search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noise"

    • சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ், மாஸ்டர்கார்டு மற்றும் ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கான்டாக்ட்லெஸ் பேமண்ட் சேவையை பிரபலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர், ஏர்டெல் தேங்ஸ் செயலியில் டிஜிட்டல் முறையில் கணக்கை துவங்க வேண்டும். பிறகு, அதே செயலியில் தங்களது கணக்கை லின்க் செய்து ஸ்மார்ட்வாட்ச்-ஐ ஆக்டிவேட் செய்ய வேண்டும். இதனை செய்துமுடிக்க ஒரு நிமிடமே ஆகும்.

     


    ஸ்மார்ட்வாட்ச் கனெக்ட் ஆனதும், பயனர்கள் டேப் அன்ட் பே (tap and pay) வசதி கொண்ட பாயின்ட் ஆஃப் சேல் (point of sale) மெஷின்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ வைத்து பேமண்ட் செய்துவிட முடியும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு ரூ. 1-இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை செலுத்த முடியும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள என்.எஃப்.சி. (NFC) சிப் மாஸ்டர்கார்டு நெட்வொர்க்-இல் இயங்குகிறது. என்.எஃப்.சி. தொழில்நுட்பம் மூலம் பயனர்கள் கான்டாக்ட்லெஸ் பேமண்ட்களை ரிடெயில் ஸ்டோர், பி.ஒ.எஸ். (POS) டெர்மினல் மற்றும் இதர பேமண்ட் முறைகளில் மிக எளிதாக பணம் செலுத்த முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.85 இன்ச் அளவில் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், 130 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் காலிங் வசதி மற்றும் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, ஸ்டிரெஸ் மானிட்டர் அம்சம், SpO2 மானிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கிரே, புளூ மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    • நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ மாடலில் 2 இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளே, நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நல அம்சங்கள், ப்ளூடூத் காலிங் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் 200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், நாய்ஸ் ட்ரூ சின்க் டெக் மூலம் டயல் பேட் மற்றும் ரீசென்ட் கால் ஹிஸ்ட்ரியை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

     


    நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ அம்சங்கள்:

    2.0 இன்ச் HD TFT LCD ஸ்கிரீன், 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

    200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    ப்ளூடூத் காலிங் வசதி

    பில்ட்-இன் மைக்ரோபோன்

    வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ் மானிடரிங்

    115-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி

    நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே

    வானிலை அப்டேட்கள்

    கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல்

    ரிமைன்டர், அலாரம், கால்குலேட்டர்

    புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் லெதர் ஸ்டிராப் வேரியன்ட்கள் கிளாசிக் பிளாக், கிளாசிக் பிரவுன் நிறங்களிலும், மெட்டாலிக் ஸ்டிராப் வேரியன்ட் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் நிறங்களிலும் கிடைக்கிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 19-ம் தேதி துவங்க இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1399 என்றும் கிளாசிக் புளூ, கிளாசிக் பிரவுன் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1499 என்றும் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் விலை ரூ. 1599 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    • 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

    எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    காலையில் பால் பாக்கெட் வராததில் தொடங்கும் டென்ஷன் திடீரென வேலைக்காரி லீவு போடுவது, குழந்தை சாப்பிட அடம் பிடிப்பது, பஸ்சில் கூட்டம் அதிகமாக இருபது என இப்படியே தொடர்கிறது. இதனால் ஏற்படும் மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம்.

    இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களையும் இது அதிகம் பாதிக்கிறது.

     அறிகுறிகள்:

    வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாப்பிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல், உணவுக்குழாய், நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும்.

    அடிவயிற்றில் வலி இருபதால் பலர் குடல்வால் நோய் என நினைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் அதன் பின்னரும் வலி இருக்கும். சிலர் அமீபா கிருமியின் தாக்குதல் என நினைத்து அதற்கு மருந்து சாப்பிடுவார்கள். ஆனாலும் வலி தீராது. எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

    • புது ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.
    • இதில் பத்து கான்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

    நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளரான நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ், ப்ளூடூத் காலிங், உடல் ஆரோக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் மாடல் அதிக உறுதியான உணர்வை வழங்குகிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. பயனர்கள் இதில் பத்து கான்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

     


    நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப், ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தும் போது ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    விலையை பொருத்தவரை நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் மாடல் ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எலைட் மிட்நைட் கோல்டு, எலைட் பிளாக் மற்றும் எலைட் சில்வர் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. 

    • அசவுகரியமும் ஏற்படாத வகையில் கச்சிதமான டிசைன் கொண்டிருக்கிறது.
    • பியூர் பாட்ஸ் மாடலில் ஏர் வேவ் தொழில்நுட்பம் உள்ளது.

    இந்திய தொழில்நுட்ப நிறுவனமான நாய்ஸ் முற்றிலும் புதிய ஒபன் வயர்லெஸ் ஸ்டீரியோவை (OWS) இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பியூர் பாட்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய OWS மிகக் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையில் கச்சிதமான டிசைன் கொண்டிருக்கிறது.

