என் மலர்
நீங்கள் தேடியது "boAt"
- போட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 30 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
- இந்த இயர்போனில் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ ஆப்ஷன்கள் உள்ளது.
போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து போட் நிர்வானா 525ANC மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிர்வானா 525ANC மாடலில் டால்பி ஆடியோ சப்போர்ட், ஹைப்ரிட் ANC, 11mm ஹை-ஃபிடிலிட்டி டிரைவர் போன்ற அம்சங்கள் உள்ளன.
மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் போட் நிர்வானா 525ANC மாடலில் 42db+ வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, நான்கு மைக்ரோபோன்கள், Enx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ வசதி உள்ளது.

புதிய போட் நிர்வானா 525ANC மாடலுக்கான செயலி கொண்டு பயனர்கள் டால்பி மூவி, டால்பி நேச்சுரல் போன்ற மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் அதிகபட்சம் இரண்டு சாதனங்களுடன் ஒரே சமயத்தில் கனெக்ட் ஆகும். இதில் உள்ள 180 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் கிடைக்கிறது. இத்துடன் ASAP சார்ஜிங் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். இதில் உள்ள குயிக் ஸ்விட்ச் பட்டன் மற்றும் பீஸ்ட் மோட் கொண்டு கேமிங் அனுபவம் மேம்படும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புதிய போட் நிர்வானா 525ANC மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. புதிய போட் நிர்வானா 525ANC மாடல் செலஸ்டியல் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்- ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போட் லூனார் கனெக்ட் ப்ரோ மாடலின் வரிசையில் புதிய ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலில் 1.91 இன்ச் HD டிஸ்ப்ளே, 2.5D வளைந்த டிசைன், 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. சீம்லெஸ் மற்றும் மெட்டல் டிசைன் கொண்டிருக்கும் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடல் ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் சிங்கில் சிப் ப்ளூடூத் 5.3 மூலம் ப்ளூடூத் காலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படு இருக்கிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன. இந்த வாட்ச் ஹார்ட் ரேட் மற்றும் உடலின் சுவாச அளவுகளை டிராக் செய்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும்.
போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இந்த வாட்ச்-இல் நேரலை கிரிகெட் ஸ்கோர்கள், வானிலை அப்டேட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயக்கும் வசதி உள்ளது.

போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் அம்சங்கள்:
1.91 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ்
2.5D வளைந்த டிசைன், மெட்டாலிக் ஃபிரேம்
ப்ளூடூத் 5.3
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ENx மூலம் இரைச்சல் இல்லா அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி
100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
உடல்நல டிராகிங் செய்யும் சென்சார்கள்
IP68 டஸ்ட், ஸ்வெட், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
300 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் ஏழு நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி
ஸ்மார்ட் அலெர்ட்கள்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ஸ்டார்ம் கனெக்ட் பிளஸ் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் அதிகரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிலாக், கூல் கிரே, டீப் புளூ மற்றும் மரூன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.
- மீனவர்கள் உதவியுடன் போலீசார் அந்த நாட்டு படகை மீட்டு வந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதில் மீனவர்கள் யாரும் இல்லை.
இதனை அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவர்கள் உதவியுடன் அந்த நாட்டு படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகில் லம்பாடி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவெண் எதுவும் எழுதப்படவில்லை.
கடற்கரையோர மாவ ட்டத்தில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த நாட்டு படகு ஏதேனும் கயிறு அறுந்து காற்றின் வேகத்தால் கடலுக்குள் இழுத்து வரப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படகின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.
- ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
- ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
கடல் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், தங்கள் பயணங்களில் கப்பல் அல்லது படகின் மேல்தளத்தில் இருந்து கடலின் அழகை ரசிப்பர்.
ஆழ்கடல் அழகை ரசிக்க நீர்மூழ்கி கப்பலில் செல்ல வேண்டும். இதற்கு அதிக செலவாகும். தற்போது இதற்கு மாற்றாக செமிசப் மெரின்' என் றழைக்கப்படும் விசைப் படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் அமர்ந்தபடி கடல் அழகை ரசிக்கலாம்.
கடலை காணும் வகையில் இரு புறமும் நீர் புகாத கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடலில் செல்லும் போது படகில் கீழடுக்கு 1.4 மீட்டர் அளவில் ஆழ்கடலில் பயணிப்பதால் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் ஆழ்கடல் அதிசயங்கள், பவளப் பாறைகள் மற்றும் அரிய வகை நீர் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.
இவ்வகை படகுகளில் செல்ல, பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த படகுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, அந்தமான் தீவுகளில் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திற்காக நாட்டிலேயே முதல்முறையாக புதுவையில் உள்ள பி.என்.டி.படகு கட்டும் தனியார் நிறுவனம், உப்பளம் துறைமுகத்தில் ரூ.4 கோடி செலவில் 'டிரை மரான்' எனும் செமி சப் மெரின் விசைப் படகு தயாரித்து வருகிறது. சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அலுமினியத்தால் 16 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், ஒரே நேரத்தில் 50 பேர் பயணிக்கும் வகையில் விசைப்படகு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதில், மேல் தளத்தில் 25 பேரும், கீழ் தளத்தில் 25 பேரும் பயணிக்கலாம். ஆழ்கடல் அழகை ரசித்திட படகின் இருபுறத்திலும் நீர் புகாத 14 கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடலில் செல்லும்போது படகு ஆடாமல் பயணிக்க இருபுறமும் இறக்கை போன்ற அமைப்புடன் படகு கட்டப்பட்டு வருவதால் இதன் பெயர் 'டிரை மரான்' என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
- பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
- 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றனர். அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்தது.
இதில் 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் IP68 தர ஸ்வெட் ரெசிஸ்டணட் வசதி உள்ளது.
- இதில் ஹார்ட் ரேட் சென்சார், SpO2 சென்சார் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் வேவ் லீப் கால் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாசட்ச் குறைந்த விலையில், அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய போட் வேவ் லீப் கால் மாடலில் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.83 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், IP68 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் வலதுபுறம் கரவுன் போன்ற பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.
உடல்நல அம்சங்களை பொருத்தவரை போட் வேவ் லீப் கால் மாடலில் ஹார்ட் ரேட் மாணிட்டர், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் தினசரி ஆக்டிவிட்டி டிராக்கர், சுவாச பயிற்சி போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் உள்ளன.

