என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமருத்துவம்"
- ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
- முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.
* நடுத்தர வயதாக இருந்தாலும், நன்கு ஆரோக்கியமாகவே இருந்தாலும் வருடம் ஒரு முறை உடல் முழு பரிசோதனை செய்து கொள்கின்றீர்களா? இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது காலத்தின் கட்டாயம். சில கூடுதல் கவனங்கள் தேவைப்படுகின்றது.
* இளவயதாக இருந்தாலும் வருடத்திற்கு 2-3 முறை உங்கள் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளலாம்.
* வயது 30 ஆகி விட்டதா? ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடும்ப ரத்த உறவுகளில் யாருக்கேனும் இருந்தால் இதில் கூடுதல் கவனம் அவசியமாகின்றது.
* ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
* தேவையான தடுப்பூசிகளை போட்டு உள்ளீர்களா?
* நம்மை பற்றிய மருத்துவ குறிப்புகள் கொண்ட ஒரு சிறிய நோட்டு புத்தகம் வைத்துக் கொள்ளலாம்.
* கையை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல் (அ) சிறிய கிருமி நாசினி கையில் அவ்வப்போது போடுவது நல்லது.
* சுய வைத்தியம் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.
* டாக்டர் எழுதும் மருந்தினை குறைத்து எடுத்துக் கொள்வதும் (அ) அதே சீட்டினை வருடக் கணக்கில் காட்டி மருந்து வாங்கி சாப்பிடுவதும் தவறு.
* தண்ணீரினை வடிகட்டி காய்ச்சி குடிக்கின்றீர்களா? இவற்றையெல்லாம் முறைப்படி ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்.
உடலுக்காக செய்ய வேண்டியவை
* தினம் 30 நிமிடம் நடப்பது கட்டாயமாகும்.
* முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.
* யோகா அவசியம்
* மூச்சு பயிற்சி அவசியம்.
* பயிற்சியாளர் மூலம் உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை கற்று பயில வேண்டும்.
* சீரான எடை பராமரிப்பு அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
* தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை ஓயாது டி.வி. ஓடுவதும், ஒலிப்பதும், போன் பார்ப்பதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* காலை, மாலை நேரத்து வெயில் 30 நிமிடங்களாவது உங்கள் மீது படுகின்றதா?
உட்காரும் பொழுதும், நடக்கும் பொழுதும் வளைந்து நெளிந்து இல்லாமல் நேராய், கம்பீரமாய் இருக்கின்றீர்களா?
* எந்த மூட்டில் வலி இருந்தாலும் உடனடியாக உரிய கவனம் கொடுப்பது நல்லது.
உணவு-சத்துணவு
* காய்கறி, பழங்கள் இவைகளை ஒரு நாளைக்கு 5 முறை பரிமாறிக் கொள்ளலாம்.
* அன்னாசி, கொய்யா, வாழை, ஆரஞ்சு, தர்பூசணி இப்படி பழ வகைகளை சிறிதளவாக எடுத்துக் கொள்ளலாம். உணவில் காய்கறிகள் ஏதேனும் இல்லாது இருக்கக் கூடாது. சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இந்த நிறங்களில் உங்கள் உணவு தட்டு, பருப்பு, காய்கறி இவற்றினால் தேவையான அளவு இருக்க வேண்டும்.
* முழு தானியம், பிரவுன் அரிசி, சீரக சம்பா, தூயமல்லி அரிசி என வகை வகையாய் உள்ளன.
* அதிக உப்பு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், வடாம்-இவை 'நோ' தான்.
* புரதம் இல்லாத உணவு உணவாகாது - பருப்பு, முட்டை, பால் இவற்றினை பயன் படுத்தலாமே.

கமலி ஸ்ரீபால்
* காலை உணவினை தவிர்ப்பது, சீக்கிரம் ஒருவரை நோயாளி ஆக்கும்.
* பொரித்த, வறுத்த போன்ற எண்ணை பலகாரங்களுக்கும் 'நோ' தான்.
* இரவு 7 மணிக்குள் உணவினை முடிக்க முடிந்தால் ஆரோக்கியம் கூடும்.
இருதயம்
* புகை பிடிப்பதனை நிறுத்தி விட்டீர்களா? எப்போதாவது என்பதும் தீங்கு தான்.
* குடி என்பதே வேண்டாமே
* ஒமேகா-3 நிறைந்த வால்நட், சியா விதை, ஆளி விதை, மீன் நன்கு எடுத்துக் கொள்கின்றீர்களா?
* வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
* 40 வயதிற்குப் பிறகு இருதய பரிசோதனை கூட அவசியப்படலாம்.
* மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி இவற்றினை உடனடியாக கவனிக்க வேண்டும்.
* ஸ்ட்ரெஸ் இருதய பாதிப்பினை கூட்டும்.
பல்லும்-கண்ணும்
* தினம் ஒரு முறை பல் துலக்குவதும், ஒரு முறை பிரஸ் செய்வதும் அவசியம்.
* 6 மாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் செல்வது புத்திசாலித்தனம்.
* எதனை சாப்பிட்டாலும் குறிப்பாக இனிப்பு சாப்பிட்டால் வாய் கொப்பளித்து விடுங்கள்.
* மாதம் ஒரு முறை பிரஷ் மாற்றுவது மிக சிறந்தது.
* கண் பாதுகாப்பிற்காக வெயிலில் கறுப்பு கண்ணாடி அணிவது சிறந்த கண் பாதுகாப்பு.
* படிக்கும் போதும், எழுதும் போதும், டி.வி. பார்க்கும் போதும் கண்ணை மூடி மூடி திறக்க வேண்டும்.
* காரட், பால், பழங்கள், வைட்டமின் 'ஏ' சத்து கண் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
* 40 வயதிற்குப் பிறகு கண் பரிசோதனை தேவையே.
* கண்களை கைகளால் தாறுமாறாகத் தேய்க்காதீர்கள்.
* சுத்தமான துவாலைகளை (டவல்) பயன்படுத்துங்கள்.
மனநிம்மதி
* 8 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும்.
* பிராணாயாமம், 10 நிமிடமாவது தியானம் அவசியம்.
* இயற்கையோடு இருங்கள்.
* அதிகமாக டி.வி., யூடியூப் பார்க்க வேண்டாம்.
* சிறிது நேரமாவது வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்.
* வேலை பளுவில் சற்று நேரம் 'பிரேக்' எடுங்கள்.
சுகாதாரம்
* தினமும் இருவேளை நன்கு குளியுங்கள். உடலை நன்கு துடைக்க வேண்டும்.
* உங்கள் மருத்துவர் அறிவுரைப்படி உங்கள் சருமத்திற்கென 'சன்ஸ்கிரீம்' அவசியம்.
* மிகவும் வறட்சி தரும் சோப்புகள் வேண்டாம்.
* 'மாய்ச்சரைசர்' உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குளித்ததும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* பருத்தி ஆடையே அணியுங்கள். நகங்களை சீராய் வெட்டி விடுங்கள்.
* கொசுவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் தனி உபயோகப் பொருட்களை பிறருடன் பங்கிடக் கூடாது.
பாதுகாப்பு
* வீட்டில் அவசியம் ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* அவசர உதவி எண்கள் போனில் இருக்க வேண்டும்.
* மருந்துகள் பாதுகாப்பாய், குழந்தைகள் கையில் எட்டாதவாறு இருக்க வேண்டும்.
* குடும்ப மருத்துவர் என்பது நமக்கு தேவையான ஒன்று.
வீடு
* காற்றோட்டம் அவசியம். சூரிய வெளிச்சம் வேண்டும்.
* வீட்டினுள் குப்பை, புகைகள் இருக்கக் கூடாது.
* அன்றாடம் குப்பைகளை முறையாய் பையில் போட்டு அகற்றுங்கள்.
* அதிக காரத்தன்மை உடைய சுத்தம் செய்யும் சோப்பு, திரவங்கள் வேண்டாம். அது நுரையீரலை பாதிக்கும்.
* தண்ணீர் தேங்குதல் கூடாது.
* உணவுகள் மூடி வைக்கப்பட வேண்டும். பல்லி, கரப்பான் போன்றவை இருக்கக் கூடாது.
* பிளாஸ்டிக் உபயோகத்தினை முடிந்த வரை நீக்கி விடுங்கள். இவையெல்லாம் முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்.
* புற்றுநோய் சோதனைகள்: மார்பகம், கருப்பப்பைகள், பிராஸ்ேடட், குடல் பரிசோதனைகள் அவசியம் செய்யுங்கள்.
உயர் சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு அவசியம்.
* கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.
* ப்ளூ, டெட்டனஸ், ஹெப்படைடிஸ்-3 வாக்சின்கள் அவசியம் எடுக்கவும்.
