search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revanth Reddy"

    • பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.
    • மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான இந்திரா காந்தி ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் குறைந்தது 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த மாநிலத்தில் உள்ள 3. 30 கோடி வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். என்னுடைய சகோதரிகளுக்கு நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன்.

    உங்கள் சகோதரனாகிய நானும் எனது அமைச்சர்கள் குழுவும் இந்த காங்கிரஸ் அரசும் உங்களை கோடீஸ்வரராக மாற்றுவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்போம். மாநிலத்தில் ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரியாக மாற்றுவேன். அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன்.

    தெலுங்கானா தங்க தெலுங்கானாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    தற்போது தெலுங்கானா மாநிலத்தில் முதல் மந்திரி ஒரு கோடி பெண்களை கோடீஸ்வரி ஆக்குவேன் என உறுதி அளித்துள்ளார்.

    பெண் வாக்காளர்களை குறிவைத்து காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    • ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன்.
    • ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதில் பங்கேற்ற தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை மூத்த சகோதரர் என குறிப்பிட்டார் .

    இதற்கு தெலுங்கானா மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் பிரதமர் மோடியை அவர் வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறினர். இதற்கு ரேவந்த் ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.

    நான் தெலுங்கானா மாநில வளர்ச்சிக்காக நேரடியாக பிரதமர் மோடியிடம் நிதி கேட்டேன். ஒரு சிலர் தங்களது மகனை முதல் மந்திரியாக்க பிரதமர் மோடியின் ஆதரவை கேட்டனர். அது போன்ற தலைவர்கள் போல் இல்லாமல் நான் பொதுக்கூட்டத்தில் அவரை வெளிப்படையாக சந்தித்தேன்.

    நான் வைத்த கோரிக்கைகள் வெளிப்படையாகவும் மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் உள்ளது. என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல.

    நான் மோடியை வெறித்தனமாக புகழ்ந்ததாக கூறப்படுவதை நிராகரிக்கிறேன். குஜராத் மாநிலத்திற்கு வழங்குவது போல தெலுங்கானாவிற்கும் நிதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

    தெலுங்கானா வளர்ச்சிக்கு நிதி கேட்பதில் யாருக்காவது சிக்கல் இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் மோடியை கவர முயற்சி செய்யவில்லை.

    ராகுல் காந்தி எனது தலைவர், பிரதமருக்கு பதிலாக அவரையும் சோனியா காந்தியையும் தான் புகழ்வேன். என்னுடைய வார்த்தைகள் மற்றும் கோரிக்கைகள் நாட்டின் கூட்டாட்சி அதிகாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.
    • காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.

    தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பல வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வரவேற்றார்.

    "எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சி என்பது ஏழைகளின் மேம்பாடு, தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாடு.

    பிரதமர் மோடி தெலுங்கானாவின் மூத்த சகோதரர். அவரது உதவியால் மட்டுமே முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.

    தெலுங்கானா முன்னேற வேண்டுமானால் குஜராத் மாதிரியை பின்பற்ற வேண்டும். குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், பிரதமர் உதவி தேவை.

    "காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை. சுமுகமான உறவை விரும்புகிறது.

    5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் லட்சிய இலக்குக்கு நாங்கள் பங்களிக்க விரும்புகிறோம். தெலுங்கானா மாநிலத்தின் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தெலுங்கானா முதல் மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி வகித்தபோது மத்திய அரசுடன் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்தார். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    காங்கிரஸ் முதல் மந்திரியான ரேவந்த் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். மேலும் அவரை மூத்த சகோதரர் என அழைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைபடுத்தி உள்ளது.

    தெலுங்கானா தேர்தலுக்கு முன்பாக ஆரம்ப காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இருந்து வந்த ரேவந்த் ரெட்டிக்கு அந்த கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

    • 90 லட்சம் குடும்பங்களுக்கு ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
    • அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும்

    தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

    அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.

    தெலுங்கானாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியை வழங்கும் திட்டத்தையும், ராஜீவ் ஆரோக்யஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு திட்டத்தையும் டிசம்பர் 9-ஆம் தேதி காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

    இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

    • தமிழ்நாடு TN என்றும் கர்நாடகா KA என்றும் குறியிடப்பட்டுள்ளது
    • டிஆர்எஸ் கட்சியை குறிப்பிடும் வகையில் டிஎஸ் இருந்ததாக காங்கிரஸ் கூறி வந்தது

    1963லிருந்து, அரசாங்கங்களுக்கு இடையே இந்திய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பதிவுகளின் போது, மாநிலங்களை குறிப்பதற்கு ஆங்கில எழுத்துக்கள் இரண்டினை கொண்டு குறிக்கும் முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.

    எடுத்துக் காட்டாக, கர்நாடகா - கேஏ (KA), கேரளா - கேஎல் (KL), தமிழ்நாடு - டிஎன் (TN) என குறிப்பிடப்பட்டு வருகின்றன.

    2014ல் ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து தெலுங்கானா எனும் தனி மாநிலம் உருவானது. அப்போது முதல், தெலுங்கானா டிஎஸ் (TS) எனும் இரு ஆங்கில எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டு வந்தது.

    கடந்த 2023 நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கான மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வென்றது. அக்கட்சி சார்பில் முதல்வராக ரேவந்த் ரெட்டி (54) பொறுப்பேற்று கொண்டார்.

