search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sports Minister"

    • இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

    மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார்.

    இதனால் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

    இந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

    • உத்தரப்பிரதேசத்தில் 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு அனுமதி.
    • விளையாட்டு வீரர்கள் வெளிநாடு பயிற்சி முகாம்களில் பங்கேற்க அரசு நிதி வழங்குகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளதாவது:

    உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கேலோ இந்தியா மையம் ஒன்றுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதித்துள்ளது. அம்மாநிலத்தில் மேலும் 23 பன்னோக்கு விளையாட்டு அரங்குகள் உட்பட 30 விளையாட்டுக் கட்டமைப்புத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி முகாம்கள் உட்பட விளையாட்டுக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் உலகத் தரத்திலான பயிற்சி வசதிகளுக்குப் போதிய நிதியை அரசு வழங்குகிறது.

    கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கான உதவி, ஒலிம்பிக் மேடை இலக்கு, இந்திய விளையாட்டுகள் ஆணையத்தின் விளையாட்டுகள் மேம்பாடு போன்ற திட்டங்கள் இதன் மூலம் நிறைவேற்றப் படுகிறது. பெறப்பட்ட கோரிக்கை மற்றும் முன்மொழிவுகள் அடிப்படையில் அவற்றின் தொழில்நுட்ப சாத்தியம் மற்றும் திட்ட வழிகாட்டுதல்கள் மூலம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேராவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. #ThisaraPerera
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர், லசித் மலிங்கா. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அணிக்கு திரும்பினார். அத்துடன் அவருக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அவருக்கு முன்பாக சன்டிமால் ஒரு நாள் அணிக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா 20 ஓவர் போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர். திசரா பெரேரா, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 74 பந்துகளில் 13 சிக்சருடன் 140 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திசரா பெரேராவுக்கும், மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் தன்யா வெளியிட்ட ஒரு பதிவில், ‘நாட்டின் புதிய விளையாட்டுத்துறை மந்திரியை திசரா பெரேரா சந்தித்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.



    அவரது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திசரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டுவது மக்களிடம் என்னை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். அவரது ‘பேஸ்புக்’ பதிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் அசவுகரியமான சூழல் நிலவுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இரு மூத்த வீரர்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. தலைமை பண்பு என்பது, அணிக்குள் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது ஆகும்.

    இது போன்ற தேவையற்ற சமூக வலைதள சர்ச்சைகளை தவிர்த்து, விரைவில் தொடங்க இருக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதே இப்போது நமது கவனம் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து வலுவான கேப்டன்ஷிப்பின் கீழ் அணி பயணிக்க வேண்டியது அவசியம். கேப்டனும், மூத்த வீரர்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

    தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது. தற்போதைய சூழலில் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சினையை சரி செய்து அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    மேலும், கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் 29 வயதான திசரா பெரேரா குறிப்பிட்டுள்ளார். #ThisaraPerera

    கேல் ரத்னா விருது தராத அதிருப்தியில் பஜ்ரங் புனியா விளையாட்டு மந்திரியை இன்று சந்திக்க உள்ளதாகவும் தனக்கு சாதகமான முடிவு வரவில்லை எனில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    விளையாட்டு துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கேபடன் விராட்கோலி, உலக பளுதூக்குதல் சாம்பியனான மீராபாய் சானு ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.



    இதற்கு காமன்வெல்த் போட்டியிலும் ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அதிருப்தி தெரிவித்தார்.

    கேல்ரத்னா விருது பட்டியலில் அவரது பெயர் இருந்தது. ஆனால் அவர் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    இது தொடர்பாக அவர் நேற்று பேட்டியளித்த போது, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோரை இன்று சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் பஜ்ரங் புனியாவை நேற்று மாலை மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் சந்தித்து பேசினார்.

    இது தொடர்பாக பஜ்ரங் புனியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மந்திரியை இன்று சந்திப்பதாக இருந்தேன். ஆனால் நேற்று மாலையே அவரை சந்திக்க அழைப்பு வந்தது.



    அப்போது கேல் ரத்னா விருதுக்கு எனது பெயரை ஏன் பரிசீலிக்கவில்லை என்றேன். அதற்கு அவர் நான் விருதுக்கான புள்ளிகளை பெறவில்லை என்று கூறினார். அது தவறு.

    விராட்கோலி, மீராபாய் சானுவை விட நான் அதிக புள்ளிகள் பெற்று உள்ளேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்விவகாரத்தை கவனிப்பதாக மத்திய மந்திரி கூறி உள்ளார்.

    இன்று மாலை வரை அரசின் பதிலுக்காக காத்து இருப்பேன். அதில் எனக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கோர்ட்டுக்கு செல்வேன் என்றார். #RajivGandhiKhelRatna #BajrangPunia
    ×