search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
    • மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனம் இதை நடத்தி வருகிறது

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காலையில் தொழிற்சாலையின் எரிபொருள் நிரப்பும் பிரிவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆயுத தொழிற்சாலையானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • சிறுத்தையை "வா.. வா" என்று விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
    • திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் சிறுத்தையை "வா.. வா.." என்று அழைத்து இளைஞர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுத்தை உண்மையிலேயே பாய்ந்து வந்து கடித்ததில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

    உதவி சப்-இன்ஸ்பெக்டர் நிதின் சம்தாரியா, ஆகாஷ் குஷ்வாஹா (23) மற்றும் நந்தினி சிங் (25) ஆகியோர் ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோபாரு மற்றும் ஜெய்த்பூர் காடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சுமார் 50-60 பேர் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.

    காட்டிற்குள் இருந்த புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை "வா.. வா" என்று இவர்கள் விளையாட்டாக அழைத்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை இவர்களை தாக்கியுள்ளது.

    பின்னர் சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இளைஞர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணி
    • தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் விவாதம்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் பல்வேறு பதாகைகளை பெண்கள் ஏந்தி சென்றுள்ளனர். குறிப்பாக 'தாடியை நீக்கி காதலை காப்பாற்று' (Remove beard, save love) என்ற பதாகையையும் கிளீன் சேவ் செய்யவில்லையெனில் காதலிக்கமாட்டோம் (No Clean Shave, No Love) என்ற பதாகையையும் , தாடி வேண்டுமா காதலி வேண்டுமா முடிவு உங்கள் கையில் (Keep a beard or keep a girlfriend, the choice is yours) என்ற பதாகையையும் பெண்கள் ஏந்தி சென்றனர்.

    இந்த வீடியோ வைரலானதையடுத்து, தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.

    இந்த பேரணி உண்மையான பேரணியா? இல்லை ரீல்ஸ்காக எடுக்கப்பட்ட வீடியோவா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.

    • முராரி லால் என்பவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார்.
    • ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் டீக்கடைக்காரர் ஒருவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் (TVS XL) பைக் வாங்கியதை ரூ.60,000 பணம் செலவழித்து கொண்டாடிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முராரி லால் என்பவர் சிவபுரி மாவட்டத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார். பைக் வாங்கும் முன்பு டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிய படியே பைக் ஷோரூமிற்கு பைக்கை வாங்க சென்றுள்ளார்.

    அங்கு பைக்கை முன்பணம் கொடுத்து வாங்கிய பின்பு, ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடியுள்ளார்.

    தனது குழந்தைகளை மகிழ்ச்சியடையச செய்வதற்காக இவ்வாறு செய்ததாக முராரி லால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    முராரி லால் இவ்வாறு செய்வது ஒன்றும் இது முதல் முறையல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு 12,500 கடன் வாங்கி மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மொபைல் போன் வாங்கியதை கொண்டாட ரூ.25,000 செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசிடம் இருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளான்.
    • சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    மத்தியப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளி பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதில் குண்டு பாய்ந்து சிறுமியின் 60 வயது  தாத்தா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிறுமியின் பாட்டி மற்றும் உறவினர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர்[Chhatarpur] பகுதியில் உள்ள மொஹாரா கிராமத்தில் வசித்து வந்த 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போலா அஹிர்வார் [Bhola Ahirwar] என்ற 24 வயது நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அஹிர்வார் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் போலீசிடம் இருந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளான்.

    இந்நிலையில் நேற்று [திங்கள்கிழமை] காலை 10.30 மணியளவில் திடீரென பாதிக்கப்பட்ட 17 சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த அஹிர்வார் அங்கு இருதவர்கள் மீது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளான். இதனையடுத்து குற்றவாளியைத் தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

    • குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இது தொடர்பான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
    • இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1814 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையின்போது இந்த போதைப்பொருள் சிக்கியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.

    • ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தாசில்தார் ஒருவர் வழங்கிய வருமான சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • வெறும் 2 ரூபாய் ஆண்டு வருமானத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும் என்று விமர்சனங்கள் எழுந்தது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என தாசில்தார் ஒருவர் வழங்கிய வருமான சான்றிதழ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 2 ரூபாய் ஆண்டு வருமானத்தில் ஒரு குடும்பம் எப்படி வாழமுடியும் என்று விமர்சனங்கள் எழுந்தது.

    திசு சாதர் என்பவரின் குடும்பத்திற்கு தான் ஆண்டு வருமானம் 2 ரூபாய் என கடந்த ஜனவரி மாதம் வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தில் மொத்தம் 5 பேர். வறுமையால் அனைவரும் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.

    திசு சாதரின் இளைய மகன் பல்ராம் சாதர், தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தனது படிப்பை தொடர்வதற்கு உதவித்தொகை விண்ணப்பித்திருக்கிறார். இதற்காக வருமான சான்றிதழ் ஒன்றை அவர் பெற்றிருக்கிறார். அதில் தான் ஆண்டு வருமானம் வெறும் 2 ரூபாய் என் தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    தனக்கு உதவித்தொகை கிடைக்காததை குறித்து ஆசிரியர்களிடம் அவர் தெரிவித்த போது தான் இந்த தகவல் அவருக்கே தெரிய வந்துள்ளது.

