என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேவந்த் ரெட்டி"

    • இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.
    • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் அசாருதீன் தோல்வியடைந்தார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

    தெலங்கானா அமைச்சராக பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

    2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

    பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் நவம்பர் 11 அன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

    தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
    • அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.

    பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-

    பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • திலக் வர்மாவுக்கு ஒரு பேட்டை முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
    • வெகுமதியாக ரூ.10 லட்சமும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் கலக்கிய ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு பேட்டை பரிசாகவும் வழங்கினார். வெகுமதியாக ரூ.10 லட்சமும் வழங்கினார்.

    • BC-க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
    • ஜனாதிபதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

    இந்த மசோதாக்கல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.
    • கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி.

    தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற உங்களது அறிவிப்பு நிகழ்ச்சியை மேலும் அற்புதமாக்கியது.

    புதுமைபென், நான் முதல்வன் மற்றும் தமிழ் புதல்வன் போன்ற எங்கள் முதன்மைத் திட்டங்களைப் பாராட்டுவதன் மூலம், கல்வியில் தமிழ்நாட்டின் முன்னோடிப் பாதை முழு இந்தியாவிற்கும் வழி வகுக்கும் என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
    • தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் தேவந்த் ரெட்டி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தெலுங்கானா மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.

    கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டில் இளைஞர்கள் சிறந்தவர்களாக உள்ளனர்.

    அனைத்து இந்தியர்களும் தமிழ்நாட்டை பார்த்து பெருமைப்பட வேண்டும்.

    தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலத்திற்கு ஓரே மாதிரியான சமூக நீதி சிந்தனை உள்ளது. கலைஞர் கருணாநிதியின் சமூக நீதி கொள்கை தெலங்கானாவில் உள்ளவர்களை மிகவும் ஈர்த்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
    • நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின் வாயிலாகவும் மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின் மூலமும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

    2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.

    தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழா மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

    கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

    முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.

    இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இணைந்து 2025-26-ம் ஆண்டிற்கான "புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

    இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அமைச்சர்கள் கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதிவேந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் இருந்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சாலை மார்க்கமாகவே சென்னைக்கு வருகை தருவதால் சென்னை புறநகர் பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    செங்குன்றம், புழல் வழியாக ரேவந்த் ரெட்டி வருகை தர இருப்பதால் அந்த பகுதிகளில் அவர் வரும் போதும் தீவிரமாக கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வரும் பாதைகளிலும் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்
    • ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 37,416 பள்ளிகளில் 20.59 லட்சம் குழந்தைகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெற்று வருகின்றனர்

    * 2.57 லட்சம் குழந்தைகள் இந்த ஆண்டு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

    * 14.60 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

    * 500க்கும் மேற்பட்ட திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    * இந்த திட்டங்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு கூடுதலாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது"

    * கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

    * நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 25ம் தேதி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

    * தமிழ்நாடு அரசு நடத்தும் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி .சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    என்று தெரிவித்தார். 

    • 21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாகவும் பணியாற்றலாம்.
    • வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது.

    இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக 21 வயது போதுமானதாக இருக்கும் நிலையில், அரசியலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கலாம் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாக பணியாற்றலாம். 21 வயது நிரம்பினால்தான் அப்பேத்கர் அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும உரிமை வழங்கியது.

    ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது. 21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகும்போது, 21 வயதில் ஏன் சட்டமன்ற தேர்தில் போட்டியிட்,டு வெற்றிபெற முடியாது?. சிந்தித்து இதை ஒரு திட்டமாக எடுத்துச் செல்லுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில் துல்கர் சல்மான் தெலுங்கான முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் துல்கர் சல்மானுடன் அவர் அடுத்து நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுடன் சந்தித்தார்.அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என விமர்சனம்.
    • விசாரணை நடைபெற்று வருகிறது என ரேவந்த் ரெட்டி சினிமாவை சுட்டிக்காட்டி விளக்கம்.

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரகேர ராவ் முதல்வராக இருந்தபோது, காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் சின்ன மீன்கள் (கீழ்மட்ட அதிகாரிகள்) மட்டுமே பிடிபட்டுள்ளன என விமர்சனம் எழுந்துள்ளது.

    இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் அளிக்கையில் "சினிமாவில் வில்லன் முதலில் சாகமாட்டான். நீங்கள் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?. டெல்லியில் மதுபான கொள்கை மோசடியில் நீண்ட நாட்கள் கழித்துதான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுதான் வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள் வீட்டில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக நீதிபதி கோஷ் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. உயர்மட்ட விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    காலேஷ்வரம் பாசன திட்டம் தொடர்பாக சந்திரசேகர ராவ் கோஷ் கமிஷன் முன் கடந்த 11ஆம் தேதி ஆஜரானார். முன்னாள் பாசன அமைச்சர் டி. ஹாரிஸ் ராவ் பலமுறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

    • இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
    • முதல் கட்டமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்துப் பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    ஆலை நிர்வாகத்திடம் பேசி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

    ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன். தீவிர காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின் குணமடைந்து பணிக்கு திரும்பக்கூடிய அளவுக்கு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும்.

    முதல் கட்டமாக, அரசுத்தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பவத்தின்போது 143 பேர் பணியில் இருந்தனர். அதில் 56 பேர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. வேலை செய்தவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×