என் மலர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட்"
- 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளார்.
- இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் ஜாஸ் பட்லர் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ட்ரோன் மூலம் 122 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தை பிடித்து ஜாஸ் பட்லர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்த்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் Highest Cricket Catch பிரிவில் இந்த சாதனை பதிவாகியுள்ளது. இந்த சாதனை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸின் மூன்றாவது அரைசதம்
- மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது
மகளிர் ப்ரீமியர் லீக் 2026 தொடர் ஜன.9ஆம் தேதி தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், மற்றும் உ.பி.வாரியர்ஸ் என ஐந்து அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 22 லீக் சுற்றுகள் நடைபெற்றது.
சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் டெல்லி மற்றும் குஜராத் மோதியது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி டெல்லி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் இன்று (பிப். 5 ) வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. லிசெல் லீ, சஃபாலி வர்மா 37, 20 ரன்கள் முறையே ஆட்டமிழக்க நான்காவதாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பவுண்டரிகளாக அடித்து அரைசதம் கடந்து அணியின் ஸ்கோருக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்களில் ஆட்டமிழக்க அணி 16 ஓவரில் 148 ரன்களில் இருந்தது. இது இறுதிப்போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸின் மூன்றாவது அரைசதமாகும். அதனைத்தொடர்ந்து லாரா களமிறங்கினார். முதல் இரண்டு ஓவர்களில் பெரிதாக ஆடவில்லையென்றாலும், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸ்ர் என அதிரடி காட்டினார். கடைசி ஓவரில், கடைசிப் பந்தில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பெங்களூரு தரப்பில் சயாலி சத்காரே, அருந்ததி ரெட்டி, நதின் டெ கிளெர்க் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். தொடர்ந்து 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு பேட்டிங்கை தொடரும். இப்போட்டியில் ஒருவேளை டெல்லி வெற்றிப் பெற்றால் முதல்முறையாக தொடரை கைப்பற்றி, கோப்பையை வெல்லும். பெங்களூரு வெற்றிப் பெற்றால் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும். மும்பை அணி இரண்டு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான்.
- குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்தது. தேர்தலையொட்டி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவாருக்கு வேண்டியவர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் இந்திய வீரரும், பாஜக தலைவருமான கேதர் ஜாதவ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடைவிதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம். பன்சோலி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் மும்பை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், தலைமை நீதிபதி கொண்ட அமர்வு கூறியதாவது:-
1986-ல் இருந்த 2023 வரை 164 உறுப்பினர்கள் இருந்தனர். 2023 முதல், நீங்கள் ஒரு பிரமாண்டமான குலுக்கலை நடத்தினீர்களா?.
இது சிறந்த கிரிக்கெட் வீரர்கள் நிறைந்த ஒரு நாடு. ஓய்வு பெற்றவர்கள் அந்த வரிசையில் மிகச் சிறந்தவர்களாக இருந்தனர். நீங்கள் யாரைக் கொண்டு வருகிறீர்கள்? ஆட்டத்தைப் பற்றித் துளியும் தெரியாதவர்களை... மட்டையை எப்படிப் பிடிப்பது என்று கூடத் தெரியாதவர்களை... என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் எங்கள் உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்தும்படி செய்யாதீர்கள்.
கிரிக்கெட் என்பது அதிகாரிகளால் அல்ல, அது கிரிக்கெட் வீரர்களால்தான். ஹாக்கி சங்கம் என்பது ஹாக்கி வீரர்களால்தான் அறியப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த அளவு மரியாதையாவது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு பெஞ்ச் தெரிவித்தது.
மேலும், மனுதாரர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் அனுமதித்ததுடன், புதன்கிழமை இந்த வழக்கை விசாரிக்க உள்ள மும்பை உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்து வாதங்களையும் முன்வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டது. அத்துடன், உயர் நீதிமன்றம் இந்த வாதங்களைக் கருத்தில் கொள்ளும் என்றும், இந்த வழக்கை விரைவாகத் தீர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
- மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார்.
- சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார்.
மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- கம்பீர் தலைமையில் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை.
- சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்றார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
காம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்துள்ளது. அவரது தலைமை யின் கீழ் இந்திய அணி ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது. இதனால் அவரை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கடுமையாக சாடி இருந்தனர். எனவே அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற வதந்தி பரவியது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தனது மவுனத்தை கலைத்தது. பி.சி.சி.ஐ. செயலாளர் சைபியா இந்த வதந்திகளை நிராகரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
140 கோடி மக்களை கொண்ட நாடு இந்தியா. இங்கு எல்லோரும் கிரிக்கெட் நிபுணர்கள்தான். அனைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இது ஒரு ஜன நாயக நாடு, யாரையும் எங்களால் வாயடைக்க முடியாது. ஊடகங்கள் உள்பட கருத்துக்களை உருவாக்குபவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு.
இந்தத் துறையில் நிறைய யூகச் செய்திகள் பரவி வருகின்றன.மேலும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய வீரர்கள் அல்லது மற்றவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்கள் நிரம்பியுள்ளன.
ஆனால் விஷயம் என்ன வென்றால் பி.சி.சி.ஐ-யில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஒரு குழு எங்களிடம் உள்ளது. அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். மறுபுறம் அணித் தேர்வுக்காக எங்களிடம் 5 தேர்வாளர்கள் உள்ளனர். அந்தப் பதவிக்கு வர அவர்களும் தகுதி பெற்று இருக்க வேண்டும். அந்த முடிவுகளையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு மாற்று கருத்து இருக்கக்கூடும்.
ஆகவே அந்த கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அவற்றை நாம் பரிசீலிக்கவும் வேண்டும். ஆனால் இறுதி முடிவு எப்போதும் கிரிக்கெட் குழு மற்றும் தேர்வாளர்களால் தான் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.
- கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.
மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஏலத்தில், இந்தத் தொப்பி 4,60,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 கோடி) விற்பனையானது.
இந்தத் Baggy Green தொப்பிக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு. 1947-48இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.

பின்னர் இதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்க வாசுதேவ் சோஹோனிக்கு பிராட்மேன் பரிசாக வழங்கினார்.
சோஹோனி குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.
தொப்பியின் உட்புறத்தில் பிராட்மேன் மற்றும் சோஹோனியின் பெயர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
70 ஆண்டுகளைக் கடந்து தற்போது இந்த தொப்பி சாதனை விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாறு படைத்தார் ருதுராஜ்.
ருதுராஜ் மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அங்கித் பாவ்னே சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் (15) சமன் செய்தார்
ருதுராஜ், அங்கித் ஆகியோர் 15 சதங்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்த இடங்களில் உள்ள படிக்கல், மயங்க் அகர்வால் ஆகியோர் 13 சதங்கள் அடித்துள்ளனர்.
- டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது.
- இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தற்போது கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சாலைகளில் தெளிவாகத் தெரியாத நிலை உள்ளது. மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் அங்கு ஒரு கிரிக்கெட் போட்டியும் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பந்து வீச்சாளர் முகம் கூட சரியாக தெரியாத நிலையில் பந்தை வீச அதை பேட்டர் விளாசுகிறார். அதில் கீப்பர் மற்றும் பேட்டர் மட்டுமே தெளிவாக தெரிகிறார்கள். மற்றபடி மறுமுனையில் உள்ள பேட்டர் , பந்து வீச்சாளர், நடுவர் ஆகியோர் ஓர் அளவு தெரிந்த நிலையில் சுற்றி யார் எங்கே உள்ளார்கள் என்பதே தெரியவில்லை.
இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் காதலுக்கு கண்ணில்லை என்றால் பரவாயில்லை கிரிக்கெட் விளையாட கண் வேண்டுமே. அதில் பந்து வருவது கூட சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இவர்கள்தான் உண்மையான கிரிக்கெட் லவ்வர்ஸ் எனவும் மற்றும் சிலர் என்னதான் பனி மூட்டத்தில் கிரிக்கெட்டில் விளையாடினாலும் பாதுகாப்பு முக்கியம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






