search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • ஐபோன் 16 பயனாளர்களுக்கு எளிதாக படம் மற்றும் வீடியோ எடுக்க கீழ் வலதுபுறத்தில் புதிய கேப்சர் பட்டன் சேர்க்கப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    பாரம்பரியத்தை பின்பற்றி இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என்ற 4 வகையான ஐபோன்களை செப்டம்பரில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் 16 மாடலில் ஆப்பிள் நிறுவனம் பார்டர் ரிடக்ஷன் ஸ்டிரக்சர் எனும் (BRS) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் பெசல் அளவை குறைத்து டிஸ்பிளே அளவை அதிகரிக்கும். ப்ரோ மாடல்கள் இன்று வரை எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 பயனாளர்களுக்கு எளிதாக படம் மற்றும் வீடியோ எடுக்க கீழ் வலதுபுறத்தில் புதிய கேப்சர் பட்டன் சேர்க்கப்படுகிறது. இந்த பட்டன் புகைப்படம் எடுக்க மற்றும் வீடியோகிராஃபி அனுபவத்தை மேம்படுத்தும்.

    இந்த ஆண்டு ஆப்பிள் தனது என்ட்ரி லெவல் ஐபோன் 16-ஐ மாத்திரை வடிவில் உயர்த்தப்பட்ட மேற்பரப்பில் கேமரா சென்சார்களை செங்குத்தாக பொருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமராக்களுடன் தனித்தனி வளையங்கள் உள்ளன.

    ஐபோன் 16 ப்ரோ மாடல்கள் மேம்படுத்தப்பட்ட 48MP அல்ட்ரா வைட் கேமரா லென்ஸ் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது லோ-லைட் சூழலிலும் சிறப்பான புகைப்படம், வீடியோக்களை எடுக்க உதவும். இத்துடன் அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டு 48MP தரத்தில் ProRAW ரெசல்யூஷனில் பதிவு செய்ய அனுமதிக்கும்.

    கூடுதலாக, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஒரு சூப்பர் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆப்டிகல் ஜூம் திறன்களை 5x ஆக உயர்த்துகிறது. இது தற்போதைய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும்.
    • இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்படும்.

    நத்திங் நிறுவனம் விரைவில் தனது புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நத்திங் போன் 2a பிளஸ் என அழைக்கப்படும் புது மாடல் வருகிற 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன் வெளியீடு தொடர்பான டீசர்களை நத்திங் நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய நத்திங் போன் 2a பிளஸ் மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நத்திங் போன் 2a போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் நிலையில், நத்திங் போன் 2a பிளஸ் மாடலில் டிமென்சிட்டி 8300 அல்லது ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் என இரண்டில் ஒன்று வழங்கப்படும் என்று தெரிகிறது. ஒரே டிசைன் தவிர நத்திங் போன் 2a பிளஸ் அளவில் சற்று பெரியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலிலும் க்ளிம்ப் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு இருக்கும்.

    புதிய பிளஸ் ரக மாடல் நத்திங் போன் 2 மற்றும் மிட் ரேஞ்ச் போன் 2a மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.
    • கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

    தினசரி நாம் செய்யும் உடற்பயிற்சிகளை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தற்போது பலரால் ஆப்பிள் மற்றும் சாம்சங் கைக்கடிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இதன் விற்பனை வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    தினசரி ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட கேலக்ஸி ரிங், சாம்சங்கின் மேம்பட்ட சென்சார் தொழில்நுட்பத்தை கச்சிதமான, விவேகமான வடிவத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

    இது 24 மணி நேரமும் உடல் நலன் கண்காணிப்பை வழங்குகிறது. 2.3 கிராம் மற்றும் 3.0 கிராம் வரை எடை கொண்டது. மேலும் ஒன்பது அளவுகளில் கிடைக்கிறது. 10ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. இந்த ரிங்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.


    இதய துடிப்பு, சுவாசம், உறக்கம், உடல் வெப்ப அளவு ஆகியவற்றை கணக்கிடும் வகையில் AI அல்காரிதம் கொண்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.33,404-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் ஹெல்த் ஆப் மூலம் இதயத் துடிப்பு விவரங்களைப் பயனர்களுக்கு ரியல்டைமில் தெரிவிக்கும் வசசதியை கேலக்ஸி ரிங் கொண்டிருக்கிறது. நிமிடத்திற்கான துடிப்புகள் மற்றும் கால அளவு போன்ற விரிவான அளவீடுகளுக்கான நேரடி இதயத் துடிப்பு சோதனையும் இதில் அடங்கும்.



    கூடுதலாக, நடைபயிற்சி மற்றும் ஜாகிங்-ஐ கண்காணிப்பதற்கான ஆட்டோ ஒர்க்அவுட் கண்டறிதல், தினசரி உடற்பயிற்சி நினைவூட்டல்களுக்கான நோட்டிபிகேஷன் வழங்குகிறது. இதில் புகைப்படங்களை எடுப்பது அல்லது அலாரங்களை நிராகரிப்பது போன்ற செயல்பாடுகளுக்கான சைகை கட்டுப்பாடுகள் உள்ளன.

    கேலக்ஸி ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி இந்த ரிங்-ஐ கண்டறிவதற்கான ஃபைண்ட் மை ரிங் அம்சம் இதில் உள்ளது.

    • இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும்.
    • சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், ஐபோன் 17 சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கிவிட்டன. இது குறித்து வெளியான தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 பிளஸ் மாடலை அறிமுகம் செய்யாது என்று கூறப்படுகிறது.

    புதிய பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது அலுமினியம் சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் அதில் கேமரா சென்சார்கள் பிக்சல் மாடல்களில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    முன்புறமாக சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. டிசைன் அடிப்படையில் புதிய ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஐபோன் X போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்லிம் மாடலில் 6.55 இன்ச் ஸ்கீரன், 120Hz ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

    • இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆம்பியன்ட் லைட் சென்சார் கொண்டுள்ளது.
    • இதன் வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்படுகிறது.

    நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்ட் சிஎம்எப் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 என்ற பெயரில் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில், புதிய சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடலில் 1.32 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஆட்டோ பிரைட்னஸ் அட்ஜஸ்ட் வசதி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமியினம் அலாய் பாடி கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறத்தில் கிரவுன் வழங்கப்படுகிறது.

     


    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த வாட்ச் கழற்றி மாற்றக்கூடிய பெசல்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இதுவரை வெளியான டீசர்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிளாஸி கேஸ் மற்றும் ஆரஞ்சு லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சிஎம்எப் வாட்ச் ப்ரோ மாடலின் விலை ரூ. 4 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், புதிய சிஎம்எப் வாட்ச் ப்ரோ 2 மாடலின் விலையும் ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டிலேயே நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

    • ரியல்மி 12 ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும்.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய 13 ப்ரோ 5ஜி சீரிஸ் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதையொட்டி புதிய ஸ்மார்ட்போனின் டீசர்களை ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி சரியான தேதி அறிவிக்கப்படவில்லை. புது ஸ்மார்ட்போன்கள் ரியல்மி ஏற்கனவே விற்பனை செய்து வரும் ரியல்மி 12 ப்ரோ சீரிசின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

    ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புது ஸ்மார்ட்போனிற்காக ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரியல்மி 13 ப்ரோ 5ஜி சீரிஸ் இந்திய விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

     


    புதிய ப்ரோ சீரிசில் ரியல்மி 13 ப்ரோ 5ஜி மற்றும் ரயில்மி 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முதற்கட்ட டீசர்களில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் பல்வேறு முதல் முறை (இதுவரை மற்ற மாடல்களில் வழங்கப்படாத) அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ரியல்மி 13 ப்ரோ பிளஸ் மாடலில் 50MP IMX882 3x பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது ரியல்மியின் முதல் புரோஃபஷனல் ஏஐ கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதுகுறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. 

    • வாட்ச் S சீரிசின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என தகவல்.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கலாம்.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் வெளியாகும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட வாட்ச் S சீரிசின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

    அந்த வகையில் ரியல்மியின் புதிய ஸ்மார்வாட்ச் ரியல்மி வாட்ச் S2 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் புதிய ஸ்மார்ட்வாட்ச் RMW2401 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதன் FCC ID - 2AUFRMW2401 ஆகும்.

    இந்த வலைதள விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜர் 5 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த சார்ஜர் A152A-090200U-CN1 எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் வட்ட வடிவம் கொண்ட பட்டன் மற்றும் கிரவுன் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் FCC தளத்தில் லீக் ஆகி இருக்கும் நிலையில், இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • ஐகூ Z9 லைட் பெயரில் விற்பனை செய்யப்படலாம்.
    • விவோ T3 லைட் மாடல் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என்று தகவல்.

    ஐகூ நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து அந்நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் அல்லது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவில்லை. தற்போது வரை ஐகூ நிறுவனம் மிட் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில், ஐகூ நிறுவனம் விரைவில் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z9 லைட் பெயரில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களில், ஐகூ Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் விவோ T3 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் விவோ T3 லைட் ஸ்மார்ட்போன் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விவோ நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.

    விவோ T3 லைட் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய ஐகூ Z9 லைட் மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். விலையை பொருத்தவரை இரு மாடல்களும் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • மோட்டோ எட்ஜ் 50 அல்ட்ரா மாடலில் 50MP பிரைமரி கேமரா உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எட்ஜ் 50 அல்ட்ரா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.7 இன்ச் 1.5K 144Hz OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64MP 3x போர்டிரெயிட் டெலிபோட்டோ லென்ஸ், 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்பி கேமரா உள்ளது. இத்துடன் மோட்டோ ஏ.ஐ. மூலம் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     


    இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஹெட் டிராக்கிங் வசதி உள்ளது. இந்த வசதிகள் மோட்டோ பட்ஸ் பிளஸ் பயன்படுத்தும் போது ஆக்டிவேட் ஆகும்.

    இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் டர்போ பவர் சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் குறைந்த விலை G சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோ G04s ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. விர்ச்சுவல் ரேம், 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G04s ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 20 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

     


    கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மோட்டோ G04s ஸ்மார்ட்போன் சாடின் புளூ, கான்கார்ட் பிளாக், சீ கிரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட், மோட்டாரோலா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் ப்ரோ வைபை வெர்ஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பிறகு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த வரிசையில், புதிய டேப்லெட்-இன் 5ஜி மாடல் அறிமுகமாக இருக்கிறது. புதிய வெர்ஷன் வெளியீடு குறித்து சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அறிவித்தார். இதோடு, புதிய டேப்லெட் கொண்டு சியோமி மற்றும் ரெட்மி போன் பயன்படுத்துவோர் அவற்றின் ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களில் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உடன் பாதுகாப்பு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 5ஜி சப்போர்ட் தவிர இந்த டேப்லெட்-இன் டிசைன், இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட் ரெட்மி K70 அல்ட்ரா மாடலுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ரியல்மி அறிவித்துள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய GT 6T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சந்தையில் GT சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ரியல்மி GT 6T மாடலில் 6.78 இன்ச் 1.5K 8T LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ XDR டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 9-லேயர் கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     


    இத்துடன் 120 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ரியல்மி அறிவித்துள்ளது.

    புதிய ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் புளூயிட் சில்வர் மற்றும் ரேசர் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் நானோ மிரர் டிசைன் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 30 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஆஃப்லைன் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    ×