* மாஸ்க் அணிவது எப்பொழுதுமே நல்லது.
இவை அனைத்தும் சரியாக செய்தாலே வாழ்க்கை முறையாய் இருக்கும். எந்த ஒரு விழாவிலும் அதிக உணவு உண்பது என கொண்டாடினால் வாழ்க்கை நம்மை நோயாளி ஆக்கிவிடும்.
ஆகவே இவைகளை செய்கின்றீர்களா? என்பதை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
மேலும்
* நடைபயிற்சி செல்லும் போது கையில் போன் இல்லாது செல்லலாமே.
* போனை அடுத்த அறையில் வைத்து விட்டு தூங்க செல்கின்றீர்களா? குறைந்தது மாணவர்களாவது இதனைச் செய்யலாமே.
* ½ நிமிடமாவது சூடு இல்லாத நீரில் ஷவர் முறை குளியல் தலை முதல் கால் வரை எடுக்கின்றீர்களா? இதனை வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் முன் செய்யலாம்.
* கார் சாவி, வீட்டு சாவி, ஸ்கூட்டர் சாவி இவற்றினை தினமும் முறையாக ஒரே இடத்தில் வைக்கின்றீர்களா?
* பிறருடைய நேரத்திற்கு மதிப்பு கொடுக்கின்றீர்களா?
* ஒரு நல்ல தரமான 'ஜோக்' தெரியுமா?
* அனைவரிடமும் ஒன்றினை கற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் இப்படி இருக்கக் கூடாது என்பதனையாவது கற்றுக் கொள்ளலாம்.
* அக்கம் பக்கம் உள்ளவர்களை நட்பாக அறிந்து வைத்திருங்கள்.
* இயற்கை பேசுவதை காது கொடுத்து கேட்டிருக்கின்றீர்களா?
* புன்னகை, சிரிப்பு இவை உங்களிடம் உள்ளதா?
* அப்பா, அம்மாவோடு சிறிது நேரம் செலவழித்து மனம் விட்டு பேசுகின்றீர்களா?
* புதிர், குறுக்கெழுத்து போட்டி இதில் பழக்கம் இருக்கிறதா?
* நிலவையும், நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் முடிந்த பொழுது பார்க்கின்றீர்களா?
இவையெல்லாம் நம் அன்றாட பழக்கத்தில் இயற்கையாக வர வேண்டியவை ஆகும். இப்படி எதுவும் இல்லாமல் மனநோய், உடல்நோயுடன் வாழ்கின்றோம். இன்றே மாறுவோம்.
- வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
- சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் குணமாகும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை மிக சிறந்த நிவாரணம் தரும்.
செவ்வாழையில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
சிவப்பு வாழைப்பழங்கள் பொட்டாசியம் நிறைந்தவை. இவை உடலின் வழக்கமான கழிவு வெளியேற்றும் வேலைக்கு அவசியம். பொட்டாசியம் சிறுநீரக கற்கள், இதய நோய் மற்றும் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் கால்சியம் தக்க வைத்து உதவுகிறது.
பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சிவப்பு வாழைப்பழம் ஆண்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கையை ஆதரிக்க பல ஆய்வுகள் சாதகமாக முடிவுகள் தெரிவிக்கின்றது. வாழைப்பழங்களில் பி வைட்டமின்கள் மற்றும் புரோமைன் என்சைம் ஆகியவை விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. செவ்வாழை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் வயிறு எரிச்சலும் குறைகிறது.
- இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும்.
- உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்புகள் இருக்கிறதா என கண்டறியப்படுகிறது.
ஆஞ்சியோ சிகிச்சை என்பது குறுகலான அல்லது தடுக்கப்பட்ட ரத்த நாளங்களை பலூன் போன்ற கருவிகள் மூலம் விரிவுபடுத்தி, திறந்த இதய அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் ஒரு மருத்துவ செயல்முறையாகும்.
இது இதய நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சையாகவும் செய்யப்படுகிறது. ஆஞ்சியோகிராம் என்ற எக்ஸ்ரே பரிசோதனை மூலம் ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளைக் கண்டறிந்து, பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆஞ்சியோகிராம்: முதலில், உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்புகள் இருக்கிறதா என கண்டறியப்படுகிறது. இதற்காக, ஒரு சிறப்பு நிறமியை ரத்த நாளங்களில் செலுத்தி, எக்ஸ்ரே மூலம் படமெடுக்கப்படும்.
