search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lionel Messi"

    • 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.
    • முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த கிளப் அணிகளுக்கு இடையேயான கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாஷ்வில்லே அணி மற்றும் இண்டர் மியாமி அணிகள் மோதின.

    இந்த போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஃபுளோரிடாவில் தொடங்கிய இப்போட்டியில், 7-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் போட முயற்சித்தார். ஆனால் பந்து கோல் கம்பத்துக்கு சற்று மேல் நோக்கி சென்றது. எனினும், மியாமியின் மற்றொரு வீரர் லூயிஸ் சுவாரஸ் 8-வது நிமிடத்தில் மெஸ்ஸி பாஸ் செய்து கொடுத்த பந்தை கோல் ஆக மாற்றினார்.

    அதனைத் தொடர்ந்து, 23-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இரண்டாம் பாதியிலும் மியாமி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில், மியாமி வீரர் ராபர்ட் டெய்லர் தலையால் அபாரமாக கோல் அடித்தார்.

    கோல் அடிக்க முடியாமல் திணறி வந்த நாஷ்வில்லே அணி, 80-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. ஆனால் முக்தார் அடித்த அந்த கோல் ஆப் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது.

    இறுதியாக 90+3 நிமிடத்தில் நாஷ்வில்லே அணிக்கு கோல் கிடைத்தது. அந்த அணியின் சாம் சுர்ரிட்ஜ் முதல் கோலை பதிவு செய்தார்.

    ஆட்டநேர முடிவில் இன்டர் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நாஷ்வில்லேவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.   

    • ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர்.
    • இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    ரியாத்:

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்- நாசர் கிளப்புக்காக விளையாடி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சவுதி புரோ லீக் கால்பந்தில் அல்-நாசர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அல் ஷபப்பை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தின்போது ரொனால்டோவை நோக்கி எதிரணி ரசிகர்கள் மெஸ்சி.... மெஸ்சி என்று கோஷம் எழுப்பினர். இதை கேட்டு எரிச்சல் அடைந்த ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையால் ஆபாச சைகை காட்டினார்.

    இது குறித்து விசாரித்த சவுதி அரேபியா கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, ரொனால்டோவுக்கு அடுத்த லீக் போட்டியில் விளையாட தடையும், ரூ.4½ லட்சம் அபராதமும் விதித்தது.

    இதனால் ரொனால்டோ நேற்று நடைபெற்ற அல் நாசர் - அல் ஹஸ்ம் இடையிலான போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதன் மூலம் இவரது தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.
    • எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.

    பாரிஸ்:

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    மெஸ்ஸி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.

    இந்நிலையில், பாரிசில் உள்ள ஈபிள் டவரில் லியோனல் மெஸ்சியின் சாதனையை கவுரவிக்கும் வகையில், அவரது புகைப்படம் லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2023-ம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி வென்றார்.
    • எட்டாவது முறையாக இந்த விருதை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.

    பாரிஸ்:

    கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்த மெஸ்சி, 7 கோல் அடித்ததுடன், 4 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

    மெஸ்சி 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார். ஏற்கனவே, இந்த விருதுக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்திருந்தார்.

    பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை உலக கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி கைப்பற்றினார்.

    • 5 முறை இந்த விருதை ரொனால்டோ பெற்றுள்ளார்.
    • ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார்.

    வருடம் வருடம் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலோன் டி ஓர் விருதை பிபா வழங்கி வருகிறது. 1956 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை வாங்குவதில் 2007-ம் ஆண்டு முதல் மெஸ்சி மற்றும் ரொனால்டோவுக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களில் 60 (30 ஆண் மற்றும் பெண்) பேர் இடம் பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல உதவுவதில் முக்கிய பங்கு வகித்த லியோனல் மெஸ்ஸி இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். மேலும் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இந்த பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவராக உள்ளனர்.

    இதில் போர்ச்சுகல் ஜாம்பவான் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர் பரிந்துரை பட்டியலில் இடம் பெறவில்லை. 5 முறை இந்த விருதை பெற்றுள்ள அவர் பெயர் இடம் பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ரொனால்டோ முதல் முறையாக 2008-ம் ஆண்டு இந்த விருதை பெற்றார். அதனை தொடர்ந்து 2013, 2014, 2016, 2017 என கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார்.
    • மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா:

    உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார். பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார். அவர் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து ரசிகர்களிடையே எழுந்தது.

    இதற்கிடையே, இன்டர் மியாமி அணியை தேர்வு செய்தார் மெஸ்ஸி. அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

    • புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன் என மெஸ்சி கூறினார்.
    • அர்ஜென்டினா கால்பாந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்சி, அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

    அமெரிக்கா:

    கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார் .பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகி அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக விளையாட உள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவில் இண்டர் மியாமி வீரராக அவரை அறிமுகப்படுத்த அணியின் நிர்வாகம் சிறப்பு நிகழ்வு ஒன்றை எற்பாடு செய்து உள்ளது. அதில் பங்கேற்பதற்காக மெஸ்சி அமெரிக்கா சென்று உள்ளார்.

