search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reservation"

    • தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது.
    • 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு...,

    கர்நாடக மாநில மந்திரிசபையில் தனியார் நிறுவனங்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் மசோதா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா தெரிவித்தார். நிர்வாகம் தொடர்பான வேலையில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத வேலையில் 75 சதவீதம் ஒதுக்கீடு என மசோதாவில் திருத்தம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் பணபரிமாற்றம் செயலியான போன்பே (PhonePe) சிஇஓ சமீர் நிகம் "தனக்கு உள்பட மக்களுக்கு இந்த மசோதா நியாயமானது கிடையாது. என்னுடைய தந்தை அவரது பணிக்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இந்திய கடற்படையில் பணிபுரிந்துள்ளார். என்னுடைய கேள்வி, 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய சொந்த நகரத்தில் வசித்து வரும் எனது குழந்தைகளுக்கு வேலை மறுக்கப்படுமா? என்பதுதான் எனக் கூறியிருந்தார்.

    இதற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். PhonePe-ஐ புறக்கணிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போன்பே சிஇஓ சமீர் நிகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

    நான் யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதுபோன்று கூறவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முதலாவதாக, முதன்மையாக விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

    என்னுடைய நோக்கம் ஒருபோதும் கர்நாடகா மற்றும் அங்குள்ள மக்களை இழிவுப்படுத்துவது இல்லை. என்னுடைய கருத்து யாருடைய உணர்வை காயப்படுத்தியிருந்தால், உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

    போன்பே (PhonePe) நிறுவனம் பெங்களூருவில்தான் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பத் திறமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் உள்ள நம்முடைய அடித்தளம் பற்றி நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது.
    • நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    மாணவர்களால் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 16-ந் தேதி டாக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட பலர் பலியாகினர்.

    இதை தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

    வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகளை காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வங்காளதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சிவில் விமானப்போக்குவரத்து துறை, குடியேற்றத்துறை, எல்லைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி வங்காளதேசத்தில் 978 இந்திய மாணவர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் தெரிவித்தது.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் கல்வி பயின்று வந்த தங்கள் மாநிலத்தை சேர்ந்த 120 மாணவர்கள் அங்கிருந்து திரும்பியுள்ளதாக அசாம் அரசு நேற்று அறிவித்தது.

    அதே போல் திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் வழியாக கடந்த 2 நாட்களில் மொத்தம் 379 மாணவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு காரணமான 30 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

    சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில், "அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சியடையும் தகுதியான நபர்களுக்கு 93 சதவிகிதமும், விடுதலைப் போராட்ட வீரா்களின் குடும்பத்தினருக்கு 5 சதவிகிதமும் ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 2 சதவிகிதம் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 3-ம் பாலினத்தவர்களுக்கு வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் போராட்டம் மற்றும் வன்முறை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்தனர். போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த போராட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதியில் பரவியுள்ளது. போராட்டக்காரர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தாக்குவதோடு, தீ வைத்து எரித்து வருகிறார்கள். டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்கள், கலவரங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 105 ஆக  உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

    போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர். போராட்டம் தொடர்வதால் ஆளும் ஷேக் ஹசீனா அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையில் வங்காளதேசத்தில் வசிக்கும் 15,000 இந்தியர்களும்பாதுகாப்பாக உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் 300 பேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். 

    • கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் துறையில் 100 சதவீதம் பேர் கன்னடர்கள் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்.
    • கடும் விமர்சனம் எழுந்த நிலையில் மசோதா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சித்தராமையா அறிவித்தார்.

    கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது என சித்தராமையா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    இந்த மசோதா மீதான கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் மசோதாவில் சில குழப்பங்கள் உள்ளன. இது குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூடடத்தில் இந்த மசோதா குறித்து முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை. அதற்குள் மீடியாக்களில் செய்தி வெளியானது. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அதை களைவோம். விரிவான ஆலேசானை நடத்தப்படும்.

    எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்ததுபோல் கர்நாடக மாநிலத்தில் துக்ளக் அரசு இல்லை. சித்தராமையா அரசு நடக்கிறது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பரிசீலிப்போம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா "சித்தராமையா தனது முதல் எக்ஸ் பதிவில் தனியார் செக்டாரில் 100 சதவீத இடஒதுக்கீடு என அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் நிர்வாகப் பிரிவில் 50 சதவீதம், நிர்வாகம் அல்லாத பிரிவில் 70 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இறுதியாக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கர்நாடகாவில் துக்ளக் ஆட்சி நடப்பதாக தெரிகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.
    • பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாசிச அரசியல், மதவாத அரசியல், ஜாதி அரசியலை, முன்னெடுத்த பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டார்கள்.

    நாட்டு மக்கள் விரும்புவது நாட்டின் முன்னேற்றம், வளம், சமூக வளர்ச்சி, ஆகியவற்றை முன்னெடுத்த திராவிட நாயகன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக கட்டமைப்பு வளர்ச்சியைத்தான். இதனால் தான் இந்திய அளவில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியினை பெற்று மகுடம் சூட்டி உள்ளனர்

    சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. கட்சியுடன் பா.ம.க. கட்சி கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க.விற்கு கால் பிடிக்கும் வேலையை செய்கின்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட சட்டசபையில் தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ள முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினால் மட்டுமே வன்னிய மக்களுக்கு பல நல்லதிட்டங்களையும், சிறந்த இட ஒதுக்கீட்டையும் வழங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.
    • அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது.

    அரியானா மாநிலத்தில் அரசுப் பணிகளில் சேர்வதற்கான ஓபிசி இட ஒதுக்கீட்டை ஆளும் பாஜக அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. குரூப் A மற்றும் குரூப் B பணிகளில் சேர்வதற்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிசி கிரீமி லேயர் வருமான உச்சவரம்பு வருடத்துக்கு ரூ.8 லட்சம் எனவும் அதிகரிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓபிசி பிரிவினரின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்த்தவர்கள் குரூப் A மற்றும் B பணிகளில் பின்தங்கியுள்ள நிலையில் அவர்களுக்கென மாநிலம் முழுவதும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அரியானா அரசு அறிவித்துள்ளது.

     

    இந்த வருட இறுதியில் அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அரசின் இந்த முடிவை முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கமுடிகிறது. மாநிலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்து முன்னேற்றப் பணிகளில் கவனம் செலுத்தி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்துவருவதால் தாங்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று முதல்வர் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டங்களில் அரியானா விவசாயிகள் அதிகளவில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



     


    • பீகாரில் இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
    • பாட்னா ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    பாட்னா:

    இந்தியாவிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட பிறகு சட்டசபையில் பேசிய முதல் மந்திரி நிதிஷ் குமார், பீகாரில் அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

    முதல் மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இட ஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இட ஒதுக்கீடு உயர்வுக்கான மசோதா அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே, அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு உயர்வு தொடர்பான வழக்கு பாட்னா ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்நிலையில், அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை உயர்த்தும் பீகார் அரசின் அறிவிப்பை பாட்னா ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டது.

    அப்போது, சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், அரசமைப்பின் அதிகார வரம்பு மற்றும் சமத்துவத்தை மீறுவதாக தலைமை நீதிபதி கே வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. பாட்னா ஐகோர்ட்டின் இந்தத் தீர்ப்பு முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
    • இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14&ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். உங்களில் ஒருவராக பல பத்தாண்டுகளாக களமாடி வரும் அவரைப் பற்றி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் அதிகாலை 12.01 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாத காவல்துறை, சாலை மறியல் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும், என்னுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினரையும் கைது செய்து விட்டு, மனித வேட்டையை தொடங்கியது.

    பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது. அப்போதும் கொலைப்பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.

    இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13-ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகி விட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது, தாங்களாக முன்வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து விவாதத்தின் போது நான் விடுத்த சவாலில் வெற்றி பெறும் வகையில், 2020-ஆம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50% இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.

    வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், அதைக் கூட நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியாவது உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்ய மனமில்லாதவர் தான் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழித்து தான் 2023 ஜனவரி 12-ஆம் நாள் வன்னியர் உள் இடஓதுக்கீடு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டார். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 3 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. காரணம்... வன்னியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருப்பது வன்மம் தானே தவிர, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல.

    வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்வது இது முதல் முறையல்ல. 1970-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையில், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது வன்னியர்களுக்கு மட்டும் 15%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்த மறுத்தது அப்போதைய முதலமைச்சர் கலைஞர். 1989-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுனர் ஆட்சியில் 12.12.1988-ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக வன்னியர்களுக்கு 16% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் 107 சாதிகளுடன் வன்னியர்களையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்து அடித்துக் கொள்ள வைத்தார் கலைஞர்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மூன்று முறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த மூன்று வாய்ப்புகளையும் சீர்குலைத்தது திமுக அரசுகள் தான். தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கே துரோகம் செய்த கட்சி தான் திமுக. ஏ.ஜி. என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கூட திமுகவுக்கு மனம் இல்லை. 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு ஈகியர்கள் 21 பேருக்கு நினைவு மண்டபம் கட்டும் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

    திமுகவின் வன்னியர் துரோகம் இத்துடன் நின்று விடவில்லை. திமுகவிலும் வன்னியர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலும், பின்னர் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுகவில் கோலோச்சிய செஞ்சி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் ஆகியோர் திமுகவில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்களுக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட திமுகவுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு திமுக இழைத்து வரும் துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுப் போராளிகளின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் துரோகத்திற்கு கணக்குத் தீர்ப்பதற்குமான களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். எத்தனை, எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் திமுக தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் நமது வலிமை அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    • குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது.
    • தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் வெளிப்படையாக மிரட்டுகிறார்.

    எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி பேசிவரும் நிலையில், குஜராத் அரசும் முஸ்லிம்களுக்கு ஓபிசி இடஒதுக்கீடு கொடுத்து வருகிறது ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரதமர் மோடிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் குஜராத்தில் ஓபிசி முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பட்டியலை இணைந்துள்ளார்.

    அக்கடிதத்தில், "குஜராத் மாநிலத்தில், ஓபிசி இடஒதுக்கீடு பெறும் இஸ்லாமிய சமூகத்தினரின் பட்டியல் இது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல், குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக இருந்து, தற்போது பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?

    தனியார் துறையில் இடஒதுக்கீடு விவகாரத்தையும் பிரதமர் புறக்கணித்துள்ளார். பீகாரில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீட்டை அதிகரிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பிரதமர் அதனை நிராகரித்தார்.

    அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவின் கீழ் அரசு வேலைகளில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும், ஆனால் பாஜக அரசு ரயில்வே, ராணுவம் மற்றும் பிற அரசு துறைகளில் இருந்து அரசு வேலைகளை நீக்கியதன் மூலம் இடஒதுக்கீடு மறைமுகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

    எருமைமாட்டை பறித்து விடுவார்கள், தாலியை பறித்துவிடுவார்கள் என்று பேசிய மோடி இப்போது முஜ்ரா நடனத்தை பற்றி பேசுகிறார். இந்த நாட்டின் பிரதமரின் மொழி இப்படித்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் யோசித்து முடிவு செய்யுங்கள்.

    தேர்தல் தோல்விக்கு பயந்து, இப்போது என்னை சிறைக்கு அனுப்பப் போவதாக பிரதமர் பேசுகிறார். மத்திய விசாரணை அமைப்புகள் மோடியின் விருப்பப்படி செயல்படுகின்றன என்பதற்கு உங்களது பேச்சே ஆதாரமாகும்" என்று எழுதியுள்ளார்.

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
    • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சியும் என்டிஏ கூட்டணியின் பாஜக கட்சியும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் வாக்கு ஜிகாத்தில் ஈடுபடுகிறது என்று பாஜக குற்றம்சாட்டிவரும் நிலையல்ல பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பைக் கிழித்து எறிந்துவிடும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில் என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் பேசுகையில், 1976 ஆம் ஆண்டில், முதல் முறையாக இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் மாற்றம் செய்யப்பட்டது. அதை இந்திரா காந்திதான் செய்தார்.

     

    ஆனால் இப்போது தேவையில்லாமல், பாஜக அரசியலமைப்பை மாற்றும் என்று இதை தேர்தல் பிரச்சனையாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று கூறினார். முன்னதாக கடந்த 1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில், இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் 'சோசியலிச' 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டு 'தேசத்தின் ஒற்றுமை' என்ற வாக்கியம், 'தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை பாஜக ஒழிந்துவிடும் என்ற காங்கிரஸின் விமர்சனம் குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், இட ஒதுக்கீட்டை ஏன் ஒழிக்கப்போகிறோம்? ஓபிசி,எஸ்.சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு தேவை, ஆனால் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று தெரிவித்தார். 

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    ×