என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KT Rama Rao"
- கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்.
- 3-வது அணியே இப்போது தேவை.
புதுடெல்லி :
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியுமான கே.டி. ராமாராவ் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 தேசிய கட்சிகளும் தேசத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. அவற்றை முழுமையாய் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இதற்கு முன்னரும் கட்சிகள் ஒன்றிணைந்து தோல்வியடைந்தன. இந்த 2 தேசிய கட்சிகளுடன் மற்ற கட்சிகளும் இணைந்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. அந்த 2 கட்சிகளும் இல்லாத 3-வது அணியே இப்போது தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.
மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.
அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.
பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.
இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்