    அங்கு அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்,அதில்'"நான் எடுத்த முடிவில் மகிழ்ச்சியடைகிறேன். புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன்," என்று கூறினார்.

    மேலும் அவர்,"எனது மனநிலையும் என் உறுதியும் மாறப்போவதில்லை. நான் எங்கிருந்தாலும், எனக்காகவும் அணிக்காகவும் அதிகபட்ச உழைப்பை கொடுக்க முயற்சிப்பேன். உயர்ந்த தரத்தில் தொடர்ந்து செயல்படுவேன்'என்று பேட்டி அளித்து உள்ளார்.

    மெஸ்சி இண்டர் மியாமி அணியில் முன்னாள் பார்சிலோனா அணி வீரர் செர்ஜியோ புஸ்கெட்ஸ் மற்றும் முன்னாள் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோவுடன் மீண்டும் இணைய உள்ளார். மெஸ்சி இண்டர் மியாமி அணி வீரராக முதல் ஆட்டத்தை ஜூலை 21 அன்று மெக்சிகன் அணியான குரூஸ் அசுலுக்கு எதிரான லீக் கோப்பை மோதலில் அறுமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    • அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது.
    • மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    பீஜிங்:

    உலக சாம்பியன் அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஆட்டம் தொடங்கிய 79-வது வினாடிக்குள் சூப்பராக கோல் அடித்து அசத்தினார். அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் இதுதான்.


    இதற்கு முன்பு கிளப் போட்டியில் 127-வது வினாடியில் பந்தை வலைக்குள் அனுப்பியதே அவரது மின்னல்வேக கோலாக இருந்தது. மொத்தத்தில் மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    • அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி.
    • இவர் பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடினார்.

    அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி. 35 வயதான இவர் இளம் வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டில் பார்சிலோனா அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிஎஸ்ஜி அணிக்கு மாறினார் கடந்த இரண்டு வருடங்களாக பிஎஸ்ஜி அணிக்கு விளையாடிய அவர் கடந்த வாரத்துடன் அந்த அணியில் இருந்து விடைபெற்றார்.

    இதற்கிடையே, மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவாரா அல்லது சவுதி அரேபியா கிளப் அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், பார்சிலோனா அணி மீண்டும் அவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது.

    இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மெஸ்ஸி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.

    • கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது.
    • 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

    பாரீஸ்:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சவுதிஅரேபியா சுற்றுலா துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.

    ஆனால் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது. இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையாக அவருக்கு லீக்1 போட்டியில் விளையாட 2 வாரங்கள் பி.எஸ்.ஜி. நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    • மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்களை தொட்டார்.

    பியுனஸ் அயர்ஸ்:

    கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.

    இதன் மூலம் மெஸ்சிதான் உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்பதை நிரூபித்தார்.

    உலக சாம்பியனான அர்ஜென்டினா-குராக்கோ அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.

    இதில் அர்ஜென்டினா 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அவர் 20, 33 மற்றும் 37-வது நிமிடங்களில் கோல் அடித்தார். நிக்கோலஸ் கோனல்ஸ், என்சோ பெர்னாண்டஸ், டிமரியா கோன்சாலோ மாண்டியல் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.


    மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்களை தொட்டார். அவர் அர்ஜென்டினா அணிக்காக 174 போட்டியில் விளையாடி 102 கோல்கள் அடித்துள்ளார்.

    சர்வதேச போட்டியில் 100 கோல்களை அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றார்.

    போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 198 போட்டியில் விளையாடி 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான அலிடாய் 148 ஆட்டத்தில் 109 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.

    • பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்றே மெஸ்ஸி கூறியுள்ளார்.
    • பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    பிரான்சின் பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.

    ஊதியம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதால், பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் இணைந்த பின்னர் மொத்தம் 28 ஆட்டங்களில் 17 கோல்கள் விளாசியுள்ள மெஸ்ஸி, 16 கோல் வாய்ப்புகளை உருவாக்கி சக வீரர்களுக்கு உதவியுள்ளார்.

    தமது கால்பந்து வாழ்க்கையை சமீப மாதங்களாக கொண்டாடிவரும் மெஸ்ஸி, 2022 ஆம் ஆண்டின் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையையும் கைப்பற்றினார். கத்தார் உலகக் கோப்பைக்கு முன்னர் பிஎஸ்ஜி அணியுடன் ஓராண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்திருந்தார் மெஸ்ஸி.

    ஆனால் பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியுள்ளார். பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

    தற்போது அவர் ஆண்டுக்கு 34.84 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார். மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பில் பிஎஸ்ஜி அணி முன்வைத்த நிபந்தனைகளும் மெஸ்ஸியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    இதனிடையே, மெஸ்ஸியின் தந்தை பார்சிலோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் தான் மெஸ்ஸியின் எதிர்காலம் தொடர்பில் ரசிகர்களிடையே கவலை எழுந்துள்ளது.

    ×