search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KT Rama Rao"

    • கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம்.
    • 3-வது அணியே இப்போது தேவை.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியுமான கே.டி. ராமாராவ் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 தேசிய கட்சிகளும் தேசத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. அவற்றை முழுமையாய் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. கட்சிகளை அல்ல மக்களை ஒன்றிணைப்பதுதான் முக்கியம். இதற்கு முன்னரும் கட்சிகள் ஒன்றிணைந்து தோல்வியடைந்தன. இந்த 2 தேசிய கட்சிகளுடன் மற்ற கட்சிகளும் இணைந்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் எந்த கூட்டணியும் வெற்றி பெறாது. அந்த 2 கட்சிகளும் இல்லாத 3-வது அணியே இப்போது தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவிடம் நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை இருப்பதால் பிரதமர் ஆவார் என்று அவரது மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் கூறியுள்ளார். #ChandrashekarRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசு அமைந்து 4½ ஆண்டுகள் ஆவதையொட்டி ஐதராபாத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளை சேகரிக்க டெல்லியில் இருந்து தனியாக பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனும், மந்திரியுமான தரகா ராமராவ் பேட்டி அளித்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் எங்களது கட்சி மிக வலுவாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 17 இடங்களில் 15 இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம். அதேபோல 119 சட்டமன்ற தொகுதிகளில் 109 இடங்களை கைப்பற்றுவோம்.


    எனது தந்தை சந்திரசேகர ராவ் முதல்-மந்திரியாக இருந்து யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். 4½ ஆண்டுகளில் இந்த சாதனைகளை செய்திருப்பது மிகப்பெரிய செயலாகும்.

    மாநிலத்தை மட்டுமல்ல நாட்டையே வழிநடத்தி செல்லும் திறமை அவரிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.

    ஏன் என்றால் மாநில அளவில் செயல்படும் பல கட்சிகள் பாரதிய ஜனதாவையும் விரும்பவில்லை, காங்கிரசையும் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைக்கலாம். அப்படி ஒரு ஆட்சி வருவதாக இருந்தால் சந்திரசேகரராவ் பிரதமராக வருவார்.

    அப்படி அவர் பிரதமர் ஆனால் பல்வேறு வித்தியாசமான தொலைநோக்கு திட்டங்களை அவர் கொண்டு வருவார். ஏற்கனவே மாநிலத்தில் இதேபோல அவர் திட்டங்களை செயல்பட்டு சாதித்திருக்கிறார்.

    பிரதமர் மோடி மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி எப்போதோ மக்கள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டது. நாட்டுக்கு இப்போது புதிய தலைமை தேவை. அதை சந்திரசேகர ராவ் செயல்படுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChandrashekarRao #KTRamaRao
    ×