என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை 2025"
- சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது.
- பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.
சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அப்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற இந்தியா மறுத்தது.
இதையடுத்து, அந்தக் கோப்பையை மோசின் நக்வி கொண்டு சென்றார். இந்திய அணியினர் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர். இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கோப்பையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐயும் வலியுறுத்தியது.
அதற்குப் பதிலளித்த நக்வி, கோப்பையை தாம்தான் வழங்குவேன் எனவும் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடர்பாக அன்றைய இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட திலக் வர்மா, தற்போது அதுகுறித்த புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் உண்மையில் ஒரு மணிநேரம் மைதானத்தில் காத்திருந்தோம். டிவி காட்சிகளைப் பார்த்தால், நான் தரையில் படுத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். மீதமுள்ளவர்களும் தரையில் படுத்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் ரீல்ஸ் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாங்கள் காத்திருந்தோம், 'கோப்பை எப்போது வேண்டுமானாலும் வரும்' என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நாங்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கோப்பை வரவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, கோப்பையைப் பெறப் போவதில்லை என்பதை அறிந்ததும், அர்ஷ்தீப் சிங்தான் ஒரு ஐடியா கொடுத்தார்.
கோப்பையை தவிர்த்து கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார். அபிஷேக் சர்மா உள்ளிட்ட நாங்கள், மேலும் 5-6 பேருடன் சேர்ந்து, அதற்கு ஒப்புதல் அளித்தோம். பின்னர் அதையே செய்து காட்டினோம்.
என திலக் வர்மா கூறினார்.
- சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
- ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்டனர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார். இதனால் கோப்பையை இந்தியாவிடம் கொடுக்க மோசின் நக்வி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்குமாறு பிசிசிஐ சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தான் இருக்கும் வரை கோப்பையை வழங்கும் உரிமையை வேறு யாருக்கும் தர மாட்டேன் எனக் கூறி மோசின் நக்வி கூறினார்.
இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வி, பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் வரும் நவம்பர் 10-ம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோப்பையை தாம் தான் வழங்குவேன் என்றும் மோசின் நக்வி அதில் மீண்டும் கூறியிருக்கிறார்.
- இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும்.
- மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள்.
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.
தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மொசின் நக்வி செய்வது முற்றிலும் சரியானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூசப் கூறியுள்ளார்.
தலைவர் (மொசின் நக்வி) செய்வது முற்றிலும் சரியானது. அவர் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும். ஏ.சி.சி மற்றும் ஐ.சி.சி விதிகளின்படி, அவர் ஏ.சி.சி தலைவராக அங்கே நின்று கொண்டிருந்தார். மேலும் கோப்பை அவரது கைகள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அந்த நேரத்தில் அதை வாங்கவில்லை. இப்போ என்ன அவசரம்? கோப்பையை வாங்க வேண்டும் என நினைச்சிருந்தால், நீங்கள் போய் அலுவலத்தில் அதை வாங்கிருக்க வேண்டும்.
மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள். நான் அன்றும் அதைச் சொன்னேன். அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து வெளியே வருவதில்லை. இது விளையாட்டு, இது கிரிக்கெட், இங்கே திரைப்படங்கள் ஓடாது.
என்று அவர் கூறினார்.
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை வென்றது.
- இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மாவை நடிகர் சிரஞ்சீவி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
'மன சங்கர வர பிரசாத் காரு' என்ற படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகை நயன்தாரா, இயக்குநர் அநில் ரவிபுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது.
- இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என கட்டளை பிறப்பித்துள்ளார். இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், 'ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை தன்னுடைய அனுமதியின்றி எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது. யாரிடமும் வழங்கக்கூடாது என்று தலைவர் மொசின் நக்வி தெளிவாக தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையை தனது கையால் வழங்க வேண்டும் என்பதில் மொசின் நக்வியும், அவரிடம் இருந்து வாங்கக்கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் பிடிவாதமாக இருப்பதால் ஆசிய கோப்பை விவகாரத்தில் இப்போதைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை' என்றனர்.
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது.
- இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து பேசிய நக்வி, "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அணி வீரர்கள், அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் கையால் வாங்க மறுத்த, இந்திய வீரர்களின் செயலை சுட்டிக்காட்டி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து பேசி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பது இந்திய அணிக்கு நெருடலாக உள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் தான் பார்க்கவேண்டும். விளையாட்டு என்பது அனைவருக்குமானது, அத்துடன் அரசியலை இணைப்பது மிகவும் ஆபத்தானது
இந்திய அணி வீரர்களின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் விஷயங்களை சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். இது விளையாட்டிற்கு , விளையாட்டு வீரர்களுக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதை நான் பார்க்க விரும்பவில்லை. இறுதியில் அது மிகவும் மோசமாக இருந்தது" என்று தெரிவித்தார்.
- மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன் என்று நக்வி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று கூறினார்.
அதே சமயம் பிசிசிஐ-யிடம் நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு நக்வி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
- மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக வாரியத்திடம் கோப்பையை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி ஒப்படைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- ஆசிய தொடரில் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் நாயகனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய தொடரில் அபிஷேக் சர்மா 45 சராசரியுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.
சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக 61 ரன்கள் எடுத்த போது அவர் 931 புள்ளிகளை பெற்றார். அதன்பிறகு நடந்த இறுதிப்போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர் 926 புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அவர் முதல் இடத்தில்தான் தொடர்கிறார்.
இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை (931) பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அபிஷேக் சர்மா அதனை முறியடித்துள்ளார்.
- திலக் வர்மாவுக்கு ஒரு பேட்டை முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
- வெகுமதியாக ரூ.10 லட்சமும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் கலக்கிய ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு பேட்டை பரிசாகவும் வழங்கினார். வெகுமதியாக ரூ.10 லட்சமும் வழங்கினார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
- ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 147 இலக்கை எதிர்நோக்கி களம் இறங்கியது. 3 விக்கெட் விரைவாக இழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் திலக் வர்மா கடைசி வரை களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இறுதிப் போட்டி மற்றும் வெற்றி பெற்றது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-
முதலில் பிரதமர் மோடி இதை ஆபரேஷன் சிந்தூர் என அழைத்தார். ஆனால், ஆபரேஷன் திலக் என்று அழைப்பது மிகப்பெரிய விசயம். விளையாட்டில், நாங்கள் நம்முடைய நாட்டிற்காக விளையாடுகிறோம். சரியான தருணத்தில், சரியான நேரத்தில் நான் வாய்ப்பை பெற்றேன். எனது நாட்டிற்காக வெற்றி தேடிக்கொடுத்ததை சிறந்ததாக உணர்கிறேன்.
இறுதிப் போட்டியில் பதட்டம் நிலவியது. நாம் 3 விக்கெட்டை முன்னதாகவே இழந்தபோது, பாகிஸ்தான் வீரர் இன்னும் தீவிரமாக முயற்சி செய்தனர். நான் களத்தில் நின்றிருந்தேன். நாள் முன்னதாக சொன்னது போன்று, நான் அதற்குள் சிக்கி ஷாட் ஆட முயற்சி செய்திருந்தால், எனது நாட்டை தோல்வி பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பேன். நான் எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். போட்டியில் வெற்றி பெற தேவை என்னது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
போட்டியின்போது ஏராளமான விசயங்கள் நடந்தன. மீடியா முன் அனைத்தையும் சொல்ல முடியாது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது நடைபெற்றது. போட்டிதான் உண்மையான பதிலடி. நான் அதை செய்ய விரும்பினேன். அதைச் செய்தேன்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிக்கான எனது பங்களிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னுடைய மிகப்பெரிய இலக்கு உலகக் கோப்பை. 2011 உலகக் கோப்பையை பார்க்கும்போது, நான் கிரிக்கெட்டை விரும்ப தொடங்கினேன். அதன்பின் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினேன்.
அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பையில் ஒரு பகுதியாக இருந்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவியாக இருக்க விரும்புகிறேன். இதுதான் என்னுடைய அல்டிமேட் கோல்.
இவ்வாறு திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
- ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் எனவும் ஆனால் ஒரு கண்டிசன் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி கூறினார்.
மேலும் முறையான விழா ஏற்பாடு செய்யப்பட்டால் மட்டுமே சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது வீரர்கள் பதக்கங்களைப் பெறுவார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நக்வி ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் உறவுகளைக் கருத்தில் கொண்டால், அத்தகைய ஏற்பாடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது..






