என் மலர்
நீங்கள் தேடியது "ரேவந்த் ரெட்டி"
- மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றுகூறலாம்.
ஹைதராபாத்தில் 'பிரணாம்' என்ற முதியோர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்துவைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடர்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதியோர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்பட்டுள்ளன.
இந்த பராமரிப்பு மையங்கள் திறப்புவிழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி பெற்றோரை கைவிடும், பெற்றோருக்கு நிதி உதவி செய்ய தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தின் ஒருபகுதியை பிடித்தம் செய்யும் சட்டத்தை தெலங்கானா அரசு தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, "எந்தவொரு ஊழியரும் தனது பெற்றோரை கவனிக்கத் தவறினால், அவரது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை கழிக்கப்பட்டு அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்," என தெரிவித்தார். மேலும் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று நாம் கூறலாம். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் பேசியுள்ளார்.
- ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்ததாக கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு.
- தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்த அவரை தூக்கிலிட வேண்டும் என ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.
ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அநீதி இழைத்ததாக பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேக ராவ் மற்றும் அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அநீதி இழைத்த இருவரையும் தூக்கில் போட தகுதியானவர்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராம ராவ் கூறுகையில் "உண்மையில் யாரை தூக்கிலிட வேண்டும். ராகுல் காந்தி வாரங்கலுக்கு வந்தார். அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ரைத்து பாண்டு (Rythu Bandhu) கீழ் கேசிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்கள் கொடுத்தார்களா?. அவர்கள் இரண்டு பயிர்களுக்கு கொடுக்கவில்லை. தற்போது அவர்கள் 15 ஆயிரத்திற்குப் பதிலாக 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
அனைத்துப் பயிர்களுக்கும் ரூ.500 போனஸ் வழங்குவது, குத்தகை விவசாயிகளுக்கு ரைத்து பாண்டு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட மற்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறதா?.
அப்படியானால், யாரைத் தூக்கிலிட வேண்டும்? ரேவந்த் ரெட்டியை அல்ல. அவரை நம் மீது திணித்த ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும். வாரங்கலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ராகுல் காந்தி 70 லட்சம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். அவரை ஒரு திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும்.
இவ்வாறு ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
- பத்து வருடங்களாக பிஆர்எஸ் எதுவுமே செய்யவில்லை
- ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை
தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி,
"தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார்.
தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசிய பாஜக தலைமை,
"காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு.
இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளது.
பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
- புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA)வை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆளும், தெலுங்கானா மாநில சட்டமன்றம் MGNREGA சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதற்குப் பதிலாக வந்த VB GRAM G ராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் அசல் நோக்கத்தை பலவீனப்படுத்தியதாகவும் சட்டமன்றத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்வில் பேசுகையில், "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.
இதன்மூலம் பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.
முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.
பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.
ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒருங்கிணைந்த ஆந்திராவில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது.
- கிருஷ்ணா, கோதாவரி நீர் பயன்படுத்துதலில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ஆந்திர மாநிலத்துடன் ஒன்றாக இருந்தபோதிலும் விட, கே. சந்திரசேகர ராவ் ஆட்சிச் காலத்தில் நீர்ப்பாசன திட்டத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்காக பி.ஆர்.எஸ். ஆட்சியில் நீர்ப்பாசன துறை அமைச்சர்களாக இருந்த சந்திரசேக ராவ் மற்றும் அவருடைய மருமகன் டி. ஹரிஷ் ராவ் ஆகியோர் தூக்கில் போட தகுதியானவர்கள் என தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆற்று நீர் பிரச்சினை தொடர்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். உட்டம் குமார் ரெட்டி உருவாக்கப்பட்ட திட்டம் குறித்து விளக்கினார். அப்போது ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் அநீதிக்கு ஆளாக்கப்பட்டதால், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. கிருஷ்ணா, கோதாவரி ஆற்று நீர் பயன்படுத்துதல் மற்றும் நிதி ஒதுக்குதல் ஆகியவற்றில் பி.ஆர்.எஸ். ஆட்சியில் மாநிலத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நம்மைச் சுரண்டும் வெளியாட்களை நாம் விரட்டியடிப்போம், நம்மைச் சுரண்டும் நம் சொந்தப் பகுதி மக்களை உயிருடன் புதைப்போம் என்ற தெலுங்கானா கவிஞர் கலோஜி நாராயணா ராவின் கருத்து சுட்டிக் காட்டுகிறேன்.
பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில் தெலுங்கானா மாநில பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் என். கிரண் குமார் ரெட்டியின் நிலையை இருவரும் எதிரொலித்ததால், தெலுங்கானா மாநிலத்திற்கு மிகப்பெரிய தீமை.
கவிஞர் என்ன சொன்னரோ, அது இந்த இருவருக்கும் பொருந்தும். ஆற்று நீர் விவகாரங்களில் நடந்த அநீதிக்காக அவர்களைத் தூக்கிலிட்டாலும் அது தவறில்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதற்கு பிஆர்எஸ் கட்சி சந்திரசேகராவ் மற்றும் அவரது மருமகன் டி. ஹரிஷ் ராவ் மரணத்தை விரும்புவதாக ரேவந்த் ரெட்டி மீது குற்றம்சாட்டியுள்ளது.
- தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
- அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழகம் கல்வியில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து கல்வித் துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி கடந்த செப். 25-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவின்போது பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சியில் பங்கேற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தை கல்வித் தந்தை காமராஜரின் மண் என்று குறிப்பிட்ட ரேவந்த் ரெட்டி, தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், மு.க. ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி வருவதாகவும், அவர் ஒரு சிறந்த முதலமைச்சராகத் திகழ்கிறார் என்றும் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி, ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் தமிழ்நாடு ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்வதாக ரேவந்த் ரெட்டி புகழாரம் சூட்டினார். குறிப்பாக, தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களை இன்று நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது தமிழகம்தான் என்றும், தமிழகத்தைத் தொடர்ந்தே மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் நினைவு கூர்ந்தார்.
பள்ளி செல்லும் ஏழை குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு மனதை தொடும் திட்டம் என்று குறிப்பிட்டு அவர் பாராட்டினார். தமிழகத்தின் சிறப்பான கல்வித் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட தெலுங்கானா அரசு, அவற்றை தங்கள் மாநிலத்திலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரேவந்த் ரெட்டி அறிவித்தார்.

அடுத்த கல்வி ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 'புதுமைப்பெண், நான் முதல்வன், தமிழ் புதல்வன்' உள்ளிட்ட முக்கிய கல்வித் திட்டங்களும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை உற்றுநோக்குகின்றனர் என்றும், தெலுங்கு மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே நூற்றாண்டு கால நட்புறவு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமது மாநிலமான தெலுங்கானாவிலும் கல்விக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதற்காகப் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வியில் முதலீடு செய்வது என்பது வெறுமன சேவை இல்லை.. அது நீதி மற்றும் உரிமை என்ற தமிழ்நாட்டின் கொள்கையை தெலுங்கானாவும் நம்புவதாக அவர் கூறினார்.
- சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என ரேவந்த் ரெட்டி சபதம்.
- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற சபதம் எடுங்கள் எடுங்கள் என கே.டி. ராம ராவ் பதில் கொடுத்துள்ளார்.
தெலுங்கானா முதல்வராக இருக்கும் ரேவந்த் ரெட்டி, தான் அரசியலில் இருக்கும் வரை கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் செய்தார்.
இதற்கு சந்திரசேகர ராவ் மகன் கே.டி. ராம ராவ் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது:-
நீங்கள் (ரேவந்த் ரெட்டி) கே. சந்திரசேகர ராவ் குடும்பத்தை ஆட்சிக்கு வர விடமாட்டேன் என சபதம் எடுத்தீர்கள். உங்களுக்கு அதிகமான திறமை இருந்தால், ஏழை பெண்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஒரு டோலா தங்க திட்டம் அமல்படுத்தப்படும் என சபதம் எடுங்கள். தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அவதூறாக பேசுவது முதல்வருக்கு பொருத்தமற்றது.
இவ்வாறு கே.டி. ராம ராவ் தெரிவித்தார்.
2023 சட்டசபை தேர்தலின்போது, ஏழை பெண்களுக்கு ஒரு டோலா தங்கம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
தற்போதை காங்கிரஸ் கட்சி ஆட்சியின் தோலை உரித்துவிடுவதாக சந்திரசேகர ராவ் மிட்டும் வகையில் பேசியிருந்தார். அதற்கு ரேவந்த் ரெட்டி கடுமையாக வகையில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில்தான் கே.டி. ராம ராவ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
- 2029 தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
- இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவருடைய கோடங்கல் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
2029 தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதுதான் எனது சவால். உங்களால் முடிந்தால் இதை எதிர்கொள்ளுங்கள்.
