என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
    • வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது.

    வல்லாரை உண்பதும் நன்று, நல்லாரை காண்பதும் நன்று என்ற முதுமொழிக்கு ஏற்ப சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இந்தக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

    உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

    யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

    வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.

    மன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. வல்லாரைக் கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். வல்லாரை கீரையை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நம்மை நெருங்காது.

    • வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும்.
    • சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

    கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயார் செய்யப்படும் 'பிரைடு சிக்கனை' பலரும் ருசிப்பதுண்டு. அதனை அடிக்கடி சாப்பிடுபவர்களும் உண்டு. அடிக்கடியோ, தினமுமோ 'பிரைடு சிக்கன்' சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

    * இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் இருக்கும். தினமுமோ, அடிக்கடியோ சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்துவிடும்.

    * கலோரிகளும் அதிகம் இருக்கும். தொடர்ந்து சாப்பிடும்போது கலோரிகள் வேகமாக சேர்ந்து உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

    * 'பிரைடு சிக்கனை தொடர்ச்சியாக சாப்பிடும் நிலை நீடித்தால் காலப் போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு, இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்.

    * சர்க்கரை பானங்கள், நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடவும் கூடாது.

    எப்படி சாப்பிடலாம்?

    கோழி இறைச்சியை வேகவைத்தோ, நெருப்பில் சுட்டு 'கிரில் சிக்கனாகவோ உட்கொள்ளலாம்.

    • கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
    • ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

    தெருக்களில் எளிதாக கிடைக்கும் மணத்தக்காளி கீரை ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் 'காட்டுக்கீரை' என்று அழைக்கப்படும் இது, செரிமான மண்டலத்தைச் சீரமைப்பதில் முதன்மை வகிக்கிறது. இந்த கீரையில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ,சி, இ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.

    இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சத்துக்கள் நிறைந்த இந்த கீரையைச் சிறுபருப்பு அல்லது பயத்தம்பருப்புடன் சேர்த்து மசியலாக சமைத்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியையும் வலுவையும் தரும். தாதுக்கள் பற்றாக்குறையை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை தரக்கூடிய இந்த நாட்டுக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொள்வது நலம் பயக்கும்.

    மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகிறது என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன. நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.


    • வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்ப நிலையை சமநிலை செய்கிறது.
    • கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும்.

    மற்ற மரங்களைவிட ஏராளமான பயன்களை கொண்டதாக பனை மரங்கள் விளங்குகின்றன. ஒரு பனை இருந்தால் அதைச்சுற்றி பல்வேறு உயிரினங்களின் வாழ்க்கை தொடங்கும் என்று உயிரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    ஏனெனில், பனை மரத்தை நம்பி பல்வேறு சிறு உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழ்கின்றன. இது ஒரு புறமிருக்க, கோடை காலத்தில் பனை தரும் நுங்கு அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும்.

    ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த நுங்கு விற்பனைக்கு வரும். கோடை வெயிலை தாங்கி மனித உடல் குளிர்ச்சி பெற நுங்கு துணை புரிகிறது. நுங்கில் உடலுக்கு ஊட்டம் தரும் வைட்டமின் பி, நோய் எதிர்ப்பு சக்தி தரும் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை, வெப்பத்தால் உடலில் உருவாகும் சோர்வை நீக்கி உடலின் வெப்ப நிலையை சமநிலை செய்கிறது.

    கோடையில் குழந்தைகளுக்கு அம்மை நோய் தாக்கம் ஏற்படும். இதனை தடுப்பதில் நுங்கு முதலிடம் வகிக்கிறது. மேலும், உடல் வெப்பத்தால் குடலில் ஏற்படும் வறட்சியை தணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை போக்குகிறது.

    வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் நோய்கள், கொப்புளங்களை தடுக்க நுங்கு அவ்வப்போது உண்ணலாம். நுங்கில் உள்ள அந்த்யூசைன் என்ற ரசாயனம் மார்பக புற்று நோயை தடுக்க உதவும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    • மனநிலையை மாற்றும்.
    • நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.

