என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple"

    • எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
    • நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று கோவையில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதன்பின் பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்?. இதை சதிச் செயலாக மக்கள் பார்க்கின்றனர்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கோயில் நிதியில் அரசு கல்லூரிகள் தொடங்கியதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    • பக்தர்கள் தேரை இழுத்தபோது சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.
    • அருகில் இருந்த தேர் மீது சாய்ந்து நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு.

    பெரம்பலூர் மாவட்டம் தேனூரில் உள்ள கருப்பசாமி கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள் திரண்டிருந்தனர். போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவர் தேரோட்டத்தை தொடங்கி வைத்ததும், பக்தர்கள் தேரை இழுக்க முயன்றனர். அப்போது ஒரு சக்கரத்தின் அச்சு முறிந்து தேர் சாய்ந்தது.

    இதனால் தேர் அருகில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் மற்றும் பக்தர்கள் பீதி அடைந்தனர். சாய்ந்த தேர் அருகில் உள்ள தேர் மீது மோதி அப்படியோ நின்றதால் தரையில் விழவில்லை. தரையில் விழுந்திருந்தால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    அருகில் உள்ள தேரில் சாய்ந்து நின்றதும் தேர் அருகில் இருந்து போலீசார் மற்றும் பக்தர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

    • பள்ளி பையுடன் சிறுமியை குழி தோண்டி புதைக்க நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.
    • குற்றவாளிகள் தர்மஸ்தலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள்.

    கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற கோவில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தில் முன்பு துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஒரு தலித் நபர், 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோரின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக தட்சிண கன்னடா காவல்துறையிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கோரியுள்ள அந்த நபர், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மனசாட்சி உறுத்தலால் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஜூலை 3 அன்று தர்மஸ்தலா காவல் நிலையத்தில் தட்சிண கன்னடா எஸ்.பி. அருண் கே தெரிவித்தார். நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த நபர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் எஸ்.பி. கூறினார்.

    மேலும் புகார் அளித்தவர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு கோரியுள்ளார். அவர் தனது புகாருடன், சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் எச்சங்களின் புகைப்படங்களையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.

    அவரது புகாரில், "நான் புதைத்த உடல்களின் எச்சங்களை தோண்டி எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தோம்.

    நாங்களும் கொல்லப்படுவோம் என்ற பயம் தினமும் எங்களை வாட்டுகிறது. நான் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன், 1995 முதல் டிசம்பர் 2014 வரை தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்தேன். நான் நேத்ராவதி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தம் செய்யும் வேலைகளைச் செய்தேன்.

    ஆரம்பத்தில் நான் பல உடல்களைப் பார்த்தேன், அவர்கள் தற்கொலை அல்லது தற்செயலான நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கருதினேன். பெரும்பாலான உடல்கள் பெண்களின் உடல்கள், அவற்றில் பெரும்பாலானவை ஆடைகள் இல்லாமல் இருந்தன. சில உடல்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலின் அறிகுறிகள், கழுத்தை நெரித்தல் மற்றும் பிற காயங்கள் இருந்தன.

    1998 இல், எனது மேற்பார்வையாளர் உடல்களை ரகசியமாக அப்புறப்படுத்தும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் மறுத்து, காவல்துறையிடம் புகார் அளிப்பேன் என்று சொன்னபோது, நான் கொடூரமாக தாக்கப்பட்டேன். என்னையும் என் குடும்பத்தைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். 

    எனது மேற்பார்வையாளர் உடல்கள் கிடந்த குறிப்பிட்ட இடங்களுக்கு என்னை அழைப்பார், அவற்றில் பலவும் சிறுமிகளின் உடல்கள். இதில் ஒரு சம்பவம் என்னை என்றென்றும் துரத்துகிறது. 2010 இல், கல்லேரியில் ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமி இறந்து கிடந்தார். அவர் பள்ளி சீருடை அணிந்திருந்தார், அவரது பாவாடை மற்றும் உள்ளாடைகள் காணாமல் போயிருந்தன, மேலும் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. அவரது பள்ளி பையுடன் அவரை புதைக்க ஒரு குழி தோண்டும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

    மற்றொரு சம்பவத்தில், 20 வயது பெண்ணின் முகம் ஆசிட்டால் எரிக்கப்பட்டிருந்தது, அவரது உடல் செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது, மேலும் அவரது உடலை எரிக்கும்படி நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அந்த கொலைகளுக்கு நான் ஒரு சாட்சியாக இருந்தேன். நான் பல உடல்களை புதைக்கவும் சிலவற்றை எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

    2014 இல், எனது குடும்பத்தில் ஒரு சிறுமி எனது மேற்பார்வையாளருக்குத் தெரிந்த ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். நாங்கள் தப்பிச் செல்ல முடிவு செய்தோம், நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவிலிருந்து ஓடிவிட்டேன். அப்போதிருந்து நாங்கள் அண்டை மாநிலத்தில் எங்கள் அடையாளங்களை மறைத்து, வீடுகளை மாற்றி வாழ்ந்து வருகிறோம்.

