search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளார்.
    • தங்களுடைய திறமையுடன் அவர்கள் இருவரும் செல்ல வேண்டும். அதிரடி காட்ட வேண்டும். அதுதான் மனநிலையாக இருக்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. மற்ற வீரர்களை தேர்வு செய்ய வேண்டியதுதான் வேலை.

    அவரை எடுக்க வேண்டும், இவரை எடுக்க வேண்டும், அவரை எடுக்கக்கூடாது, இவரை எடுக்கக்கூடாது என கருத்துகள் உலா வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சீனியர் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கக் கூடாது என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இன்னும் 10 நாட்களுக்குள் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அணியை அறிவிக்கப்போகிறது. விராட் கோலிக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்பதுதான் மில்லியன் கேள்வி. ஆனால் ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் முடிவில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அதேவேளையில் அவரது ஸ்டிரைக் ரேட் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது. குறிப்பாக 67 பந்தில் 100 ரன்கள் அடித்தது விமர்சனத்தை எழுப்பியது.

    எப்படி இருந்தாலும் ரோகித் சர்மாவுடன் விராட் கோலிதான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சவுரவ் கங்குலி கூறுகையில் "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் இருவரும் இருக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட முறையில், இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். இளைஞர்கள் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட பேலன்ஸ்தான் சிறந்த அணி. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அபாரமானவர்கள், ஆட்டங்களின் எண்ணிக்கையால் மட்டும் நான் சொல்லவில்லை. நீண்ட காலமாக அவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் கூறுகிறேன்.

    டி20 கிரிக்கெட்டை பொருத்தவரைக்கும் பயம் இல்லாமல் விளையாட வேண்டும். இதை ஏற்கனவே நான் ராகுல் டிராவிட்டிடம் தெரிவித்திருக்கிறேன். ஆடுகளத்திற்கு செல்ல வேண்டும். பந்துகளை எதிர்கொண்டு அதிரடி காட்ட வேண்டும். நீண்ட பேட்டிங் லைன்-அப் உள்ளது. விக்கெட்டுகள் வீழ்ந்தால் கூட, கட்டுப்படுத்த முடியும்.

    ரேகித் சர்மா, விராட் கோலியால் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியுமா?. இது மிகப்பெரிய மாற்றம் இல்லை. இதை செய்யக்கூடிய திறமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 50 ஓவர் உலகக்கோப்பையில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ததை பார்த்தீர்கள்.

    தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி மிகவும் சிறந்த அணி. முதல் ஏழு முதல் 10 ஓவர் வரை எதிரணி மீது நெருக்கடியை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தினார். அது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிம்மதி பெருமூச்சுடன் சற்று நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக விளையாட வாய்ப்பு கொடுத்தது.

    விராட் கோலியும், ரோகித் சர்மா ஆகியோரால் அதே பாணியில் செயல்பட முடியும் என நினைக்கிறேன். அவர்கள் சிறந்த வீரர்கள். விராட் கோலி 40 பந்தில் 100 ரன்கள் அடிக்கும் திறனை பெற்றுள்ளார். தங்களுடைய திறமையுடன் அவர்கள் இருவரும் செல்ல வேண்டும். அதிரடி காட்ட வேண்டும். அதுதான் மனநிலையாக இருக்க வேண்டும். பவர்பிளேயான 6 ஓவருக்குப்பின் என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்போம்.

    இந்திய அணியில் ரோகித் சர்மா உடன் ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

    • விராட் கோலி மற்றும் அனுஷ்க சர்மா தம்பதிக்கு பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்தது.
    • அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

    விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி மகள் வாமிகா பிறந்தாள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    ஆனால், அதற்கு முன் சில மாதங்களாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தையை வரவேற்க இருப்பதாகவே செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது தான், விராட் கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவியர்ஸ் தனது யூடியூப் சேனலில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது 2-வது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்தார்.இதையடுத்து, ஒரு சில நாட்களுக்கு பிறகு அது உண்மையில்லை என்று அதற்கு மறுப்பு செய்தியும் வெளியிட்டார்.

    இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், பிப்ரவரி 15-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் 20-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டனர்.

    தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் தான் அனுஷ்கா சர்மா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு தனது மகன் அகாய் மற்றும் மகள் வாமிகா உடன் லண்டனிலிருந்து திரும்ப வந்துள்ளார். இந்தியா வந்த அவரை மும்பை விமான நிலையத்தில் புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    அப்போது தனது மகன் மற்றும் மகளை கேமராவிற்கு மறைத்து தான் மட்டுமே போஸ் கொடுத்துள்ளார். ஆனால், மகனை புகைப்பட கலைஞர்களிடம் காண்பித்துள்ளார். புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஆர்சிபி விளையாடும் போட்டியை பார்க்க அனுஷ்கா வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பந்து வீச்சில் ஆர்சிபி அணியின் 4 பவுலர்கள் அரைசதம் விளாசினர்.
    • அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 68 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

    பெங்களூருவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடினர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.

