என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "syed mushtaq ali trophy"

    • முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

    உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அரியானா அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி தனது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.

    • சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது.
    • அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்

    உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன.

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது. இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் அரியானா அணி களமிறங்கவுள்ளது.

    • சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது.
    • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.

    புனே:

    உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசம், பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்க்கண்ட், ஐதராபாத், அரியானா ஆகிய 8 அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    இந்த அணிகள் தலா 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. பிரிவு 1ல் மும்பை, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான் அணிகளும், பிரிவு 2ல் பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் அணிகளும் உள்ளன.

    இந்த அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதின. அதன் முடிவில் ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.

    இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெறுகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் ஜார்க்கண்ட்- அரியானா அணிகள் மோதவுள்ளன.

    இரு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சையத் முஷ்டாக் டிராபியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் விளையாடியுள்ளார்.
    • போட்டி முடிந்த பிறகு அவருக்குத் திடீரென கடுமையான வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 216 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி முடிந்த பிறகு அவருக்குத் திடீரென கடுமையான வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால், உடனடியாக அவர் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், அவருக்குத் தீவிரமான இரைப்பை குடல் அழற்சி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    சிகிச்சைக்குப் பிறகு, அவர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டு முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்திய அணியின் நட்சத்திர இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த அரியானா 20 ஓவரில் 234 ரன்கள் குவித்தது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று புனேயில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அரியானாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த அரியானா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. கேப்டன் அங்கித்குமார் 89 ரன்னும், நிஷாந்த் சிந்து 63 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 235 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 17.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜெய்ஸ்வால் 50 பந்தில் ஒரு சிக்சர், 16 பவுண்டரி உள்பட 101 ரன்னும், சர்ப்ராஸ் கான் 64 ரன்னும் குவித்தனர்.

    சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரு அணி விரட்டிப் பிடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    மும்பை அணி தான் ஆடிய இரு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான இஷான் கிஷன் 30 பந்தில் 5 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்தார்.

    மத்திய பிரதேச அணி சார்பில் வெங்கடேஷ் அய்யர் 3 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்ஷ் கவாலி 61 ரன்னில் அவுட்டானார்.

    ஹர்பிரீத் சிங் பாட்டியா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை வெற்றிக்கு போராடினார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணி திரில் வெற்றி பெற்றது.

    ஜார்க்கண்ட் அணி தான் ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.

    அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.
    • சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளார்.

    அகமதாபாத்:

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன.

    இந்த நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் 6-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா, சையத் முஷ்டாக் அலி தொடருக்காக மும்பை அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • சாய் சுதர்சன் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார்.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளார்.

    சென்னை:

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அகமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் 'எலைட்' பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே, தமிழக அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் துணை கேப்டனாக இருந்த என்.ஜெகதீசன் எஞ்சிய போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்சன் துணை கேப்டன் பொறுப்பை கவனிப்பார். தமிழக அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் இன்று திரிபுராவை ஆமதாபாத்தில் (மாலை 4.30 மணி) சந்திக்கிறது.

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் இன்றைய ஆட்டம் ஒன்றில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
    • இதில் பரோடா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சையத் முஷ்டாக் அலி தொடர் இந்தியாவில் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பரோடா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி 19.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் பரோடா அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது களத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் ஹர்திக் பாண்ட்யாவுடன் செல்பி எடுத்தக் கொண்டார். இதனையடுத்து அந்த ரசிகரை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். செல்பி எடுத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் துள்ளி குதித்துக் கொண்டு வெளியேறினார். அவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 177 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து விளையாடிய மகாராஷ்டிரா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மகாராஷ்டிரா (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    முன்னதாக இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அதன்படி சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் 61 பந்துகளில் 108 ரன்களை விளாசினார். 14 ஆண்டுகள் 250 நாட்களில் வைபவ் சதம் அடித்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

    • சையத் முஷ்டாக் அலி தொடரின் லீக் போட்டியில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் இன்று மோதினர்.
    • இந்த ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 72 ரன்கள் விளாசினார். டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.'

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவரில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டும் இழந்திருந்தது. இதனால் கடைசி 5 ஓவரில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் டெல்லி அணி விளையாடியது.

    பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அதனை ஹிம்மாட் சிங் வேகமாக சுற்றினார். அந்த பந்து பவுண்டரி லைனில் நின்ற ஷாருக்கானிடம் சென்றது. அதனை பார்த்த அவர் உடனே முன்னாடி வந்தார். ஆனால் பந்து பின் நோக்கி செல்வதை அறிந்து மீண்டும் பின்னாடி போய் பந்தை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் பந்து அவரின் கையில் பட்டு சிக்சர் ஆனது.

    இதனால் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டியில் விளையாடும் தமிழக அணிக்கு மீண்டும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

    ×