என் மலர்
பொது மருத்துவம்
- புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.
- திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது.
திராட்சையில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக திராட்சையில் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. திராட்சை பழத்தில் முகம், தலை முடி மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிக அதிகமாக உள்ளன.
திராட்சையை உண்டால் நமது உடலுக்கு உடனடியாக தேவையான ஆற்றலும், நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும், வலிமையும் அதிகரிக்கும். திராட்சை பழங்களில் கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என்று பல வகைகள் உள்ளது.
திராட்சை அதுவும் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும். திராட்சை பழம் மலச்சிக்கலை தடுப்பதில் பெரும் பங்கு ஆற்றுகிறது. அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை சிறந்தது.
திராட்சை பழத்தில் சர்க்கரை அதிகளவில் உள்ளது. மற்றும் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. இவை வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகின்றன.
பொதுவாக திராட்சை பாசம் பலவகையான புற்றுநோய்களையூம் எதிர்த்து போராடும் ஆற்றல் தரும். அதிலும் குறிப்பாக கருப்பு திராட்சை வகை மார்பக புற்றுநோயையும் மற்ற பிற புற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும்தன்மை கொண்டது. திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன.
இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன. திராட்சையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது சிறுநீரகங்களை நன்றாக பாதுகாத்து நலமாக வாழலாம். திராட்சை பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும் பணியை செய்யும். திராட்சை பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" அமிலம் நமது மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
- வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
- இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.
நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.
- ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
- கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.
கருப்பு காபி (பிளாக் காபி):
கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
கருப்பு தேநீர் (பிளாக் டீ):
கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.
எது சிறந்தது?
இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.
- குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.
சளி, மூக்கடைப்பு பிரச்சனையால் காது வலி வருமா?
குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது 'பெல்ஸ் பாலஸி' என்று அழைக்கப்படுகிறது.
குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம்.
குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.
எதனால் ஏற்படுகிறது?
நமது மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.
- ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
- சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன.
வீட்டை சுத்தம் செய்வதற்கு ஸ்ப்ரேக்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக தொடர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு காலப்போக்கில் நுரையீரல் செயல்பாடு பாதிப்புக்குள்ளாவதையும் நார்வே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன. எனவே நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.
- ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
- நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும்.
கண்களிண்களின் மதிப்பு, பார்வைத் திறன் குறையும்போதும், பாதிக்கும்போதும்தான் நமக்குத் தெரியும். ஆனால், எப்போதுமே சில விஷயங்களில் கவனமாக இருந்தால், கண் பார்வையை காத்துக்கொள்ளலாம். தவிர்க்க வேண்டிய அந்த விஷயங்கள் குறித்து பார்ப்போம்...
நீண்ட நேர செல்பேசி, கணினி பயன்பாடு:
தற்போது செல்பேசி, கணினி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நீண்டநேரம் இவற்றை பார்த்தால் நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இவை, தலை வலி, மங்கலான பார்வை, கண்களில் வறட்சி மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன், மின்னணுத் திரைகளில் இருந்து வரும் நீல ஒளி, தூக்கத்தைப் பாதிக்கும். எனவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க 20-20-20 என்ற வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்கு, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்.
'சன் கிளாஸ்' அணியாமல் வெளியே செல்வது:
சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் நம்முடைய சருமத்தை மட்டுமின்றி கண்களையும் மோசமாக பாதிக்கும். இது கண் புரை, கண் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கக்கூடும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அதிலும் வெயிலில் செல்லும்போது 'சன் கிளாஸ்' அணிவது நல்லது.
கண்களைத் தேய்ப்பது :
நீண்டநேரம் செல்பேசி, கணினி பார்த்தால் கண்களில் வறட்சி, அரிப்பு ஏற்படும். இதனால் நம்மை அறியாமலேயே நாம் கண்களை அடிக்கடி தேய்க்க நேரும். இப்படிச் செய்வது கண்களை மேலும் பாதிக்கும். கண்களை அதிகமாக தேய்க்கும்போது, ரத்த நாளங்கள் சேதமடையும்.
இதனால் கருவளையங்கள் போன்றவை ஏற்படும். இவை தவிர, கண்களைத் தேய்க்கும் போது, கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ் தொற்றுகள் கண்களைப் பாதிக்கும்.
