என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    சுற்றுலா தலமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம், ஊசுட்டேரி படகு குழாமில் உற்சாகமாக படகு சவாரி செய்ய ஆர்வம் கொள்வார்கள்.

    இந்தநிலையில் மகளிர் தினத்தையொட்டி அங்கு இலவசமாக படகு சவாரி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு குழாம்களுக்கு வருகை தரும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக படகு சவாரி செய்ய லாம்.

    அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இச்சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
    • இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாண சுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவம், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவபூஷணம் (வயது61) என்பவர் தனது மகன், மகளுக்கு புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ். சீட் பெற 2004-05-ம் கல்வியாண்டில் விண்ணப்பித்தார். இதற்காக அவர் குடியிருப்பு, சாதி சான்றிதழ்களை போலியாக தயாரித்து சமர்ப்பித்தார்.

    இதனை கண்டறிந்த அப்போதைய சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ஓய்.எல்.என். ரெட்டி உருளையன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிவபூஷணம், அவரது மகன், மகள் மற்றும் உடந்தையாக இருந்த சிவ பூஷணத்தின் நண்பர்களான காரைக்காலை சேர்ந்த ராமலிங்கம் கல்யாண சுந்தரம், துரைபஞ்சாட்சரம் ஆகிய 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர்சல் முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ராமலிங்கம், கல்யாண சுந்தரம், துரை பஞ்சாட்சரம் ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டனர்.

    வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிவபூஷணம் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் இந்த வழக்கில் இருந்து சிவபூஷணத்தின் மகன், மகள் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

    • தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்.
    • கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் கட்சி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி காங்கிரசாருடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான் முன்னாள் எம்.எல்.எ. அனந்தராமன், மூத்த துறை தலைவர் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம்.

    தமிழகத்தில் தி.மு.க.வும், புதுச்சேரியில் காங்கிரசும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு தி.மு.க.வுடன் பேசி யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு எடுப்பார்கள். தமிழக பார்முலாதான் புதுச்சேரியில் பின்பற்றப்படும்.

    கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக்கட்சிக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்பார்கள். அதனை பேசி தீர்வு காண்போம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம்.

    புதுச்சேரி, தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள், பேச்சுவார்த்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும். தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.

    இவ்வாறு கிரீஷ் சோடங்கர் கூறினார்.

    தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட், 41 தொகுதிகள் என கேட்ட காங்கிரசுக்கு 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா மட்டுமே தி.மு.க. அளித்துள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை சுட்டி காட்டியயே காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். இதன் மூலம் புதுச்சேரியில் ஆட்சியில் தி.மு.க.வுக்கு பங்கு இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

    புதுச்சேரியில் 6 எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தில் உள்ள தி.மு.க. கடந்த தேர்தலில் 13 தொகுதியில் போட்டியிட்டது. கால் நூற்றாண்டுகளாக புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலோ, தி.மு.க. பங்கேற்ற ஆட்சியோ இல்லை.

    இதனால் இந்த முறை தனது தலைமையில் கூட்டணி ஆட்சி என புதுச்சேரி தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு முட்டுகட்டை போடும் வகையிலேயே கிரீஷ் சோடங்கர் கூறியுள்ளார். எனவே, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்பது கேள்வி குறியாகி உள்ளது.

    • கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது.
    • தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி முடிவாகியுள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் கேட்ட கூடுதலான தொகுதிகள், ஆட்சியில் பங்கு, 2 ராஜ்யசபா சீட் ஆகியவை கிடைக்கவில்லை. 28 தொகுதிகளை காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கியுள்ளது.

    அடுத்தகட்டமாக புதுவைக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. புதுவையில் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற மோதல் காங்கிரஸ், தி.மு.க. இடையில் உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. புதுவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ளது. அதோடு, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 14 தொகுதிகளில் பணியாற்றி கூடுதலான வாக்குகளையும் காங்கிரசுக்கு பெற்று தந்தது.

    இதனால் கூட்டணிக்கு தலைமை தாங்குவதோடு, அதிக தொகுதிகளையும் பெற தி.மு.க. ஆர்வம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என்பதில் புதுவை காங்கிரசார் உறுதியாக உள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், 29 தொகுதிகளில் காங்கிரசுக்கு கிடைத்த கூடுதல் வாக்குகளும் புதுவை காங்கிரசாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அவர்கள் பழைய பார்முலா படி காங்கிரசுக்கு 20: தி.மு.க.வுக்கு 10 என்ற நிலையை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் காங்கிரஸ் தலைமையை விட, தி.மு.க. தலைமையை எதிர்பார்க்கின்றனர்.

    இதனால் தமிழகத்தை விட தொகுதி பங்கீட்டில் புதுவையில் இடியாப்ப சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில் புதுவை காங்கிரசாருடன் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமல்கர் ஆகியோர் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.

    புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் பெத்தபெருமாள், கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாலன், கார்த்திகேயன், சீனியர் துணை தலைவர் தேவதாஸ், பொதுசெயலாளர் ரத்னா ரமேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ஜெயபால், மாணவர் காங்கிரஸ் தலைவர் ஹர்சவர்தன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நிர்வாகிகள் தரப்பில், கடந்த தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசிலிருந்து பலர் வெளியேறினர். இதனால் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் தொகுதிகளைக்கூட திமுகவுக்கு விட்டுக்கொடுத்தோம். ஆனால் தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இதனால் வெற்றி சாதகமாக உள்ளது.

    இதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதை போல 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என வலியுறுத்தினர்.

    இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட மேலிட பொறுப்பாளர் கட்சி தலைமைக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.

    ஏற்கனவே கிரீஷ் சோடங்கர் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக தி.மு.க. தலைமை கூறியுள்ளது. இதனால் புதுவை தி.மு.க. நேரடியாக மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தாது என கூறப்படுகிறது.

    இதனால் புதுவை தொகுதி பங்கீடையும் தி.மு.க.வின் தலைமையே பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது.

    • உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக்கூறியுள்ளார்.

    மேலும் உங்கள் மகன் பெண் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடுமே என எண்ணி தங்கள் மகனை விடுவிக்க வேண்டுமாறு கூறியுள்ளனர்.

    அப்போது வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதை நம்பிய பெற்றோர், அவர் கூறிய எண்ணுக்கு ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சத்தை அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுபற்றி விசாரித்தபோது, பலாத்கார வழக்கில் மகன் கைது செய்யப்படவில்லை என்பதும் மர்மநபர் போலீஸ்போல் பேசி மோசடி செய்தது தெரியவந்தது.

    இதேபோல் முத்தியால் பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி அவரின் மகனும் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவரை விடுவிக்க ரூ.5 லட்சத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடந்து வந்தது.
    • வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 58). பெயிண்டர். இவர் கடந்த 3.2.2024-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சீனுவாசனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

    • குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.
    • கூட்டணிக்கு தலைமை யார்? என்பதில் இன்னும் போட்டி தொடர்கிறது.

    புதுச்சேரி:

    சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் பிடிவாதம் பிடித்தது. இதனால் பேச்சுவார்த்தை நடைபெறாமல், காலதாமதமாகி வந்தது.

    இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி ப.சிதம்பரம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதையடுத்து 28 தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் என தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.

    தமிழகத்தில் தாங்கள் கேட்ட தொகுதிகளை விட எண்ணிக்கை குறைந்துள்ளதால் புதுச்சேரியில் கடந்த முறையை விட கூடுதலான தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியிலும் காங்கிரஸ், தி.மு.க. இடையே கூட்டணிக்கு யார்? தலைமை, கூடுதல் தொகுதியில் போட்டி என்ற மோதல் இருந்து வருகிறது.

    தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்ற நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.

    இதுதொடர்பாக ஏற்கனவே கட்சி தலைமைக்கும் புதுச்சேரி காங்கிரசார் தொகுதி பட்டியலுடன் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை தாங்குவதை விரும்பவில்லை.

    இதனை புதுச்சேரி மாநில தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜெகத்ரட்சகன் எம்.பி.யை சந்தித்து தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலையும் அளித்துள்ளனர். இதனால் கூட்டணிக்கு தலைமை யார்? என்பதில் இன்னும் போட்டி தொடர்கிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் தெலுங்கானா மந்திரி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ஐதராபாத் சென்றுள்ளனர். அவர்கள் இன்று மாலை சென்னை திரும்புகின்றனர்.

    அகில இந்திய தலைமை அறிவுறுத்தினால் சென்னையில் அண்ணா அறிவாலயம் சென்று புதுச்சேரிக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று மாலை தொடங்குவார்கள். புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா இன்று சென்னையில் தி.மு.க. தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15, தி.மு.க. 13, இந்திய கம்யூனிஸ்டு 1, விடுதலை சிறுத்தைகள் 1 என தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது.

    இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் புதுச்சேரியில் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

    இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் ஒரு பொது, 2 தனி என 3 தொகுதிகள் வேண்டும் என தி.மு.க. தலைமையிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளும் மாறும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

    • சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல்மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

    புதுச்சேரி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மத்திய தேர்தல் துறை அதிகாரிகள், மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், உத்தரவின்பேரில் ஐ.ஜி. மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது அமைதியை பேணுதல், குற்ற செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பதட்டமான ஓட்டுச்சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதன் முன்னோட்டமாக வில்லியனூர் பகுதியில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் இந்திய திபெத்திய எல்லை துணை ராணுவப்படையினர்

    சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல்மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக அணிவகுப்பு நடத்தினர்.

    இதுபோல் புதுச்சேரியில் பெரிய கடை போலீஸ் நிலையம் அருகே இருந்து ஆம்பூர் சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, அண்ணா சாலை, குமரகுரு பள்ளம், மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் வரை துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு சென்றனர்.

    ரோந்து பணியின்போது துணை ராணுவப்படையினர் துப்பாக்கி வைத்திருந்தனர்.

    • புதுவையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் வந்துள்ளனர்.
    • சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    புதுவையில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் வந்துள்ளனர். அவர்கள் நேற்று இரவு வில்லியனூரில் நகரப் பகுதியில் கொடி அணிவிப்பு நடத்தினர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன், மத்திய தேர்தல் துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம், உத்தரவின் பேரில் ஐஜி மற்றும் சீனியர் எஸ். பி மேற்பார்வையில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பொது அமைதியை பேணுதல், குற்ற செயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பதட்டமான ஓட்டு சாவடியை அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக மத்திய காவல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதன் முன்னோட்டமாக வில்லியனூர் பகுதியில் சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் உதவி ஆய்வாளர் திருமுருகன் தலைமையில் இந்திய திபெத்திய எல்லை காவல் படையினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வில்லியனூர் சுல்தான்பேட்டை முதல் மாட வீதி, கோட்டைமேடு, கண்ணகி ஹை மாஸ் வழியாக சென்று கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது
    • 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்

    புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.

    பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் விரும்பும் கோரிக்கையை 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    பிரதமர் மோடி முன்பே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி விழா மேடையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரியின் உட்கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும்.
    • இந்த ஆண்டு பட்ஜெட் உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.

    பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் வணக்கம் எனக்கூறி பிரதமர் மோடி பேசியதாவது:-

    * சித்தர்கள், துறவிகள், கவிஞர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரிக்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன்.

    * பாரதியார் விடுதலைப் போராட்ட பெருநெருப்பை பற்ற வைத்தது புதுச்சேரியில் தான்.

    * தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளது.

    * புதுச்சேரியின் வளர்ச்சிக்காக 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினேன்.

    * கடந்த முறை வந்த போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நான்கரை ஆண்டுகாலம் பல திட்டங்கள் நிறைவேற்றம்.

    * அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களால் புதுச்சேரி மக்களின் வாழ்க்கை தரம் உயரும், கட்டுமானங்கள் அதிகரிக்கும்.

    * மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டால் எப்படி வளர்ச்சி அடையும் என்பதற்கு உதாரணம் புதுச்சேரி.

    * புதுச்சேரியில் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது.

    * புதுச்சேரியின் உட்கட்டமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

    * இந்த ஆண்டு பட்ஜெட் உட்கட்டமைப்பு மேம்படுத்த ரூ.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * புதிய திட்டங்கள் மூலம் புதுச்சேரிக்கு சிறந்த சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் கிடைக்கும்.

    * இதுவரை மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட மூலதன முதலீட்டு நிதி, யூனியன் பிரதேசமான புதுவைக்கும் தரப்பட்டுள்ளது.

    * இந்தியா முழுவதும் உயர்தரமான உட்கட்டமைப்பை கொண்டு வர அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    * இளைஞர் சக்தியின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையாக உள்ளது.

    * இளைஞர்களின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு கொண்டிருக்கிறது.

    * புதுச்சேரியில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * எலெக்ட்ரிக் வாகனங்கள் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.

    * புதுச்சேரி போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் மின்சார பேருந்து முக்கியம்.

    * மருத்துவ சுற்றுலாவின் முக்கிய தளமாக புதுச்சேரி மாறி உள்ளது.

    * மருத்துவம் என்பது அனைவருக்கும் எளிதாக கிடைக்க வேண்டிய ஒன்று.

    * புதுச்சேரி என்பது சித்த மருத்துவத்திற்கு சிறந்த இடமான அறியப்படுகிறது.

    * மக்கள் நலமாக இருந்தால் தான் ஒர நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

    * புதுச்சேரியை சேர்ந்த யாரும் மருத்துவத்திற்காக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டிய நிலை வரக்கூடாது என்றார்.



    • போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கவர்னர் மாளிகை, டி.ஜி.பி., அலுவலகம், தலைமைச் செயலகம், கலெக்டர் அலுவலகம், ஜிப்மர், தனியார் ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கும் ஜவஹர் நவோ தயா வித்யாலயா பள்ளி இ-மெயில் ஐ.டி.க்கு, வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது.

    அதில் பிரபல நகைச்சுவை நடிகரின் பேத்தி என்றும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து போலீசில் புகார் அளித்தும் அவர் அரசியல் பிரமுகர் என்பதால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்காக மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். எனது நீதிக்காக நக்சலைட் மாணவர் பிரிவு உதவி செய்து வருகிறது. அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நவோதயா பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளேன்.

    இவ்வாறு அந்த இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், உடனடியாக காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகே வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. சோதனை போது மாணவர்கள் அனைவரும் பள்ளியின் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    வெடிகுண்டு மிரட்டல் குறித்து காலாப்பட்டு மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தர உள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதுச்சேரி போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பிரதமர் மோடி வருகை தர உள்ள விமான நிலையம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானம் மற்றும் புதுச்சேரி நகரின் முக்கிய பகுதிகளை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    புதுச்சேரி எல்லை பகுதி மற்றும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    ×