search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple"

    • கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.
    • வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.

    நம்பியூர் அடுத்துள்ள பருத்திக்காட்டு பாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு சென்று பார்த்த போது, மரத்தின் உயரமான கிளையில் இருந்து அதிக அளவில் பால் வடிவது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

    விநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள கிராம மக்களும் வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.

    • போஜ்சாலா வளாகத்தில் போஜிஸாலா கோவிலும் அதன் அருகில் கமல் மவுலா மசூதியும் அருகருகில் உள்ளது.
    • கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது.

    மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில் உள்ள வாக்தேவி சரஸ்வதி கோவில் மற்றும் கமல் மவுலா மசூதியும் ஒரே இடத்தில உள்ளது. மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டடமே இருந்ததாக சிலர் சர்ச்சையை கிளப்பிய நிலையில் போஜ்சாலா வளாகத்தை ஆய்வு செய்ய கடந்த மார்ச் மாதம் அம்மாநில உயர்நநீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்துக்கு [ASI] உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 3 மாதங்களாக நடந்து வந்த ஆராய்ச்சியின் முடிவுகளை ASI உயர்நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், 'போஜ்சாலாவின் உள்ள கமல் மவுலா மசூதிக் கட்டடமானது ஏற்கனவே அங்கிருந்த கோவில் கட்டடத்தின் எச்சங்களிலின் மீது கட்டப்பட்டுள்ளது.

    மசூதியின் தரைப்பகுதி ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளின் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிதிலமடைந்த கோவிலின் தூண்கள் மசூதி கட்டடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.  அந்த தூண்களில் இந்து கடவுளர்களின் சிதைந்த சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    அதுபோன்ற மொத்தம் 94 சிற்பங்கள் அங்கு தென்படுகிறது என்று தனது அறிக்கையில் ASI தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை வரும் ஜூலை 22 ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன்.
    • பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

    திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயியான அவர், துபாயில் வேலை பார்த்து வந்த அவர் சொந்த ஊர் திரும்பியதும் விவசாயத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட அவர் அந்த திட்டங்களால் பயன் அடைந்தார்.

    இதனால் பிரதமர் மோடி மீதான அதிக ஈடுபாட்டின் காரணமாக அவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மோடிக்கு சிலை அமைத்து கோவில் எழுப்பினார். ரூ.1.25 லட்சம் செலவு செய்து 6 மாதமாக கோவில் திருப்பணியில் ஈடுபட்டார்.

    இவர் கட்டியுள்ள கோவிலில் பிரதமர் மோடிக்கு அழகிய மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் சாமி படங்களுடன், காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, மோடி, அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்களையும் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு விவசாயத்தில் விளைச்சல் அதிகரித்தால் சிறப்பு வழிபாடு செய்வது என்றும்,பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆகவேண்டும் எனவும் வேண்டுதல் வைத்தார்.

    அவரது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து மோடிக்கு தான் கட்டிய கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் திட்டங்களால் பயன் அடைந்த நான் அவர் மீதான அதிக அன்பின் காரணமாக அவருக்கு கோவில் கட்டியுள்ளேன். இப்போது தேங்காய், மாங்காய், மரவள்ளி போன் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைப்பதால், மோடியை கடவுளாக நினைத்து தினமும் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு விவசாய சாகுபடியிலும் கிடைத்த லாபத்தில் 10 ஆயிரம் ரூபாய் வீதம் எடுத்து வைத்து, 5 ஆண்டுகளாக கணிசமான தொகை வைத்துள்ளேன். அவர் 3-வது முறை பிரதமாக வேண்டும், என்று பழநி முருகனிடம் வேண்டுதல் வைத்தேன்.

    அந்த வேண்டுதல் நிறைவேறி உள்ளதால், பழனியில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளேன். இது தவிர, என் வயலில் விளைந்த 10 மூட்டை நெல்லில், கிடாவெட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்து உள்ளேன்.

    பிரதமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. எனக்கு பிறகும், நிலத்தில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்காக நிலத்தை எழுதி பத்திரம் போட்டு வைத்துள்ளேன். பிரதமர் நீடுழீ வாழ வேண்டும். 2030-ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்து விவசாயிகளுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழையவலம் கிராமத்தில் சிவன்கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்தக்குளத்திற்கு பொதுமக்கள் சென்றனர்.

    அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் இது குறித்து வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சிவன் கோவில் பெரிய குளத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கிடந்த அடையாளம் தெரியாத மனித மண்டை ஓடு மட்டும் எலும்பு துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக பழையவலம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
    • தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.

    நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

    நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.

    பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

    பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் குருமூர்த்தி. இவரது மனைவி கீதா. இவரும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை தனியார் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி பூரண குணமடைய வேண்டி கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் கடலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.

    கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ருத்திராம்பாள், கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், ஏட்டு அருள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டதில் பீட்டா இந்தியா இந்தியா அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.
    • உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது.

    விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்ற அடிப்படையில் பீட்டா இந்தியா அமைப்பு இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்டதில் பீட்டா இந்தியா இந்தியா அமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.

    இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகா கோவிலுக்கு பெரிய அளவிலான மெக்கானிக்கல் யானை ஒன்றை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக அளித்துள்ளது.

    இந்த மெக்கானிக்கல் யானைக்கு பாலதாசன் என்று பீட்டா இந்தியா அமைப்பு பெயர் வைத்துள்ளது. கோவில் திருவிழாக்களில் யானைக்கு பதில் இந்த மெக்கானிக்கல் யானையை பயன்படுத்தலாம் என்பதற்காக தான் இந்த பீட்டா இந்தியா அமைப்பு இதை பரிசாக அளித்துள்ளது.

    உயிருள்ள யானைகளை சொந்தமாகவோ வாடகைக்கோ எடுத்து கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக இந்த முயற்சியில் பீட்டா இந்திய அமைப்பு இறங்கியுள்ளது.

    இது கேரளாவில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது மெக்கானிக்கல் யானையாகும். இந்த யானை 3 மீட்டர் உயரமும் 800 கிலோ எடையும் கொண்டது.

    திருச்சூரில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் கொச்சியில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலிலும் ஏற்கனவே மெக்கானிக்கல் யானைகளை பீட்டா இந்தியா அமைப்பு பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.

    மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

    சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.


    சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

    • பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது.
    • நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் பின்னர், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு, நாள் கட்டுக்கடங்காத வகையில் கூடிக்கொண்டே உள்ளது. இக்கோவிலில் மரகதகலால் ஆன மயில், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்கள் இருப்பதும், திருமண கோலத்தில் வள்ளி மணவாளன் காட்சியளிப்பதும் கூடுதல் சிறப்பு ஆகும். இக்கோவிலுக்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


    இந்நிலையில் நேற்று ஆனி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் என்பதால் விடியற்காலை முதலே இக்கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. இதனால் கோவிலின் பின்பகுதியில் உள்ள அன்னதான மண்டபம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விடியற்காலை மூலவருக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் ஆனந்தன் குருக்கள் தலைமையில் அபிஷேகம் செய்தனர்.

    இதன்பின்னர் மூலவருக்கு வெள்ளி அங்கி கவச அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலின் கோபுர வாசல் அருகே 108 ஆம்புலன்ஸ் சேவையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


    புதுரோடு கூட்டுச் சாலை, அகரம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு வந்து செல்ல மினி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மினி பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில் அருகே உள்ள நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
    • பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    மயிலம்:

    மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.

    இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.

    அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார்.
    • அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இந்த கோவிலில் வழிபாடு செய்வதற்காக பக்தர் ஒருவர் ஒரு தேங்காயை உடைத்து கொண்டு வந்தார். அந்த தேங்காயில் 4 சில் இருந்தது.

    வழக்கமாக ஒரு தேங்காய் உடைக்கும் போது அதில் 2 சில் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தேங்காயில் 4 சில் இருந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த அதிசய தேங்காயை கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து பார்த்து ரசித்து சென்றனர்.

    • ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
    • தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

    * திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.

    * திருவள்ளூரை அடுத்துள்ளது, சோளிங்கர் என்ற திருத்தலம். இங்கு நரசிம்மர் யோக நிலையில் காட்சி தரும் ஆலயம் மலை மேல் அமைந்துள்ளது. சப்த ரிஷிகள் அனைவரும் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் 'கடிகாசலம்' என்றும் வழங்கப்படுகிறது.

    * கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.

    * திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக இங்கே தேங்காய் உடைக்கப்படுவதில்லை. தேங்காய்த் துருவலைத்தான் அரங்கநாதருக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள்.

    * திருக்கழுக்குன்றம், திருப்பைஞ்ஞீலி ஆகிய சிவ தலங்களில் வாழை மரம்தான் தல விருட்சம். அதே போல் வைணவத் திருப்பதிகளில் திருக்கரம்பனூர் மற்றும் திருவெள்ளியங்குடி ஆகிய கோவில்களிலும் வாழை மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது.

    * கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தட்சிணாயன வாசல், உத்ராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. திருவெள்ளறை தலத்தில் தட்சிணாயனம், உத்திராயனம் என்று இரண்டு படிகள் அமைந்துள்ளன.

    * தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நவக்கிரகங்களின் சன்னிதி இடம் பெற்றுள்ளது. பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் இடம் பெறுவது மிகவும் அபூர்வம்.

    ×