தூக்கமின்மை:
சரியாக தூங்கவில்லை என்றால் நம்முடைய உடல், மன ஆரோக்கியம் மட்டுமல்ல, கண் ஆரோக்கியமும் மோசமாக பாதிப்படையும். தூக்கமின்மையானது, மங்கிய பார்வை, கண்களில் வறட்சி, ஒளியின் உணர்திறன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தொடர்ந்து நீடித்தால், தீவிர கண் நோய்க்கும் வழிவகுக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவதை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
கண் பரிசோதனையைத் தவிர்ப்பது:
பெரும்பாலானோர், வழக்கமான கண் பரிசோதனை செய்வதை தவிர்த்துவிடுகின்றனர். பார்வை பாதிக்கப்பட்ட பிறகுதான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால், கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதனால், கண் பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறியலாம். உடனே உரிய சிகிச்சையையும் எடுத்துக் கொள்ளலாம்.
- வாரத்திற்கு மூன்றுமுறையாவது பீட்ரூட் எடுத்துக்கொள்ளுங்கள்.
- பீட்ரூட் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நாம் சுவைக்காகவே பெரும்பாலும் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். அதுவும் சைடிஸ் இல்லாமல் சாதம் இறங்காது என்பதற்காகத்தான், எதாவது ஒரு பொரியலை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடக்கூடிய பொரியல்களில் ஒன்றுதான் பீட்ருட். பலரும் அதிகமாக உருளைக்கிழங்குதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பீட்ரூட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அறிந்தால் தினசரியாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள். பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகளை காண்போம்.
இரத்த அழுத்த மேலாண்மை
பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களைத் தளர்த்தி, விரிவுபடுத்தும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.
செரிமானம்
ஒரு கப் பச்சை பீட்ரூட் 3.81 கிராம் நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் (DV) சுமார் 13.61% ஆகும். நார்ச்சத்து என்பது செரிமானத்தை ஆதரிக்க உதவும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது குடல் இயக்கத்தை சீராக, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது உதவுகிறது. மேலும் நீண்டநேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது.
ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள்
பீட்ரூட்டில் அதிகளவு பெட்டாலைன் உள்ளது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு சேர்மமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள பீட்டெய்ன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.
பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இதில் உள்ள பீட்டீன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.

பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
மூளை ஆரோக்கியம்
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வயதாகும்போது இரத்த ஓட்டம் இயற்கையாகவே குறையத்தொடங்கும். நைட்ரிக் ஆக்சைடு மூளையில் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
கல்லீரல் இரத்தத்தை வடிகட்டுதல், நச்சு நீக்குதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் என உடலின் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டெய்ன், கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கல்லீரல் தொடர்பான பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
ஒரு கப் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்
கலோரிகள் 58, கொழுப்பு 0.231 கிராம் , சோடியம் 78 மிகி, கார்போஹைட்ரேட்டுகள் 13 கிராம், நார்ச்சத்து 3.81 கிராம், புரதம் 2.19 கிராம் உள்ளது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம் இதயம், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. ஃபோலேட் திசு வளர்ச்சி மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கும் ஒரு பி வைட்டமின் ஆகும். வைட்டமின் சி தோல், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
- குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது!
- எடை இழப்பு மற்றும் எடை அதிகரித்தலுக்கு குடல் புழுக்கள் ஒரு காரணியாக உள்ளன.
"தம்பிக்கு, பாப்பாவுக்கு நாக்குப்பூச்சி மாத்திரை கொடுக்கணும். இந்த மாசம் நிறைய சாக்லேட் சாப்பிட்டா. வயித்துல புழு இருக்கும்" என நம்மை சுற்றி இருக்கும் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என சிறுவயது குழந்தைகளின் பெற்றோர் கூற கேட்டிருப்போம். குழந்தைகளுக்கு குடலில் எளிதாக புழுக்கள் உருவாகும். அதனால் அவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுப்பார்கள். ஆனால் அதை கேட்கும், பார்க்கும் நாம் என்றாவது குடல்புழு மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளோமா? குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது. குடல் புழுக்களால் பெரியவர்களுக்கும் ஆபத்து உள்ளது. நமது குடலில் புழுக்கள் உள்ளன என்பதை எவ்வாறு கண்டறியலாம். அதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.