    தெலுங்கானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டம், பிப்ரவரி 8 அன்று மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் உரையுடன் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், நேற்று ரேவந்த் ரெட்டி தலைமையிலான கேபினெட் அமைச்சரவை, தெலுங்கானாவிற்கான ஆங்கில குறியீடை "டிஎஸ்" என்பதற்கு பதில் "டிஜி" (TG) என மாற்றியிருப்பதாக அறிவித்தது.

    இனி தெலுங்கானா மாநிலம், அரசு கோப்புகளிலும், வாகனங்களின் நம்பர் பிளேட்களிலும் டிஜி என குறிப்பிடப்படும்.

    முன்னர் ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சியின் முந்தைய பெயரான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) எனும் பெயரை குறிப்பிடும் விதமாகவே முந்தைய அரசு, "டிஎஸ்" என உருவாக்கியிருந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அண்டே ஸ்ரீ இயற்றிய "ஜய ஜய ஹே தெலுங்கானா" எனும் பாடலை தெலுங்கானா மாநில கீதமாக அங்கீகரித்து கேபினெட் முடிவெடுத்துள்ளது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் 65 இடங்களில் வெற்றி பெற்றது.
    • அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும், துணை முதல் மந்திரியாக விக்ரமர்க மல்லு பதவியேற்றார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்ட ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது துணை முதல் மந்திரியும் உடனிருந்தார்.

    5 மாநில தேர்தலில் ஆட்சியைப் பிடித்த மாநிலங்களின் முதல் மந்திரிகள் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடியைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.
    • ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    தெலுங்கானாவில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் கியாஸ் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.

    அதன்படி வருகிற 28-ந்தேதி காங்கிரஸ் தோற்றுவித்த நாளை முன்னிட்டு தெலுங்கானாவில் பெண்கள் பெயரில் உள்ள கியாஸ் இணைப்புகளுக்கு மகாலட்சுமி என்ற புதிய திட்டத்தில் ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 1.20 கோடி கியாஸ் இணைப்புகள் உள்ளன.

    பெண்கள் பெயரில் கியாஸ் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படும் என தெரியவந்ததால் ஆண்கள் பெயரில் உள்ள இணைப்புகள் பெண்கள் பெயரில் மாற்ற கியாஸ் ஏஜென்சி அலுவலகம் முன்பாக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    • களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.
    • அப்ப கூட்டணி தேவையில்லையா? பார்த்து பேசுங்க!

    தெலுங்கானா மாநிலத்தில் அதல பாதாளத்தில் கிடந்த காங்கிரசை 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அயராத உழைப்பால் உயர்த்தி, ஆட்சியை கைப்பற்றி, முதல்-மந்திரியாகவும் ஆகி இருப்பவர் ரேவந்த் ரெட்டி. அவரது களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.

    இப்போது அதே பணியில் தமிழகத்தின் அடுத்த ரேவந்த் ரெட்டி, கார்த்தி ப.சிதம்பரம் தான் என்று காலரை தூக்கி விடுவதை பார்த்து சொந்த கட்சிக்காரர்களே கலாய்க்கிறார்கள்.

    கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் சத்திய மூர்த்தி பவனில் இவ்வாறு பேசவும் அதை கேட்ட சக காங்கிரஸ்காரர்களே வடிவேல் பாணியில் 'அய்யோ... அய்யோ... ஏம்பா... காமெடி கீமெடி பண்ணலியே' என்றனர்.

    அடுத்தவர், தலைவா... அம்பது வருஷமாகியும் இன்னும் அப்படியே தான் இருக்கிறோம். கூட்டணி இல்லண்ணா சிக்கல்தான் என்ற நிலையில் எப்ப ரேவந்த் ரெட்டியாக மாறி எப்ப ஆட்சிக்கு வருவது. அப்ப கூட்டணி தேவையில்லையா? பார்த்து பேசுங்க! இதை கேள்விப்பட்டால் தி.மு.க.வினர் கோவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

    இவ்வாறு அவர் கூறியதையும் கேட்டு அவர்களுக்குள் கலாய்த்து கொண்டார்கள்.

    ஆனால் கார்த்தியின் ஆதரவாளர்கள் அவர்தான் தலைவராவார் என்பதிலும் அவரைப் பற்றிய தகவல்களை சமுக வளைத்தளங்களில் பரப்புவதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்துக்குள் நடந்த புகை குண்டு தாக்குதல் பற்றி வலைதளங்களில் 'தலைவர் ராகுலை காத்தவர் எங்கள் கார்த்தி தலைவர் தான்' என்று கலர்கலராக பரப்பினார்கள்.

    • 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
    • ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி

    கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.

    தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.

    இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.

    அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.
    • சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்- மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரத ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சதி செய்து வருவதாக தெலுங்கானா டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர்.

    தெலுங்கானா காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் புன்னா கைலாஷ், சாருக் கொண்டா வெங்கடேஷ் சிலுகா மதுசூதன் ரெட்டி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீஹரி, ராஜேஸ்வர ரெட்டி, பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 100 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது சந்தித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை.
    • அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம், தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    காங்கிரஸ் கட்சி வெற்றி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தெலுங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இவரது நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் கமிஷன் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி ரவி குப்தா கூடுதலாக டிஜிபி பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த நிலையில் அஞ்சனி குமார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

    இவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப்பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான இடத்தை பிடித்தது. பின்னர், ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கருதிய தேர்தல் ஆணையம், டிஜிபி-யின் செயல் தெளிவான தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    ×