search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bcci"

    • பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசினார்
    • லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

    2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்ற சூழலே நிலவுகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் [PCB] தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

     

    அந்த வகையில் பிசிசிஐ -க்கு பிசிபி கூறிய திட்டம் என்னவென்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டிக்கு மீண்டும் பாகிஸ்தான் வரலாம். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின்போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி கூறியுள்ளது.

    தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வார இடைவெளி இருப்பதால் இது சாதியாமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திருப்ப ஏதுவாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • துபாய் அல்லது சவுதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு.
    • அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏலம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்யவில்லை.

    உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 லீக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) திகழ்ந்து வருகிறது. 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

    மெகா ஏலத்தை பொதுவமாக வெளிநாடுகளில் நடத்த பி.சி.சி.ஐ. விரும்புகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்றது. இந்த வருடம் லண்டன் (இங்கிலாந்து), துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்தது.

    நவம்பர் மாதம் இறுதியில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் லண்டனில் (இங்கிலாந்து) குளிர்காலம் என்பதால் அதை பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.

    துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். துபாயை விட சவுதி அரேபியாவில் செலவு அதிகம் எனக் கூறப்படுகிறது. 10 அணிகளும் ஒரு குழுவுடன் செல்லும். அவர்களுக்கு ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

    மீண்டும் துபாயில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த இடம் என அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

    ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் ஆறு வீரர்களை (Right-To-Match option- உடன்) தக்கவைத்துக் கொள்ள முடியும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. முதல் வீரரை 18 கோடி ரூபாய்க்கும், 2-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கும், 3-வது வீரருக்கு 11 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும். 4-வது வீரரை 18 கோடி ரூபாய்க்கு உள்ளேயும், 5-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கு உள்ளேயும் தக்கவைத்துக் கொள்ள முடியும். uncapped வீரரை 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொள்ளலாம்.

    • பாபா இந்திரஜித் 78 ரன்களை அடித்தார்.
    • இஷான் கிஷன் 111 ரன்களை அடித்தார்.

    துலீப் கோப்பை தொடரின் 2 ஆம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா சி அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர்.

    இதில் கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் கை கோர்த்த சாய் சுதர்சன் - ரஜத் படிதார் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 43 மற்றும் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 111 ரன்களை விளாசினார். பாபா இந்திரஜித் நிதானமாக விளையாடி 78 ரன்களை அடித்தார். இன்றைய நாளில் போட்டி முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா சி அணி 357 ரன்களை அடித்துள்ளது.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதே போன்று இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டியும் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணிக்கு சாம்ஸ் முலானி 88 ரன்களையும், தனுஷ் கோடியன் 53 ரன்களையும் அடித்தனர்.

    மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்களை அடித்துள்ளது. 

    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் 19-ந் தேதி தொடங்குகிறது.
    • 2-வது டெஸ்ட் போட்டிக்கு கான்பூரில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் அணி இந்தியா வரவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் 27-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் கான்பூரில் நடக்கும் போட்டியை நடத்த விடாமல் போராட்டம் நடத்த உள்ளதாக மிரட்டல் வந்துள்ளது. இதற்கு திட்டமிட்டப்படி போட்டி எந்தவித எதிர்ப்பும் இன்றி நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிசிசிஐ திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் முன்பு அறிவித்தபடி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோரிக்கையை பிசிசிஐ மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டி, மூன்று நாட்களாக டாஸ் கூட போடப்படாமல் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கனமழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலைமை மாறி, தற்போது மழையால் மைதானத்தில் தேங்கிய நீர் மற்றும் ஈரப்பதம் காரணமாக இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை.

    கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற திட்டமிடப்பட்டது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் மூன்று நாட்களாக மைதானத்தில் மழைநீர் தேங்கி இருப்பது, ஈரப்பதம் காயாமல் இருப்பது போன்ற காரணங்களால் போட்டி துவங்கப்படவே இல்லை.

     


    மைதானத்தில் போதுமான வசதி இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இங்கு வரவே கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியை லக்னோ அல்லது டேராடூனில் நடத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக பிசிசிஐ சார்பில் பெங்களூரு மற்றும் கான்பூர் போன்ற மைதானங்களில் போட்டியை நடத்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், ஆப்கானிஸ்தான் தான் நொய்டாவில் போட்டியை நடத்த விரும்பியதாக கூறப்பட்டது.

    "எங்களது முதல் தேர்வு லக்னோ மைதானம் தான். அது கிடைக்காத பட்சத்தில் டேராடூனில் விளையாட நினைத்திருந்தோம். ஆனால் எங்களது கோரிக்கைகளை பிசிசிஐ நிராகரித்து விட்டது. இரு இடங்களிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு இருந்த ஒரே ஆப்ஷன் நொய்டா மைதானம் மட்டும் தான்," என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

    • இங்கிலாந்து தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடவில்லை.
    • கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடி 600 நாட்களுக்கு மேல் ஆகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் தற்போது வருகிற 19-ந்தேதியில் இருந்து வங்கதேச அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. பின்னர் லண்டனில் அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விலகியது தெரியவந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

    ரிஷப் பண்ட் மோசமான கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். சுமார் 600 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துலீப் டிராபியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் துலீப் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பைக்குப் பின் பும்ரா சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பில்லை.

    ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் மூவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    வேகபந்து வீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.

    வங்கதேச அணிக்கெதிராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் அகமது, தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடுவார்கள்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது.
    • அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில்தான நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதியாக உள்ளது.

    ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீசில் முடிவடைந்த நிலையில், ஐசிசி சாம்பியின்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    பாதுகாப்பு காரணம், அரசியல் விவகாரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கவில்லை. "hybrid model" என அழைக்கப்படும் வேறுநாட்டில் போட்டி நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் இந்தியா மோதும் போட்டிகளில் அனைத்தும் நடத்தப்படலாம்.

    ஆனால் இந்திய அணி பாகிஸ்தானிற்கு வந்து விளையாட வேண்டும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் போர்டு தலைவர்கள், வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது, பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தினேஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கனேரியா கூறுகையில் "பாகிஸ்தான் சூழ்நிலையை பார்க்கும்போது, இந்திய அணி பாகிஸ்தான் செல்லக் கூடாது என்றுதான் நான் சொல்வேன். பாகிஸ்தான் இதுகுறித்து யோசிக்க வேண்டும். ஐசிசி இது தொடர்பாக முடிவு எடுக்கும். பெரும்பாலும் இது "hybrid model" தொடர்பானதாக இருக்கும். துபாயில் போட்டிகள் நடத்தப்படும்.

    வீரர்களின் பாதுகாப்புக்குத்தான் முதல் முன்னுரிமை. மரியாதை என்பதுதான் 2-வது முன்னுரிமைதான். ஏராளமான விசயங்கள் உள்ளன. பிசிசிஐ தனது சிறந்த வேலையை செய்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இறுதி முடிவை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன். இது "hybrid model" தொடராகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கம்ரான் அக்மல் கூறுகையில் "இந்தியா பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நாம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் விளையாடி, நேசிக்க வேண்டும்" என்றார்.

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தியாவின் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிரடி வீரரான இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். இந்த அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தியா வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என இவர்கள் கருதுகிறார்கள். விரைவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா "சி" அணியில் சூர்யகுமார் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் புச்சிபாபு கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும்போது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

    இதனால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்பும் சூர்யகுமாருக்கு காயம் வழிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு அணிக்கெதிராக மும்பைக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். தமிழ்நாடு லெவன் 379 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 156 ரன்னில் சுருண்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 5,628 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.62 ஆகும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

    • பிசிசிஐ தனது அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்குவதில்லை.
    • 60 சதவீத பங்குகளை ஜெய் ஷா வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும், இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்று இருக்கிறார்.

    கிரெக் பார்கிலேவை தொடர்ந்து, வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பு ரூ. 124 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

    கிரிக்கெட் கூட்டமைப்பு வருவாய் தவிர ஜெய் ஷா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் இயங்கி வரும் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். மேலும், குசும் ஃபின்சர்வ் என்ற நிறுவனத்தில் 60 சதவீத பங்குகளை ஜெய் ஷா தன் வசம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    மாத சம்பளத்தை பொருத்தவரை பிசிசிஐ தனது அதிகாரிகளுக்கு மாத சம்பளம் வழங்குவதில்லை. மாறாக தினசரி படி வழங்குகிறது. அதன்படி ஆலோசனை கூட்டங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் துவங்கி ரூ. 80 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

    "கிரிக்கெட்டை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் எடுப்பேன் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மிகமுக்கிய பதவியை ஏற்கும் தருவாயில், நீங்கள் வைத்துள்ள அதீத எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகவும், கிரிக்கெட் எனும் அழகிய போட்டிக்காக என்னை முழுமையாக அர்ப்பணிக்கிறேன்," என்று ஜெய் ஷா தெரிவித்து இருந்தார்.

    • ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம் என பிரகாஷ்ராஜ் கூறினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    ஜெய்ஷாவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டாலான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

    • பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஐசிசி-யின் தலைவராக ஜெய்ஷா டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    35 வயதான அவர் இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். ஜெய்ஷா டிசம்பர் 1-ந்தேதி பொறுப்பை ஏற்கிறார்.

    ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவராகி விட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக யார்? நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், மறைந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

    கிரிக்கெட் வாரிய பொருளாளரும், மராட்டிய பா.ஜனதா நிர்வாகியுமான ஆசிஷ் ஷிலார், காங்கிரஸ் எம்.பி.யும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல். தலைவர் அருண்துமால், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அபிஷேக் டால்மியா, திலகர் கண்ணா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.

    • ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
    • 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானார் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.

    3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

    ×