என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Messi"

    • மெஸ்சி இதுவரை 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
    • ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார்.

    ஆப்பிரிக்க கண்டத்தி்ல் உள்ள அங்கோலா நாட்டின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி கால்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டடு இருந்தது.

    இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 44-வது நிமிடத்தில் கோலும் அடித்தார்.

    இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து மெஸ்சி அசத்தினார். மொத்தமாக அவர் 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.

    ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார்.

    ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பை நடந்த கத்தாரில் 8 கோல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்து உள்ளார்.

    அமெரிக்க கண்டத்தில் 156 கோல்கள் அடித்து உள்ளார். அமெரிக்காவில் 92, அர்ஜென்டினாவில் 37 கோல்கள் அடித்தார். கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
    • விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.

    கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.

    மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார். 

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், உலக கோப்பையுடன் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அப்புகைப்படத்தில் ஹர்மன்ப்ரீத் கவுரின் டி சர்ட்டில் கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு மட்டுமல்ல , அனைவருக்குமான விளையாட்டு" என்று எழுதப்பட்டுள்ளது.

    முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் உலக கோப்பையுடன் தூங்கினார்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், வீராங்கனைகள் ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் உடன் படுக்கையில் உலக கோப்பையை வைத்துக்கொண்டு தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "நாம் இன்னும் கனவு காண்கிறோமா?" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    முன்னதாக கால்பந்து உலக கோப்பையை வென்ற மெஸ்ஸி, டி20 உலக கோப்பையை வென்ற ரோகித் ஆகியோர் உலக கோப்பையுடன் தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.
    • மெஸ்சி நவம்பர் 17-ந் தேதி கொச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் லியோனல் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

    மெஸ்சியின் அர்ஜென்டினா-ஆஸ்திரேலியா இடையே காட்சி கால்பந்து போட்டி நவம்பர் 17-ந் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் அதன் நட்சத்திர வீரர் மெஸ்சியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அறிவிப்பை போட்டியை ஸ்பான்சர் செய்யும் தனியார் நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
    • அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது.

    மெஸ்ஸி இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். நவம்பர் மாதத்தில் கேரளா வரும் அர்ஜெண்டினா அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த டிக்கெட்டுகளின் விலை தோரயமாக ரூ.3500 முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மெஸ்ஸி இந்தியாவிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் வெனிசுலாவுக்கு எதிராக நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
    • நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.

    நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது.
    • மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி எதிர்கொண்டது.

    இப்போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.
    • இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    இந்த நிலையில், மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது.

    ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்தது.

    இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

    இந்நிலையில், மெஸ்சியின் இந்திய சுற்றுப்பயணத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.

    அதன்படி, வரும் நவம்பரில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    • அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வருகை தருவதாக இருந்தது.
    • ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக அந்த அணி தெரிவித்து, வருகையை ரத்து செய்துள்ளது.

    மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளா வருகை தந்து விளையாட இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம்சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், வருகையை ரத்து செய்துள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக இடது சாரி கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கேரள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில் "கேரள மாநில அரசு இந்த வருடத்தில் அர்ஜென்டினா அணி கேரளா வருவதை மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. ஸ்பான்சர்களுக்கும், அணிக்கும் இடையில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. அரசு இதில் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

    அக்டோபர்- நவம்பரில் கேரளாவில் விளையாட பணம் கொடுத்துள்ளோம். இது நடைபெறவில்லை என்றால் குட்பை சொல்ல வேண்டியதுதான். மற்றபடி என்ன செய்ய முடியும்?. இந்த வருடம் அவர்கள் விளையாடவில்லை, மற்றபடி எங்களுக்கு விருப்பம் இல்லை" என்றார்.

    முன்னதாக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோஷப், காங்கிரஸ் மக்களவை எம்.பி. ஷஃபி பரம்பில் ஆகியோர் "அர்ஜென்டினா அணி கேரள மாநில அரசு மீது குற்றம்சாட்டியதால், மாநில அரசு கட்டாயம் பதில் அளிக்க வேண்டம். லட்சக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது, அர்ஜென்டினா அணி, இது தொடர்பாக விளக்கமாக தெரிவித்துவிட்டது. மாநில மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியை கொண்டு வந்து மாநில அரசு ஆதாயம் தேட முயற்சித்தது. அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர். மாநில அரசு ஒப்பந்த விதிமுறையை மீறி விட்டதாக அர்ஜென்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.

    • டிசம்பர் 24ஆம் தேதி மும்பை வான்கடே மைதானம் வருகை தருகிறார்.
    • கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவார் எனத் தகவல்.

    உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.

    பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடிய நிலையில், தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மெஸ்சி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதானம் வரும் மெஸ்சி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மெஸ்சி வருகை தொடர்பான அனைத்து விசயங்களும் இறுதி செய்யப்பட்டபின், முழு அட்டவணையை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வெளியிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.
    • ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார்

    கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறினார்

    குறிப்பாக, ரொனால்டோவை விட 167 போட்டிகளுக்கு முன்பாகவே இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார்.

    அதே சமயம் ஒட்டுமொத்தமாக அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குற்றிப்பிடத்தக்கது. 

    ×