    இதன் மூலம் புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் பவுலிங் சரியில்லை என்று அவருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும், ரீஸ் டாப்லி 68 ரன்களும், வைஷாக் விஜயகுமார் 64 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும் வாரி வழங்கினர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்வதை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே மனமுடைந்து நின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து மோசமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசியதை கண்ட விராட் கோலி ஃபீல்டிங் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே திட்டித் தீர்த்தார். அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.

    இதனை கண்ட ரசிகர்கள் பீல்டிங் நின்றால் சுறுசுறுப்பாக இருக்கும் அந்த வீரரை இப்படி கண்கலங்கும் வகையில் நிற்க வைத்து வீட்டீர்களே என ஆர்சிபி பவுலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். 

    ஆர்சிபி ரசிகர்கள் தவிர மற்ற ரசிகர்கள் விராட் கோலிக்காக ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார்.
    • பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    அதிக ரன்கள் குவித்தும் குறைந்த ஓவரில் மும்பை அணி வெற்றிபெற்றது ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    இந்நிலையில் டு பிளேசிஸ் தலைமையில் பெங்களூரு அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன். அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும்.

    விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார். பஃப் டு பிளேஸிஸை நீங்கள் விளையாட வைக்க வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார். அதாவது டு பிளேஸிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார்.

    எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்.

    என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

    • ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.
    • தோல்வியடையும் வேலையிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக விராட் கோலி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - ஆர்சிபி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 196 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலியின் செயல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. மும்பையில் நடந்த இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்ய வரும் போது ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

    அந்த நிலையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி உடனே ரசிகர்களை நோக்கி அவரும் இந்திய வீரர் தான் என்னும் வகையில் சைகை காட்டி இப்படி செய்யாதீர்கள் என கூறினார். மேலும் அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் எனவும் கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோல்வியடையும் வேலையிலும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக விராட் கோலி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

     

    விராட் கோலி, எதிரணி வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்பட கூடியவர். அவரை சீண்ட எதிரணி வீரர்கள் யோசிப்பார்கள். ஏனென்றால் அவரை சீண்டினால் பேட்டால் தான் பதிலடி கொடுப்பார். அது நிறைய முறை நடந்திருக்கிறது.

    ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்க்கு எதிராக நிறைய முறை கோலி வம்பிழுத்துள்ளார். ஆனால் ஸ்மித் பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் விளையாடாமல் இருந்தார். ஒரு வருடம் கழித்து வந்து விளையாடினார். அப்போது இந்தியாவுடனான போட்டியின் போது ரசிகர்கள் ஸ்மித்தை கலாய்த்து கோஷங்களை எழுப்பினர். உடனே பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி அப்படி செய்யாதீர்கள் எனவும் அவருக்கு ஆதரவு கொடுங்கள் எனவும் சைகை மூலம் காட்டினார்.

    இதேபோல ஐபிஎல் தொடரின் போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் மோதலில் ஈடுப்பட்டனர். அதன் பிறகு ரசிகர்கள் நவீன் உல் ஹக்குக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

    அப்போது ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர். உடனே விராட் கோலி அவரை கிண்டல் செய்யாதீர்கள் என கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத நவீன் உல் ஹக், கோலியிடம் வந்து கட்டியணைந்து சமரசம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
    • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.

    அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து 'இன்பமாய் இருக்குதய்யா' என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல்-ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.

    இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

    இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் பாய் மற்றும் நவீன் உல்ஹக் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்தார். 

    • ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியாவின் புதிய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.
    • விராட் கோலி டி20-யில் இருந்து விலகியிருந்த நிலையில், அவரது ஆட்டம் அணியில் இடம் பெறுவதை காட்டுகிறது.

    டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    அதேவேளையில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த தாவித் மலான், இந்தியா சரியான வகையில் வீரர்களை தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தாவித் மலான் கூறுகையில் "நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான வகையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் இந்தியாவின் புதிய வீரர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இந்திய கிரிக்கெட் போர்டு அதிக திறமையுள்ள வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்தால் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.

    விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தபோதிலும் கூட, ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் இந்தியாவின் இறுதி அணிக்கான வலிமையான போட்டியாளர் என்பதை காட்டுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ரசிகர்களை ஈர்க்கும் வகையில மிகச்சிறந்த வகையில விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான தாவித் மலான் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக 2023 உலகக் கோப்பையில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியர் முடிவுக்கு வருவதாக அஞ்சப்படுகிறது. தாவித் மலான் தற்போது யார்க்ஷைர் அணியின் சப்போர்ட் கோச்சாக பணியாற்ற உள்ளார்.

    இருந்தபோதிலும் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளார்.

    • கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
    • கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.

    மும்பை:

    20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-

    விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

    கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

    • ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார்.
    • ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் சேர்த்தது.