உங்கள் அரசியல் என்னவென்று நான் பார்க்கிறேன். நான் அரசியலில் இருக்கும் வரை, விஷம் போன்ற கே.சி.ஆர். குடும்பத்தை ஆட்சிக்கு வர அனுமதிக்க மாட்டேன். இது எனது சபதம். கோடங்கல் மண்ணின் மைந்தனாக இந்த மண்ணில் இருந்து இந்த சபதத்தை நான் ஏற்கிறேன்.
நான் அரசியலில் இருக்கும் வரை, கே.சி.ஆருக்கு அதிகாரம் என்பது ஒரு பகற்கனவாகவே இருக்கும்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அது பயனற்ற ஆட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
- ரேவந்த் ரெட்டி தனது கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி பொது மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
- இதே பணத்தை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடலாம்.
திருப்பதி:
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ரெட் ஹில்சில் உள்ள சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அவருடன் படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெஸ்ஸி வருகைக்காக அதிகளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கால்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்றக் எதிர் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வர் ரெட்டி தலைமையில் நேற்று சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களை போலீசார் தடுத்தபோது பதட்டமான சூழல் ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.பா.ஜ.க தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
அப்போது மகேஸ்வர் ரெட்டி கூறுவையில்:-
முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி பொது மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
இதே பணத்தை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடலாம். நாட்டின் சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சிங்கரேணி மைதானம் கால்பந்து கண்காட்சிக்காக உழப்படுகிறது.
மெஸ்ஸிக்கு அரசாங்கம் எந்தத் துறைகளிலிருந்து பணத்தை எடுத்தது. அது எப்படி செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் எங்களிடம் சொல்ல வில்லை என்றால், நாங்கள் கால்பந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம்.
முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் உங்களுடன் கால்பந்து விளையாடுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
- சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு தகவல்
- பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அரசு முடிவு
ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலை ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அந்த சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள RRR எனப்படும் பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தகவல் தெரிவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், அமெரிக்க தூதரகத்திற்கும் தெலுங்கானா அரசு கடிதம் எழுதவுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் தெரிவித்தார்.
குறிப்பாக கூகிள் மற்றும் கூகிள் மேப்ஸின் உலகளாவிய தாக்கத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கிய பகுதிக்கு 'கூகிள் ஸ்ட்ரீட்' என்று பெயரிடப்படும் என்றும் மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ பெயரும் சாலைகளுக்கு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
- கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்.
இந்து தெய்வங்கள் குறித்து கேலியாக பேசியதாக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரேவந்த் ரெட்டி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் - அனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். மது அருந்துபவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். கோழி பலிக்கு ஒன்று இருக்கிறது; பருப்பிற்கும் அரிசிக்கும் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கடவுள் இருக்கிறார்," எனக் கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அம்மாநில எதிர்க்கட்சியினரிடமிருந்து கண்டனங்களை பெற்றுவருகிறது. அவரின் இந்த பேச்சு இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதுகுறித்து பாஜக தலைவர் பிரவீன் கூறுகையில், ரெட்டியின் கருத்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள இந்துக்கள் வெட்கப்படுகிறார்கள். காங்கிரசுக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை. எல்லா கூட்டங்களிலும், முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் உருவானது என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.
பி.ஆர்.எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, இந்து தெய்வங்களை கேலி செய்வது இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு ஃபேஷனாகிவிட்டது என்றார். மேலும், கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து கடவுள்கள் குறித்த தனது கருத்துடன் ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, பாஜகவைத் தாக்கி, "கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்" என கூறியிருந்தார். "கடவுள் கோயிலில் இருக்க வேண்டும். பக்தி இதயத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் உண்மையான இந்துக்கள். பாஜக தலைவர்கள் சாலைகளில் கடவுளின் புகைப்படத்தை வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள்," என பேசியிருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன.
- டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார் மெஸ்சி
- அரசு பள்ளி மாணவர்களுடன் மெஸ்சி கால்பந்து விளையாடவுள்ளார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாகத் திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதற்கிடையே, மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையிலான காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது என போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், இந்த மாதம் மெஸ்சி ஐதராபாத் வருகிறார் என தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், லியோனல் மெஸ்சி டிசம்பர் 13-ம் தேதி ஐதராபாத் வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுடன் கால்பந்து விளையாடுகிறார். மெஸ்சியை வரவேற்க தெலுங்கானா தயாராக உள்ளது என தெரிவித்தார்..
இந்நிலையில் மெஸ்சி உடன் 'Friendly Match' விளையாடுவதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரவுநேரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.