    பாதிக்கப்பட்டவர்களையும், அந்தக் கொலைகளுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளையும் வெளிப்படுத்துவதே எனது நோக்கம். சமீபத்தில் நான் தர்மஸ்தலாவுக்குச் சென்று ரகசியமாக ஒரு உடலின் எச்சங்களை தோண்டி எடுத்தேன். படங்கள் எடுக்கப்பட்டு காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

    குற்றவாளிகள் தர்மஸ்தலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். உடல்களைப் புதைக்கும்படி என்னை மிரட்டி, சித்திரவதை செய்வார்கள். குற்றவாளிகள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், தங்களை எதிர்ப்பவர்களை அவர்கள் அளித்துவிடுவார்கள்.

    எனக்கு பாதுகாப்பு கிடைத்தவுடன் அவர்களின் பெயர்களையும், அவர்களின் பங்களிப்புகளையும் வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன். மேலும் உண்மையை நிலைநாட்ட பாலிடெக்ட் அல்லது வேறு எந்த சோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். புதைக்கப்பட்ட உடல்கள் மரியாதைக்குரிய இறுதி சடங்குகளைப் பெற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே உடல்களை தோண்டி எடுக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். 

    • உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது.
    • 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    மதுரை:

    மதுரை வந்த தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    மதுரை சங்கம் வைத்து தமிழை வளர்த்த இடம். அதனால் எங்களை சங்கிகள் என்கின்றனர். அது குறித்து கவலைப்படவில்லை. சங்கம் வைத்த இடத்தில் சங்கிகளின் சக்தி அதிகமாகிறது. மதுரையில் இன்று (ஜூன் 8) பா.ஜ.க, நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது உற்சாகம் அளிக்கிறது. அவர் புது நிர்வாகிகளுக்கு புது ரத்தம் பாய்ச்ச உள்ளார். அவரது வருகை தி.மு.க., கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது.

    உண்மையான தி.மு.க. வினருக்கு பக்தி இருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் என அனைவருமே கடவுளை ரகசியமாக வழிபடுகின்றனர். தமிழகத்தில் 3000 கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களில் ஒன்றிலாவது முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றாரா. கோவிலில் உள்ள தீபத்திற்கும் 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறீர்கள். இதை கடவுள்கூட மன்னிக்க மாட்டார்.

    திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இவ்வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையால் எந்த ஒரு கண்டன போஸ்டரும் ஒட்ட முடியவில்லை. கண்ணகியால் நீதி கிடைத்த மண் மதுரை. 2026-ல் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ராயபுரம்:

    பாரிமுனை தம்பு செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வான மிதுன லக்னத்தில் பூந்தேர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    தேர்த் திருவிழாவை முன்னிட்டு காளிதாஸ் சிவாச்சாரியார் சாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்து இருந்தார். அதை தொடர்ந்து காலை 7.05 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் இ.எம்.எஸ்.மோகன், அறங்காவலர்கள் எஸ்.சர்வேஸ்வரன், வி.சீனிவாசன், இரா.இராஜேந்திர குமார், ஜெ.ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக காளிகாம்பாள் கோவிலில் இருந்து 5 வண்ண குடைகளுடன் புறப்பட்ட தேர், 108 கைலாய வாத்தியம், தாரை தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க, 4 மாட வீதிகளை சுற்றி வந்தது.

    பின்னர், மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (ஞாயிற்று கிழமை) மாலை 7 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க கின் =னித்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • புனித தலமான பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோயில் உள்ளது.
    • குரங்கு பணப்பையை பறித்தவுடன், உள்ளூர்வாசிகள் அதைப் பிடிக்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை.

    உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலமான பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோயில் உள்ளது.

    உ.பி.யின் அலிகாரைச் சேர்ந்த அபிஷேக் அகர்வால் தனது குடும்பத்தினருடன் தாக்கூர் பாங்கே பிஹாரி கோயிலுக்கு நேற்று சென்றிருந்தார்.

    தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று, அபிஷேக் அகர்வாலின் மனைவியின் கையிலிருந்து ஒரு குரங்கு பணப்பையை பறித்துச் சென்றது. பணப்பையில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது.

    குரங்கு பணப்பையை பறித்தவுடன், உள்ளூர்வாசிகள் அதைப் பிடிக்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சுற்றியுள்ள பகுதிகளை தேடினர். சில மணிநேர தேடுதலுக்குப் பிறகு, பணப்பை அருகிலுள்ள புதரில் கண்டெடுக்கப்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக, பணப்பையில் இருந்த அனைத்து நகைகளும் பாதுகாப்பாக இருந்தன. போலீசார் அதை அபிஷேக் அகர்வாலின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

    பிருந்தாவன் பகுதியில் பக்தர்கள் பொருட்களை குரங்குகள் பறிப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்ரீ ரங்கநாத் ஜி மந்திரில் ஒரு குரங்கு பக்தரின் ஐபோனை பறித்தது குறிப்பிடத்தக்கது.