போட் வேவ் லீப் கால் மாடலில் பில்ட்-இன் மைக்ரோபோன், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் வசதி உள்ளது. பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 10 காண்டாக்ட்களை சேமிக்க முடியும். இத்துடன் டயல் பேட் உள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், சிரி போன்ற அம்சங்களும் உள்ளன. இவைதவிர மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல், வானிலை அப்டேட்கள், ஃபைண்ட் மை போன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் பட்சத்தில் மூன்று நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. இது 60 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது.
புதிய போட் வேவ் லீப் கால் மாடல் பிளாக், புளூ மற்றும் பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மார்ச் 20 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் HD ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது.
- இதில் உள்ள ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல்நல விவரங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் பெயரில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் அழகிய மெட்டாலிக் டிசைன், மென்மையான, சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலிகான் ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது. மேலும் இதன் சிலிகான் ஸ்டிராப்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன.
இத்துடன் 1.83 இன்ச் 2.5D HD 240x280 பிக்சல் டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட புதிய போட் ஃப்ளெக்ஸ் கனெக்ட் HD ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சம் பத்து காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ள முடியும். முழு சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-ஐ இரண்டு மணி நேரங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதில் ஏராளமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்வதோடு, உடல்நல விவரங்களையும் அறிந்து கொள்ள செய்கிறது. இத்துடன் கிரிக்கெட் ஸ்கோர், வானிலை விவரங்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் அம்சங்கள்:
1.83 இன்ச் HD 2.5D வளைந்த டிஸ்ப்ளே
பிரீமியம் மெட்டல் டிசைன்
சருமத்திற்கு உகந்த சிலிகான் ஸ்டிராப்கள்
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
பில்ட்-இன் வாட்ச் ஃபேஸ், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள்
10-க்கும் அதிக ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ஹார்ட் ரேட், SpO2, ஆக்டிவிட்டி டிராக்கர்
ஸ்லீப் மற்றும் செடண்டரி அலெர்ட்கள்
IP68 டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
240 எம்ஏஹெச் பேட்டரி, பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
ஸ்மார்ட் அலெர்ட்கள்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய போட் வேவ் ஃப்ளெக்ஸ் கனெக்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையாக ரூ. 1499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை போட் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிளாக், செர்ரி பிளாசம் மற்றும் டீப் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
- தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆறு உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மீனவர்கள் படகு மூலமாக மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தாழங்குடா பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, ராஜவேல், விஜயகுமார் ஆகிய 3 மீனவர்கள் தினந்தோறும் தென்பெண்ணையாற்றில் வலைகள் மூலம் மீன்பிடித்து செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம் போல் தென்பெண்ணை ஆறு கரையோரம் தங்கள் 3 படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றனர்.
இன்று காலை ஆற்றில் ஒரு சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகுகள் மற்றும் வலைகள் எரிந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சம்பந்தப்பட்ட தாழங்குடா மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தாழங்குடா மீனவர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து பார்வையிட்டனர்.
அப்போது படகு மற்றும் வலைகளுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் படகுகள் மற்றும் வலைகள் முழுவதும் எரிந்து சேதமாகி இருந்தது. தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான படகுகள் மற்றும் வலைகள் எரிந்து நாசமானது தெரிய வந்தது.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தென்பெண்ணை ஆற்று கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போட் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மேம்பட்ட க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட், ஹைபை DSP அம்சங்களை கொண்டிருக்கிறது.
- இந்த நெக்பேண்ட் இயர்போன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக போட் ராக்கர்ஸ் டிரினிட்டி வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போனினை அறிமுகம் செய்தது. புதிய நெக்பேண்ட் இயர்போன் ஹைபை DSP மற்றும் க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. போட் ராக்கர்ஸ் அபெக்ஸ் மாடலை தொடர்ந்து புதிய இயர்போன் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய போட் நெக்பேண்ட் இயர்போன் சிக்னேச்சர் சவுண்ட் மோட், ஃபிலெக்சிபில், குறைந்த எடை கொண்டிருக்கிறது. இத்துடன் முழு சார்ஜ் செய்தால் 150 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 24 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.

