search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revanth Reddy"

    • முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி வழங்குவதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.
    • தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய வீரர் முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

    தெலங்கானா காவல்துறையில் DSP-யாக பொறுப்பேற்ற இந்திய வீரர் முகமது சிராஜ்க்கு ரிஷப் பண்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    • இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்.
    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய வீரர் முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.

    அந்த வகையில், தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மகேஷ் பாபு வழங்கினார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.50 லட்சம் ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக நடிகர் மகேஷ்பாபு வழங்கினார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

    மேலும், AMB சினிமாஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
    • தனித்தனியாக சீருடைகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் திருநங்கைகள் பல்வேறு பணிகளில் பணியாமத்தப்படுவார்கள் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநகர பகுதியில் போக்குவரத்து சீரமைக்க திருநங்கைகள் படை உருவாக்க ப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக போக்குவரத்து சீரமைப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக தனி தனியாக சீருடைகளும் வடிவமைக்க பட்டு வருகின்றன. திருநங்கை படையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    திருநங்கை படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

    அதற்கு பிறகு ஐதராபாத் மாநகர பகுதியில் திருநங்கை படையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    • தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
    • ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை நிவாரண நிதியாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    ஆந்திராவிற்கு ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வழங்கியிருந்தார்.

    மேலும் ஆந்திராவில் உள்ள 400 பஞ்சாயத்துகளுக்கு தலா ₹1 லட்சம் என ₹4 கோடியை தனியாகவும் அவர் வழங்கியுள்ளார்

    இந்நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் ரூ.1 கோடி ரூபாயை வெள்ள பாதிப்பு நிவாரணமாக பவன் கல்யாண் வழங்கியுள்ளார்.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து ரூ.1 கோடி ரூபாய்க்கான காசோலையை அவர் வழங்கினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
    • கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்

    மழை வெள்ளம் 

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வார்த்தைப் போர் 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

    கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ் 

    'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

     

    ரேவந்த் ரெட்டி பதிலடி 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார். 

    • ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.
    • ஐதராபாத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அமராவதி:

    குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழை தற்போது தென்மாநிலங்களை நோக்கி நகர்ந்துள்ளது.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.

    ஆந்திராவில் என்.டி.ஆர்., கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இவை உள்பட 5 மாவட்டங்களுக்கு உள்பட்ட 294 கிராமங்களில் வசித்து வரும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    கிருஷ்ணா நதிநீர் கரைபுரண்டு ஓடுவதால் பபட்லா மாவட்டத்தின் பிரகாசம் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் 6 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதனால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழைக்கு ஆந்திராவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

    அங்கு மழை மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையை சேர்ந்த 17 குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் இருந்து மீட்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் 100 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    கனமழையால் 62,644 ஹெக்டேர் நெல்பயிர்கள், 7,218 ஹெக்டர் பழத்தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதாக மாநில உள்துறை மந்திரி வெங்கலப்புடி அனிதா தெரிவித்தார்.

    ஆந்திராவைப்போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் பேய்மழை கொட்டி வருகிறது.

    அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் 52.1 செ.மீ. மழை பெய்து வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப்போல மெகபூபாபாத் மாவட்டமும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது.

    மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் இந்த மழையால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    ரெயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மாநிலம் முழுவதும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    இதனால் 99 ரெயில்களை ரத்து செய்தும், 4 ரெயில்களை பாதியளவு ரத்து செய்தும் தெற்கு மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது. 54 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு உள்ளன.

    மழை வெள்ளத்தால் தெலுங்கானா எதிர்கொண்டு வரும் மோசமான சூழல் குறித்து அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவுமாறு தேசிய பேரிடர் மீட்புக்குழுவுக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சென்னை, விசாகப்பட்டணம், அசாமில் இருந்து தலா 3 குழுவினர் ஐதராபாத் விரைந்தனர்.

    இந்த மாவட்டத்தில் சுமார் 110 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சில மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை வரை கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் மாயமாகினர்.

    இதனால் ஐதராபாத் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானாவில் பெய்துவரும் மழை காரணமாக தமிழக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானாவில் ஐதராபாத், கம்மம் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

    பேச்சுவார்த்தையின்போது, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    • பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின்- ரேவந்த் ரெட்டி.
    • அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதி.