    * காபி, டீ பருகுவதற்கு முன் தண்ணீர் குடித்தல்

    -உடலின் நீர்ச்சத்து மற்றும் ஆற்றலை மீட்டெடுக்கிறது.

    * இன்று இரவே நாளைய திட்டத்தை அமைத்தல்

    -மறுநாள் காலையில் மன அழுத்தத்தை குறைக்கிறது.

    * தேவையற்ற சிந்தனைகளை கட்டுப்படுத்துதல்

    -மனக்குழப்பம் ஏற்படாமல் தடுக்கும்.

    * காலையில் எழுந்ததும் படுக்கையை ஒழுங்குபடுத்துதல்

    -ஒழுக்கத்தையும், புத்துணர்ச்சியான தொடக்கத்தையும் குறிக்கிறது.

    * மெதுவாக உணவருந்துதல்

    -குடல் ஆரோக்கியத்தை காக்கும். அதிகமாக சாப்பிடுவதை தடுக்கும்.

    * சிறிய தொகையை சேமித்தல்

    -திட்டமிட்டு செலவிட தூண்டும்.

    * தினமும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்தல்

    -மனநிலையை மாற்றும். செரிமானம் மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தும்.

    * கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுதல்

    -உண்மையான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது.

    * அதிகாலையில் சூரிய ஒளியில் நேரம் செலவிடுதல்

    - ஹார்மோன்கள் மற்றும் தூக்கச் சுழற்சியை சமநிலைப் படுத்துகிறது.

    * தினமும் 5 பக்கங்கள் வாசித்தல்

    - அறிவும் சேர்ந்து வளரும்.

    * உணவருந்தும்போது கைப்பேசியை தவிர்த்தல்

    -ஜீரணத்தையும், விழிப்புணர்வையும் மேம்படுத்தும்.

    * தினமும் பயன்படுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்துதல்

    -அமைதியான சூழல் நிலவும். மனமும் அமைதியாகும்.

    * கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு சிறிது இடைவேளை எடுத்தல்

    -உறவுகளையும், மன ஆற்றலையும் காக்கும்.

    * உறங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்தல்

    -நல்ல தூக்கத்தை தரும். உடல் வலியை போக்கும்.

    * செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தல்

    - மனம் திருப்தி அடையும்.

    • இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
    • இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

    உலகில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் விரும்பி குடிக்கும் பானமாக இளநீர் உள்ளது. இளநீரை விரும்பாதவர்கள் அரிது தான். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கோடை காலங்களில் இளநீர் வியாபாரம் இந்தியாவில் அமோகமாகவே நடக்கும். உடலுக்கு பல வழிகளில் நன்மை தரக்கூடிய இளநீரை இரவு அருந்தலாமா என்ற கேள்வி சிலருக்கு எழும். அதற்கான தீர்வு குறித்து பார்க்கலாம்.

    கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிக்க இளநீர் சிறந்த தேர்வாக அமையும். அதே போல் இரவு நேரங்களில் இளநீர் குடிப்பதும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இருக்கும். குறிப்பாக பருவகால நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும். இளநீரில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி வைட்டமின்கள், தாதுக்களும் அடங்கியுள்ளதால், கூந்தல் மற்றும் சருமத்திற்கும் வலுசேர்க்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன்பு இளநீர் குடிக்கலாம். இவற்றிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும். நீரிழப்பை தடுக்கும்.

    இளநீர் வருடம் முழுவதும் ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் கிடைக்கும் ஒரு பானம். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    இளநீர் குடிப்பதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது உடலில் இருக்கும் தொற்றுக்கிருமிகளை வெளியேற்ற உதவும். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் இளநீர் துணை புரியும். இளநீரை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் குடிப்பதால், அதன் ஆரோக்கிய நன்மைகள் இரட்டிப்பாகும். உணவுக்கு முன்பும், பின்பும், தூங்குவதற்கு முன்பும், உடற்பயிற்சிக்கு பின்பும் இளநீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதனால் செரிமானம் மேம்பட்டு, உடல் நீரேற்றமாக இருக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். இதய துடிப்பை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும்.

