளர் மணிகண்டன் அ.தி.மு.க. பிரமுகர் செல்லம் பிள்ளை, தொழில் அதிபர் முருகேசன், காங்கிரஸ் பிரமுகர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா ஆகியோர் கண்காணிப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆராட்டு விழா முடிந்ததும் மயிலாடியில் உள்ள முக்கிய வீதிகளில் சுப்பிரமணியசாமி வலம் வந்த பின்பு மீண்டும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கயிலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில் அமைந்துள்ளதால் வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றது.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டது.மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவி சோழமாதேவி தமது மன்னனின் வெற்றிகளுக்காகவும் தீர்க்காயுளுக்காகவும் வேண்டி மேற்கொண்ட ஆன்மீகச் சேவைப் பிரார்த்தனையின் பொருட்டு திருவையாறு ஐயாறப்பர் கோவில் வடக்குப் பிரகாரத்தில் கயிலாச நாதர் கோயிலைக் கட்டி, குடமுழுக்கு முதலிய திருப்பணிகளையும் செய்து வைத்துள்ளார். மேலும், பொன், பொருள் மற்றும் நிலம் முதலிய நிவந்தங்களையும் அளித்தார்.

    இதன்பொருட்டு தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஐயாறப்பர் கோயில் வடகயிலாயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    சதயவிழாவை முன்னிட்டு வடகயிலை கயிலாச நாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    சிவனடியார் பழனிநாதன் தலைமையிலான வடகயிலைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதல் வழிபாடும், திருமுறைகள் பாடிய அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் ஞானசம்மந்தர் ஆகிய நான்கு சைவசமயக் குரவர்களின் திருவுருவப்பட வீதிஉலா நடந்தது.

    அப்பர் காட்சி கண்ட தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில்அ மைந்துள்ளதால் இக் கயிலாசநாதர் கோயில் மற்றும் நந்தவனப் பகுதி வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வடகயிலைச் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தார்கள்.

    • தக்கலை அருகில் காட்டாலை என்னுமிடத்தில் காட்டாளம்மன் கோவில் உள்ளது.
    • நாளை கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம் நடக்கிறது.

    தக்கலை அருகில் உள்ள குமாரபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் காட்டாலை என்னுமிடத்தில் காட்டாளம்மன் கோவில் உள்ளது. புராண காலத்தில் மகாபாரத போரில் கவுரவர் படையை வெல்வதற்காக சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெறுவதற்காக அர்ஜுனன் தவம் செய்ததாகவும், அப்போது காட்டாளன், காட்டாளத்தி வேடத்தில் வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது.

    காட்டாலை பகுதியில் உள்ள காட்டாலை சிவன் கோவில் அருகிலேயே காட்டாளம்மன் கோவிலும் உள்ளது, இங்கு காட்டாளம்மன், கண்டன் சாஸ்தா, நாக கணங்களுடன் வலம்புரி, இடம்புரி பிள்ளையார் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்,

    தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் 41-வது புனர்பிரதிஷ்டை விழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 5 மணிக்கு சுத்திகலச பூஜை, இரவு தீபாராதனை, நள்ளிரவு பலிபூஜையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம், கலசபூஜை, உஷபூஜை, தீபாராதனை, அபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு, தொடர்ந்து நவ நாகங்களுக்கு பால் வைத்து வழிபாடு, நாகரூட்டு, மதியம் உச்சி கால பூஜை, தீபாராதனை, அன்னதானம் ஆகியவையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சரஸ்வதி அம்மா, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், அய்யப்பன் பிள்ளை, ராமசந்திரன், ரவிச்சந்திரன், ஜனார்தனன், நீலகண்ட பிள்ளை, அய்யப்பன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

    • சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தால் மூடி அலங்கரித்து வழிபாடு.
    • அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும்.

    நாகப்பட்டினம்:

    400 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து வந்து ஜீவ சமாதி நிலையில் இருந்து நாகூரில் அருள்பாலித்து வரும் தமிழ் புலவராம் ஸ்ரீ காங்கேயர் சித்தர் ஜீவ பீடத்தில் ஐப்பசி முழுநிலவு தின வேள்வி மற்றும் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்க அன்னாபிஷேகம் மாற்றும் வேள்வியாகம் நடைபெற்றது கல்லினுள் இருக்கும் தேரை முதல் கருப்பையில் இருக்கும் உயிர் வரை என அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் சிவபெருமான்.

    அதைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த நிகழ்வின் போது சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்கரித்து வழிபாடு செய்யப்படும்.

    அறிவியலும் ஆன்மிகமும் சந்திரன் இந்த ஐப்பசி பெளர்ணமி தினத்தில் பிரகாசிப்பார் என ஆன்மிகம் உணர்த்தியது.

    அதே போல அறிவியலும் பூமிக்கு அருகே சந்திரன் வருவதால் மிக பிரகாசமாக தனது முழு ஒளியை பூமிக்கு வீசுவதாக வானவியல் அறிவியல் தெரிவிக்கிறது ஐப்பசி பெளர்ணமி அன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவ பீடங்களின் வேள்விகளில் கலந்துகொள்வது, அதில் பங்கெடுப்பது என்பது மிக மிக சிறப்பான பலன் தரக்கூடிய செயல் ஆகும் சோறு கண்ட இடம் சொர்க்கம் அன்னபிஷேகத்தை கண்டவர்களுக்கு தான் சொர்க்கம் கிடைக்கும் என்பதை உணர்த்தும் வகையில் தான், 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்ற பழமொழி கூறப்படுகிறது.

    அன்னாபிஷேகத்தை கண்டால் தொழில், வியாபார பிரச்னைகள் தீர்ந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வில் இல்லை என்று சொல்லாத அளவிற்கு உணவு எப்போதும் கிடைக்கும்.நிதி நிலை எப்போதும் சீராக இருக்கும்.அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம்

    உண்டு என்பது ஐதீகம்.சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தார்கள் ஏற்பாட்டினை ஸ்ரீ காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அறக்கட்டளையை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், அனிதா பழனிவேல், சுதாகர், குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    • பிரம–புரீஸ்வரர் கோவிலுக்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார்.
    • சுவாமி அம்பாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமரக்கோயில் அமைந்துள்ளது

    இக்கோயிலில் வள்ளி தேவசேனா உடனாகிய குமரப் பெருமான் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    இக்கோயிலில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் திருச்செந்தூர் சென்ற போது மாலைப் பொழுது முடிந்து இருள் வந்துவிட்டபடியால் தனக்கு துணையாக வீரபாகு முதலிய ஒன்று துணை வரும் தங்குவதற்கு இந்திரனை அழைத்து ஒரு கோயில் அமைக்க கூறியதாகவும், மறுநாள் சூரிய உதயம் ஆனதும் குமரக் கடவுள் தாம் வீற்றிந்தருளிய ஆலயத்தில் எதிரே தடாகம் அமைக்க செய்து கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களை அதில் வரவித்து சிவபெருமானுக்கு திருமஞ்சனம் எடுத்துக் கொண்டு இந்திராதி தேவர்–களோடு பிரம–புரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருமானை வழிபாடு செய்தார் என்பதும் குமரனே கோயில் கட்ட ஆணையிட்டு கோயிலில் தானே தங்கியதால் இக்கோயில் குமரக்–கோட்டம் என கந்த புராணம் கூறுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் கடந்த 36 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது அப்போது சுவாமி அம்பாளுக்கு ஐதீக முறைப்படி சிவாச்சாரி–யார்களால் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது கோயில் கட்டளை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் மயிலாடுதுறை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் மார்கோனி, கோயில் நிர்வாகி செந்தில், கவுன்சிலர்கள் ஜெயந்தி பாபு, நித்யாபாலமுருகன், தமிழக திருக்கோயில் சொத்து பாதுகாப்பு அமைப்பு நிர்வாகி பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.

    ×