search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "haryana"

    • ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
    • 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

    மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

    இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

    • உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சாலையில் இருந்த பள்ளத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் மீண்டும் உயிர் பெற்றார்

    ஹரியானா-வை சேர்ந்த 80 வயதான முதியவர் தர்ஷன் சிங் பிரார். உடல் நலம் சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து கர்னால் அருகே உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது இல்லத்தில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் கைதலில் உள்ள தண்ட் கிராமத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, பள்ளத்தில் சிக்கியது. அதன் பின்னர் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தர்ஷன் சிங் பிராரின் கைகளில் அசைவு ஏற்பட்டது. அதனை கவனித்த குடும்பத்தினர், அருகில் உள்ள ராவல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் சிங் உயிருடன் இருப்பதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து தர்ஷன் சிங்-ன் பேரனான பல்வான் சின் கூறுகையில், "உடல் நலம் சரியில்லாத நிலையில் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவர் நான்கு நாட்களாக வெண்டிலேட்டரில் இருந்தார். பின்னர் இதய துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தார். உயிரிழந்ததாக எண்ணிய 80 வயதான முதியவர் இப்போது கர்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அதனைதொடர்ந்து "தாத்தா இப்போது உயிருடன் இருப்பது ஒரு அதிசயம், அவர் விரைவில் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.

    இதுகுறித்து ராவல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது, "நோயாளி இறந்துவிட்டார் என சொல்ல முடியாது. அவரை எங்களிடம் கொண்டு வந்த போது, அவருக்கு மூச்சு திணறல் இருந்தது, இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு இருந்தது. மற்ற மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது என்றும், தொழில்நுட்ப பிழை ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறினர்

    • எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
    • குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

    அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.

    துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

    • ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது
    • ரிக்டர் அளவுகோளில் 3.1 என இந்த நில அதிர்வு பதிவாகியது

    இந்திய தலைநகர் புது டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நகர்புற பகுதிகளில் இன்று மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று மாலை 04:08 மணியளவில் அரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரிலிருந்து கிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், டெல்லிக்கு தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, ரிக்டர் அளவுகோளில் 3.1 என பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறி சாலைகளில் கூடி விட்டனர்.

    இது குறித்து அவசர கால பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ள டெல்லி காவல்துறை, லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும், கட்டிடங்கள், மரங்கள், சுவர்கள், தூண்கள் ஆகியவற்றின் அருகே நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி காவல்துறை, அவசர உதவிக்கு 112 எனும் எண்ணை அழைக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளது. இத்துடன் நில அதிர்வு காலங்களில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது.

    புது டெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இது உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தலைநகர் டெல்லியில் இம்மாதம் இது இரண்டாவது முறையாக நடைபெறும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாத தொடக்கத்தில் டெல்லியை உள்ளடக்கிய வட இந்திய பகுதிகளில் அடுக்கடுக்காக ஏற்பட்ட நில அதிர்வுகள் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்ஸோ நிர்வகிக்கிறது
    • "நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்" என ஒருவர் உரக்க கூறுகிறார்

    இந்தியாவின் வடக்கில் உள்ள மாநிலம் அரியானா. இங்குள்ள தொழில்துறையில் பிரசித்தி பெற்ற பல்வேறு உற்பத்தி சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் சோனிபெட். இங்கு புகழ் பெற்ற ஓ.பி. ஜிண்டால் குளோபல் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது.

    2009-ல், இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரான நவீன் ஜிண்டால், தனது தந்தையான ஓ.பி. ஜிண்டால் நினைவாக சேவை நோக்கில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இந்த பல்கலைகழகத்தில் 12 கல்வி நிறுவனங்கள் மூலமாக சட்டக்கல்வி, கலை, அறிவியல், வணிக மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் 45 கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுளிலிருந்தும் இங்கேயே தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கேயே தங்கி கல்வி பயிலும் மாணவர்களின் உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்சோ நிர்வகித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விடுதி மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது.

    அதில், ஒரு மிக பெரிய அண்டாவில் மிக அதிகமான அளவில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கைகளாலோ, இயந்திரங்களாலோ பிசைவதற்கு பதிலாக ஒரு அரை டிராயர், தொப்பி மற்றும் சட்டை அணிந்த பணியாளர் கால்களாலேயே நசுக்குகிறார்.

    இந்த வீடியோவின் பின்னணியில், "நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்" என ஒருவர் உரக்க கூறுவதும் கேட்கிறது.

