என் மலர்
நீங்கள் தேடியது "Lionel Messi"
- அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி.
- இவர் பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடினார்.
அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி. 35 வயதான இவர் இளம் வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டில் பார்சிலோனா அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிஎஸ்ஜி அணிக்கு மாறினார் கடந்த இரண்டு வருடங்களாக பிஎஸ்ஜி அணிக்கு விளையாடிய அவர் கடந்த வாரத்துடன் அந்த அணியில் இருந்து விடைபெற்றார்.
இதற்கிடையே, மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவாரா அல்லது சவுதி அரேபியா கிளப் அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், பார்சிலோனா அணி மீண்டும் அவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மெஸ்ஸி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.
- கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது.
- 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
பாரீஸ்:
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி, பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவர் அண்மையில் சவுதிஅரேபியா சுற்றுலா துறையுடன் செய்து கொண்ட ஒப்பந்தபடி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார்.
ஆனால் அவர் கிளப் நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாடு சென்றது சர்ச்சையானது. இதையடுத்து ஒழுங்கீன நடவடிக்கையாக அவருக்கு லீக்1 போட்டியில் விளையாட 2 வாரங்கள் பி.எஸ்.ஜி. நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த 2 வாரத்துக்கும் அவருக்கு சம்பளம் வழங்கப்படாது என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்துள்ள மெஸ்சி, இந்த சீசனுடன் பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு விலக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
- மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்களை தொட்டார்.
பியுனஸ் அயர்ஸ்:
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தியது.
இதன் மூலம் மெஸ்சிதான் உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்பதை நிரூபித்தார்.
உலக சாம்பியனான அர்ஜென்டினா-குராக்கோ அணிகள் மோதிய நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது.
இதில் அர்ஜென்டினா 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். அவர் 20, 33 மற்றும் 37-வது நிமிடங்களில் கோல் அடித்தார். நிக்கோலஸ் கோனல்ஸ், என்சோ பெர்னாண்டஸ், டிமரியா கோன்சாலோ மாண்டியல் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.
MESSI WHAT A CRAZY HALF, ENJOY THE GOALS!!!! ??? pic.twitter.com/f9nwKcoUeS
— mx ⭐️⭐️⭐️ (@MessiMX30iiii) March 29, 2023
மெஸ்சி முதல் கோலை அடித்த போது சர்வதேச போட்டியில் 100 கோல்களை தொட்டார். அவர் அர்ஜென்டினா அணிக்காக 174 போட்டியில் விளையாடி 102 கோல்கள் அடித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் 100 கோல்களை அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெற்றார்.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 198 போட்டியில் விளையாடி 122 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஈரான் நாட்டை சேர்ந்தவரான அலிடாய் 148 ஆட்டத்தில் 109 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருக்கிறார்.
- பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்றே மெஸ்ஸி கூறியுள்ளார்.
- பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பிரான்சின் பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்காத நிலையில் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.
ஊதியம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே முரண்பாடு நீடிப்பதால், பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிஎஸ்ஜி அணியில் இணைந்த பின்னர் மொத்தம் 28 ஆட்டங்களில் 17 கோல்கள் விளாசியுள்ள மெஸ்ஸி, 16 கோல் வாய்ப்புகளை உருவாக்கி சக வீரர்களுக்கு உதவியுள்ளார்.
தமது கால்பந்து வாழ்க்கையை சமீப மாதங்களாக கொண்டாடிவரும் மெஸ்ஸி, 2022 ஆம் ஆண்டின் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையையும் கைப்பற்றினார். கத்தார் உலகக் கோப்பைக்கு முன்னர் பிஎஸ்ஜி அணியுடன் ஓராண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்திருந்தார் மெஸ்ஸி.
ஆனால் பிஎஸ்ஜி அணியின் புதிய நிபந்தனைகளை தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என்று மெஸ்ஸி கூறியுள்ளார். பிஎஸ்ஜி அணியை பொறுத்தமட்டில் ஊதியத்தை குறைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
தற்போது அவர் ஆண்டுக்கு 34.84 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார். மேலும், புதிய ஒப்பந்தம் தொடர்பில் பிஎஸ்ஜி அணி முன்வைத்த நிபந்தனைகளும் மெஸ்ஸியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதனிடையே, மெஸ்ஸியின் தந்தை பார்சிலோனா அணியுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் தான் மெஸ்ஸியின் எதிர்காலம் தொடர்பில் ரசிகர்களிடையே கவலை எழுந்துள்ளது.
