search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Catch"

    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சிவகாசி

    சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்த கே. எல் ராகுல், தற்போது மீண்டும் ஒரு சாதனையை சமன் செய்துள்ளார். #ENGvIND #OvalTest #KLRahul

    இந்தியா இங்கிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரில், கடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே 7 கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் கே. எல் ராகுல், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 

    இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரில் 10 கேட்ச்களை பிடித்திருந்த அஜித் வடேகர், ராகுல் டிராவிட், ரஹானே ஆகியோரின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தார் கே.எல் ராகுல். தற்போது, ஓவலில் நடந்து வரும் 5-வது போட்டியிலும் கே.எல் ராகுல் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    பொதுவாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர்களில் 13 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட் தான் முதலிடத்தில் உள்ளார். 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ராகுல் டிராவிட் 13 கேட்ச்களை பிடித்துள்ளார். 

    ஓவல் டெஸ்ட் போட்டியில் நேற்று ஜடேஜா பந்தில் பிராட் ராகுலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம், இந்த தொடரில் ராகுல் 13 கேட்ச் பிடித்து டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளதால், அதில் கே.எல் ராகுல் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால் புதிய சாதனையை படைப்பார். 
    ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் சீலா மீன்கள் சிக்குகின்றன. இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், 65 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாள்தோறும் அதிகாலையில் பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மதியம் கரை திரும்புகின்றனர். விசைப்படகில் செல்லும் மீனவர்கள் ஓரிரு நாட்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாள்தோறும் மீனவர்கள் வலைகளில் ஷீலா, காலா, வாவல், கூரல், நண்டு, இறால் மீன்கள் கிடைக்கின்றன.

    தற்போது ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சீலா மீன்கள் அதிக அளவு சிக்குகின்றன. இதில் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடையுள்ள சீலா மீன்கள் கிடைக்கின்றன.

    3 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.750-க்கும், 2 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.500-க்கும், ஒரு கிலோ எடையுள்ள மீன்கள் கிலோ ரூ.350-க்கும் வியாபாரிகள் மீனவர்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். காலா மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வாவல் மீன்கள் ரூ.500 முதல் ரூ.900 வரையிலும், கூரல் மீன்கள் கிலோ ரூ.400-க்கும் நீலக்கால் நண்டு ரூ.400-க்கும், புள்ளிநண்டு ரூ.250-க்கும் இறால் ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், மட்லீஸ் கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகின்றன.

    மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் மீன்பிடிக்க செல்கின்றனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி வருகிறது. அதற்கு பிறகு வெளிச்சமாக நேரத்தில் அதிகளவில் கூரல் மீன் சிக்கும் என்பதால் மீனவர்கள் அதிக அளவில் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதிகளவில் ஷீலா மீன்கள் கிடைப்பதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    ×