என் மலர்
நீங்கள் தேடியது "ஜெய்ஸ்வால்"
- முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் அடித்தார்.
- இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து 269 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜடேஜா 89 ரன்களும் ஜெய்ஸ்வால் 87 ரன்களும் அடித்து அவுட்டாகினர்.
இதனை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 87 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து, சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை ஜெயிஸ்வால் முறியடித்தார். முன்னதாக சுனில் கவாஸ்கர் 21 போட்டிகளில் 2,000 ரன்களை கடந்திருந்ததே சாதனையாக இருந்தது.
இருப்பினும், 40 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட், சேவாக் உடன் ஜெயிஸ்வால் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
- ஜெய்ஸ்வால் மட்டும் 4 கேட்ச்சுகளை மிஸ் செய்துள்ளார்.
- முதல் இன்னிங்சில் மட்டும் 5 கேட்ச்சுகளை இந்திய வீரர்கள் மிஸ் செய்துள்ளனர்.
லீட்ஸ்:
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி 250 ரன்களுக்கு மேல் 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமாராக பீல்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்ச் மிஸ் செய்துள்ளார். ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 1 கேட்ச்சை மிஸ் செய்தனர்.
முதல் இன்னிங்சில் தான் கேட்ச் மிஸ் செய்தார்கள் என நினைத்தால், 2-வது இன்னிங்சிலும் கேட்ச் மிஸ் செய்துள்ளனர். அந்த வகையில் பென் டக்கெட் 97 ரன்களில் ஆடி கொண்டிருந்தபோது சிராஜின் பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இதனால் கடுப்பான சிராஜ் ஜெய்ஸ்வாலை பாத்து கத்தினார்.
இதனை தொடர்ந்து கிராலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை பும்ரா தவறவிட்டார். அது கொஞ்சம் கடினமான கேட்ச் என்றே சொல்லலாம். இதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரூட் கேட்ச்சை மிஸ் செய்தார். அவர் பந்து பிடிப்பதற்குள் ஸ்டெம்பிங் செய்ய முயற்சி செய்ததால் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
அடுத்த சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆட முயற்சிக்கும் போது அவரது கையில் பட்டு பந்து மேலே செல்லும் ஆனால் ரிஷப் பண்ட் பந்தை முன்னாடி தேடுவாரே தவிர சற்று மேலே பார்க்காமல் இருப்பார். இதனால் ஜடேஜாவும் ராகும் கோபமடைந்தனர்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்திய வீரர்களை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வாலை வசைபாடி வருகின்றனர்.
- 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.
- 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹெட்டிங்லி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147), ரிஷப் பண்ட் (134) சதம் விளாசினார்.
இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே ஒரு இன்னிங்சில் சதம் விளாசி மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் சாதனை பட்டியில் இந்த மூன்று பேரும் இணைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக,
* 1986-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
* 2002 இதே மைதானத்தில் லீட்ஸ் (ஹெட்டிங்லி) மைதானத்தில் ராகுல் டிராவிட், சச்சின் தெண்டுல்கர், கங்குலி சதம் அடித்துள்ளனர்.
* 2006-ல் வெஸ்ட் இண்டீஸ் கிராஸ் ஐஸ்லெட்டில் சேவாக், ராகுல் டிராவிட், கைஃப் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
* அதன்பின் தற்போது ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
- இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.
- இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக தான் விளையாடிய முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதன்மூலம் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் போட்டியில் 101 ரன்கள் குவித்து இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் இந்தியா 359 ரன்கள் குவித்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினர்.
3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சுப்மன் கில் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.
3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் இறங்கினார்.
இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்னும், ரிஷப் பண்ட் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
- ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து கில், ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.
- ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நினைக்கிறேன்.
- ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். காலில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாத நிலையிலும் வீல் சேரில் அமர்ந்து கொண்டு அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு அற்புதமான மனிதரை பெற்றிருப்பது பாக்கியம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் புகழாரம் சூட்டியுள்ளார்.
ராகுல் டிராவிட் தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
ராகுல் டிராவிட் நம்ப முடியாத அசாத்தியமான மனிதர். ராகுல் டிராவிட்டை போன்ற ஒருவரை இந்த காலக்கட்டத்தில் பெற்றிருப்பது பாக்கியம். ராகுல் டிராவிட் ஒரு அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். ஆதரவானவர், அக்கறையுள்ளவர், எப்போதும் அனைவரையும் கவனித்துக் கொண்டிருப்பவர்.
அவர் வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். வீரர்கள் சரியான இடத்தில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதையும் உறுதிசெய்கிறார். இது தனிப்பட்ட வீரரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும் ஒட்டுமொத்த அணிக்கும் மிகவும் முக்கியமானது.
கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமல்ல, மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை எப்படி நடத்துகிறார் என்பதையும் கற்றுக்கொள்ள அவரை நெருக்கமாக பார்ப்பது ஒரு வாய்ப்பாகும். அவர் பல ஆண்டுகளாக இவ்வளவு நேர்த்தியையும் அமைதியையும் பராமரித்து வருகிறார். மேலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
இவ்வாறு ஜெய்ஸ்வால் ராகுல் டிராவிட்டை புகழ்ந்து கூறினார்.
- முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது.
- ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 57 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 14வது ஓவரிலேயே இலக்கை எட்டியது.
