என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய் ஷா"

    • இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

    ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே H1B விசா கட்டணத்தை டிரம்ப் பல மடங்கு உயர்த்தியது இந்தியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.

    இந்தியாவுக்கு அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கொடுத்துள்ளார்.

    அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்க கிரிக்கெட் சங்கம், ஐசிசி விதிமுறைகளைத் தொடர்ச்சியாக மீறியதும், முறையான நிர்வாக அமைப்பைச் செயல்படுத்தத் தவறியதுமே இந்த நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என ஐசிசி தெரிவித்துள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலவேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜெய் ஷா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர்எஸ்எஸ் கும்பல் விரும்பவில்லை என ராகுல் காந்தி இதனை விமர்சித்தார்.
    • ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம்.

    இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் நேரம் வந்துவிட்டது என்ற அமித் ஷாவின் கூற்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆங்கிலம் கற்பதை ஆர்எஸ்எஸ் கும்பல் விரும்பவில்லை என ராகுல் காந்தி இதனை விமர்சித்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டு வருவதில் மத்திய உள்துறை அமைச்சர் முற்றிலும் தோல்வியடைந்துள்ளார்.

    இந்த பயங்கரவாதிகள் பூஞ்ச் (டிசம்பர் 2023) மற்றும் கங்கங்கீர் மற்றும் குல்மார்க் (அக்டோபர் 2024) ஆகிய இடங்களிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    மணிப்பூரில் கூட அமைதியையும், இயல்பு நிலையையும் மீட்டெடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சர் படுதோல்வி அடைந்துள்ளார். அவர் சாதித்தது எல்லாம் தன் மகனுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பை(ஐசிசி தலைவர் பதவியை) வழங்கியது மட்டுமே.

    இப்போது மத்திய உள்துறை அமைச்சர் மிகவும் அபத்தமான அறிக்கைகளை வெளியிடுகிறார். லட்சக்கணக்கான இந்தியர்கள், ஆங்கிலம் தவிர்த்து, அதிகமான இந்திய மொழிகளைப் பேசுகிறார்கள். ஒப்பிடற்கரிய சர்தார் வல்லபாய் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்ற ஒருவர் வகிப்பது அவருக்கு அவமானம்" என்று தெரிவித்துள்ளார். 

    • ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.

    ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.

    ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.

    2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது. 

    • ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு கிரேக் பார்க்லே நன்றி தெரிவித்தார்
    • ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.

    மெல்போர்ன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிமாப்வேயின் தாவெங்வா முகுலானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பார்க்லேவுக்கு ஐசிசி வாரியம் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பார்க்லே தலைவர் பதவியில் இருப்பார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக உள்ளது என்றும், தனக்கு ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பார்க்லே கூறினார்.

    இதேபோல், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா, ஐசிசி-யின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது. இந்த குழுவின் தலைவராக உள்ள ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார்.

    • இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டத்தின்போது இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. எனவே, ஆசிய கோப்பை தொடரை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்திற்கு மாற்றலாமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பஹ்ரைனில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறினால், அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று, பாகிஸ்தான் கிரிக்கட் வாரிய தலைவர் நஜம் சேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மார்ச் மாதம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகக் குழு கூட்டங்கள் நடக்கும்போது, இடம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உண்மையான போர்வீரர்கள் என்பதை இந்திய மகளிர் அணியினர் காட்டினர்.
    • அரையிறுதி போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

    கேப்டவுன்:

    பெண்கள் உலகக் கோப்பை 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் கேப்டவுனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் மல்லுக்கட்டின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு172 ரன்கள் குவித்தது.

    173 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

    5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா தொடர்ந்து 7-வது முறையாக இறுதி சுற்றை எட்டியிருக்கிறது. வெற்றியின் விளிம்புக்கு வந்து சறுக்கிய இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அந்த சோகம் இந்த முறையும் நீடிக்கிறது.

    இந்நிலையில் உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கு ஆறுதல் கூறும் விதமாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:-

    ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கடுமையான தோல்வி. ஆனால் களத்தில் எங்கள் பெண்களின் உற்சாகத்திற்காக நாங்கள் பெருமைப்பட முடியாது. குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் அளித்து. அவர்கள் உண்மையான போர்வீரர்கள் என்பதைக் காட்டினர். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீல நிற பெண்களே.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • உலகக் கோப்பையில் படுதோல்வி அடைந்ததால் இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு.
    • அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்துள்ளது ஐ.சி.சி.

    இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் அரையிறுதி ஆட்டங்கள், இறுதிப் போட்டி நடைபெற இருக்கின்றன.

    இந்தியா என்பதால் ஆடுகளம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும். வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள சிரமப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தான் 4 வெற்றிகளை பெற்றது.

    குறிப்பாக இலங்கை அணி படுதோல்விகளை சந்தித்தன. 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றிபெற்று, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெறாத முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து அரையிறுதியில் இருந்து வெளியேறியதும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டின் அரசு கலைப்பதாக அறிவித்தது.

    மேலும், இலங்கைக்கு உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த கேப்டன் அர்ஜுன ரணதுங்காவை இடைக்கால தலைவராக நியமித்தது.