    பயனர் காதுகளில் சரியாக பொருந்திக் கொள்ளும் வகையில் மினமலிஸ்ட் டிசைன் கொண்டிருக்கும் பியூர் பாட்ஸ் ஏர் கன்டக்ஷன் பயன்படுத்தி சவுண்ட்-ஐ கடத்துகிறது. நாய்ஸ் பியூர் பாட்ஸ் மாடலில் ஏர் வேவ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஏர் கன்டக்ஷன் மெக்கானிசம் மேம்பட்ட ஆடியோ அனுபவம் வழங்குகிறது.


     

    நாய்ஸ் பூயர் பாட்ஸ் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் சத்தத்துடன் சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் பெறலாம். இதில் உள்ள 16 மில்லிமீட்டர் நியோடிமியம் டைனமிக் டிரைவர்கள் முழு சார்ஜ் செய்தால் 80 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதில் உள்ள இன்ஸ்டாசார்ஜ் அம்சம் பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்களுக்கு பேக்கப் வழங்குகிறது.

    இதனுடன் கழற்றக்கூடிய பியூர் பேண்ட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பாட்ஸ்-ஐ நெக்பேண்ட் போன்றும் மாற்றிக் கொள்ளலாம். நாய்ஸ் பியூர் பாட்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் குவாட் மைக் உள்ளதால், அழைப்புகளின் போதும் தலைசிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் பியூர் பாட்ஸ் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (டிசம்பர் 19) ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் துவங்குகிறது. இந்த பியூர் பாட்ஸ் மாடல் ஜென் பெய்க் மற்றும் பவர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    • தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    விழுப்புரம்:

    டெல்லியை சேர்ந்தவர் சித்ரஞ்சன் நாயக். இவர் தனது மனைவி பக்கிரா, மகள் தாரா நாயக் (வயது 12) ஆகியோருடன் புதுவை மாநிலத்திற்கு சுற்றுலா வந்தார். இவர் ஆரோவிலில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தங்கும் விடுதியின் 5-வது மாடியில் உள்ள அறையில் சித்ரஞ்சன் நாயக் தங்கினார். அப்போது அறையை விட்டு வெளியில் வந்த தாரா நாயக்கின் அலறல் சத்தம் கேட்டு அலறியடித்து வெளியில் வந்தனர்.

    அப்போது தாரா நாயக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்ட பெற்றோர், 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார், சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது யாரேணும் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம்.
    • இதையடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோட்டில் பெரிய ஏரி உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. விடு முறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் கையில் தூண்டி லுடன் மீன் பிடிக்க பெரிய ஏரிக்கு சென்றனர். ஏரியின் கரையின் மீது நடந்து சென்ற போது, பாம்பு மூச்சுவிடும் சத்தம் கேட்டுள்ளது. இதை யடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர். அங்கு அதிக தடிமன் கொண்ட நீளமான பாம்பு ஒன்று படுத்துக் கிடந்த தை பார்த்து பயத்தில் வீடு திரும்பினர். அங்கிருந்த வர்களிடம் நடந்த சம்பவத் தை சிறுவர்கள் கூறினர். இதையடுத்து ஏரிக்கரைக்கு சென்ற பொதுமக்கள், அங்கிருப்பது மலைப் பாம்பு என்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் பகண்டை கூட்ரோடு பெரிய ஏரிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். புதருக்கு அருகில் ஏரியில் கரையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உலாவிக் கொண்டிருந்தது. அதனை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதனை எடுத்துச் சென்று சங்கராபும் வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • காரைக்கால் பொது இடத்தில் மது அருந்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர ரோந்துப்போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய ெரயில் நிலையம் அருகே உள்ள காட்டுநாயக்கன் தெரு சந்திப்பில், 3 பேர், பொது மக்களின் அமைதிக்கு இடையூறாக, பொது இடத்தில் சத்தம் போட்டு மது அருந்திகொண்டிருந்தனர். இதனைக்கண்ட ரோந்துப்போலீசார், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் புதுச்சேரி நெட்டப்பாக்கம் நெசவாளர் குடியிருப்பைச்சேர்ந்த ஜோதிமணி (வயது 35), அவரது நண்பர் தஞ்சாவூர் ஒரத்தநாடு கண்டபிள்ளைத் தெருவைச்சேர்ந்த ஜான்பாஸ்கோ (36), காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கீழசுப்புராய புரத்தைச்சேர்ந்த அருளானந்தமேனன் (30) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள்.
    • இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சாராய மேடு கிராமத்ைத சேர்ந்தவர் அரவிந்த். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (5). இவள் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் படித்து வந்தாள். பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள். அதிகாலையில் அவளை பாம்பு கடித்தது. கன்னத்தில் கடித்ததால் சிறுமி கதறினாள்.சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அப்போது சிறுமியை கடித்த பாம்பு அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தாள். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • புஷ்பராஜிக்கு மது பழக்கம் இருந்தமையால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமா விளங்கை மாதாகோவில் தெருவைச்சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது48). இவரது மனைவி சந்தா னமேரி. இவர்களுக்கு, லிட் லார்ட் ஆப் குயின் (கூயது 20), சன் சால்ட் கிங் (17) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். புஷ்பராஜ் கூலி வேலை செய்து வந்தார். புஷ்பராஜிக்கு மதுபழக்கம் இருந்தமையால், தினமும் மது குடிவுவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று பகல் வழக்கம் போல், மது அருந்தி விட்டு புஷ்பராஜ் வீட்டுக்குசென்றுள்ளார். அப்போது சில வீட்டு பொருட்கள் வீட்டின் சில பகுதிகளில் கிடந்ததாக கூறப்படுகிறது. ஏன் இப்படி கிடக்கிறது. என மனைவி சந்தான மேரியையும், மகள் லிட் லார்ட் ஆப் குயினை வீட்டை விட்டு வெளியே போகுமாறு புஷ்பராஜ் சத்தம் போட்டதாக தெரிகிறது.

