என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
    • வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.

    SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    • வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
    • ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.

    விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

    நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.

    "இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.

    வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

    • பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.

    அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • பள்ளி மாணவிகள் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
    • விற்பனையாளர் கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியது கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் தங்கு தடையின்றி அரசு கடையில் மதுவாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் வழி தவறி செல்லும் அதிர்ச்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை பார்க்க முடிகிறது. சில மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, சிலர் மற்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

    பள்ளி மாணவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடாது என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது. வயது நிரம்பாதவர்கள் போதைப்பொருட்கள் வழங்கினால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. விற்பனையாளர்களை தண்டிக்க சட்டமும் வழிவகை செய்கிறது.

    இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தின் சட்டம் மற்றும் சமூக வழிப்புணர்வு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

    மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர். இதில் என்ன அவலம் என்றால், கடைக்காரர் எந்தவித கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியதுதான்.

    சமூக வலைத்தளங்களில் பரவியதால், உள்ளூர் அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், துணை கலெக்டர், தாசில்தான், உள்ளூர் போலீசார் அந்த மதுபான கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதிகாரிகள் வீடியோவை பரிசோதனை செய்ததில், விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இது பொது உரிமம் நிபந்தனைகள் மீறுவதாகும். மதுபான சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதுதொடர்பாக கலால்துறை விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த மாணவிகள் மது அருந்தினரா? அல்லது யாருக்காவது வாங்கி சென்றார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • மத்திய பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் உரம் தட்டுப்பாடு.
    • அதிகாலையில் இருந்து விவசாயிகள் காத்திருந்தும் உரங்கள் கிடைப்பத்தில்லை எனக் குற்றச்சாட்டு.

    தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர். பயிர்களுக்கு உரம் தேவை என்பதால், உரம் வழங்கும் மையங்களில் உரத்திற்காக செல்லுகின்றனர். ஆனால், உரம் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகளுக்கு உரிய உரங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மத்திய பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மையத்தில் உரம் கிடைக்காததால், முண்டியடித்து உரங்கள் வாங்க சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட தடியடி நடந்துள்ளது.

    பிந்த், மொரேனா, ஷியோபூர், ரெவா, சாட்னா போன்ற இடங்களில் விவசாயிகள் நீண்ட வரிசையில் நின்றும் உரங்கள் பெற முடியாமல் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட, உரம் வழங்கும் மையம் போராட்ட பூமியாக மாறியுள்ளது.

    சில தினங்களுக்கு முன்னதாக ரெவாவில் உரங்கள் வாங்குவதற்கான நீண்ட வரிசையில் காத்திருந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சாட்னாவில் விவசாயிகள் கோபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜக எம்.எல்.ஏ. பிரதிமா பக்ரி, தனது வழியை மாற்றிக் கொண்டு தப்பி சென்றார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. வரிசையில் நின்ற படம்தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் குஷ்வாகா ஷிவ்பூரியில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சாதாரண விவசாயி போன்று வரிசையில் நின்றார்.

    இது தொடர்பாக கைலாஷ் குஷ்வாகா கூறியதாவது:-

    போஹ்ரி வேளாண் விளைபொருள் சந்தையில் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதையும், அவர் என்ன கண்டார் என்பதையும் நேரில் காண விரும்பினேன்.

    விவசாயிகள் அதிகாலை 4 அணியில் இருந்து வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள், SDM அல்லது தாசில்தார் அங்கு இல்லை. அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குடிநீர் அல்லது விவசாயிகள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

    உண்மையான விவசாயிகள் புறக்கணிக்கப்படடு, குறிப்பிட்ட தனி நபர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இது அநீதியானது. சிஸ்டம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததார்.
    • புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்

    மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா என்ற கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், கிராம மக்கள் முன்னிலையில் அன்னு பாண்டே என்ற பிராமண இளைஞரின் கால்களைக் கழுவி அந்த தண்ணீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

    சத்தாரியா கிராமத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிராமணரான அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்டபோது, கிராம கூட்டத்தில் அவருக்குப் ரூ.2,100 அபராதம் விதித்தனர். அன்னு பாண்டே இதை ஏற்றுக்கொண்டார்.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புர்ஷோத்தம் குஷ்வாஹா, அன்னு பாண்டே செருப்பு மாலை அணிந்திருப்பது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு படத்தை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

    உடனடியாக அவர் அந்தப் பதிவை நீக்கி மன்னிப்புக் கோரிய போதும், இது பிராமண சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று சிலர் கருதினர்.

    பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒன்று கூடி, புர்ஷோத்தம் தனது செயலுக்கு தண்டனை பெற வேண்டும் செய்ய வேண்டும் என்று கோரியது.

    இதன் விளைவாக, புர்ஷோத்தம் அன்னு பாண்டேயின் கால்களைக் கழுவி, அந்த நீரை அருந்த வேண்டும் கட்டாயப்படுத்தப்பட்டார். மேலும், அவர் ரூ.5,100 அபராதம் செலுத்தி பிராமண சமூகத்திடம் மன்னிப்பு கேட்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

    வைரலாகி வரும் காணொளியில், புர்ஷோத்தம் தரையில் முழங்காலிட்டு அன்னுவின் கால்களைக் கழுவுவது பதிவாகியுள்ளது.

    இருப்பினும் இதை எளிதாக கேட்டுக்கொண்ட புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது குரு போன்றவர் என்றும் இந்த காணொளியை நீக்கும்படியும் கேட்டுக்கொண்டார்

    ஆனால் இந்தச் சம்பவம் குறித்து புர்ஷோத்தம் உடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

    • இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
    • ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .

    பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவரில் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பையை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாகவும், அதைத் திறந்தபோது சுமார் 500 வாக்காளர் அடையாள அட்டைகளைக் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அவை 15வது வார்டை சேர்ந்தவர்களின் அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் என அதிகாரிகள் ஆய்வின்பின் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே அட்டைகள் காணாமல் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    மீட்கப்பட்ட அனைத்து அட்டைகளும் உள்ளூர் நிர்வாகத்தின் வசம் உள்ளன.

    இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    இதற்கிடையே வாக்காளர் அடையாள அட்டைகள் அடங்கிய பைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்த சம்பவம் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .

    நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள் குளத்தில் எப்படி விழுந்தன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சத்தர்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ககன் யாதவ் எச்சரித்தார். 

    • ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் 'கோல்ட் ரிப்' மருந்து தயாரிக்கப்பட்டது.
    • மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 6 குழந்தைகள் கடந்த 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட் ரிப்' மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது. பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

    இதையடுத்து மத்திய பிரதேசம், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை பயன்படுத்த கேரள மாநில அரசு.தடை விதித்துள்ளது.

    • இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததது.
    • புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் அரசு வேலை பறிபோய்விடும் என்ற அச்சத்தில், மூன்று நாட்களே ஆன சிசுவை பெற்றோரே காட்டில் வீசிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் நந்தன்வாடி பகுதியை சேர்ந்தவர் பப்லு தண்டோலியா. அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கும் மனைவி ராஜ்குமாரி தண்டோலியாவுக்கும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த அண்மையில் ராஜ்குமாரிக்கு 4ஆவதாக ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்து 3 நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் கொண்டு சென்று ஒரு கல்லின் ஓரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

    மத்தியப் பிரதேச அரசு ஜனவரி 26, 2001 அன்று மத்தியப் பிரதேச அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் 'இரண்டு குழந்தைகள்' மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

    இதை மீறி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர் அரசுப் பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுவார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இந்தக் கொள்கைப்படி வேலை இழந்துவிடுவோம் என்ற பயத்தாலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    காலையில் நடைபயிற்சிக்குச் சென்ற கிராம மக்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, கல்லிடுக்கில் கிடந்த குழந்தையைக் கண்டுபிடித்து, காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு, இரவு முழுவதும் எறும்புக்கடி, கடுங்குளிரில் இருந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து குழந்தை பத்திரமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

     தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைவிடும் சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

    • வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் நவராத்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.

    நாடு முழுவதும் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. வீடுகளில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில்,மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×