- பிபாவின் சிறந்த வீரர் விருதை மெஸ்சி வென்றார்.
- பிபாவின் சிறந்த வீராங்கனை விருதை புடெல்லாஸ் வென்றார்.
பாரிஸ்:
சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022-ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி 7 கோல்களுடன், ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் டோனி.
- டோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
ராஞ்சி:
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்சி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை டோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். இதனை ஸிவா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் டோனி. பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டனும் அவர்தான்.
டோனி மற்றும் மெஸ்சி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனை உலகக் கோப்பையை வைத்தே ஓர் உதாரணமாக சொல்லலாம். இருவரும் தங்கள் நாட்டை உலகக் கோப்பை தொடரில் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர்கள். இருவருமே இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் விளையாடிய விளையாட்டு மட்டும்தான் இங்கு வேறுபடுகிறது.
இந்தச் சூழலில் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு டோனியின் ஏழு வயதான மகள் ஸிவாவுக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸியை தனது கையொப்பமிட்டு மெஸ்ஸி அனுப்பி உள்ளார்.
"Para Ziva என அவர் ஸ்பானிய மொழியில் எழுதி தனது கையொப்பமிட்டு இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி, ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு 'அப்பாவை போலவே மகளும்' என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
- அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி. நொடிக்கு நொடி பரபரப்பாக இருந்த இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்சி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்சி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
சுமார் 18 ஆண்டுகளாக கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் மெஸ்சிக்கு இந்த உலகக்கோப்பையில் சாதனைகளும் குவிந்தன. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நாக் அவுட் போட்டிகளில் கோல் அடித்தும் அசத்தியுள்ளார். இதனால் மெஸ்சியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மெஸ்சியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட்டின் கடவுளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும் அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது லட்சியம் நிறைவேறியிருந்தது. இதே போன்ற சூழல் தான் இன்று மெஸ்சிக்கும் நிறைவேறியுள்ளது.
இந்தியாவின் 28 வருட உலகக்கோப்பை கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, இன்று அர்ஜெண்டினாவின் 36 ஆண்டு கால கனவு லியோனல் மெஸ்சிக்காக நிறைவேறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
- உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன்.
- கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.
தோகா:
உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி ஆட்டம், அதோடு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மெஸ்சி அறிவித்து இருந்தார்.
குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் பெற்ற வெற்றிக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் இதை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் உலக கோப்பையை வென்று கனவு நனவானதால் மெஸ்சி தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடுவேன் என்று அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலக கோப்பையை வெல்வது எனது வாழ்நாள் லட்சியமாக கருதினேன். உலக கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளை அனுபவிக்க விரும்புகிறேன். கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டியில் ஆடுவேன்.
உலக கோப்பைக்காக நான் மிகவும் ஏங்கினேன். கடவுள் இந்த பரிசை அளிப்பார் என்று முன்பே சொன்னேன். இந்த நேரத்தில் அது நடக்கும் என்பதை உணர்ந்தேன். இதற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியில் எங்களால் அதை வெல்ல முடிந்தது. உலக கோப்பை அழகானது.
இவ்வாறு அவர் கூறினார்.
35 வயதான லியோனல் மெஸ்சி 2005-ல் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அர்ஜென்டினா அணிக்காக 172 போட்டியில் விளையாடி 98 கோல்கள் அடித்துள்ளார்.
- உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,
- 35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியோடு அதாவது டிசம்பர் 18 ஆம் தேதி ஓய்வு பெறப்போவதாக லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தினார். அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இன்றைய போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-
உலகக் கோப்பைப் பயணத்தை இறுதிப் போட்டியில் விளையாடியவுடன் முடிவுக்கு கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அடுத்த தொடர் வருவதற்கு பல வருடங்கள் ஆகும், என்னால் அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன். இப்படி முடித்து கொள்வதே சிறந்தது என அவர் கூறினார்.
35 வயதான மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார்.
- அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.
தோகா:
கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார்.
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார்.
உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.