என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ்"
- மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
- 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த விவகாரம் மக்களவயில் இன்று பெரும் புயலை கிளப்பியது. எதிர்க்கட்சி தலைவர் இந்த விவகாரம் குறித்து பேச முற்பட்டது, அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது மக்களவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சியினருக்கு மக்களவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியை சேர்ந்த 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இந்தக் கூட்டத்தொடர் முடியும் வரை பங்கேற்க முடியாது.
இதையடுத்து, மக்களவையில் இருந்து 9 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கும் எதிரா்ப்பு தெரிவித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற பாாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மகர வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோலே, எஸ். வெங்கடேசன் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோர் அடங்குவர்.
- சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது.
- 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா பேசி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.
இதனிடையே கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் பதவி விவகாரத்தில் சித்தராமையாவுடன் மோதல் இருப்பதாக பரவும் தகவலுக்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் மறுத்துள்ளார்.
அனைத்து நெருக்கடிகளிலும் சித்தராமையாவுடன் நிற்பேன். அவரும் என் பக்கம் தான் நிற்பார். எதிர்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடரும்" என்று டி.கே சிவகுமார் தெரிவித்தார்.
- பலவீனமான தலைமைத்துவம்- சிறந்த தலைமைத்துவம் இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வித்தியாசம்.
- பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின் தோல்விக்காக சமாளிப்புகள் கதையை ஜனாதிபதி உரை எதிரொலிக்கிறது.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நடைபெற்ற இந்த விவாதத்தில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா பேசியதாவது:-
பலவீனமான தலைமைத்துவம்- சிறந்த தலைமைத்துவம் இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வித்தியாசம்.
பல துறைகளில் காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின் தோல்விக்காக சமாளிப்புகள் கதையை ஜனாதிபதி உரை எதிரொலிக்கிறது. UPA ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகள் இழக்கப்பட்ட வாய்ப்புகளின் தசாப்தம்.
உலகில் செழிப்பான ஜனநாயகத்தில் தலைவர்கள் வருவார்கள். செல்வார்கள். ஆனால் மெஜாரிட்டியுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக அதிகாரத்திற்கு வந்துள்ளார்.
இவ்வாறு தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.
மேலும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு குறித்து பேசினார். அப்போது பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி பயங்கரவாதத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் மோடி ராணுவ தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்தார் என்றார்.
- வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித் துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
- 16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
2026-2027ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் விரோத பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"2026-27 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை சம்பிரதாய நடைமுறைகளை மீறி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். தனது 83 நிமிட உரையில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவது, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது. சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து நாட்டில் உள்ள தொழில்களை எப்படி பாதுகாக்க போகிறார் என்பதற்கான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதையும் பட்ஜெட் அறிவிப்பில் காண முடியவில்லை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 4.2 லட்சம் கோடி. இதில் 30 சதவீதம் சிறு குறு நடுத்தர தொழில்களில் இருந்து வருகிறது. இதை நம்பி 22 கோடி பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது. அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ. 10 ஆயிரம் கோடி. இது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல் அமைகிறது. கடந்த பட்ஜெட்டில் இதே துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ. 7 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. சிறு, குறு தொழில்கள் கடன் பெறுவது தற்போது உள்ள கடினமான நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களை சந்தை படுத்த அந்நிய நிறுவனங்களை தான் நம்பி இருக்கிறது.
அதற்கு மாற்றாக உள்ளூார் சந்தைகள் உருவாக்கப்படவில்லை. இந்த பின்னணியில் கார்ப்பரேட்டுகளின் தயவில் தான் பொருள்களை சந்தைப்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருக்கிற தரவு மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்க வேண்டிய அவசியம்? இதனால் பயனடையப்போகிற கார்ப்பரேட் தொழிலதிபர்கள் யார்? இந்த மையம் உற்பத்தி சார்ந்ததோ, வேலை வாய்ப்பு வழங்குவதோ அல்ல, இது ஒரு தொழில் நுட்ப அமைப்பு.
இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக நிர்மலா சீதாராமன் உரையில் கூறியிருக்கிறார். ஆனால் நம்பகத்தகுந்த சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்ட வறுமை குறியீடு தாவரிசை பட்டியலில் இந்தியா 109 வது இடத்தில் இருக்கிறது. இந்த பின்னணியில் நிர்மலா சீதாராமன் அறிக்கை என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.ல நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கிற மக்களிடையே வருமான ஏற்றத்தாழ்வுகள் மோடி ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பெரும்பாலான கிராமங்களில் வாழுகின்ற மக்கள் இதனால் நகரங்களை நோக்கி குடி பெயர்ந்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 64.9 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இதில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யதற்காக நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் படி ஒவ்யொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 15 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். இத்தகைய வறுமை ஒழிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்கிற அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதில் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் 41 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு உற்பத்தித்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்கு12.9 சதவீதமாக தான் இருக்கிறது. இத்தகைய குறைவான உற்பத்தியினால் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித் துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
எனவே 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2014 ஆம் ஆண்டு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக்குவது போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில்தான் 2019, 2024 ஆகிய தேர்தல்களில் மக்களிடையே வகுப்புவாத அரசியலை பயன்படுத்தி வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அன்று முதல் இன்று வரை மக்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லுகிற உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒரு மக்கள் விரோத பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது.
- புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி கஞ்சிக்குழியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. அதனை மாற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கஞ்சிக்குழியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் பொன் சாலமன் தலைமை தாங்கினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடீஸ் அகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அனைவரும் இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக அவருக்கு பொன்னாடை போர்த்தி காங்கிரஸ் கட்சினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளாட்சன் விபின், துணை தலைவர் குமாரி, வார்டு உறுப்பினர்கள் பாலம்மான், சுபியான், சுஜின் கட்சி நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், ஜெபா, வின்சென்ட், பகவத்சிங் உட்பட கப்பியறை பேரூராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும்.
திருமங்கலம்:
திருப்பரங்குன்றத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் வெறுப்பு அரசியலை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகிறது. காந்தியின் நினைவு நாளை ஒருமைப்படுத்தும் நாளாக பார்க்கிறேன்.
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேசி உள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி பொறுத்தவரை தலைமை நியமித்த குழு தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும். வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசி உள்ளேன்.
என்னை பொறுத்த அளவில் காங்கிரஸ் கட்சியை யாரெல்லாம் அவமானப்படுத்துகிறார்களோ அவர்களை தயவு பார்க்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் தன்மானம் முக்கியமானது. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழிவுபடுத்துவதையும், அவமதிப்பதையும் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவரும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
இந்தியா கூட்டணி என்பது பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதை ஒட்டிய காங்கிரஸ் சகோதரர்களை பாராட்டுகிறேன்.
வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அங்கு அமைப்பு ரீதியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடத்த உள்ளோம் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வந்தே மாதரம் என்று சொல்வது மட்டும் கிடையாது. திருப்பி அடிக்கவும் தெரியும். முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். கூட்டணி முடிவான பின் தொகுதி பங்கீடு பற்றி பிறகு பேசுவோம் என்றார்.
- எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
- கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வுடன் நல்ல முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வதந்திகள் எல்லாவற்றிற்கும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும், மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார்.
ஆகவே, எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
தேர்தலைப் பற்றி எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள்.
கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும். இல்லையென்றால் அகில இந்திய தலைமை கூறுவார்கள். மீதி பேர் நினைக்கிற கருத்துக்கள் எங்ககிட்ட வந்து சொல்லலாம். பொதுவெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பலமுறை நானும் சொல்லியிருக்கிறேன். அகில இந்திய தலைமையும் சொல்லியிருக்கிறது. பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என்றார்.
- சசிதரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
- கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.
புதுடெல்லி:
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கினார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவருடன் பேசுவதை தவிர்த்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சசி தரூர் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவைச் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாங்கள் ஒரு கலந்துரையாடல் மற்றும் மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றாகச் செல்கிறோம். இதற்குமேல் என்ன சொல்ல முடியும்.
நான் ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எனது வாக்காளர்களின் நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களைக் கவனிப்பதுதான் எனது வேலை என தெரிவித்தார்.
- கூட்டணி குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு.
டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சந்தித்துள்ளார்.
கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்பி கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
- ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
அதே சமயம் பாமக நிறுவனர் ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக இத்தகைய தகவல்களை தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" இரு தெரிவித்தார்.
- தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான நிவேத் ஆல்வா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்பதற்காக வந்துள்ளேன்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தை மாற்றுவது குறித்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து அதனை மாற்றியது தவறு.
வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கேபினட் பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் மத்திய அரசு எப்படி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செய்வது மத்திய அரசின் தவறான செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் தருவதாக சொல்கிறார். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று இயக்குநரும் விஜயின் தந்தையுமான S.A. சந்திரசேகர் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றனர். புதிதாக யாராவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகன் பட பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது என்னை விட மக்களுக்கு நன்கு தெரியும். கரூரில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெளிவாக தெரியும்.
தவெக தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் இல்லை. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது.
அவர்களுக்கு இன்று பவர் இல்லை. அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும் அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.