    பொதுவாக ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் இளநீர் குடிப்பது போதுமானது. இருப்பினும், சர்க்கரை நோய் அல்லது குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி இளநீரை குடிப்பது நல்லது.

    • முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
    • வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும்.

    முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்கு தெரியும். அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம். ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் தெரியாத ஒன்று.

    முருங்கையின் பலன் பற்றி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள். வீடுகள் மற்றும் தோட்டங்களில் முருங்கை மரங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் நம்மில் எத்தனைபேர் முருங்கைப்பூவை சமைத்துச் சாப்பிட்டிருப்போம்..? காரணம் அந்தப் பூக்களின் மருத்துவகுணம் பற்றி தெரியாதது மட்டுமல்ல... முருங்கைப்பூவை விட முருங்கைக்காயையே நாம் அதிகம் சமையலுக்கு பயன்படுத்திப் பழகியிருக்கிறோம்.

    இன்றைய அவசர யுகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு, பகலாக ஓய்வின்றி உழைப்பது, கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றால் மனஅழுத்தம், மன உளைச்சல் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும். அந்த நேரங்களில் முருங்கைப்பூவை கசாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.

    மேலும், பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும். முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும் என்கிறார்கள்.

    • குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும்.
    • செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.

    குடற்புழுக்கள் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் கைகளை சரியாக கழுவாததால் ஏற்படுகின்றன. மண், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் வாழத்தொடங்குகின்றன. இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, எடையிழப்பு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.

    குடற்புழுக்கள் வராமல் தடுக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். நகங்களை நன்றாக வெட்ட வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பல் துலக்கும் முன்பும், பின்பும் பிரஸை கழுவ வேண்டும். டவல்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும். சமையலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.

    பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். செல்லப்பிராணிகளின் கழிவுகள் அருகே குழந்தைகளை விளையாட விடக்கூடாது. நோய்த்தொற்றுகள் அதிகம் வாய்ப்புள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்கக் கூடாது. அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது

    • காபி குடிப்பது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
    • புதிய கொழுப்பு செல் உருவாவதை குறைக்கிறது.

    பொதுவாக காபி உடலுக்குத் தீங்கு என்பார்கள். ஆனால், பிளாக் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முதலிடம் வகிக்கின்றன. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் கல்லீரல் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன.

    அல்சைமர் நோய் என்பது மூளைப் பிரச்சனையாகும். இது நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை அழித்து, மிக எளிய பணிகளைச் செய்வதைக் கூட கடினமாக்குகிறது. காபி குடிப்பது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

    அல்சைமர் நோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2-3 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    கருப்பு காபியை தொடர்ந்து உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த், எடை குறைப்பதில் கருப்பு காபியை உட்கொள்வதால் நேர்மறையான விளைவுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.

    எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கும் குளோரோஜெனிக் அமிலங்கள் இதில் உள்ளதாக நிபுணர் விளக்குகிறார். புதிய கொழுப்பு செல் உருவாவதை குறைக்கிறது. எனவே எடை இழப்புக்கு இது முக்கியமானது. கூடுதலாக, நீங்கள் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் கலோரிகள் குறைவாக இருக்கும். எனவே எதுவானாலும் அளவோடு உட்கொள்வது உடலுக்கு உகந்தது.

    • தேன் மிகசிறந்த உணவு பொருளாகும்.
    • ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

    கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

    தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும்.

    மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது. படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

    • விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள்.
    • பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.

    மகிழ்ச்சி ஏன் கடினமாகிறது?

    * எது நம்மை மகிழ்ச்சியாக்கும் என்பதை கண்டறியும் விஷயத்தில் சில சமயம் மனம் தவறான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.

    * மனதை உலுக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும்போது துயரம் குடிகொள்ளும். அந்த சமயத்தில் தேவையற்ற சிந்தனைகள், எண்ணங்கள் எழுவது மனதை பலவீனப்படுத்தி விடும். பதற்றத்தை உண்டாக்கிவிடும்.