    தொடர்ந்து, சந்தானமேரி தனது மகளுடன், பக்கத்து தெருவான சிவன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மாலை அதே தெருவைச்சேர்ந்த ஜான்பிட்டர் என்பவர், ஊர் கூட்டத்திற்கு புஷ்ப ராஜை அழைக்க சென்று ள்ளார். பலமுறை சத்தம் போட்டும் புஷ்பராஜ் வராததால், திறந்திருந்த கதவின் வழியே ஜான்பீட்டர் எட்டி பார்த்தார். அப்போது, புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இது குறித்து, சந்தானமேரிக்கு தகவல் கொடுத்து, உடலை இறக்கி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், உடலை கைபற்றி, காரை க்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் மாடலில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் வசதி 10 நிமிட சார்ஜில் 180 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்குகிறது.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஸ் VS104 மேக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் மாடல் அதிகபட்சம் 25db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.

    இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, குவாட் மைக் ENC உள்ளிட்டவைகளின் மூலம் சிறப்பான காலிங் அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இன்ஸ்டாசார்ஜ் வசதி மூலம் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பிளேபேக் பெற முடியும்.

     

    நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் அம்சங்கள்:

    எர்கோனோமிக் டிசைன்

    13 மில்லிமீட்டர் டிரைவர்கள்

    ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி

    SBC, AAC கோடெக் சப்போர்ட்

    டச் கன்ட்ரோல்

    குவாட் மைக் மற்றும் ENC

    25db வரை ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

    டிரான்ஸ்பேரன்சி மோட்

    45 மணி நேரத்திற்கு பிளேபேக்

    ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    இன்ஸ்டா சார்ஜ் - 10 சார்ஜில் 180 நிமிடங்களுக்கு பிளேடைம்

    50ms வரை லோ லேடன்சி

    ஹைப்பர் சின்க் தொழில்நுட்பம்

    IPX5 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நாய்ஸ் பட்ஸ் VS104 மேக்ஸ் இயர்பட்ஸ் மாடலை அமேசான் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் அறிமுக சலுகையாக ரூ. 1699 விலையில் வாங்கிட முடியும். இந்த இயர்பட்ஸ் ஜெட் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    • நாய்ஸ் லுனா ரிங் குறைந்த எடை கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட் ரிங்-இல் பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி, டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய லுனா ரிங் மாடலை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாய்ஸ் நிறுவனம் ஸ்மார்ட் ரிங் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. பயனர் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், ஏராளமான அம்சங்கள், டிராக்கிங் வசதி உள்ளிட்டவைகளை லுனா ரிங் கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் போட் நிறுவனம் தனது ஸ்மார்ட் ரிங் மாடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த மாடல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாய்ஸ் லுனா ரிங் மாடல் சவுகரியமாக உணர செய்யும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 3 மில்லிமீட்டர் அளவில் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

     

    பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி மற்றும் டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டு இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், ஸ்கிராட்ச்களை தாங்கும் வகையிலும், எளிதில் துரு பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், உடல்நல விவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும்.

    நாய்ஸ் லுனா ரிங் அம்சங்கள்:

    குறைந்த எடை கொண்ட மிக மெல்லிய டிசைன்

    70-க்கும் அதிக உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி

    BLE 5 தொழில்நுட்ரம்

    நாய்ஸ்பிட் ஆப் வசதி

    மேம்பட்ட சென்சார்கள்

    பில்ட்-இன் அல்காரிதம்கள்

    உடல்நல சென்சார்கள்

    ஐஒஎஸ் 14-க்கு பிந்தைய மற்றும் ஆன்ட்ராய்டு 6-க்கு பிந்தய ஒஎஸ் சப்போர்ட்

    வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    60 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்

    7 அளவுகள் மற்றும் 5 வித நிறங்களில் கிடைக்கிறது

    முன்பதிவு மற்றும் சலுகை விவரங்கள்:

    லுனா ரிங் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்வோருக்கு பிரத்யேக தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

    - ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தி Early Access பெற முடியும்

    - வெளியாகும் நாளிலேயே வாங்கும் போது ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி

    - நாய்ஸ் i1 ஸ்மார்ட் ஐவேர் சாதனத்தை 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 4 ஆயிரத்து 499-க்கு வாங்கிட முடியும்

    - ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள காப்பீடு

    ×