இதில் உள்ள ENX தொழில்நுட்பம் அழைப்புகளின் போது க்ளியர் ஆடியோவை வெளிப்படுத்துகிறது. மேலும் லோ லேடன்சி BEAST மோட் ஆடியோ அனுபவத்தை கேமிங்கின் போது மேம்படுத்துகிறது.
போட் ராக்கர்ஸ் டிரினிட்டி இயர்போன் அமச்ங்கள்:
ஹைபை DSP சார்ந்த க்ரிஸ்டல் பயோனிக் சவுண்ட்
போட் சிக்னேச்சர் சவுண்ட்
10mm டிரைவர்கள்
ப்ளூடூத் 5.2, டூயல் பேரிங்
பீஸ்ட் மோட், லோ லேடன்சி
ENx தொழில்நுட்பம்
பட்டன் கண்ட்ரோல்
IPX சான்று
220 எம்ஏஹெச் பேட்டரி
அதிகபட்சம் 150 மணி நேர பிளேபேக்
ASAP சார்ஜ்
டைப் சி சார்ஜிங்
ஒரு வருட வாரண்டி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ராக்கர்ஸ் டிரினிட்டி நெக்பேண்ட் இயர்போன் காஸ்மிக் பிளாக், ஜஸ்ட் புளூ மற்றும் கட்ச் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நடைபெறுகிறது.
- போட் நிறுவனத்தின் புதிய இயர்போன் THX டியூனிங் செய்த ஆடியோ அனுபவம் வழங்குகிறது.
- மேலும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஆடியோ மோட்களை ஸ்விட்ச் செய்ய விசேஷ பட்டன் உள்ளது.
போட் நிறுவனம் தனது புதிய நெக்பேண்ட், ராக்கர்ஸ் 378 இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. புது நெக்பேண்ட் இயர்போன் அளவில் பெரிய டைனமிக் டிரைவர்கள், 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் தொழில்நுட்பம், THX சார்பில் டியூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. போட் இம்மார்டல் 121 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
போட் ராக்கர்ஸ் 378 மாடல் பயனர்களுக்கு அதிக சவுகரியத்தை வழங்கும் நோக்கில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மென்மையான சிலிகான், எடை குறைந்த ஃபிரேம் கொண்டிருக்கிறது. இதன் நெக்பேண்ட்-இல் இயர்போனை கண்ட்ரோல் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. மேலும் இயர்பட்களில் காந்தம் உள்ளது.

ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் போட் ராக்கர்ஸ் 378 மாடல் 200 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 25 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. ராக்கர்ஸ் 378 மாடலில் உள்ள 10mm டைனமிக் டிரைவர்களை THX டியூனிங் செய்து 3D ஸ்பேஷியல் பயோனிக் சவுண்ட் வழங்குகிறது.
இந்த தொழில்நுட்பம் அதிநவீன சரவுண்ட் சவுண்ட், முப்பரிமாண கோணத்தில் ரியலிஸ்டிக் ஆடியோ மற்றும் பொசிஷனல் அக்யுரசி வழங்குகிறது. இதில் உள்ள ஸ்பெஷல் பீஸ்ட் மோட் ஆடியோ லேடன்சியை 65ms வரை குறைக்கும். மோட்களிடையே மாறிக் கொள்ள பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, போட் பாரம்பரிய சவுண்ட் உள்ளிட்டவை கேமிங்கிற்கு ஏற்ற இயர்பட்ஸ் ஆக மாற்றுகிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
போட் ராக்கர்ஸ் 378 மாடல்- ஆக்டிவ் பிளாக், எலெக்ட்ரிக் புளூ, மிட்நைட் புளூ மற்றும் வைப்ரண்ட் ரெட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை போட் லைஃப்ஸ்டைல், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.