    * ஏதாவது மகிழ்ச்சியாக நிகழ்வு ஒன்று நடந்த பிறகு, மூளை விரைவாக அதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு பழகி விடுகிறது. அத்தகைய எதிர்பார்ப்பு ஈடேறாதபோது மன மகிழ்ச்சி தடைபடும்.

    எது மகிழ்ச்சியை தடுக்கிறது?

    * அதிக பணம் (அடிப்படை தேவைகளுக்கு மேலாக)

    * கவர்ச்சியான வேலை

    * டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் மூழ்கி விடுதல்

    * கனவு வீடு, ஆடம்பரமான கார், பேஷன் ஆடைகள் பற்றிய சிந்தனையில் எந்நேரமும் மூழ்கி இருத்தல்

    * விரும்பிய உடல் அமைப்பை பெறுவதற்கு போராடுதல்

    எது நம்மை அதிக மகிழ்ச்சியாக்கும்?

    தொடர்பில் இருத்தல்

    * நண்பர்கள், உறவினர்கள் மட்டுமின்றி உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவி புரிந்தவர்களுடன் அவ்வப்போது பேசுங்கள். நேரில் தொடர்பு கொள்வது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது.

    * அந்நியர்களுடன் பேசுவதும் (உங்களுக்கு அந்த யோசனை பிடிக்காவிட்டாலும் கூட) மகிழ்ச்சியை அதிகரிக்கும். அவர்கள் முகவரி தெரியாமல் தடுமாறி நிற்கும்போது நீங்களாக சென்று வழிகாட்டுவது கூட ஒருவித மகிழ்ச்சியை உண்டாக்கும்.

    சிறிய தருணங்களை ரசித்தல்

    * விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ஐஸ்கிரீமை ருசிக்கும்போது அதை நேசியுங்கள். இப்படி சிறிய தருணங்களை ரசித்தல் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்.

    * பயணங்களின்போது ஜன்னல் அருகே அமர்ந்து காற்றை ரசிப்பதும் மனதை அலாதியாக்கும்.

    தினசரி நன்றியுணர்வு

    * ஒவ்வொரு நாளும் அன்றைய நாளில் நடந்த முக்கியமான 3 விஷயங்களை எழுதுங்கள். இந்த பழக்கம் மூளையை நினைவூட்டும்.

    * அந்த 3 விஷயங்களை உங்களை அதிகம் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது அதை விட சிறந்தது.

    நற்செயல் செய்தல்

    * ஒருவருக்கு தற்செயலாக ஒரு நல்ல செயலை செய்யுங்கள். அந்த நபர் உறவினர்கள், நண்பர்களாக இருக்கலாம். ஏற்கனவே அறிமுகம் இல்லாத நபராகவும் இருக்கலாம்.

    * குறிப்பாக உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு உடனே உதவிடுங்கள். அவர்கள் உங்களை அணுகி கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்களாகவே செய்யும் அந்த உதவி உங்களையும், சம்பந்தப்பட்டவரையும் மகிழ்ச்சியான மன நிலைக்கு கொண்டு செல்லும்.

    நன்றாக தூங்குதல்

    * ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். அதில் சமரசம் செய்யாதீர்கள்.

    * உங்கள் தூக்க அட்டவணை நிலையானதாக இருந்தால் அதுவே நோய் நொடி இல்லாத, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை சூழலை உருவாக்கிக் கொடுக்கும்.

    சாகச பயணங்கள் மேற்கொள்ளுதல்

    * சுற்றுலாவுக்கோ, வெளியிடங்களுக்கோ சென்றால் அங்கு நீங்கள் வாழ்நாளில் அனுபவிக்காத சாகசங்கள், விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தால் அதில் ஈடுபட யோசிக்காதீர்கள். கூடுதல் பணம் செலவழிக்கவும் தயங்காதீர்கள். அது வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்பட்சத்தில் அதனை அனுபவிப்பது கூடுதல் மகிழ்ச்சியை தேடித்தரும்.