    ஒரு முதல் மந்திரி இப்படி பேசலாமா? நீதித்துறையை மதிக்காவிடில் விசாரணையை வேறு எங்கேயாவது மாற்றுவோம் என உயர்நீதிமன்றம் தெரிவித்த நிலையில் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தள்ளார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் பாரத் ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்த கவிதாவுக்கு (சந்திரசேகர ராவ் மகள்) உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கவிதா திகார் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    கவிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி "பா.ஜ.க.-வுக்கும், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கவிதாவுக்கு ஜாமின் கிடைத்தது'' எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே ரேவ்ந்த் ரெட்டி, கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது தெலுங்கானா சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய பிரதேச மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது, ரேவந்த் ரெட்டியின் கருத்து குறித்து நீதிபதி கவாய் கூறியதாவது:-

    ரேவந்த் ரெட்டி என்ன சொன்னார் என்பதை படித்து பார்த்தீர்களா? முதல்வரின் இத்தகைய அறிக்கைகள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறையில் உள்ளவர்களுக்கும் பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அரசியல்சாசன பதவியில் இருக்கும் ஒருவர் கூறலாமா? அரசியல் காரணங்களுக்காக உத்தரவு பிறப்பிக்கிறோம் என எப்படி சொல்ல முடியும்? நீதித்துறையை மதிக்காவிட்டால், விசாரணையை வேறு எங்காவது மாற்றுவோம். நாட்டில் உச்சபட்ச நீதிமன்றம் இதுதான்.

    இவ்வாறு நீதிபதி கவான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    "நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். எனது அறிக்கைக்காக நிபந்தனையின்றி எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தின் மீது எனக்கு நிபந்தனையற்ற மரியாதையும் உயர்ந்த மரியாதையும் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் நெறிமுறைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட நான், நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுகிறேன்" என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
    • காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மாதப்பூரில் நடிகர் நாகார்ஜுனாவிற்குச் சொந்தமான 'என் கன் வென்ஷன் சென்டர்' என்ற மண்டபம் உள்ளது. அந்த மண்டபம்தும்மிடிகுண்டா ஏரிக்குச் சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் ஐதராபாத்தில்கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நடிகர் நாகார்ஜுனாவின் மண்டபமும் இடிக்கப்பட்டது.

    இதற்கு கண்டனம் தெரிவித்த நாகார்ஜுனா, 'மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு முறைப்படி பட்டா உள்ளது என்றும் ஓர் அங்குல இடம்கூட ஆக்கிரமிக்கப்படவில்லை' என்றும், தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் நடத்த ஜன்மாஷ்டமி விழாவில் பங்கேற்ற, முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு எந்த வழியையும் கடைப்பிடிக்கலாம் என்பதைத் தான் மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார்.

    மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி, அதர்மத்தை அழிக்க வேண்டும்என பகவத் கீதையில் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.

    ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுவது, மாபெரும் பாவம். மக்கள் நலனுக்கு எதிரானது.

    கிருஷ்ணரின் போதனைப்படி நடக்கும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு, ஏரிகள், குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை, மக்கள் நலனுக்காக மேற்கொண்டுள்ளது.

    இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், அதனால், கட்டிடங்களை இடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பயிர்க்கடன் தள்ளுபடி செய்யவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
    • அதேவேளையில் 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலின்போது பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறிய விவசாயிகள் ரேவந்த் ரெட்டி உருவப்பொம்மையை இறுதி ஊர்வலமாக எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தலமடுகு மண்டலில் உள்ள ஒரு கிராமத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி போன்ற ஒரு உருவ பொம்மையை உருவாக்கி பாடையில் கிடத்தினர். அதற்கு செருப்பு மாலை அணிவித்து தெருத்தெருவாக இறுதி ஊர்வலம் போன்று எடுத்துச் சென்றனர். அப்போது முதல்வர் டவுன் டவுன் (CM down down) என கோஷமிட்டனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டம் நெரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டது, இறுதியாக போராட்டம் நிறைவு பெற்றது.

    அரசின் செயலற்ற தன்மையால் தாங்கள் நிதிச்சுமையால் தவிக்கிறார். ஏராளமான கடன்கள், அவர்களுக்கு திருப்பி கட்டுவது மிகப்பெரிய சுமையாக உள்ளது எனத் தெரிவித்தனர்.