துவக்க வீரர் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டினார். 13 பந்துகளில் அரை சதம் கடந்த ஜெய்ஸ்வால், தொடர்ந்து பந்துகளை பவுண்டரி சிக்சர்களாக பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
13 ஓவர் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஜெய்ஸ்வால் 97 ரன் எடுத்திருந்தார். 14வது ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்து சதத்தை நிறைவு செய்து, வெற்றியை எட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்தில் அவர் பவுண்டரி அடித்தார்.
எனவே 41 பந்துகள் மீதமிருந்த நிலையில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 98 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் 6-வது வெற்றி பெற்றது.
- கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன்.
கொல்கத்தா:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 13.1 ஓவரில் ஒரு விக்கெட் டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்கள் குவித்தார். அவர் 13 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
மைதானத்துக்குள் சென்று நன்றாக விளையாட வேண்டும் என்று என் மனதில் எப்போதும் இருக்கும். நாங்கள் வெற்றி பெற்றது நல்ல உணர்வை அளிக்கிறது. எல்லாம் சரியாக நடந்தது போல் இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
செயல்முறை மிகவும் முக்கியம். கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன். ரன் ரேட்டை உயர்த்த விரும்பினேன். சதத்தை பற்றி நான் யோசிக்கவில்லை.
இதுபோன்று நடப்பது இயல்பு. சஞ்சு சாம்சன் என்னிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். சிறந்த வீரர்களுடனும் விளையாடுவது பாக்கியம். இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்றார்.
- கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று 56-வது லீக் போட்டியில் கொல்கத்தா -ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.
முன்னதாக இந்த போட்டியில் சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதமடித்தது போலவே சதத்தையும் நெருங்கினார். அந்த நிலைமையில் சூயஸ் சர்மா வீசிய 12.3 -வது பந்தில் பவுண்டரி அடித்த அவர் 4-வது பந்தில் ரன்கள் எடுக்காத நிலையில் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 94* ரன்களை எட்டினார். அந்த நிலைமையில் கடைசி பந்தை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் தாம் 48* ரன்களில் இருந்த போது அரை சதமடிக்கலாம் என்ற சுயநலமின்றி அப்படியே தடுத்து நிறுத்தி அடுத்த பந்தில் சிக்சர் அடித்து சதமடிக்குமாறு ஜெயிஸ்வாலுக்கு கையை உயர்த்தி மகிழ்ச்சியுடன் சிக்னல் கொடுத்தார்.
குறிப்பாக 2014 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றியை உறுதி செய்த விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது புதிதாக களமிறங்கிய கேப்டன் டோனி ஒரு ஓவரின் கடைசி பந்தில் அடிப்பதற்கேற்றார் போல் பந்து நன்றாக வந்தும் அப்படியே தடுத்து நிறுத்தி விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல இந்த போட்டியில் பெருந்தன்மையுடன் சுயநலமின்றி கேப்டனுக்கு அடையாளமாக சஞ்சு சாம்சன் செயல்பட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்து பாராட்ட வைத்தது.
ஆனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க கூடாது என்பதற்காக அதே கடைசி பந்தை வேண்டுமென்றே சூயஸ் சர்மா ஒய்ட் போல லெக் சைட் வீச முயற்சித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் சுதாரித்த சஞ்சு சாம்சன் இடது புறமாக நகர்ந்து சென்று அடிக்காமல் ஒய்ட் பந்தாக மாறாமல் தடுத்து நிறுத்தினார். அதற்கடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி மட்டுமே அடித்து 98* ரன்கள் எடுத்து சதத்தை நழுவ விட்டது வேறு கதை. ஆனால் ஒய்ட் போட்டு அதில் 1 ரன் எக்ஸ்ட்ரா வழங்கி மீண்டும் பந்து வீசினால் சஞ்சு சாம்சன் வெற்றி பெறும் ரன்களை எடுப்பார். அதனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
— Billu Pinki (@BilluPinkiSabu) May 12, 2023
அத்துடன் ஏற்கனவே ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக இதே போல் கடைசி பந்தில் சதமடிக்கும் வாய்ப்பை பெற்ற சேவாக் சிக்சர் அடித்து 100 ரன்களை தொட்ட போதிலும் சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே நோபால் வீசி அதை தடுத்த கேவலமான திட்டத்தை யாராலும் மறக்க முடியாது.
கிட்டத்தட்ட இந்த போட்டியில் தங்களது பிளே ஆப் சுற்று வாய்ப்பைப் பறித்த ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கொல்கத்தா மற்றும் சூயஸ் சர்மா அவ்வாறு செயல்பட்டதால் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
- ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
- எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் அணி விளையாடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசினார். அதில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.
ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும் என கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.
இது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது:-
ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.
ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.
மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது.
இவ்வாறு நிதிஷ் ராணா கூறினார்.
- ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார்.
பெங்களூரு:
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.
அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்தவீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரது பேட்டிங் திறமையை பலரும் பாராடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை, பெங்களூரு வீரர் விராட் கோலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கோலி, சமீபத்தில் தான் பார்த்த மிகச்சிறப்பான பேட்டிங் என்றும், ஜெய்ஸ்வாலின் திறமை அற்புதமானது என்றும் கோலி குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கூறுகையில்:- நான் மட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இருந்தால் நிச்சியமாக ஜெய்ஸ்வால்-ஐ இன்றே தேர்வு செய்து உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வைத்திருப்பேன். ஏனென்றால் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகிறார்.
அதேபோல ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ரெட் லீ அவரது ட்விட்டர் பக்கத்தில் சூப்பராக விளையாடுகிறார் ஜெய்ஸ்வால். இப்பொழுதே அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.
இதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்த அதிரடி தொடருங்கள் என கூறியிருந்தார்.