    அதன்பின் களமிறங்கிய குஜராத் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 72 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

    இதன் மூலம் கில் புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் கேஎல் ராகுலுக்கு பின் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். கேஎல் ராகுல் 80 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை சேர்த்த நிலையில், சுப்மன் கில் 94 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

    அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய இளம் வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதுவரை 26 வயது 186 நாட்களில் விராட் கோலி 3 ஆயிரம் ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலியின் சாதனையை சுப்மன் கில் 24 வயது 215 நாட்களில் முறியடித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்
    • 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். இதுவரை அவர் விளையாடிய 5 போட்டிகளில் 316* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

    பெங்களூரு அணியில் விராட் கோலி சிறப்பாக விளையாடியும், பிற பேட்ஸ்மேன்களான கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் போன்றோர் போதுமான ரன்களை அடிக்கவில்லை. மேலும் பெங்களூரு பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சில் எதிரணிக்கு அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

    அதனால் 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

    ஆனால் பெங்களூருவின் இந்த தோல்விக்கு குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மெதுவாக விளையாடும் விராட் கோலி தான் முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிராக போட்டியில் 67 பந்துகளில் 100 ரன்கள் அடித்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதமடித்த வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

    அதை வைத்து விராட் கோலி தான் பெங்களூருவின் தோல்விக்கு 100% காரணம் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

    விராட் கோலி மீதான இத்தகைய விமர்சனங்களுக்கு அவரின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

    "இப்படி முட்டாள்தனமாக பேசுபவர்களுக்கு போட்டியின் சூழல், நிலைமை, அணி எப்படி போராடுகிறது என்பதைப் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். அவர்கள் செய்திகளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளம்பரத்திற்காக மட்டுமே பேசுகின்றனர்.

    நீங்கள் ஒரு சாதாரண வீரரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்திகளில் கொண்டு வருவதில்லை. ஆனால் விராட் கோலி போன்ற ஒருவரைப் பற்றி பேசினால் அது உங்களை தலைப்புச் செய்தியில் கொண்டு வரும். அப்படி பேசுபவர்களை சிலர் இயக்குகின்றனர்.

    கிங் என்பவர் எப்போதும் கிங்'காகவே இருப்பார். ஆனால் கிரிக்கெட்டின் சி என்ற எழுத்துக்கான அர்த்தத்தை தெரிந்த உண்மையான ரசிகர்கள் யாரும் இது போன்ற முட்டாள்தனத்தை செய்ய மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியது.
    • மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என தெரிவிக்கப்பட்டது.

    டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வந்தன. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 இல் அவர் ரன் குவிப்பு பட்டியலில் முன்னணியில் உள்ள அவரது ஃபார்மைப் பார்த்த பிறகு, 35 வயதான கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Cricbuzz-ன் அறிக்கையின்படி, விராட் கோலி நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விராட் கோலியின் தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது
    • விராட் கோலியின் இந்த ஹேர் ஸ்டைலை செய்தவர் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம்

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆதலால் விராட் கோலியின் உடை, ஸ்டைல், சிகை அலங்காரம், டாட்டூ போன்றவை அடிக்கடி பேசுபொருளாக மாறும்.

    அவ்வகையில் விராட் கோலியின் தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    விராட் கோலியின் இந்த ஹேர் ஸ்டைலை செய்தவர் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம். இவர் முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் ஹேர் கட் செய்து வருகிறார். எம்.எஸ். டோனிக்கும் இவர் தான் ஹேர் ட்ரெஸ்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், கோலியின் ஹேர் கட் குறித்து பேசிய சிகையலங்கார நிபுணர் ஹக்கீம், "நான் ஹேர் கட்டுக்கு எவ்வளவு ரூபாய் வரை வசூலிக்கிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள். ஹேர் கட் செய்வதற்கு நான் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம் ரூபாய் ஆகும்.

    டோனி மற்றும் விராட் இருவரும் என்னுடைய பழைய நண்பர்கள், பல வருடங்களாக என்னிடம் தான் ஹேர் கட் செய்து வருகிறர்கள். இப்போது ஐபிஎல் தொடங்கியுள்ளதால், வித்தியாசமான, கூலான லுக்கில் புதுவித ஹேர் கட் செய்ய முடிவு செய்தோம்.

    விராட் எப்போதுமே இந்த முறை நாம் புதிய ஹேர் ஸ்டைலை முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்த முறை இந்த மாதிரி முயற்சி செய்யலாம் என்று எப்போதுமே ஒரு ரெபரென்ஸ் வைத்திருப்பார்.

    அதன்படி, இந்த முறை முற்றிலும் வித்தியசமான சூப்பர் கூல் லுக் ஒன்றை செய்ய முடிவு செய்தோம். விராட்டின் இந்த புது லுக்கை நான் எனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததும் அந்த புகைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்னை மிரளவைத்தது என்று தெரிவித்தார்.

    ஆனாலும் விராட் கோலியின் ஹேர் கட்டுக்கு எவ்வளவு வசூலித்தார் என்று அவர் வெளிப்படையாக கூறவில்லை.

    ×