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சூரிய சோம கும்ப பூஜை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பூந்தமல்லி:

    புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருவேற்காட்டில் சிவன் கோவில் அருகே ஸ்ரீ ஆதி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மே 30-ந்தேதி கோவிலில் பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 1-ந்தேதி விநாயகர் வழிபாடு, கிராம தேவதை பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து கடந்த 3-ந்தேதி விக்னேஸ் வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, கஜ பூஜை, லட்சுமி ஹோமம், பிரம்மச் சாரிய பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணா ஆகூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. சூரிய சோம கும்ப பூஜை ஹோமம், பவனாபி ஷேகம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலமூர்த்திக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிலையில் நான்காம் கால யாக பூஜை, சிறப்பு ஹோமம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணியளவில் வேத சிவாகம வித்யாபூஷனம் ஸ்தானிகர் சந்திரசேகர சிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கோபுர கலசங்கள் மற்றும் விமான கும்பாபிஷேகம், மூலவர் ஆதி கருமாரியம்மன், மற்றும் பரிவார மூர்த்திகள் விநாயகர், பாலமுருகன், பால சாஸ்தா, மகா கும்பாபி ஷேகமும், மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

    அப்போது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், திருவேற்காடு நகர மன்ற துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், டி.ஜெயக்குமார், மற்றும் பல்வேறு மடங்கள், ஆன்மீக ஆதீனங்களைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள் மற்றும் திருவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சாண்டி பி.செல்வராஜ், ஏ.நாராயணன், பி.கோவிந்தசாமி, கே.சந்துரு, ஏ.ஆர். பாலசுப்ரமணியன், டி.பாபுசேகர், இரா.சகா தேவன், ஏ.கே.சுப்பிரமணிய முதலியார், மீனாட்சி அம்மாள் குடும்பத்தினர், அரிமா ஆன்மீக அன்பர்கள் குழு, ஏ.கே.எஸ்.பிரதர்ஸ் குடும்பத்தினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகே உள்ள பெரிய புளியம்பட்டி கிராமத்தில் ஊர் திருவிழா நடந்தது. நேற்று சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து சாமிகள் டிராக்டரில் ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது பெரிய புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே டிராக்டர் தீ பிடித்து எறிந்தது. இதனை தருமபுரி மாவட்டம், வனத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்த தீயை அணைக்க முயற்சி செய்தார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து சொக்கலிங்கம் தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மின் கம்பி தாழ்வாக செல்கிறது என்று கிராம மக்கள் புகார் அளித்த நிலையில் மின்சார துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த மின் விபத்து ஏற்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் செல்வ விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கணபதி ஹோமம், கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது.

    நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் காலயாக பூஜை, மகா பூர்ணா ஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    திருப்பூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

    விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று (19-ந் தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவுல் தர்மகர்த்தாக்கள், நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திருவையாறு:

    திருவையாறு அய்யனார் கோவில் தெருவில் உள்ள ஆகாச மாரியம்மன் கோவிலில் 5 நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதல் நாளன்று காப்பு கட்டுதலும், 2-வது நாளில் பூச்சாரிதல் விழாவும் நடைபெற்றது. 3-வது நாளான நேற்று பால்குட விழா விமரிசையாக நடந்தது.

    முன்னதாக ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடத்தை தலையில் சுமந்தும், தீச்சட்டியை கையில் ஏந்தியவாறு திருவையாறு காவேரி ஆற்றில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர், மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் தெருவாசிகள் செய்திருந்தனர்.

    • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது
    • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், உலக அழகி போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தெலுங்கானா மாநில பெண்கள் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த சம்பவத்திற்கு பிஆர்.எஸ் கட்சி தலைவர் நிரஞ்சன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "உலக அழகி போட்டியாளர்கள் கால்களை கழுவ வைத்தது கண்டனத்துக்கு உரியது. இது தெலுங்கானா மாநில மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். இந்த நிகழ்விற்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரஸ் அரசின் தவறின் உச்சக்கட்டம்.இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தெலுங்கானா சமூகத்திற்கும், கண்ணியத்திற்கும் அவமானம்.

    விவசாயிகள் பயிர் இழப்பீடு ,நிலுவைத் தொகை கேட்டு போராடி வரும் நிலையில் ஆடம்பரமான அழகி போட்டி மாநிலத்திற்கு தேவையா? நாட்டின் எல்லையில் போர் பதற்றம் மறுபுறம் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையில் சார்மினாரில் கடைகளை மூடி அழகி போட்டியாளர்கள் கேட் வாக் நடத்தியது மிகப்பெரிய தவறு.

    தெலுங்கானா பெண்களை அவமானப்படுத்த வைப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. இந்த அழகி போட்டியால் தெலுங்கானாவுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை" என்று தெரிவித்தார்.

    • ஐதராபாத்தில் 72 ஆவது உலக அழகிப் போட்டி நடைபெற்று வருகிறது.
    • இந்தப் போட்டியில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்றுள்ளார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு உலக அழகிப் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள ராமப்பா கோவிலுக்கு இந்திய கலாச்சார உடையான புடவை அணிந்து மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். போட்டியாளர்களுக்கு கோவிலின் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ×