என் மலர்

    நீங்கள் தேடியது "temple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    20-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 21-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்னபட்சி மற்றும் காளை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    28-ந் தேதி வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சியும் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை திருத்தேரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை தீமிதி விழாவும், நாளை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் காலை கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.

    2 மற்றும் 3-ந் தேதிகளில் மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆதி ரத்தினேசுவரர் கோவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது.
    • 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் உள்ள ராமநாதபுர சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேக வல்லி அம்மன் சமேத ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் கோவில் பாண்டி 14-சிவதலங்களில் 8-வது தலமாக கருதப்படுகிறது.

    வருண பகவானின் மகன் வாருணி என்பவர் துர்வாச முனிவரால் சாபத்துக்கு ள்ளாகி யானையின் உடலும் ஆட்டின் தலையும் பெற்று, இங்கு இறைவனை பூஜித்த பின் அந்த சாபம் விலகிய தால் ஆடானை என திரு சேர்ந்து திருவாடானை என பெயர் பெற்றது.

    பாடல் பெற்ற தலமான இந்த ஊருக்கு பாரிஜாத வனம், வன்னி வனம், குருக்கத்தி வனம், வில்வ வனம், முக்திபுரம், ஆதிரத்தினேசுவரம், ஆடானை, மார்க்கண்டேய புரம், அகத்தீஸ்வரம், பதுமபுரம், கோமத்தீஸ்வரம், விஜயேச்சுரம் என 12 பெயர்கள் உள்ளது.

    இங்கு வைகாசி விசாகத் திருவிழா கடந்த வைகாசி 10-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ந் திருவிழாவான இன்று ராமநாதபுர மன்னரின் மண்டப் படியாக வெள்ளி ரிஷப வாகனமும், திருஞான சம்பந்தரின் திருமுலைப் பால் உற்சவமும் தபசு மண்டபத்தில் நடைபெறு கிறது.

    இதையொட்டி இன்று விநாயகர் எலி வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதிஉலா வந்தனர். வைகாசி 18-ந்தேதி தேரோட்டமும் 19-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முத்தாரம்மன் கோவிலின் செயலாளராக ஜெயபாரத் என்பவர் இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயலாளராக அதே ஊரில் பண்ணைவிளை தெருவை சேர்ந்த ஜெயபாரத்(வயது 49) என்பவர் இருந்து வருகிறார்.

    பூட்டு உடைப்பு

    கடந்த 25-ந்தேதி இவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றார். மீண்டும் நேற்று சென்று பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகை திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாரம்மன் கோவிலில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
    • கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் வெள்ளி க்கிழமையில், சமயபுரத்தி லிருந்து மாரியம்மன் மல்லி கைப்பூ, கைவளையலுக்கு ஆசைப்பட்டு ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும் இங்கு வந்து தங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.

    வைகாசி திருவிழாவை யொட்டி நேற்று அரசலாற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து திருநறையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலில் ஆகாச மாரியம்மன் அலங்கரி க்கப்பட்டு அங்கிருந்து நள்ளிரவில் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மனை எழுந்தருள செய்து மேளதா ளங்கள் முழங்க திருநறையூர், நாச்சியார்கோவில் கிராமங்களில் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வந்தார். தொடர்ந்து, இன்று காலை அம்மன் பல்லக்கு கோவிலை வந்தடைந்தது.

    பின்னர், பல்லக்கில் இருந்த ஆகாச மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஆடி அசைந்து கோவிலுக்குள் கொண்டு சென்றனர். அப்போது கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வரவேற்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து, லட்சுமி, சரஸ்வதி, மதனகோபாலன், மகிஷாசுரமர்த்தினி, சேஷசயன, ராஜராஜேஸ்வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி பெரிய திருவிழாவும், 7-ந்தேதி சிறிய தேரில் அம்மன் வீதி உலாவாக வந்து பின்னர் சமயபுரத்திற்கு அம்மன் எழுந்தருளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன.
    • திருமணத்தில் தடை ஏற்படுபவர்கள் குரு பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக் கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ் டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்ப தாகும்.

    இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார்.

    இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத் தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவ தாகச் சொன்னான். அதன்படி சுக்ராச் சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச் சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக் கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள மேலசின்னணம்பட்டி கிராமத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • 14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வெங்கமேடு பெரியார் நகரில் உள்ள சுயம்பு வெள்ளைக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 13-ந் தேதி இரவு கிராம சாந்தி மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    14-ந் தேதி கரகம் பாளித்தலும், 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், தீபா ராதனையும் நடைபெற்றது.

    கடந்த 21-ந் தேதி மறு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி மாலை அம்ம னுக்கு வடி சோறு படைத்தல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பூத்தட்டு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூ தட்டுகளுடன் ஊர்வல மாக கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. நேற்று முன்தினம் 23-ந் காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடம் எடுத்து வந்தனர். மாலை பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தலும், இரவு பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபேற்றது. திருவிழா விற்கான ஏற்பாடுகளை பெரியார் நகர் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில், திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கப்பட்டி அருகே கல்மேட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.
    • இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து, தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கப்பட்டி அருகே கல்மேட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது.

    இக்கோவிலின் வரவு-செலவு கணக்குகளை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இதுகுறித்து மறு உத்தரவு வரும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர்.

    கோவிலுக்கு பூட்டு

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு தரப்பினர் திடீரென அய்யனாரப்பன் கோவிலுக்குள் நுழைந்து, தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயிலுக்கு பூட்டு போட்டனர்.

    தர்ணா போராட்டம்

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்து முன்னணி இயக்கத்தைச் சார்ந்த மாவட்ட நிர்வாகி பழனிசாமி தலைமையிலான திரளான பக்தர்கள் சம்பந்தப்பட்ட கோவில் முன் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடன்பாடு

    அவர்கள் இரவு பகலாக ஆன்மீக பாடல்களை பாடியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, நேற்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்றப்பட்டது.

    இரு தரப்பினரும் வெவ்வேறு தேதிகளில் சம்பந்தப்பட்ட கோவிலில் தவ பூஜை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டதன் பேரில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலின் நுழைவாயில் இருந்த பூட்டினை அகற்றினார். இதனை அடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து சிறப்பு வழிபாடு செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டார்மங்கலத்தில் வழிவிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள வழிவிடும் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறைஅமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவி லின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பரா மரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிதாக புனர மைக்கப்பட்ட இக்கோவிலின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினர்களும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த

    22-ம் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பி னருக்கிடையே சமாதான பேச்சு வார்த்தை நடை பெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் இதுகுறித்து சங்க கிரி வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் சமா தான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

    பாதுகாப்பு கருதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினார் திடீரென அயனாரப்பன் கோவி லுக்குள் நுழைந்து தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    இதற்கு மற்றொரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறை அலு வலர்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயி லுக்கு பூட்டு போட்டனர். இன்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் சமா தான பேச்சு வார்த்தைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததிருந்தனர்.

    இதனை அடுத்து சம்மந்தப்பட்ட ஒரு ஒரு தரப்பினர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் திரண்டு வந்து அய்யனா ரப்பன் கோவில் பிரதான வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்ப பகுதியில் விடிய விடிய பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் அப்பகுதியில் சாமியான பந்தல் அமைத்து திரளான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கை யிலான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் பகுதி யில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print