அதிகப்படியான பசி
நாம் வேளை வேளைக்கு சரியாக உணவு எடுத்துக்கொண்டாலும், அடிக்கடி பசி எடுக்கும். குடல் ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். உதாரணமாக அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துகள் உறியப்படும்போது நமக்கு அடிக்கடி பசி எடுக்கும். நாம் இடையில் நொறுக்குத்தீணிகள் எடுத்துக்கொண்டாலும் பசி அடங்கவில்லை என்றால் கண்டிப்பாக குடல் புழுக்களுக்கான அபாயம் உள்ளது.
பருக்கள், தோல் பிரச்சனைகள்
தோல் வெடிப்புகள், புதிய தடிப்புகள் அல்லது அரிப்பு புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் பொதுவாக உணவு, ஹார்மோன்கள் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சில புழு தொற்றுகளும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள் போன்ற வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, தோல் லார்வா மைக்ரான்ஸ் (கொக்கிப்புழு லார்வாக்களால் ஏற்படுகிறது) தோலில் ஊடுருவி அரிப்பு மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளை உருவாக்குகிறது. இவை வெளிப்புற பாதிப்புகள் என்றால், குடல் புழுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் அல்லது வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற இரண்டாம் நிலை ஏற்றத்தாழ்வுகள் மூலம் சருமத்தை பாதிக்கும். இது பருக்கள் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை காட்டும்.
எடை மாற்றம்
குடல் புழு தொற்று இருப்பதற்கான வழக்கமான அறிகுறிகள், வயிற்று வலி, வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். பெரியவர்களுக்கு இந்த அறிகுறிகள் சற்று மாறுபடும். லேசான அசௌகரியம், வாயு பிரச்சனைகள், வீக்கம், எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இருக்கும்.

பெரியவர்களும் குடல் புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமானது
அரிப்பு
என்டோரோபயாசிஸ் போன்ற நூல் புழுக்கள், அதாவது அதன் பெண் புழுக்கள் இரவில் குடலை விட்டு வெளியே வந்து ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலில் முட்டையிடுவதால், கடுமையான அரிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அதாவது வெறும் எரிச்சல், அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைத்து இந்த தொற்றுகளை கண்டுகொள்வதில்லை.
சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு
புழுக்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உண்ணும்போது, நமது உடல் போதுமான இரும்பு, புரதங்கள் அல்லது பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறும் வாய்ப்புகளை இழக்கிறது. இது சோர்வு, சிலநேரங்களில் ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஒருவருக்கு காரணமில்லாமல் தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் கண்டிப்பாக குடல்புழுக்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டு, உங்களுக்கு குடல் புழுக்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், இரப்பை குடல் நிபுணரிடம் உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகளைக் கூறி ஆலோசனை பெறுங்கள்.
- பாதாமை அப்படியே எடுத்துக்கொள்வதை விட ஊறவைத்து எடுத்துக்கொள்வது இன்னும் ஆரோக்கியமானது.
- ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.
உணவை தாண்டி உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் நம்மில் பலரும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் பாதாம். பலரும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியாமலேயே சாப்பிடுவர். ஆனால் இது உடலுக்கு பயக்கும் சில நன்மைகளை நாம் அறிந்தால் கண்டிப்பாக தினசரி உணவின் ஒரு பகுதியாகவே மாற்றிவிடுவோம். அப்படி என்ன நன்மைகளை கொண்டுள்ளது பாதாம், பார்ப்போம்.