ஆஞ்சியோபிளாஸ்டி : ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்டால், அந்த குறுகலான அல்லது தடுக்கப்பட்ட பகுதிக்கு ஒரு சிறிய குழாயை செலுத்துவார்கள்.
பலூன் விரிவடைதல்: அந்த குழாயின் முனையில் உள்ள பலூனை விரிவுபடுத்துவதன் மூலம், குறுகிய ரத்த நாளத்தை அகலப்படுத்தி, ரத்த ஓட்டம் சீராக பாய வழிவகை செய்யப்படுகிறது.
ஸ்டென்ட் பொருத்துதல்: சில சமயங்களில், மீண்டும் ரத்த நாளம் சுருங்குவதைத் தடுக்க, ஒரு சிறிய வலை போன்ற குழாய் (ஸ்டென்ட்) அந்த இடத்தில் பொருத்தப்படலாம். மாரடைப்பு மற்றும் மார்பு வலி போன்ற இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, இதயத்திற்கு ரத்தத்தை வழங்கும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க அவசர மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சை முறையாகப் பயன்படுகிறது.
- நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது.
- குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும்.
குறட்டை இதயக்கோளாறின் அறிகுறியா? என்ற கேள்விக்கு மருத்துவர் தரும் விளக்கம் வருமாறு:-
இந்தியாவில் மட்டும் 5 கோடி பேருக்கு மேல் குறட்டை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும் போது மூச்சு தடைபடுதலை ஸ்லீப் ஆப்னியா என்றும் கூறுகிறார்கள். இந்த வார்த்தை இப்போது பரவலாக உச்சரிக்கப்படுகிறது.
நாம் சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறும். அப்போது குறட்டை ஏற்படுகிறது. தூங்கும்போது நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும் மல்லாந்து படுக்கும் போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கி விடும். இதனாலும் சுவாசப்பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது. குறட்டை என்பது அரைகுறையான தூக்கம் ஆகும்.
குறட்டை விடுபவர்களுக்கு இரவில் ஆக்சிஜன் சப்ளை குறைவாக இருக்கும். சிலர் இரவில் குறட்டைவிட்டபடி தூங்குவார்கள், அவர்களுக்கு அரை நிமிடம் மூச்சே நின்று விடும். பின்னர் அரக்கபரக்க எழுந்து உட்காருவார்கள். ஒரு நாளைக்கு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம். அதிலும் 4 மணி நேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். ஆனால் நமக்கே தெரியாமல் ஒவ்வொரு மணி நேரமும் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த குறட்டை.
இரவில் தூக்கம் கெட்டுப்போனால் காலையில் எழுந்ததும் கடுமையாக தலை வலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள். வேலையில் கவனக்குறைவு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். இந்த நிலைமை நீடிக்கும் போது இதயத்துடிப்பில் பிரச்சினை ஏற்படும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோர்த்துக் கொள்ளும்.
குறட்டை வந்தால் மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.
மூளை பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் 2 முழங்கால்களிலும் பலமான வலி ஏற்படும். திருமணம் ஆன பின்னர் குழந்தை பிறக்க கூட தாமதம் ஆகும். குறட்டை விடுவதை சரி செய்ய வழி உண்டு. மேலும் வரும் குறட்டையால் வேறு எதாவது பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதா? என்பதை கண்டுபிடிக்கவும் வசதிகள் உள்ளன. மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சினை, தொண்டை பிரச்சினைகள், தைராய்டு, மது அருந்துதல், புகைபிடித்தல் போன்ற பிரச்சினைகளால் குறட்டை வருகிறது என்று தெரிந்தால் அதற்கு சிகிச்சை பெறலாம். அதுபோன்ற பிரச்சினை இல்லாமல் குறட்டை வருகிறது என்றால் ஸ்லீப் ஸ்டடி என்றவொரு சிகிச்சை மேற்கொண்டு பார்க்க வேண்டும். ஸ்லீப் ஸ்டடி சிகிச்சை அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் இருக்கும்.
அந்த சிகிச்சைக்கு வருபவர்கள் இரவு 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். அங்கு குறட்டை வருபவரின் இதயம், மூளை என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒயர்கள் பொருத்தி அதனை மருத்துவ எந்திரத்துடன் இணைப்போம். பின்னர் அவருக்கு தூக்கம் வந்ததும் தூங்கி விடலாம். அவருக்கு துணையாக உறவினர் ஒருவர் கூட இருக்கலாம். அடுத்த அறையில் இருந்து டெக்னீசியன் நோயாளியை கண்காணித்தபடி இருப்பார். அவர் தூங்கி எழுந்ததும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எந்திரத்தில் பதிவான பதிவு விவரங்கள் கிடைக்கும்.
இரவில் தூங்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு குறைய வேண்டும். பகலில் ரத்த அழுத்தம் 200 இருந்தால் இரவில் 160-க்கு வரவேண்டும். அதனால் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்துள்ளதா? எவ்வளவு நேரம் மூச்சை நிறுத்துகிறீர்கள்? உங்களுக்கு தெரியாமலேயே குறட்டை எப்படி மூச்சை நிறுத்தி உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவரும். அந்த விவரங்களை கொண்டு எதனால் குறட்டை வருகிறது, மாரடைப்பு வருமா? என்பதை கண்டுபிடித்து விடலாம். அதன் மூலம் மேல் சிகிச்சை பெறலாம்.
குறட்டை நீங்க நோயாளிகளுக்கு முகக்கவசம் போன்ற சீ பேப் எந்திரம் (மூச்சு அழுத்தம் கொடுக்கும் கருவி) ஒன்று பொருத்தப்பட்டு ஆக்சிஜன் செலுத்தப்படும். பம்ப் மூலம் காற்று சீராக சென்று கொண்டு இருக்கும். இதனால் சுவாசிக்கும் காற்று தடைபடாது. இந்த சிகிச்சை மூலம் 3 மாதத்தில் குறட்டை நீங்கும். எனவே தினமும் குறட்டை விடுவது, குறட்டை சத்தத்தில் மாறுபாடு இருப்பது தெரிந்தால் நுரையீரல் சிகிச்சை சிறப்பு டாக்டரை அணுகுவது நல்லது. ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதயநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
- ரத்ததானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும்.
- விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.
நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தமாகும். இந்த ரத்தம் ஒவ்வொரு உறுப்புக்கும் சீராகச் சென்றடையாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
அவசர கால சிகிச்சைகளில் விபத்துகள் அல்லது அறுவை சிகிச்சையின்போது ரத்தம் தேவைப்படும்போது, ரத்த வகை தெரியாதவர்களுக்கு O எதிர்மறை (O-) வகை இரத்தம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது உலகளாவிய இரத்த வகையாகக் கருதப்படுகிறது. சரியான இரத்த வகையைத் தெரிந்துகொள்வது மிக முக்கியமானது.
ஒருவருக்குப் பொருந்தாத இரத்த வகையைச் செலுத்தினால், அது கடுமையான நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தாக முடியும்.
ரத்த வகை Rh ஆன்டிஜென் அல்லது Rh-ஐ அடிப்படையாகக் கொண்டது. இது நேர்மறை (+) அல்லது எதிர்மறை (-) என வகைப்படுத்தப்படுகிறது.
இரண்டு அமைப்புகளின் கலவையால் எட்டு [A+, A, B+, B, AB+, AB, O+, O] அடிப்படை இரத்த வகைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் ரத்த வகையைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ரத்த தானம் செய்ய ரத்த வகையைத் தெரிந்திருக்க வேண்டும். ரத்தசோகை, ஹீமோபீலியா போன்ற நோய்கள், அசாதாரணப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளின்போதும், விபத்தால் ரத்தம் இழப்பவர்களுக்கும் ரத்தம் செலுத்த வேண்டி வரும்.
ஒருவருக்கு எந்த ரத்த வகை உள்ளதோ, அதே ரத்தம்தான் அவருக்குச் சேரும். அதற்கு ரத்தம் தேவைப்படுபவர், தானம் செய்கிறவர் என இருவரின் ரத்த வகையும் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் எடுக்கும்போதும் பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படும்போதும் ரத்த வகையைக் குறிப்பிட வேண்டும்.
- பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
- ஓட்ஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
பாதாம்: பாதாமில் இருக்கும் கலவைகள் எல்.டி.எல். எனப்படும் தீயக் கொழுப்பை அகற்ற உதவுகிறது. மற்றும் இதயம், ரத்த நாளங்களில் சேதம் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. எனவே, அதிகாலையில் பாதாம் சாப்பிடுவதை பழக்கமாக கொள்ளுங்கள்.
நல்ல கொழுப்புகள்: நல்ல கொழுப்பு உணவுகளான, ஆலிவ் ஆயில், வெண்ணெய் பழம், ