என் மலர்
நீங்கள் தேடியது "BCCI"
- நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- 2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 35 வயதான அவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி இருந்தார்.
அதன் பிறகு காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக முகமது ஷமி இந்திய அணியில் இருந்து விலகி இருந்தார்.
இதற்கிடையே 2027-ம் ஆண்டு உலக கோப்பையில் முகமது ஷமியை சேர்ப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் கட்டமாக அவர் நியூசிலாந்துக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. 10 மாதங்களுக்கு பிறகு அவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதிக்க உள்ளார்.
இது தொடர்பாக பி.சி.சி. ஐ. வட்டாரங்கள் கூறியதாவது:-
முகமது ஷமி தேர்வு குழுவின் விவாதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் அணியை விட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. அவருடைய உடற்தகுதி மட்டுமே முக்கிய கவலையாக இருந்தது. ஆனால் தற்போது அவர் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார். ஷமி போன்ற அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர் அணிக்கு தேவை.
2027 உலககோப்பையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்படலாம். நியூசிலாந்து தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முகமது ஷமி சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி 20 ஓவர் தொடரில் பெங்கால் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட் கைப்பற்றினார்.
விஜய் ஹசாரே கோப்பையில் 3 ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த அபாரமான பந்து வீச்சால் தேர்வு குழுவினரை தனது பக்கம் திரும்ப வைத்து உள்ளார்.
முகமது ஷமி 2015, 2019, 2023 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி உள்ளார். 18 ஆட்டத்தில் 55 விக்கெட் கைப்பற்றி சர்வதேச வீரர்களில் 5-வது இடத்தில் உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு முகமது ஷமி இடம் பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
- இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் முழுமையாக டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனால் டெஸ்ட் போட்டிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம்) முடிவு செய்ததாக தகவல் வெளியானது. இதற்காக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனை பி.சி.சி.ஐ. அணுகியதாகவும் கூறப்பட்டது. இதை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே நிராகரித்து இருந்தது.
இந்த நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பரவி வரும் யூகங்கள் குறித்து நான் மிக தெளிவாக கூற விரும்புகிறேன். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை நீக்கவோ அல்லது புதிய பயிற்சியாளரை நியமிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை பி.சி.சி.ஐ செயலாளர் (தேவஜித் சைகியா) மிகத் தெளிவாக தெரிவித்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- SENA நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது.
- 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு விவிஎஸ் லக்ஷ்மணை கொண்டு வர பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்தே டிரஸ்ஸிங் ரூம் உட்பட இந்திய அணியில் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. இதுபோட்டிகளிலும் வெளிபடுகிறது. மேலும் கௌதம் கம்பீரின் அணித்தேர்வு குறித்தும் ஒவ்வொரு போட்டியிலும் கேள்வி எழுகிறது. ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் கௌதம் கம்பீரின் தேர்வுகள் கைக்கொடுத்தாலும், SENA நாடுகளுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனபிறகு இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு மட்டும் புது பயிற்சியாளரை கொண்டுவர, பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் லக்ஷ்மணை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஐந்து வாரங்களில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொறுத்து அதை மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புகளும் உள்ளன.
இந்தியா டி20 உலகக் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டால் அல்லது குறைந்தபட்சம் இறுதிப் போட்டியை எட்டினால், அவர் தடையின்றி தனது பணியைத் தொடர்வார். இருப்பினும், கம்பீர் டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் டெஸ்ட் அணிக்கு பயிற்சியளிக்க லக்ஷ்மண் ஆர்வம் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கும், அக்டோபர்-நவம்பர் 2026 இல் நியூசிலாந்திற்கும் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக வெளிநாடு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனவரி-பிப்ரவரி 2027 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) சொந்த மண்ணில் விளையாடுகிறது.
- கிரிக்கெட் வாரியத்தின் பொதுநிதி ரூ. 7,988 கோடியில் இருந்து ரூ.11, 346 கோடியாக அதிகரித்து உள்ளது.
- 2025-26-ம் நிதியாண்டில் ரூ.8,693 கோடி வருமானத்தை இலக்கு வைத்துள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் 2025-26 நிதியாண்டிற்கான கிரிக்கெட் வாரியத்தின் வரைவு வரவு செலவுத் திட்டத்தை இணை செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா சமர்ப்பித்தார்.
இதில் கிரிக்கெட் வாரியத்தின் பொதுநிதி ரூ. 7,988 கோடியில் இருந்து ரூ.11, 346 கோடியாக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் பொது நிதியில் ரூ.3,358 கோடி உயர்ந்து இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து கிரிக்கெட் வாரியத்தில் டிரீம்11 தனது ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் குறைபாடும் இருந்தது. இந்த பற்றாக்குறையை புதிய ஒப்பந்தங்கள் மூலம் கிரிக்கெட் வாரியம் ஈடுசெய்தது.
இந்த வளர்ச்சிக்கு வலுவான வருவாய் ஆதாரங்களும் கவனமான நிதி நிர்வாகமும் காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025-26-ம் நிதியாண்டில் ரூ.8,693 கோடி வருமானத்தை இலக்கு வைத்துள்ளது.
வருமான வரிச் செலுத்துதலுக்காக ரூ.3,320கோடியும், எதிர்பாராத செலவினங்களுக்காக ரூ.1,000 கோடியும், நிலுவை வழக்குச் செலவுகளுக்காக சுமார் ரூ.160 கோடியும் கிரிக்கெட் வாரியம் ஒதுக்கியுள்ளதாக பிரப்தேஜ் சிங் பாட்டியா தெரிவித்தார்.
- நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
- முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீராங்கனைகள் மற்றும் போட்டி நடுவர்களுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாள் போட்டித் தொடரில் விளையாடும் சீனியர் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. திருத்தப்பட்ட கட்டணத்தின்படி இனி அவர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் பெறுவார்கள். அணிக்கு தேர்வாகி களம் காணாமல் வெளியே இருக்கும் வீராங்கனைகளின் கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இதே போல் உள்ளூர் 20 ஓவர் போட்டிகளில் களம் காணும் சீனியர் வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு ரூ.25 ஆயிரமும், மாற்று வீராங்கனைகளுக்கு ரூ.12,500-ம் அளிக்கப்படுகிறது. ஜூனியர் வீராங்கனைளுக்கும் ஜாக்பாட் அடிக்கிறது. அவர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ரூ.25 ஆயிரமும், 20 ஓவர் போட்டிக்கு ரூ.12,500-ம் வழங்கப்பட உள்ளது.
நடுவர்களுக்கு லீக் ஆட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், அதுவே முக்கியமான நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்
- இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்
உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்தான். அடுத்தாண்டு இதன் 19வது சீசன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஐபிஎல் ஏலம் தொடர்ந்து ஏன் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா கார்க்,
''ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? என்ன கட்டாயம்? இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா? ஐபிஎல் தேசிய பெருமையின் அடையாளமாக இருந்தால், இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் பிசிசிஐ என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
- முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது
- அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி நாளை மறுநாள் (டிச.17) நடைபெற உள்ளது.
இந்நிலையில் மிஞ்சியுள்ள இருபோட்டிகளில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் அக்சர் படேல் விலகியுள்ளார். உடல்நலக்குறைவால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் ஷபாஸ் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அக்சர் படேல், எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்துக்காக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெறும் 21 ரன்களை மட்டுமே குவித்ததால், அக்சர் படேல் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடி இருந்தார். இந்நிலையில் மிஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார் அக்சர் படேல்.
- ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
- 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.
சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.
அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
- டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
- ரோகித் மற்றும் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதே அந்த வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
- தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் கேட்ச் ஆனார்.
இதனையடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா 57 ரன்களில் அவுட்டானார்.
அடுத்தடுத்து வந்த கெய்க்வாட் 8 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களிலும் வெளியேறினர். மறுமுனையில் விராட் கோலி நிலைத்து நின்று ஆடினார்.
அடுத்தாதாக கேப்டன் கே.எல்.ராகுல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் விராட் கோலி பவுண்டரி அடித்து சதத்தை எட்டினார்.
எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவரது 52-வது சதமாக பதிவானது. தொடர்ந்து ஆடிய கோலி 135 ரன்களில் கேட்ச் ஆனார்.
கடைசியாக 60 ரன்களில் கே.எல்.ராகுல் மற்றும் அவருடன் கோடி சேர்ந்த ஜடேஜா 32 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகினார்.
எனவே மொத்தம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது /
- இந்த போட்டியில் ரோகித் - கோலி ஒன்றாக விளையாடவுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் ஒருநாள் தொடரை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது
- இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்த தொடரையொட்டி இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த போட்டோஷூட்டில் இந்திய சீனியர் வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலியும் இடம் பெற்றனர்.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.






