search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DK Shivakumar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விவசாயிகளின் நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது என்றார்.
    • காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையைப் பார்வையிட புறப்படுவதற்கு முன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். மேலும் 10 டி.எம்.சி. தண்ணீரை விடுவிப்போம். இந்த ஆண்டில் வழங்கப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரி நதிப்படுகையில் உள்ள 1,657 ஏரிகளையும் நிரப்பிக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிட வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விதைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 5.90 லட்சம் குவிண்டால் விதை, 27 லட்சம் டன் ரசாயன உரம், 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 25,000 கோடி கடனுதவியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளின் நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது என்றார்.

    பின்னர், கிருஷ்ண ராஜசாகர் அணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியதாவது:-

    'ஜூலை 11 முதல் 31-ந் தேதி வரையில் தமிழகத்துக்கு 20 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. அப்போது விவசாயிகளுக்கு போதுமான நீர் இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை.

    இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். கர்நாடகத்தில் நல்லமழை பெய்து வருகிறது. வாரணாசியில் கங்கை ஆரத்தி எடுப்பது போல, காவிரி ஆரத்தி எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதை இம்மாதத்திலேயே தொடங்குவோம். இதில் இந்து அறநிலையத் துறை, நீர்ப்பாசனத் துறை கூட்டாக ஈடுபடும்.

    மேகதாது அணை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதற்கு காலம்தான் பதில் அளிக்கும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. எனவே, அதுகுறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்திற்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
    • நீரை நாங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது.

    காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "நாங்கள் கூடுவதை போல், தமிழ் நாடு கூடுவதற்கு எல்லா உரிமைகளும் உண்டு. அவர்களின் கூட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அது அவர்களின் உரிமை. அதுபற்றி கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால், இதே நேரம் நேற்று முதல் எங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது."

    "காவிரியில் கிட்டத்தட்ட 50,000 அதிக கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அங்கு இருப்பதை நாங்கள் ஹராங்கி வழியே வெளியேற்றி வருகிறோம். தற்போது வரை ஹராங்கி மற்றும் இதர பகுதிகளில் இருந்து 20,000-க்கும் அதிக கன அடி நீர் திறந்து விடப்படுவதாக நினைக்கிறேன். கடவுள் அனுமதித்தால் நம் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன்."

    "ஆனால், தமிழகத்திற்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் விருப்பம், எங்கள் விருப்பம் மற்றும் நமது விருப்பங்களை தாண்டி நீங்கள் எங்களை அனுமதியுங்கள். நாங்கள் தேக்கி வைத்திருப்பதில் இருந்து மட்டும் தான் நீரை வழங்க முடியும். அந்த நீரை நாங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியாது. இது அவ்வளவு எளிமையானது."

    "கர்நாடக மக்களின் சார்பில் பணிவான கோரிக்கையை விடுக்கிறேன், எங்களால் முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்குகிறோம்.., என்று தெரிவித்தார்.

    • வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக 2020-ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
    • இதை எதிர்த்து டி.கே. சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.

    கர்நாடக மாநில துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

    2013 முதல் 2018 வரையிலான அவருடைய வருமானத்தை கணக்கில் கொள்ளும்போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது என சிபிஐ தெரிவித்தது.

    சிபிஐ-யின் இந்த வழக்குப்பதிவை எதிர்த்து டி.கே. சிவக்குமார் 2021-ல் கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் சிபிஐ விசாரணை நடத்த தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி டி.கே. சிவக்குமார் தாக்குதல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, எஸ்.சி. சர்மா அடங்கிய பெஞ்ச், "உச்சநீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்றனர். மேலும், மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    2013 முதல் 2018 வரை டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சியின் உயர்மட்டக்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் இறுதி முடிவு- சித்தராமையா.
    • யார் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவர்களுக்கு கட்சி தகுந்த பதில் அளிக்கும்- டிகே சிவக்குமார்.

    கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகவும் இருந்து வருகிறார்கள்.

    மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் வீரசைவ-லிங்காயத், எஸ்சி-எஸ்டி மற்றும் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது தெடர்பாக சித்தராமையாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "கட்சியின் உயர்மட்டக்குழு என்ன முடிவு எடுத்தாலும் அதுதான் இறுதி முடிவு" என ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

    தற்போது துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை கேட்க வாய்ப்புள்ளதாக சித்தராமையா அணி நினைக்கிறது. இதனால் அவருக்கு ஒரு செக் வைப்பதற்காக இப்படி ஒரு பரிந்துரை வெளிவந்துள்ளதாகவும், அரசு மற்றும் கடசியில் அவரின் ஆதிக்கத்திற்கு பதிலடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

    சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமான மந்திரிகள் கே.என். ராஜண்ணா, ஜமீர் அகமது கான், சதீஷ் ஜர்கிகோலி மற்றும் சிலர் இந்த வார தொடக்கத்தில் மேலும் மூன்று துணை முதல்வர் கோரிக்கை வழியுறுத்தியுள்ளனர்.

    கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது சித்தராமையா முதல்வராக இருப்பார். டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார் என காங்கிரஸ் முடிவு செய்தது.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "நீங்கள் (ஊடகங்கள்) யாராவது ஏதாவது சொன்னால் செய்தியாக போடுங்கள். (செய்திகளில் தோன்றி) மகிழ்ச்சியாக இருப்பவர்களை நான் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். யார் எந்த கோரிக்கையை வைத்தாலும், அவர்களுக்கு கட்சி தகுந்த பதில் அளிக்கும்" என்றார்.

    • எச்.டி.குமாரசாமி மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சன்னபட்னா தொகுதிக்கு இடைத்தேர்தல்.
    • சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    கர்நாடக மாநிலம் ராமாநகரா மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா தொகுதியின் பிரதிநிதியான ஜேடி(எஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி, சமீபத்தில் நடத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து, சன்னபட்னா தொகுதி காலியானது. இதனால், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், சன்னபட்னா இடைத்தேர்தலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து, கருத்து தெரிவித்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார், " கர்நாடகா மாநிலத்தில் உள்ள சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை. கட்சி மற்றும் வாக்காளர்களின் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்றார்.

    மேலும் அவர், "என்னுடைய இதயத்தில் சன்னபட்னா தொகுதி எப்போதும் உள்ளது. எனக்கு அரசியல் பிறப்பைக் கொடுத்த இடம் சன்னபட்னா தான்.

    எனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சன்னப்பட்னா தொகுதியில் நான் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். அங்குள்ள மக்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர்.

    சன்னபட்னாவும் முன்பு சாத்தனூரில் ஒரு பகுதியாக இருந்தது (சிவகுமார் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பழைய பகுதி). நான் சன்னபட்னாவை விரும்புகிறேன். நான் சன்னபட்னாவுக்கு உதவ விரும்புகிறேன். நான் சன்னபட்னாவை மாற்ற விரும்புகிறேன்.

    இக்கட்டான காலத்திலும் சன்னப்பட்டின மக்கள் எங்களுக்கு சுமார் 80,000 வாக்குகளை (சமீபத்திய மக்களவைத் தேர்தலில்) அளித்துள்ளனர்.

    அங்கு மாற்றத்தை கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க வேண்டும். கனகபுரத்தில் நான் செய்ததை விட அதிக வளர்ச்சியை அங்கு செய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.

    அவரது சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், சன்னப்பட்டனத தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, "அது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எது எப்படியோ ஆனால் எனக்கே ஓட்டு கேட்கிறேன்" என்றார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ், சன்னபட்னாவில் களமிறக்கப்படலாம் என்று முன்னதாகவே பேசப்பட்டாலும், அவரை பழிவாங்க சிவக்குமார் களத்தில் இறங்கலாம் என்ற யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பெரும் கட்சியினரிடையே பரவி வருகிறது.

    சிவக்குமார் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவர் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் கனகபுரா சட்டமன்றத் தொகுதியை சுரேஷுக்காக விட்டுக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

    • கர்நாடகா அரசு, முதல்வர் சித்தராமையா மற்றும் தனக்கு எதிராக மிருக பலி கொடுத்து யாகம் என சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
    • தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது என கேரள அரசு விளக்கம்.

    கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அருகே தனக்கும், முதல்-மந்தரி சித்தராமையா மற்றும் எங்கள் அரசுக்கு எதிராக சத்ரு பைரவி யாகம், மிருகபலி நடைபெறுவதாகவும், யாகத்தில் 21 ஆடுகள், 5 பன்றிகள், 21 செம்மறி ஆடுகள் பலியிடப்பட்டுள்ளதாகவும் வேண்டுமானால் கேரளாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலை பாருங்கள் தெரியும் என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் பகீர் தகவல் கூறினார்.

    இதுகுறித்து கேரள அரசு விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும் கண்ணூர் கண்டிபரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உளவுத்துறை மற்றும் போலீசார் மூலம் கேரள அரசு சிறப்பு விசாரணை நடத்தியது.

    விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி கேரள டி.ஜி.பி.க்கு அறிக்கை அளித்தனர். அதில் சத்ருபைரவி யாகமோ, மிருக பலியோ நடைபெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

    மேலும் கேரளாவில் உள்ள கண்ணூர் ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவில் நிர்வாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தேவசம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவிலிலும் மிருக பலி சம்பந்தப்பட்ட வழிபாடுகள் கிடையாது. அதுபோல் கேரளாவில் உள்ள மலபார் தேவசம் போர்டின் கீழ் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் பெயர் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

    ஸ்ரீ ராஜராஜேஷ்வரி கோவில் கேரளாவில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். மலபார் தேவசாம் வாரியத்தின் கீழ் உள்ள எந்த ஒரு கோவில்களிலும் மிருக பலியுடன் கூடிய வழிபாடுகள் அல்லது பிரசாதம் கிடையாது என்று மலபார் என தெரிவித்துள்ளது.

    • இந்த சடங்குகள் எனக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா அரசுக்கு எதிராக நடத்தப்படுகிறது.
    • 21 சிகப்பு நிற ஆடுகள், மூன்ற எருமை மாடுகள், 21 கருப்பு ஆடுகள், ஐந்து பன்றிகள் ஆகிவற்றை இந்த செய்வினை சடங்கிற்காக பலி கொடுத்துள்ளனர்.

    கேரளா மாநிலத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அகோரியை வைத்து தனக்கு எதிராக சிறப்பு பில்லி சூனியம் வைப்பதற்கான சிறப்பு பூஜை நடத்தப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் என டி.கே. சிவக்குமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    கேரள மாநிலம் ராஜராஜேஸ்வரி கோவில் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் அகோரிகள் மூலம் பில்லி சூனியம் வைப்பதற்கான சிறப்பு சடங்குகள் செய்யப்படுகிறது.

    இந்த சடங்குகள் எனக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடகா அரசுக்கு எதிராக நடத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுததான். இந்த சடங்கு ராஜ கன்டகா மற்றும மரண மோகன ஸ்டம்பானா என அழைக்கப்படுகிறது.

    அகோரிகள் 21 சிகப்பு நிற ஆடுகள், மூன்ற எருமை மாடுகள், 21 கருப்பு ஆடுகள், ஐந்து பன்றிகள் ஆகிவற்றை இந்த செய்வினை சடங்கிற்காக பலி கொடுத்துள்ளனர்.

    இந்த சடங்குகளை நடத்தியது யார் என்பது எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து அவர்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் நான் கவலைப்பட மாட்டேன். அது அவர்களுடைய நம்பிக்கை முறை. தீங்கு விளைவிக்கும் அவர்களின் முயற்சிகள் மற்றும் சோதனைகள் இருந்தபோதிலும், நான் நம்பும் சக்தி என்னைக் காப்பாற்றும். நான் ஒவ்வொரு நாளும் மக்கள் பணி செய்ய செல்லும்போது கடவுளை பிரார்த்தனை செய்வேன்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இவர் சொல்லுவதை பார்க்கும்போது மாந்திரீக சினிமா படக்கதை போன்று உள்ளது.

    • கடந்த முறையை விட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம்- அமித் ஷா
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது- டி.கே. சிவகுமார்

    மக்களவை தேர்தலில் 400 இடங்கள் இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பா.ஜனதாவுக்கு அவ்வளவு இடம் கிடைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    கள நிலவரம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இல்லை. இதனால்தான் பிரதமர் மோடி விரக்தியில் இந்து-முஸ்லிம் குறித்து பேசுகிறார் என விமர்சிக்கின்றனர்.

