என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

    மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

    இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

    இந்நிலையில், விமர்சனத்திற்கு உள்ளான 90 டிகிரி L வடிவ ரயில்வே மேம்பாலம், மாற்றியமைக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது

    • இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
    • இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

    மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த மேம்பாலம் திரும்புவதற்கு 45 டிகிரி வளைவாக இல்லாமல் 90 டிகிரி வளைவில் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இணையத்தில் பலரும் இந்த மேம்பால புகைப்படங்களை பகிர்ந்து இந்த மேம்பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அம்மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த மேம்பாலத்தை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்த நிலையில், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் இந்த பிரச்சினையை குறித்து ஆராய்வதாக உறுதியளித்தார்.

    • உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்ததற்காக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங்கின் சகோதரரும், மத்தியப் பிரதேசத்தின் மூத்த தலைவருமான லட்சுமணன் சிங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஐந்து முறை எம்.எல்.ஏ.வுமான லட்சுமணன் சிங், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஒழுங்குமுறைக் குழு உறுப்பினர் செயலாளர் தாரிக் அன்வர் அறிவித்தார்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராகுல் காந்தி மற்றும் அவரது மைத்துனர் ராபர்ட் வதேரா அளித்த பதில்களை குறிப்பிட்டு, லட்சுமணன் சிங், அவர்களை முதிர்ச்சியற்றவர்கள் என்று அழைத்தார்.

    மேலும், ராகுல் புத்திசாலித்தனமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலப் பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் லட்சுமணனின் தொடர்ச்சியான செயல்களுக்கு கட்சிக்குள் அவருக்கு எதிராக எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் மத்திய தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.

    • சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார்.
    • மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்தது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரசு மருத்துவமனையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சனிக்கிழமை, மருத்துவமனை கழிப்பறை அருகே ஒரு நாய் குழந்தையின் சடலத்தை கவ்விக்கொண்டு சென்றதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டார். மீட்கும்போது குழந்தையின் உடல் பகுதியளவு சிதைந்திருந்தது.

    சிசிடிவி காட்சிகளின்படி, 17 வயது பெண் ஒருவர் கழிப்பறையில் பிரசவித்துவிட்டு, பின்னர் ஒரு நபருடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

    மருத்துவமனையின் திறந்திருந்த வாயில்கள் வழியாக நாய்கள் உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
    • ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்தியப் பிரதேசத்தில் 50,000 போலி அரசு ஊழியர்கள் தொடர்பான ரூ.230 கோடி ஊழல் விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஊழல் விவகாரம், மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறனையும் நிதி மேலாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசின் கணக்காய்வு மற்றும் நிதி மேலாண்மைத் துறையின் (IFMIS) சமீபத்திய ஆய்வில், 50,000 அரசு ஊழியர்கள், கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்களின் பெயர் மற்றும் ஊழியர்கள் என்றும் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் பணியில் இல்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.230 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.

    இந்த ஊழல் விவகாரமானது, மாநில பா.ஜ.க. அரசின் நிர்வாகத் தோல்வியின் விளைவாகும். இதுபோன்ற ஊழல் நிர்வாகத்தால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கியுள்ளது.

    அமலாக்கத்துறை, (ED) மற்றும் மத்திய புலனாய்வு நிறுவனம் (CBI) போன்ற அமைப்புகள் விசாரணை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிடவேண்டும். குற்றம் செய்தவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
    • ம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக மோகன் யாதவ் உள்ளார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் சம்பள பணத்தில் ரூ.230 கோடி ஊழல் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இந்த 50 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் சம்பளம் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

    அரசு ஆவணங்களில் அந்த ஊழியர்களுக்கு பணியாளர் குறியீடு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. ஆனால் சம்பளம் வழங்கப்படாததால் இந்த ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பில் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்களா? என்ற தகவல் இல்லை.

    அதேவேளையில் இவர்கள் போலியாக உருவாக்கப்பட்ட ஊழியர்களா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இதன்மூலம் ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் ரூ.230 கோடி மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. சம்பள பணம் எடுக்கப்படாததால் அவர்கள் போலி ஊழியர்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இதையடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு துறையிலும் தங்கள் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படாத ஊழியர்கள் யாரும் பணி புரியவில்லை என்பதைச் சான்றளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அரசு ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகை சம்பளத்தில் போலி பெயர்களைச் சேர்த்து மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • ஒரு ஆணும் பெண்ணும் நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் நபர் பாஜகவை சேர்ந்தவர் என்று தகவல் பரவியது.

    டெல்லி மும்பை விரைவு சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நடுரோட்டில் உடலுறவு கொள்ளும் நபர் மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாகத் என்றும் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

    இந்நிலையில், மனோகர்லால் தாகத் பாஜகவின் முதன்மை உறுப்பினர் இல்லை, ஆன்லைன் பதிவு மூலம் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்று பாஜகவின் மந்த்சூர் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தீட்சித் தெரிவித்தார். அதே சமயம் அவரது மனைவி பாஜகவில் தான் இருக்கிறார் என்றும் ராஜேஷ் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மனோகர்லால் தாகத் மற்றும் வீடியோவில் இருந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • பல் வலி நிவாரணத்திற்கு மாத்திரை வாங்க சென்ற பெண்ணுக்கு சல்பாஸ் மாத்திரை கொடுத்த விற்பனையாளர்.
    • உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழப்பு.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் ஒருவருக்கு மெடிக்கல் ஸ்டாஃப் மாத்திரை மாற்றி கொடுத்ததால், பெண் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது தரம்பூரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா (வயது 32). இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் வலி நிவாரண மாத்திரை வாங்குவதற்காக ஜாபுவா மாவட்டத்தில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.

    மெடிக்கல் ஸ்டாஃபிடம் பல் வலியாக உள்ளது. வலி நிவாரண மருந்து (painkiller) வேண்டும் எனக் கேட்டுள்ளாளர். ஆனால் மெடிக்கல் ஸ்டாஃப் சல்பாஸ் மாத்திரை (sulphas tablet) வழங்கியுள்ளார். ரேகாவும் பல் வலிக்கான நிவாரண மாத்திரை என நினைத்து உட்கொண்டுள்ளார்.

    இதனால் ரேகாவின் உடல்நிலை மிகவும் மோசடைந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடற்கூறு பரிசோதனையில் சல்பாஸ் மாத்திரை உட்கொண்டதால் உயிர் பிரிந்தது எனத் தெரியவந்தது. இதனால் மெடிக்கல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மெடிக்கலில் விற்பனையாளராக இருந்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார்.
    • கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசினார்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இந்நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.

    கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா மன்னிப்பு கோரியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஷா, "நான் பேசியதை சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். பஹல்காம் தாக்குதலால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளானோம். எனது குடும்பம் இராணுவ பின்னணியைக் கொண்டுள்ளது,

    நான் சோகமான இதயத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நான் கூறியிருந்தால் , 10 முறை மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். இராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்" என்று தெரிவித்தார்.

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார்.
    • கர்னல் சோபியா குரேஷி இணையத்தில் வைரலானார்.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதல்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் ஆபரேஷன் சிந்தூர் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதைக் குறித்து விளக்கினர். இதனையடுத்து இரண்டு பெண் ராணுவ அதிகாரிகளும் இணையத்தில் வைரலாகினர்.

    இந்நிலையில், இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷியை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.

    கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    குஜராத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி (35), இந்திய ராணுவத்தின் சிக்னல் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார். 1999 ஆம் ஆண்டு ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி முடித்து ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பிறகு, கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். சோபியாவின் தாத்தாவும் தந்தையும் இராணுவத்தில் இருதவர்கள். சோபியா குரேஷி மெக்கானைஸ்டு காலால் படையைச் சேர்ந்த அதிகாரியை மணந்துள்ள்ளார். இதனால் சோபியா முழுமையான ராணுவ குடும்ப பின்னணியை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
    • வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×