ஆக்ஸிஜனேற்றிகள்
பாதாமில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்கிறது. வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும் அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது. பாதாமில் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஊட்டச்சத்துகள்
பாதாம் பருப்பு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த கொட்டைகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்களாகும். நிறைவுறா கொழுப்புகள் எல்டிஎல் கொழுப்பை (low-density lipoprotein) குறைக்க உதவும். மெக்னீசியம் பாதாமில் அதிக அளவில் காணப்படும் மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். மெக்னீசியம் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது, இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
பாதாம் பருப்பு குடல் பாக்டீரியாக்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிடுபவர்களுக்கு, சாப்பிடாதவர்களை விட அதிக ப்யூட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இது குடல் பாக்டீரியாக்கள் நன்கு செயல்படுவதைக் குறிக்கிறது. ப்யூட்ரேட் என்பது குடல் நுண்ணுயிரிகளால், செரிக்க முடியாத உணவு நார்ச்சத்தை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். பாதாம் மற்றும் பாதாம் தோல் ஆகியவை ப்ரீபயாடிக்குகளாகக் கருதப்படுகின்றன. காரணம் இவை குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளர உதவுகின்றன. குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை அதிக ப்யூட்ரேட்டை உற்பத்தி செய்கின்றன. ப்யூட்ரேட் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. சில வளர்சிதை மாற்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம்
இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
பாதாம் பருப்பு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பு உட்பட உடல் உறுப்புகளில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. கொட்டை வகைகள் நல்ல கொழுப்பை ஆதரிக்க உதவுகின்றன. அதிக கொழுப்பு உள்ளவர்கள் பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
எடைக்குறைப்பு
எடைக் குறைக்க விரும்புவர்கள் பாதாமை எடுத்துக்கொள்ளலாம். பாதாம் பசியை அடக்க உதவுகிறது. பாதாம் பருப்பு உடல் நிறை குறியீட்டெண் (BMI), இடுப்பு சுற்றளவு மற்றும் வயிற்றுப் பகுதி கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
தோல் ஆரோக்கியம்
மாதாவிடாய் பிரச்சனைகள் இருப்பவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம். மற்ற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது, பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
- வீட்டிற்குச் செல்லும் வழியில் திடீரென பெய்யும் மழை ஒரு கவிதை போல இதமானது.
- சளி மற்றும் காய்ச்சலுக்கு நேரடியான காரணம் ரைனோவைரஸ் போன்ற நுண்ணுயிரிகளே தவிர, மழையோ அல்லது குளிர்ச்சியோ அல்ல.
வீட்டிற்குச் செல்லும் வழியில் திடீரென பெய்யும் மழை ஒரு கவிதை போல இதமானது. ஆனால், கையில் குடை இல்லாத போது, இந்த அழகு அச்சமாக மாறுகிறது. "மழையில் நனைந்தால் சளி பிடித்துவிடுமே" என்ற பயம்தான் இதற்குக் காரணம். இருப்பினும், சளி பிடிப்பதற்கும், மழையில் நனைவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று அறிவியல் கூறினாலும், மழையின் குளிர்ச்சியால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே காய்ச்சல் மற்றும் சளி வர முக்கியக் காரணம் என்பதால், இந்தத் தொகுப்பில் அறிவியல் உண்மைகளின் அடிப்படையில், குடையின்றி மழையில் பயணிப்பவர்கள் சளி பிடிக்காமல் பத்திரமாக வீட்டை அடைவதற்கு பின்பற்ற வேண்டிய எளிய, ஆனால் பயனுள்ள சில வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
சளி, காய்ச்சல், குளிர்ச்சி: முக்கோணத் தொடர்பு!
சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு நேரடியான காரணம் ரைனோவைரஸ் போன்ற நுண்ணுயிரிகளே தவிர, மழையோ அல்லது குளிர்ச்சியோ அல்ல. இருப்பினும், நாம் மழையில் நீண்ட நேரம் நனையவோ அல்லது அதிக குளிர்ச்சியான சூழலில் இருக்கவோ நேரும்போது, அது நம் உடலுக்குள் ஒரு பின்னடைவை ஏற்படுத்துகிறது. முக்கியமாக, ஈரமான ஆடை காரணமாக உடல் வெப்ப இழப்பு ஏற்பட்டு, உடல் வெப்பநிலை குறைகிறது. பல ஆராய்ச்சிகளின் படி, உடலின் வெப்பநிலை குறையும் போது, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடும் தற்காலிகமாகப் பலவீனமடைகிறது. இந்தக் காலக்கட்டத்தில், நம்மைச் சுற்றியுள்ள அல்லது ஏற்கெனவே உடலில் செயலற்ற நிலையில் இருக்கும் சளி வைரஸ்கள் சுலபமாகத் தாக்கிப் பெருகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதேபோல், குளிர்ந்த காற்று மற்றும் வெப்பநிலை மாற்றம் நம்முடைய சுவாசப்பாதையையும் பாதிக்கிறது. இது சுவாசப்பாதையைச் சுருக்கி, நம் தொண்டையை வறண்டு போகச் செய்கிறது. இதனால், வைரஸ்களை வடிகட்டி வெளியேற்றும் நம் உடலின் இயல்பான பாதுகாப்பு செயல்முறை தடைபடுகிறது. எனவே, மழையில் நனைவது நேரடியாக உங்களை நோய்வாய்ப்படுத்தாது; மாறாக, இது உடல் குளிர்ச்சியடைந்து, நோயெதிர்ப்புச் சக்தி குறைய ஒரு வாய்ப்பை உருவாக்கி, வைரஸ்களின் தாக்குதலைச் சுலபமாக்குகிறது. இந்த காரணிகளை கட்டுப்படுத்தி, உடல் குளிர்ச்சியடையாமல் பார்த்துக்கொண்டால், மழையில் நனைவது பற்றி கவலைப்படத் தேவையில்லை.