    இந்த சுகாதாரமற்ற செயலை வீடியோவில் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்செயலை எதிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து அங்கு உணவு உண்ண மறுத்தனர்.


    இதனையடுத்து பலகலைக்கழக நிர்வாகம், இந்த சம்பவம் குறித்த சொடெக்சோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு
    • சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அகற்றும் பணியை மேற்கொண்டது மாவட்ட நிர்வாகம்

    ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள்.

    யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து கல்வீச்சு நடைபெற்றது. இதில் பாதுகாப்புக்காக இருந்த காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன.

    இதனையடுத்து இரு பிரிவினருக்கிடையே வன்முறை மூண்டது.

    கடந்த சில நாட்களாக குருகிராம் பகுதியிலும் இந்த வன்முறை பரவியது. இரண்டு ஊர்க்காவல் படையினர் மற்றும் 1 மதகுரு உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் காவல்துறை மும்முரமாக ஈடுபட்டது. மாநிலத்தில் சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு இதில் சம்பந்தம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து சட்டவிரோத ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு எதிராக அரியானாவின் நூ மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தொடங்கியது.

    நேற்று முன்தினம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக வன்முறையால் பாதிக்கப்பட்ட நூ பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டவ்ரு பகுதியில் வசிக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.

    பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர்களை கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மூன்றாம் நாளான இன்று காலை நல்ஹர் பகுதியில் உள்ள ஷாஹீத் ஹசன் கான் மேவதி அரசு மருத்துவக் கல்லூரியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே இருந்த 20-க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மெடிக்கல் கடைகள் புல்டோசரை கொண்டு இடிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாக குழுக்கள் முன்னிலையில் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தது. பல்வேறு பகுதிகளில் உள்ள 50 முதல் 60 கட்டடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பலர் ஓடிவிட்டனர். கடந்த பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    உள்ளூர் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சியின் துணை தலைவருமான அஃப்தாப் அகமது, இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ''கல்வீச்சு நடைபெற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் மேல் மாடியில் அதிகளவில் கற்கள் சேகரிக்கப்பட்டதை கொண்டு இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தோன்றுகிறது. மோதல்கள் தொடர்பாக இதுவரை 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று அரியானாவின் உள்துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று தெரிவித்தார்.

    இதுவரை 102 முதல் தகவல் அறிக்கை காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    • பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார்
    • தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்

    நம்மில் பலர் ஓரிரு முறை முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்பட்டால் உடனே அந்த முயற்சியை கை விடுபவர்களாக இருப்போம். ஆனால் ஒரு சிலர், எத்தனை முறை தோல்வியுற்றாலும், அதில் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இறுதியில் வெற்றி அடைவார்கள்.

    அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை கதை முன்னேற துடிப்பவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் அரியானாவை சேர்ந்த விஜய் வர்தன்.

    இவர் அரியானாவின் சிர்சாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.

    பின்னர் இந்திய நிர்வாக சேவைகளுக்கான போட்டி தேர்வான யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுத விரும்பினார். கடினமான தேர்வான அதற்கு தயாராவதற்காக டெல்லி சென்றார்.

    அப்பொழுதே அவர் சுமார் 35 முறை பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார்.

    ஆனாலும் மனம் தளரவில்லை. மீண்டும் முயன்று யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதி 2018ம் வருடம் 104வது இடத்தை பிடித்து வெற்றி கண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அவர் அத்துடன் திருப்தி அடையவில்லை.

    தனது வெற்றி தோல்விகளை ஆராய்ந்த விஜய் வர்தன், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்.

    மீண்டும் அந்த தேர்வை எழுதி 2021ல் தேர்ச்சி பெற்று, தற்போது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறார்.

    தோல்விகள் அனைத்தும் அவரது நம்பிக்கையை குறைக்கவில்லை. தனது இலக்கில் கவனம் செலுத்தி, தனது திறமைகளை மட்டுமே நம்பினார். அவரது விடாமுயற்சியின் விளைவு, அவர் இப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார்.

    "எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்" என்பதுதான் இளைஞர்களுக்கு விஜய் வர்தன் கூறும் அறிவுரை.

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.

    கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.
    • கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

    குருஷேத்ரா:

    பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் சக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற கருத்து கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், சுக்பீர் சிங் பாதலின் அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டாம் என்று கட்சி தலைமை கேட்டுக்கொண்டது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிரோமணி அகாலி தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து விலகினர். மேலும், அவர்கள் ஒன்றிணைந்து அரியானாவில் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இது சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    கட்சியில் இருந்து வெளியேறியவர்களில் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் அசந்த், எஸ்ஜிபிசியின் சிர்சா உறுப்பினர் குர்மீத் சிங் திலோகேவால் மற்றும் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி ஆகியோர் முக்கியமானவர்கள்.

    கர்னாலில் நடந்த கூட்டத்தில், புதிய கட்சியை வழிநடத்த ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாக ஒரு தலைவர் கூறினார். இந்தக் குழு அடுத்த இரண்டு மாதங்களில் அரியானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சீக்கியர்களை கட்சியில் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதன்பின்னர், கர்னாலில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, அதில் மாநில செயற்குழு அறிவிக்கப்படும் என்றும் அந்த தலைவர் தெரிவித்தார்.

    • தேசியக் கொடிக்காக ஏழை மக்களிடம் ரூ.20 கேட்பது வெட்கக்கேடானது என ராகுல் கண்டனம்.
    • ரேஷன் கடை விற்பனையாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

    சண்டிகர்:

    நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் வரும் 15ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், வீடு தோறும் தேசியக் கொடி ஏற்றும் 'ஹர் கர் திரங்கா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவகங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தின் கர்னால் மாவட்டத்தில் உள்ள ஹெம்டா கிராமத்தில் ஒரு ரேஷன் கடையில் 20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஏழை மக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து செய்தி இணையதளம் வெளியிட்ட பதிவில், தேசியக் கொடியை வாங்கா விட்டால் ரேஷன் பொருட்கள் மறுக்கப் படுவதாகவும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டினர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், அந்த ரேஷன் கடை ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 


    வாங்கத் தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே 20 ரூபாய்க்கு ரேஷன் கடைகள் மூலம் தேசிய கொடி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்னால் துணை ஆணையர் அனிஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஏழை மக்களிடம் தேசியக் கொடிக்காக ரூ.20 கேட்டு கட்டாயப்படுத்துவது வெட்கக்கேடானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 


    தேசியத்தை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் பொருட்கள் கொடுக்கும்போது, ஏழை மக்களிடம் மூவர்ணக் கொடிக்காக 20 ரூபாய் வசூலிப்பது வெட்கக்கேடானது. மூவர்ணக்கொடியுடன், பாஜக அரசு நம் நாட்டு ஏழைகளின் சுயமரியாதை மீது தாக்குதல் நடத்துகிறது என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அரியானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சீக்கிய மக்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார். #PMModi #ElectionCampaign
    பதேபாத்:

    அரியானா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதேபாத் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:

    உலகில் ஏதேனும் ஒரு நாட்டினை, பாதுகாப்பு இல்லை என்றால் சக்திவாய்ந்த நாடு என கருத முடியுமா? , மகா கூட்டணியோ அல்லது காங்கிரசோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தான் பேச முடியுமா? நிச்சயம் முடியாது. அவர்கள் வரலாற்றில் கூட நாட்டின்  பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்க முடியாது.



    கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக  நடந்த தாக்குதல்களில் சீக்கியர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். இதன் காரணமாக சீக்கியர்களுக்கு கொடுமை இழைத்தவர்களை தண்டிப்பேன் என உங்கள் காவலாளியான நான், அவர்களுக்கு அளித்த சத்தியத்தினை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

    அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை எண்ணி ஆறுதல் அடைகிறேன். ஆனால் காங்கிரசோ, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராட்டி பேசுகிறது. இதிலிருந்தே அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்பது புரிகிறது.

    மக்கள் என் மீதும், பாஜக மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை நான் உணர்வேன். பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. உங்களுக்காக இந்த காவலாளி என்றும் பணியாற்றுவான்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #ElectionCampaign    
    அரியானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ஆணவத்தால் அழிந்தவன் துரியோதனன் என மோடிக்கு எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
    சண்டிகர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, நம்பர் ஒன் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் அம்பாலாவில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    மத்தியில் உள்ள பாஜகவினர் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லையென்றால் எனது குடும்பத்தை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    ஆணவத்தை இந்தியா ஒருபோதும் மன்னித்தது இல்லை. இதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. சிறந்த இதிகாசமான மகாபாரதத்திலும் இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கவுரவர்களின் அரசனான துரியோதனனிடம் ஆணவம் இருந்ததாலேயே அவர் அழிந்தார் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Modi #Duryodhana
    ×