என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி"

    • தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
    • இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத ஒரு அணி இந்த முறை மகுடம் சூட வேண்டும் என்று விரும்புகிறேன்.

    10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 74 ஆட்டங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் அந்த சமயம் சர்வதேச போட்டிகள் இல்லாத வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களை சரிகட்டியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டில் ஆட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

    இது குறித்து ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் கூறுகையில், 'ஐ.பி.எல்.-ல் ஒவ்வொரு அணியும் முழுமையாக உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோதும் வகையில் போட்டி அட்டவணையை விரிவுப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இத்தகைய பாணியில் ஆடும் போது, மொத்தம் 94 ஆட்டங்கள் நடத்த வேண்டி இருக்கும். அடுத்த டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்கும் காலக்கட்டமான 2028-ல் இருந்து அதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் 94 ஆட்டங்கள் என்றால் போட்டிக்குரிய நாட்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டி இருக்கும்.

    போட்டி அட்டவணைக்கு ஏற்ப காலக்கட்டத்தை உருவாக்க, இரு நாட்டு கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) போட்டிகளை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் விவாதிக்கிறோம்.

    அதே சமயம் அணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை. 10 அணிகள் என்பதே நன்றாகத் தான் இருக்கிறது. தொடர் மீதான சுவாரசியமும், தரமான கிரிக்கெட்டையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டி வளர்ச்சி அடைந்து வருகிறது. ரசிகர்களின் ஆர்வத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத ஒரு அணி இந்த முறை மகுடம் சூட வேண்டும் என்று விரும்புகிறேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் கோப்பையை வெல்லவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் அவ்வப்போது நன்றாக ஆடுகிறது. இந்த அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால், இந்த சீசனில் ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். அவ்வாறு நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.' என்றார்.

    • பாகிஸ்தானுடன் இந்தியா நேரடி கிரிக்கெட் விளையாடுவதில்லை.
    • பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐசிசி தொடர்களில் விளையாட வேண்டாம் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.

    எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டி கிடையாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இதனால் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் இந்தியா- பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெறக் கூடாது என ஐசிசி-க்கு பிசிசிஐ கடிதம் எழுதியாக செய்திகள் வெளியானது.

    ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லாவிடம் கேட்டபோது, "இந்த சூழ்நிலையில் அரசின் ஆலோசனைகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மற்றொரு பிசிசிஐ அதிகாரி, இதுபோன்ற சூழ்நிலை தனக்கு புதிது. தற்போதைய பொது மனநிலையை பிசிசிஐ அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். பரவி வரும் செய்திகளுக்கு எந்த மதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார்.
    • பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார்.

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

    சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றிபெற ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதும் உதவினார்.

    பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தக் கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

    துபாய்:

    ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா (தென் ஆப்பிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.

    ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.

    ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.

    2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது. 

    • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
    • இதனால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது இல்லாமல் போய் விட்டது என பந்து வீச்சாளர்கள் ஆதங்கம்.

    கிரிக்கெட் சமீப வருடங்களாக பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் பேலன்ஸ் இல்லாமல் போய்விட்டது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக வகையில்தான் விதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் பந்து வீச்சாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    50 ஓவர் போட்டிகளில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றபோது ஒரு புதிய பந்துதான் பயன்படுத்தப்படும். 30 ஓவர்களுக்குப் பிறகு பந்து பழையதாகிவிடும். இதனால் நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இன்காரணமாக கடைசி 10 ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

    பின்னர் இரண்டு பந்துகள் பயன்படுத்த ஐசிசி அனுமதி அளித்தது. அதன்படி ஒரு பக்கத்தில இருந்து ஒரு புதிய பந்தும், மற்றொரு பக்கத்தில் இருந்து ஒரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இதனால் ஒரு பந்து 25 ஓவர்தான் பயன்படுத்தப்படும்.

    இதன் காரணமாக ரிவர்ஸ் ஸ்விங்-கை பார்க்க முடியாமல் போனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடைசி 10 ஓவரில் சர்வ சாதாரணமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக முன்னாள் வீரர்கள் கடுமையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் அணி, இரண்டு பந்திற்குப் பதிலாக ஒரு பந்தை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.

    இதனால் ஐசிசி ஒரு பந்தை பயன்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இதனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடியும். 

    • பாகிஸ்தானுக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐசிசி அபராதம் விதித்தது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் மெதுவாக பந்து வீசியதற்காக பாகிஸ்தான் அணிக்கு ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை.

    சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் நவீன கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை விளக்கியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு 30 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) வருவாய் பகிர்வு முறை எப்படி வளைந்துள்ளது என்பதையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 38.5 சதவீத வருவாயை எடுத்துக் கொள்வதாக எடுத்துரைத்துள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் நிதி உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கையில், பிசி.சி.ஐ. ஏன் ஐ.சி.சி.யின் வருவாய் பகிர்வில் அதிக பங்குகளை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்த அறிக்கையில் ஐ.சி.சி. வருவாயில் பி.சி.சி.ஐ. பங்களிப்புகள் என்னென்ன என்பது பற்றியும் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இதுதவிர இந்திய சந்தைக்கான ஒளிபரப்பு உரிமம் எவ்வளவு தொகைக்கு விற்பனையாகிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. மேலும், இந்த தொகை காரணமாக ஐ.சி.சி.க்கு கிடைக்கும் நிதி எவ்வளவு என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை. இந்திய அணி போட்டிக்காக விளம்பரதாரர்கள் எந்தளவுக்கு வரிசையில் நிற்கின்றனர் என்பது பற்றியும் இந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இந்த அறிக்கையின் முக்கிய அம்சமாக ஐ.சி.சி. வருவாயில் பெரும் பங்கு பி.சி.சி.ஐ.க்கு செல்வதும் கிட்டத்தட்ட 50 சதவீத தொகை முதல் மூன்று பெரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதும் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. இது தவிர பி.சி.சி.ஐ.-க்கு வழங்கப்படும் 38.5 சதவீத நிதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

    அறிக்கை குறித்து சந்தை வல்லுநர்கள் கூறும் போது, பால் மார்ச் தலைமையிலான ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், ஒட்டுமொத்த விளையாட்டியின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
    • பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

    சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.

    ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.

    • பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
    • இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது உள்ள வீரர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.

    இந்தியா எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் விளையாடுவதால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற்றதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது. சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

    மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும்.

    இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது. தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது.

    கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது. நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைடு எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள்.

    என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறினார்.

    • விராட் கோலி 1 இடம் பின்தங்கி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையை இன்று ஐசிசி-யை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10- இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதன்படி 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 1 இடம் பின் தங்கி 5-வது இடத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற நியூசிலாந்து வீரர் 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ×