search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் ஓய்வு கேட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று ஒருநாள், டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது.

    இந்தத் தொடர் டிசம்பர் 10-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒயிட்-பால் தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புவதாக பிசிசிஐ-க்கு விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 3 சதங்கள் விளாசியதுடன் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இருந்தபோதிலும் கோப்பையை வெல்ல முடியாததால் மிகுந்த கவலை அடைந்தார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரின்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த பிறகு இருவரும் டி20-யில் விளையாடவில்லை.
    • அடுத்த ஆண்டு வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கும் உலகக் கோப்பையில் அவர்கள் இடம் பிடிப்பார்களா? என்பது கேள்வி.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் 55 ஆட்டங்களை கொண்டது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்று வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் (50 ஓவர்) இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. அபாரமாக விளையாடி முக்கியமான ஆட்டத்தில் தோல்வி ஏற்படுவது சில சமயங்களில் நடக்கும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது அனுபவத்துக்கு மாற்று இல்லை. வெஸ்ட்இண்டீஸ் ஆடுகளங்களை நன்கு அறிந்தவர்கள். சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இதனால் 20 ஓவர் உலக கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும். அவர்களை அணியில் சேர்க்க வேண்டும்.

    இந்தியா எந்த அணியை தேர்வு செய்தாலும் ஒரு வலிமையான சக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் கோலியும், ரோகித் சர்மாவும் ஜாம்பவான்கள். அவர்களை எளிதில் நிராகரித்துவிட இயலாது.

    இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

    இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை அரைஇறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தப் போட்டியில் இருந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் அளவில் இடம் பெறவில்லை.

    ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு 20 ஓவர் அணி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலி நீண்ட காலத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • டி20 கிரிக்கெட்டில் தங்களது எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க பிசிசிஐ இருவருக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளது.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் திகழந்து வருகிறார்கள்.

    நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையுடன் விளையாடினார்கள். தொடர் முழுவதும் அசத்திய இருவரால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    ஒவ்வொரு உலகக்கோப்பை தொடருக்குப் பின்னரும் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கப்படும். ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. விராட் கோலிக்கு 35 வயதாகிறது.

    டி20 கிரிக்கெட்டில் இருவரின் ஆட்டத்தில் எந்த தொய்வும் இல்லை. என்றபோதிலும், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து யோசிக்கிறது.

    அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின் 2026-ல் நடக்கிறது. 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை வழி நடத்தும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 அணி கேப்டனாக பிசிசிஐ நியமித்துள்ளது.

    தற்போது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா, விராட் கோலியுடன் செல்ல வெண்டுமா? என்பதைத்தான் பிசிசிஐ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு.

    உலகக் கோப்பை தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வரவில்லை. இதற்குள் இந்த கேள்வியை எழுப்பினால் சரியாக இருக்காது என பிசிசிஐ இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    இருந்தபோதிலும், டி20 கிரிக்கெட்டில் உங்களுடைய எதிர்காலம் குறித்து நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அவர்கள் முடிவுக்கே விட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை 2024 உலகக்கோப்பை வரை விளையாட விரும்புகிறோம் என்று இருவரும் தெரிவித்தால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிசிசிஐ ஆராயும். இதில் பிசிசிஐ-க்கு உடன்பாடு இல்லை என்றால், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ரோகித் சர்மா 148 போட்டிகளில் 140 இன்னிங்சில் 4 சதம், 29 அரைசதங்களுடன் 3863 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.32 ஆகும்.

    விராட் கோலி 115 டி20 போட்டிகளில் 107 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 37 அரைசதங்களுடன் 4008 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.73 ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    அந்த வகையில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 4 இடத்தில் 3 இந்திய வீரர்கள் இடம் பிடித்தனர். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார். 2-வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமும் 3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளனர்.

    பந்து வீச்சாளர்கள் பட்டியலில் டாப் 10-ல் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சிராஜ் 3-வது இடத்திலும் 4-வது இடத்தில் பும்ராவும் குல்தீப் யாதவ் 6-வது இடத்திலும் 10-வது இடத்தில் முகமது சமியும் உள்ளனர். 741 புள்ளிகளுடன் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

    அணிகள் பட்டியலில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார்.
    • அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

    அகமதாபாத்:

    உலகக்கோப்பை இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

    உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பிசிசிஐ சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அவர் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்று அற்புதமாக பிடித்தார். அதனால் அவர் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தங்கப்பதக்கத்தை கடந்த ஆட்டத்தில் சிறந்த பீல்டராக தேர்வு செய்யப்பட்ட ஜடேஜா வழங்கி கவுரவித்தார்.

    முன்னதாக இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கான முதல் ஆட்டத்திலும் சிறந்த பீல்டராக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்திய அணி தோல்வியடைந்ததை ஒட்டி, ரசிகர்கள் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர்.

    இந்திய அணி வீரர்களும் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் சிந்தியபடி வெளியேறினர்.

    இந்நிலையில், தோல்வி அடைந்ததை நினைத்து சோகமாக சென்ற விராட் கோலியை ஆரத் தழுவி ஆறுதல் கூறினார்.

    இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று சதங்கள் விளாசி சச்சின் ஒருநாள் சாதனையை முறியடித்தார்.
    • தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ரன்களுக்கு மேல் அடித்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6-வது முறையாக கோப்பையை வென்றது.

    இந்தத் தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 49 சதங்கள் அடித்ததை முறியடித்தார்.

    இன்றைய போட்டியில் 63 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒரே தொடரில் 765 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசிய நிலையில், இந்திய அணி ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் ரன்களை பொறுமையாக சேர்த்து வந்தது. இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய விராட் கோலி நிதானமாக விளையாடி 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து முறை அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ஸ்டீவன் ஸ்மித் உடன் பகிர்ந்து கொள்கிறார்.

    2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பிறகு விராட் கோலி 2019 மற்றும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் என இரண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ளார்.

    இதன் மூலம் இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்று இருக்கிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரின் 11 போட்டிகளில் விராட் கோலி 765 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 95.62 ஆகும். இதில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் அடங்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்.
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஒட்டி சச்சின் டெண்டுல்கர் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.

    இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார். 2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கி உள்ள நிலையில், இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது.
    • ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர்.

    ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்த போட்டியில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது உள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுலகரின் சதங்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர். இதனால் 30 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் சுவிங் ஆவதில்லை. மேலும் பவர்பிளேயில் புதிய விதிமுறை பின்பற்றபடுகிறது. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை அப்போது இருந்திருந்தால் அந்த காலத்தில் சச்சினின் ரன்களும், சதங்களும் இருமடங்காக உயர்ந்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.