    கிரிக்கெட் வாரியம் விவகாரத்தில் அரசு தலையிட்டதை தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சஸ்பெண்ட் செய்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்த முடிவு எடுக்கப்படும் வரை இலங்கை அணியால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

    இந்த நிலையில் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    ஜெய் ஷா குறித்து அர்ஜுன ரணதுங்கா கூறுகையில் ''இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு இடையிலான தொடர்பால், அவர்கள் (பிசிசிஐ) இலங்கை கிரிக்கெட் போர்டை நசுக்கி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

    இலங்கை கிரிக்கெட்டை ஜெய் ஷா நடத்தி வருகிறார். இலங்கை கிரிகெட் அழிந்து வருகிறது. ஏனென்றால், ஜெய் ஷாவிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஒரு நபர் இந்தியாவில் இருந்து இலங்கை கிரிக்கெட்டை வழிநடத்தி வருகிறார். அவரது தந்தை அமித் ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருப்பதால், ஜெய் ஷா சக்தி வாய்ந்தவராக உள்ளார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
    • ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஜனவரி 2021-ல் ஏற்றுக்கொண்டார்.

    பாலி

    இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    ஏசிசி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவர் வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு ஜனவரி 2021-ல் ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார். 2022-ல் ஷாவின் தலைமையின் கீழ், ஏசிசி ஆசிய கோப்பை டி20 போட்டியாகவும், 2023-ல் ஒருநாள் போட்டியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
    • இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்தது.

    அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கும் 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ராக்கோட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை ஜெய் ஷா வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. இதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

     


    "2023 அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாம் உலகக் கோப்பை வெல்லவில்லை என்ற போதிலும், தொடரச்சியாக பத்து போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் நம் மனங்களை வென்றனர். 2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய தேசிய கோடி உயர பறக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்தார்.

    இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்த இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

    • 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார்.
    • காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல.

    ராஜ்கோட்:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை. தொடர்ந்து எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் எதற்காக விலகினார் என்ற காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி.சி.ஐ) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அதன் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    விராட் கோலிக்கு பி.சி.சி.ஐ. தொடர்ந்து ஆதரவு அளிக்கும். 15 ஆண்டுகளான கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுமுறை கேட்டுள்ளார். அது அவருடைய உரிமை. காரணமே இல்லாமல் லீவு கேட்கும் வீரர் விராட் கோலி அல்ல. நமது வீரர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவது தொடர்பாக விராட் கோலியிடம் விரைவில் பேசுவோம்.

    வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார். ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையின் போது ஹர்த்திக் பாண்ட்யா காயம் அடைந்ததால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா திரும்ப அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எதிர் காலத்தில் 20 ஓவர் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா நிச்சயம் கேப்டனாக இருப்பார்.

    ரோகித்சர்மாவிடம் திறமை இருக்கிறது. அவரது தலைமையில் 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உள்ளூரில் நடைபெறும் முதல்தர போட்டியில் விளையாடுவது கட்டாயமாகும். தேர்வு குழு தலைவர், பயிற்சியாளர் அல்லது கேப்டன் உங்களி டம் (வீரர்கள்) உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ஆட வேண்டும். இது அனைத்தும் ஒப்பந்த வீரர்களுக்கு பொருந்தும்.

    வீரர்கள் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. அதை தேர்வு குழுதான் முடிவு செய்ய வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசின் முடிவுப்படி தான் இந்திய அணி பங்கேற்பது தெரிய வரும்.

    இவ்வாறு ஜெய்ஷா கூறி உள்ளார்.

    • காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார்.
    • விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் 17-வது ஐ.பி.எல். தொடர் மூலம் மறுபிரவேசம் செய்வதற்காக தயாராகி வருகிறார்.

    இந்த நிலையில் இவர்களது உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார். ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் பெரிய பலமாக இருக்கும். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து.

    சிக்கலின்றி விக்கெட் கீப்பிங் பணியை அவர் தொடரும் பட்சத்தில், அவரால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட முடியும். அதற்கு முன்னோட்டமாக ஐ.பி.எல். போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இது ஒரு நிறுவனம் அல்ல. எனவே இதில் யாரும் முதலீடு செய்ய முடியாது.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • கடந்த வருடம் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ராகுல் டிராவிட் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்- ஜெய் ஷா

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இந்தியாவில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரோடு அவருடைய தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.

    ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை தோல்வியடையாமல் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த வருடம் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்தது.

    இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் ராகுல் நீடிப்பாரா? என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை மட்டுமோ. தன்னிச்சையாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்படமாட்டாது. அவர் விரும்பினால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் தொடர்பான விளம்பரம் வெளியிடப்படும். புதிய பயிற்சியாளர் இந்தியாவைச் சேர்ந்தவரா? வெளிநாட்டைச் சேர்ந்தவரா? என்பது தீர்மானிக்க முடியாது. அதுகுறித்து சிஏசி முடிவு செய்யும். பிசிசிஐ உலகளாவிய அமைப்பாகும்" என் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், தனது மற்றும் தனது சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ராகுல் டிராவிட் கையெழுத்திட்டார். ஆனால் அவர்களது பதவிக்காலம் ஜூன் மாதம் வரைதான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×