search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLC"

    • உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு.
    • அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்துள்ளது ஐ.சி.சி.

    இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள், இறுதிப் போட்டி நடைபெற இருக்கின்றன.

    இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் 4 வெற்றிகளை பெற்றது.

    குறிப்பாக இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தன. 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றிபெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெறாத முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியதும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டின் அரசு கலைப்பதாக அறிவித்தது.

    மேலும், இலங்கைக்கு உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த கேப்டன் அர்ஜுன ரணதுங்காவை இடைக்கால தலைவராக நியமித்தது.

    கிரிக்கெட் வாரியம் விவகாரத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை இலங்கை அணியால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

    இந்த நிலையில் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    ஜெய் ஷா குறித்து அர்ஜுன ரணதுங்கா கூறுகையில் ''இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு இடையிலான தொடர்பால், அவர்கள் (பிசிசிஐ) இலங்கை கிரிக்கெட் போர்டை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

    இலங்கை கிரிக்கெட்டை ஜெய் ஷா நடத்தி வருகிறார். இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது. ஏனென்றால், ஜெய் ஷாவிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு நபர் இந்தியாவில் இருந்து இலங்கை கிரிக்கெட்டை வழிநடத்தி வருகிறார். அவரது தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்தவராக உள்ளார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேராவுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. #ThisaraPerera
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்குபவர், லசித் மலிங்கா. அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அணிக்கு திரும்பினார். அத்துடன் அவருக்கு ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அவருக்கு முன்பாக சன்டிமால் ஒரு நாள் அணிக்கும், ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா 20 ஓவர் போட்டி அணிக்கும் கேப்டனாக செயல்பட்டனர். திசரா பெரேரா, சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 74 பந்துகளில் 13 சிக்சருடன் 140 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் திசரா பெரேராவுக்கும், மலிங்காவின் மனைவி தன்யாவுக்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது. சமூக வலைதளமான பேஸ்புக்கில் தன்யா வெளியிட்ட ஒரு பதிவில், ‘நாட்டின் புதிய விளையாட்டுத்துறை மந்திரியை திசரா பெரேரா சந்தித்து, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்ய முயற்சிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.



    அவரது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திசரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கேப்டன் பதவியில் இருப்பவரின் மனைவி இது போன்று சமூக வலைதளத்தில் குற்றம் சாட்டுவது மக்களிடம் என்னை பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி விடும். அவரது ‘பேஸ்புக்’ பதிவுக்கு பிறகு வீரர்களின் ஓய்வறையில் அசவுகரியமான சூழல் நிலவுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இரு மூத்த வீரர்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்கும்போது, இளம் வீரர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருப்பதில்லை. தலைமை பண்பு என்பது, அணிக்குள் நிலைத்தன்மை மற்றும் ஒற்றுமையை உருவாக்குவது ஆகும்.

    இது போன்ற தேவையற்ற சமூக வலைதள சர்ச்சைகளை தவிர்த்து, விரைவில் தொடங்க இருக்க இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீதே இப்போது நமது கவனம் இருக்க வேண்டும். ஒருங்கிணைந்து வலுவான கேப்டன்ஷிப்பின் கீழ் அணி பயணிக்க வேண்டியது அவசியம். கேப்டனும், மூத்த வீரர்களும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.

    தனிப்பட்ட நபரின் பழிவாங்கும் நடவடிக்கையால் ஒட்டுமொத்த தேசமும் கேலிக்கூத்தாகியுள்ளது. தற்போதைய சூழலில் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இலங்கை கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சினையை சரி செய்து அணிக்குள் ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

    மேலும், கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது செயல்பாடு சிறப்பாக இருந்தது என்றும் 29 வயதான திசரா பெரேரா குறிப்பிட்டுள்ளார். #ThisaraPerera

    அனுமதியின்றி இரவில் ஹோட்டலை விட்டு வெளியேறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளருக்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. #SLC #JeffreyVandersay
    இலங்கை அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் லெக்ஸ்பின்னர் ஜெஃப்ரே வாண்டர்சே இடம்பிடித்திருந்தார்.

    இவர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் நன்னடத்தை விதியை மீறி இரவு நேரத்தில் வீரர்கள் தங்கும் விடுதியில் இருந்த வெளியேறினார். அடுத்த நாள் அணி ஹோட்லில் இருந்து புறப்படுவதற்கு குறிப்பிட்ட காலகெடுவிற்குள் வீரர்கள் வந்தடைய வேண்டும். ஆனால், வாண்டர்சே அந்த நேரத்திற்குள் ஹோட்டல் வந்தடையவில்லை.



    இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்காததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஓராண்டு தடைவிதித்துள்ளது. அத்துடன் வீரர்கள் ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் வருவாயில் 10 சதவீதம் அபராதமாகவும் விதித்துள்ளது. 2-வது டெஸ்டின்போது இந்த சம்பவம் நடைபெற்றதால், உடனடியாக சொந்த நாடு திரும்பினார்.

    தடைக்காலமான இந்த 12 மாதத்திற்குள் வேறுஏதாவது நன்னடத்தை விதிமுறையை மீறியதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    ×