    அதேவேளையில் 3-வது முறையாக பிரதமராக தேர்ந்ததெடுக்கப்பட்ட பின், முதல் 100 நாள் திட்டத்திற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்து வருகிறார்.

    கடந்தமுறை உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா 65 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா உறுதியாக தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நாங்கள் (இந்தியா கூட்டணி) 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவகுமார் கூறுகையில் "உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் எங்களுடைய கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. நாங்கள் 40 இடங்களில் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தேன். அப்போது எங்கள் கட்சியின் வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட்டேன்

    ஏழை மக்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக 10 கிலோ இலவச ரேசன் வழங்கப்படும் என கார்கே மேலும் அறிவித்துள்ளார். ஆகவே, முடிவுகள் எங்களுக்கு சாதமாக இருக்கும்.

    இவ்வாறு டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    • பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    பெங்களூரு:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே பெங்களூர் நகரம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரிகளில் பொதுமக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    பெங்களூருவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கர்நாடக துணை முதல் மந்திரி கே.டி.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் இந்தப் பிரச்சனையை மிக மிக தீவிரமாகப் பார்க்கிறேன். அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

    அனைத்து தொட்டிகளையும் கையகப்படுத்தி அனைத்து நீர் கிடைக்கும் இடங்களையும் கண்டறிந்து வருகிறோம். 217 சுரங்கங்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூரு நகரில் 3,000க்கும் மேற்பட்ட போர்வெல்கள் வறண்டுவிட்டன. காவிரியில் இருந்து என்ன தண்ணீர் வருகிறதோ அதுதான் வருகிறது.

    எனது வீட்டில் உள்ள போர்வெல் உள்பட அனைத்து போர்வெல்களும் வறண்டு கிடக்கின்றன என தெரிவித்தார்.

    • பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூரு ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுப்பிரிவினரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டிகே சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக முதல் மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரியது பற்றி கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த சிவகுமார், அவர்கள் ராஜினாமாவை விரும்புகிறார்களா? அவர்கள் கேட்கும் ராஜினாமாவை அவர்கள் விரும்பியபடி அனுப்புவோம். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் வெறும் அரசியல் செய்து வருகின்றனர். பெங்களூருவின் இமேஜை கெடுக்கின்றனர். அவர்கள் காலத்தில் கர்நாடகாவில் என்ன நடந்தது என்பதை அறிய அவர்கள் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்.

    அவர்கள் கர்நாடகாவை காயப்படுத்தவில்லை. மாறாக நாட்டையும், தங்களையும் காயப்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முயற்சி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக முதல் மந்திரி தங்களை அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    • பெங்களூருவில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் வந்தது.
    • காலையில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    பெங்களுரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். முன் எச்சரிக்கையாக பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியேறி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இந்த தகவல் பள்ளியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காட்டுத்தீப்போல் பரவியது. இதனால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். மேலும் அங்கு பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் விரைந்து சென்று அனைத்து பள்ளிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு இருக்கிறதா என வகுப்பறைகள், கழிப்பிடம், சமையல் அறை, பள்ளி விடுதி மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.


    சோதனையின்போது ஒவ்வொரு நிமிடமும் திக், திக் என இருந்தது. காலையில் தொடங்கிய இந்த சோதனை வெகுநேரம் நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் நிம்மதி அடைத்தனர்.

    மின்னஞ்சல் அனுப்பி மர்ம நபர் புரளியைக் கிளப்பி இருப்பது தெரியவந்தது. இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் ஐ.டி.யை கம்ப்யூட்டரில் இருந்து கைப்பற்றி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். பள்ளிக்கூடம் ஒன்று எனது வீட்டிற்கு எதிரே உள்ளது, இதை ஆய்வுசெய்ய இங்கு வந்தேன். இது சில மர்ம நபர்களின் போலி அழைப்பு போல் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர் என குறிப்பிட்டார்.

    ×