    இதற்கிடையே பயிர்க்கடன் தள்ளுபடிக்கான தெலுங்கான அரசு 17 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்துள்ளதாகவும், 3-வது மற்றும் கடைசி தவணையான 5644.24 கோடி ரூபாய் வழங்க இருப்பதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் குறித்த விவரங்களை கட்சி சேகரிக்கும் என பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராம ராவ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு விவசாயியும் கடன் தள்ளுபடியைப் பெறுவதை பிஆர்எஸ் உறுதி செய்யும் என்றும் கே.டி. ராம ராவ் வலியுறுத்தினார்.

    • வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்

    தமிழகத்தைத் தொடர்ந்து தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தைக் கிண்டலடித்து பாரத் ராஷ்டிர சமிதி (BRS) தலைவர் கே.சந்திரசேகர ராவின் [KSR] மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமா ராவ் [KTR] சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

     

    நேற்று முன் தினம் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய கேடிஆர், தெலுங்கானா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சீதக்காவை குறிப்பிட்டு, 'ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு பஸ்சை கொடுங்கள், மொத்த குடும்பமும் அதில் பயணம் செய்யட்டும். பெண்கள் பஸ்சில் காய்கறிகளை நருக்கட்டும், பிரேக் டான்ஸ் ஆடட்டும், டான்ஸ் வீடியோ எடுக்கட்டும்' என்று பேசினார். சமீப காலமாக பெண்கள் பஸ்சில் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோக்களை குறிப்பிட்டு இவ்வாறு வீட்டு வேலைகளையும் பெண்கள் பஸ்சில் செய்யட்டும் என்று கேடிஆர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், 'கட்சிக் கூட்டத்தில் நான் பேசியது சகோதரிகளை புண்படுத்தியிருந்தால் என்னை அவர்கள் மன்னிக்க வேண்டும். சகோதரிகளை அப்படிப் பேச வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல' என்று பதிவிட்டு தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதற்கிடையில் தற்போது டெல்லியில் உள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிஆர்எஸ் கட்சி விரைவில் பாஜகவோடு இணைக்கப்படும் என்று பேசியுள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிஆர்எஸ் பாஜகவின் சேரும் என்றும் கேசிஆரருக்கு [சந்திரசேகர ராவ்] பாஜக, ஆளுநர் பதவி வழங்க உள்ளதாகவும், கேடிஆருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் ஹரிஷ் ராவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

     

    தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்துடன் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார் கேசிஆர். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிடம் படுதோல்வியைச் சந்தித்தது பிஆர்எஸ். மக்களவைத் தேர்தலிலும் பெரிய அளவிலான வெற்றியை பிஆர்எஸ் பெறவில்லை. இந்த நிலையில்தான் பிஆர்எஸ் பாஜகவோடு இணைக்கப்படும் என்று ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.  

    • ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
    • இதற்கான 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது- தெலுங்கானா முதல்வர்.

    ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகள் பயிர்க்கடன்கள் நாளை தள்ளுபடி செய்யப்படும் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். காங்கிரஸ் அரசின் வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள், எம்.பி.க்கள் மற்றும் மற்ற அதிகாரிகள் இடையிலான ஆலோசனைக் கூட்டத்தின்போது மாநில அரசின் இரண்டு லட்சம் ரூபாய் பயிர்க்கடன் வாக்குறுதியின் ஒரு பகுதியாக நாளை முதல் படிப்படியாக விவசாயிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட இருக்கிறது. ஜூலை மாதம் இறுதியில் ஒன்றரை லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஆகஸ்ட் மாதத்துடன் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு விவசாயியையும் கடன் சுமையிலிருந்து விடுவிப்பதே காங்கிரஸ் அரசின் நோக்கம். கடந்த சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் அரசு செய்ததைப் போல, கடன் தள்ளுபடி என்ற பெயரில், தனது அரசாங்கம் விவசாயிகளை ஏமாற்றவில்லை என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    2 லட்சம் ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி ஒரே தவணையில் விவசாயிகள் கணக்கில் செலுத்தப்படும். மொத்தமாக 31 ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது.

    2022 தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 லட்சம் ரூபாய் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுவது அரசின் கடமை எனவும் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×