குடையை மிஸ் பண்ணிட்டீங்களா?
குடை இல்லாமல் மழையில் சிக்கிக்கொண்டால், சளியை தவிர்க்க உடல் வெப்பநிலையை பேணுவது மிக அவசியம். இதற்கு, முதலில் இந்த மழைக்காலத்தில் ஜீன்ஸ் அல்லது பருத்தி போன்ற ஈரத்தை உறிஞ்சும் ஆடைகளைத் தவிர்த்து, விரைவாகக் காயக்கூடிய செயற்கை இழைகள் கொண்ட உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆடைகள் குறைந்த அளவு தண்ணீரையே உறிஞ்சும் என்பதால், உடல் சூடு மிக வேகமாக குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. கூடுதலாக, ஒரு நீர்ப்புகா அல்லது நீர் விலக்கும் மேல் அடுக்கை கோட் வடிவில் நிரந்தரமாக மேலே அணிவது, மழை நீரைத் தடுத்து, வெப்ப இழப்பை கட்டுப்படுத்தும். மேலும், நமது உடலில் அதிக வெப்பம் வெளியேறும் பகுதியான தலைக்கு ஒரு தொப்பி அணிவதன் மூலமும், உடல் குளிர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும் கால்கள் நனையாமல் காப்பதன் மூலமும் மைய வெப்பநிலையைப் பாதுகாக்கலாம்.

மழையில் நனைந்தால் தேநீர் அல்லது சுக்கு காபி போன்ற சூடான பானம் அருந்துவது வெப்பநிலையை விரைவாகச் சீராக்க உதவும்
அடுத்து, மழையில் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக, உடனே விரைந்து செல்வது சிறந்த உத்தியாகும். வேகமாக நடக்கும் போது அல்லது லேசாக ஓடும்போது, நமது தசைகள் அதிக உள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த வெப்பம், மழையின் குளிர்ச்சிக்கு எதிராகப் போராடி, உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது. வீட்டிற்கு வந்தவுடன், ஈரமான சாக்ஸ் மற்றும் காலணிகளை நீக்கிவிட்டு, தலை மற்றும் கால்களை நன்றாக துடைக்க வேண்டும். அத்துடன், உடனடியாகச் சூடான பானம் (தேநீர் அல்லது சுக்கு காபி) அருந்துவது அல்லது மிளகு ரசம் போன்ற சூடான உணவை உட்கொள்வது உடலின் உள் வெப்பநிலையை விரைவாகச் சீராக்க உதவும்.
இவ்வாறு மழையை வெறும் பயத்தோடு அணுகாமல், விழிப்புணர்வோடு அணுகுவதன் மூலம், குடை இல்லாவிட்டாலும் கூட, ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ள முடியும். சளி பிடிப்பதற்கு முக்கியக் காரணம் வைரஸ் என்பதால், மழையில் பயணிக்கும் போது உடல் வெப்பநிலையைக் குறைக்காமல் பாதுகாப்பதே மிக முக்கியமான விதி. வீட்டுக்கு திரும்பியதும், உடனடியாக ஈர உடைகளை மாற்றி, வெந்நீரில் குளித்து, ஒரு சூடான தேநீரை பருகுவதன் மூலம் உடலின் உள் வெப்பநிலையை சீராக்கினால், சளி பிடிப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் குறையும். எனவே, குடை என்பது ஒரு சாதனம் மட்டுமே; விழிப்புணர்வே உண்மையான பாதுகாப்பு கவசம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படலாம். இனி மழையையும் பயமின்றி ரசிக்கலாம்
- சமையலில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, சுகாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியம்.
- சமையலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வெங்காயத்தை வெட்டி வைக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம் நிலவுவதால், நம் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயத்தைக் கையாள்வதில் கூடுதல் கவனமும், சுகாதாரமும் கட்டாயம் தேவை. வெங்காயம் சுவைக்காக மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தைக் காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்த சீதோஷ்ண நிலையில், வெங்காயத்தின் பாதுகாப்புக் குறித்து நாம் அறியாத சில முக்கியமான அபாயங்கள் உள்ளன. குறிப்பாக, ஈரமான சூழலில், வெங்காயத்தின் மேல் தோலின் அடியிலோ அல்லது உள் அடுக்கிலோ கருமையான புள்ளிகளோ அல்லது கோடுகளோ தென்படுவதுண்டு. இது அஸ்பெர்கிலஸ் நைகர் போன்ற ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சியை குறிக்கிறது. இந்தப் பூஞ்சையானது, குறிப்பிட்ட நச்சுத்தன்மையை வெளியிடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. பூஞ்சை படிந்த வெங்காயத்தை முறையாகச் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தும்போதும், அதன் வித்துக்கள் உடலுக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பூஞ்சை வித்துக்கள் நுரையீரலை பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. ஏற்கனவே ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தாக முடியலாம். மேலும், தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான உடல்நலப் பாதிப்புகளும் இதனால் ஏற்படலாம். எனவே, சமையலில் சுவைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட, சுகாதாரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் மிக அவசியம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
பூஞ்சையை நீக்க கல்லுப்பு
வெங்காயத்தின் மூலம் கிருமித் தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும், அதன் நன்மைகளை முழுமையாகப் பாதுகாப்பாக அனுபவிக்கவும், நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒரு எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள சுகாதார முறை உள்ளது. வெங்காயத்தைப் பயன்படுத்துவதற்கு முன் முதலில் அதன் மேலிருக்கும் காய்ந்த தோலை முழுவதுமாக நீக்கிவிட வேண்டும். அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் சிறிது கல்லுப்பை எடுத்து, அந்த வெங்காயத்தின் மீது தூவி, உங்கள் கைகளால் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கல்லுப்பு தனது சொரசொரப்பான தன்மை காரணமாக, வெங்காயத்தில் இருக்கும் நுண்ணிய கிருமிகளையும், மேலடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பூஞ்சை வித்துக்களையும் நீக்குவதற்கு உதவுகிறது. இவ்வாறு கல்லுப்பு கொண்டு நன்கு தேய்த்தப் பிறகு, குறைந்தது இரண்டு முறை நல்ல தண்ணீரில் அலசிய பின்னரே வெங்காயத்தைச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த எளிய வழிமுறை, உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன் மட்டுமல்லாமல், கடுமையான தொற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கவும் பேருதவியாக அமையும். இந்த சுகாதார நடவடிக்கையைப் பின்பற்றுவது, ஆரோக்கியமான சமையல் முறைக்கு மிகவும் முக்கியமான ஒரு அத்தியாவசியப் படியாகும்.

வெங்காயத்தின் மீதுள்ள கருப்பு கோடுகள், ஒரு வகைப் பூஞ்சையின் வளர்ச்சி!
மூடி வைப்பதே பாதுகாப்பு!
வெங்காயத்தின் இயல்பு என்னவென்றால், அது வெட்டப்பட்டவுடன் காற்றிலுள்ள கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் மிக வேகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. வெங்காயம் வெட்டப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதன் மேற்பரப்பில் அதிகப்படியான கிருமிகள் குவியும் அபாயம் உள்ளது. இந்த சுகாதார அபாயத்தைக் கருத்தில் கொண்டு, சமையல் தேவைகளுக்காக ஒரு முறை வெங்காயத்தை வெட்டிய பிறகு, எந்தக் காரணம் கொண்டும் அதைத் திறந்தவெளியில் வைக்கக் கூடாது. உடனடியாக, மூடி உள்ள ஒரு காற்றுப் புகாத பாத்திரத்திலோ அல்லது ஒரு தட்டைக் கொண்டோ உறுதியாக மூடி வைக்க வேண்டும். வெட்டிய வெங்காயம் எந்த வகையிலும் வெளியிலுள்ள கிருமிகளை ஈர்க்காதபடி உறுதி செய்வது அவசியம். மேலும், சமையலுக்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு முன்னதாகவே வெங்காயத்தை வெட்டித் தயார் செய்து வைக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பது உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. சமைக்கத் தேவைப்படும் போது மட்டுமே வெங்காயத்தை வெட்டி உடனடியாகப் பயன்படுத்துவதே சிறந்த பழக்கமாகும். இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வெங்காயம் தரும் ஆரோக்கிய நன்மைகளைப் பாதுகாப்பாகப் பெற முடியும்.
- போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது.
- ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, தூக்கம் மூன்றும் ஆரோக்கியத்தின் மூன்று தூண்கள்.
எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே ஓடுபவர்கள்தான் மனித இனம். உணவு, உடை, உறக்கம், இருப்பிடம் உள்ளிட்ட நல்ல வாழ்க்கை முறைக்காகத்தான் அனைவரும் கடினமாக உழைப்போம். ஆனால் அந்த உழைப்பால் உணவு, உறக்கத்தையே மறந்துவிடுகிறோம். வேலை, குழந்தை, குடும்பம் என எது வேண்டுமானாலும் தூக்கத்திற்கும், உணவிற்கும் தடையாக இருக்கலாம். ஆனால் போதுமான தூக்கம் என்பது எடை, உணர்ச்சி, இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மன மற்றும் உடல் செயல்திறன் மற்றும் பலவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தூக்கம் ஒன்று கெடும்போது இது அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் மனிதனுக்கு உணவு, உறக்கம் என்பது மிகமுக்கியான ஒன்று. இந்த தூக்கம் கெட்டால் என்ன ஆகும்? பார்க்கலாம்.
தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்ன?
- வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
- இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
- எடை மேலாண்மையை ஆதரிக்கிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவுகிறது
- கவனத்தின் அளவை அதிகரிக்கிறது
- நினைவாற்றல் மற்றும் கற்றலை அதிகரிக்கிறது
பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?
பெரியவர்கள் ஒருநாளைக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்கவேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் போதுமான தூக்கம் என்பது நேரக்கணக்கை பொறுத்தது மட்டுமல்ல, தூக்கத்தின் தரத்தை பொறுத்தது. எந்த இடையூறுகளும் இன்றி நாம் எவ்வாறு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதை பொறுத்தது.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?
குழந்தைகளின் வயதின் அடிப்படையில் அவர்கள் தூக்கம் இருக்கவேண்டும்.
- பிறந்த குழந்தைகள் : 14-17 மணிநேரம்
- 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் : 12-16 மணிநேரம்
- 1 முதல் 3 வயதுவரை உள்ள குழந்தைகள் : 11-14 மணிநேரம்
- 3 முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகள் : 10-13 மணிநேரம்
- பள்ளி செல்பவர்கள் : 9-12 மணிநேரம்
- பதின்பருவத்தினர் : 8-10 மணிநேரம்

இருண்ட அறையில் தூங்குவது அவசியம்
போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்
- இதய நோய்
- புற்றுநோய் கட்டிகள்
- பக்கவாதம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள்
- கவனக்குறைவால் விபத்துக்கு வழிவகுக்கும்
- நீரிழிவு நோய்
- உயர் இரத்த அழுத்தம்
இரவில் சிறந்த தூக்கத்தை பெற என்ன செய்யலாம்?
- இரவில் காபி, சர்க்கரை, மது எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.
- தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மின்னணு சாதனங்கள், ஃபோன் போன்ற டிஜிட்டல் சாதனங்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- விளக்கை அணைத்துவிட்டு தூங்குங்கள். காரணம் ஒளி நம் மூளையைத் தூண்டி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, எனவே இருண்ட அறையில் தூங்குவது அவசியம்.
- அலாரம் வைப்பதற்கு ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்தாமல், கடிகாரத்தை பயன்படுத்துங்கள்.
தூக்கமின்மையின் பாதிப்புகள்
தூக்கமின்மை, நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதிக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் குடிபோதையில் இருப்பதற்கு சமம். போதுமான தூக்கம் இல்லாதது நம்மை உணர்ச்சி ரீதியாக நிலையற்றதாக ஆக்குகிறது. மேலும் தூக்கமின்மை மிகுந்த சோகம் அல்லது கோபம் போன்ற மிகவும் வலுவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும்.