    * வருடத்திற்கு ஒருமுறையோ, குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையேயோ வெளியிடங்களுக்கு செல்லும் பட்சத்தில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்யுங்கள். அங்கு செல்வதற்காக காத்திருக்கும் நாட்களும், எதிர்பார்ப்புகளும் கூட மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    தியானம் செய்தல்

    * அலை பாய்ந்து திரியும் மனம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கும். அதை தியானம் மீட்டமைக்கும்.

    * தியானத்திற்கு தினமும் 5 நிமிடங்கள் செலவிட்டால் போதும். சமூக வலைத்தளத்தில் யோகா நிபுணர்களின் வழிகாட்டுதலில் வடிவமைக்கப்படும் வீடியோக்களை கூட பார்த்து பயிற்சி செய்யலாம். அதுவும் மனதை இலகுவாக்கும்.

    ஒப்பீடு செய்தல்

    * ஒப்பிடும் அளவுகோலை மாற்றியமையுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவததல்ல. உங்களுடனே ஒப்பீடு செய்யுங்கள். உங்கள் நிறை, குறைகளை அலசி ஆராயுங்கள்.

    * விறுவிறுப்பான, சுவாரசியமான திரைப்படம் பார்க்கும் போது சிறிது நேரம் நிறுத்தி வையுங்கள். அது அந்த படத்தின் மீதான ஆவலையும், எதிர்பார்ப்பையும் தூண்டி விடும். மீண்டும் பார்க்கும்போது புதிய உற்சாகத்தை பெறுவீர்கள்.

    நேரம் செலவளித்தல்

    * உங்களுக்கு அதிக நேரத்தை அளிக்கும் வகையில் செலவிடப்படும் பணம் எப்போதும் மதிப்புடையது என்பதை மனதில் கொள்ளுங்கள். அது பொழுதுபோக்காக இருக்கலாம். விருந்து, விழாக்களாக அமையலாம். உற்றார், உறவினர்கள் ஒன்று கூடும் இடமாக இருக்கலாம்.

    * எனவே எப்போதும் செலவளிக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு கிடைக்கும் வகையில் கூடுதல் நேரத்தை உங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் செலவிடுங்கள்.

    உடற்பயிற்சி செய்தல்

    * உடலுக்கு அசைவு கொடுக்கும் எந்த பயிற்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்வதற்கு முயற்சியுங்கள். அது சில நிமிடங்கள் செய்யக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை.

    * செல்போன் அழைப்பின்போது நடந்து கொண்டே பதிலளிப்பது கூட ஒருவித உடல் இயக்கமாக அமையும். உடலையும், மனதையும் ஆசுவாசமடைய செய்யும்.

    • நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.
    • மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்.

    தினமும் 3 கப் காபி அல்லது இரண்டு கப் டீ குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 40 ஆண்டுகளில் அவர்கள் தினசரி காபின் கொண்ட சூடான பானங்களை (தேநீர், காபி) எவ்வளவு அருந்தினர் என்பதையும், அவர்களின் நினைவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

    ஆய்வின் முடிவில் தினமும் இரண்டு முதல் 3 சுப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடிப்பவர்களுக்கு, அதை குடிக்காதவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா அபாயம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் 3 கப்புகளுக்கு மேல் டீ, காபி குடிப்பதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "டிமென்ஷியாவைத் தடுக்கும் வழிகளை ஆராய்ந்தபோது, காபி போன்ற அனைவரும் பயன்படுத்தும் பானம் நல்ல உணவுமுறை தீர்வாக இருக்கலாம் என்று நினைத்தோம்" என்று இந்த ஆய்வின் ஆசிரியரும் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார். "மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், காபின் கொண்ட டீ அல்லது காபி முக்கியமானதாக இருக்கலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

    டீ மற்றும் காபியில் உள்ள பாலிபினால்கள் போன்ற பொருட்களே இந்த நன்மைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைத்து, நினைவுத்திறன் சரிவைத் தடுக்க உதவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

    ×