சிறுமி வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில்- புதுச்சேரி போக்சோ கோர்ட்டு உத்தரவு

வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சிறுமி வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில்- புதுச்சேரி போக்சோ கோர்ட்டு உத்தரவு
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது 58). பெயிண்டர். இவர் கடந்த 3.2.2024-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நீதிபதி சுமதி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட சீனுவாசனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com