    வருமான சான்றிதழ் குறித்து பேசிய பல்ராம், "பொது சேவை மையம் மூலம் ஆண்டுக்கு 40,000 ரூபாய் வருமானம் பெறுவதாக தான் சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அதில் ஆண்டு வருமானம் தவறுதலாக 2 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை யாருமே கவனிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

    இப்போது தவறாக அச்சடிக்கப்பட்ட வருமான சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மற்றொரு வருமான சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    • காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கை.
    • இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் பெண் ஒருவர் கோமா நிலைக்கு சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கணவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறிய போது கணவரின் பின்பு அமர்ந்து வந்த மனைவி கீழே விழுந்துள்ளார். அதனால் அப்பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலாப் சுக்லா, "காயமடைந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது காவல்துறையின் அநியாயமான நடவடிக்கையாகும். இந்தக் குற்றச்சாட்டைச் செய்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் குறித்து காவல் துணை ஆணையர் அபினய் விஸ்வகர்மா, "இந்த சாலையை பராமரிக்க எந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளோம், அவர்களின் பதிலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • இந்த விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள முல்டாய் காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஜன்னலில் ஒருவர் கட்டிவைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் எஸ்பியை சந்தித்து புகார் அளித்தார்.

    அவரது புகாரில், "நான் மல்டெய்ல் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக் கடை நடத்தி வருகிறேன். சில ஆட்களுக்கு முன்பு எனது கடையில் போதைப்பொருள் விற்பனை செய்தேன் என்று குற்றம் சாட்டி போலீசார் என்னை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு ஜன்னலில் என்னை கட்டி வைத்து போலீசார் அடித்தனர்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுனில் சரேயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள எஸ்பி, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • பாஜக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • சப் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று கவுன்சிலரின் கணவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள காவல்நிலையத்தில் கால்வாய் கட்டுவது தொடர்பான பிரச்னை தொடர்பாக பாஜக பெண் கவுன்சிலரின் கணவர் அர்ஜுன் குப்தா விசாரணைக்கு வந்துள்ளார்.

    அப்போது பாஜக பெண் கவுன்சிலரின் கணவருக்கும் சப் இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சப் இன்ஸ்பெக்டரின் யூனிபார்மை கழட்டி விடுவேன் என்று கவுன்சிலரின் கணவர் மிரட்ட, யூனிபார்மை கழற்றி எறிந்து எஸ்.ஐ, வாக்குவாதம் செய்துள்ளார்.

    இந்தநாடு பிப்ரவரி மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்து மத்தியப் பிரதேச பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

    இந்த சம்பவத்திற்கு அடுத்து, சப் இன்ஸ்பெக்டர் வினோத் மிஸ்ரா மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார்.
    • இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    மத்தியபிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் ஒரு பழங்குயின பெண் சேறு நிறைந்த சாலையில் படுத்து கும்பிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மழைக்காலத்தில் கிராமத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சேறு நிறைந்து காணப்படுவதால் ஏற்படும் சிரமங்களை உணர்த்தும் வகையில் இந்த போராட்ட வடிவத்தை அப்பெண் முன்னெடுத்துள்ளார்.

    பன்வாடா மாதா கோவிலுக்கு செல்லும் சேறு நிறைந்த சாலைகளில் அப்பெண் சேற்றில் படுத்து கும்பிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.

    "சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இவ்வாறு செய்வதாகவும் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததை மக்களுக்கு உணர்த்துவதற்கான தனது கடைசி முயற்சி இதுவாகும்" என்று அப்பெண் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.
    • அந்தரங்க வீடியோவை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

    மத்தியப் பிரதேசத்தில் பெண்ணை பலாத்காரம் செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை திணித்து கொடுமை படுத்திய ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோர் நகரில் AB சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அசாமில் பணியில் உள்ள சஞ்சய் யாதவ் என்ற ராணுவ அதிகாரி [நாயக்] தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வங்கி மேனஜராக பணியாற்றிவரும் கவுசல்யா என்ற திருமணமான 35 வயது பெண் நடக்க முடியாமல் வலியில் தள்ளாடியபடி நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வந்துள்ளார்.

    அவரை உடனே மருத்துவமனைக்கு போலீஸ் சென்று அனுமதித்துள்ளனர். கவுசல்யா தனது புகாரில், ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் ஒரு வருடம் முன் மோவ் [Mhow] பகுதியில் பணியில் இருந்தபோது கேன்டீன் அட்டை தந்து உதவியபோது அவரை நான் அறிவேன். அவர் அசாமுக்கு மாற்றலான பின் தற்போது தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வந்த சஞ்சய், அந்தரங்க வீடியோ ஒன்றை காட்டி என்னை மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்தார்.

    அங்கு அறையில் வைத்து என்னை பாலியல் தொல்லை செய்த அவர் எனது அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை நுழைக்க முயன்றார். அங்கிருந்து தப்பித்து தான் வந்ததாக தெரிவித்திருந்தார். கவுசல்யாவின் புகாரை அடுத்து ராணுவ அதிகாரி சஞ்சய் யாதவ் உடனடியாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் கவுசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×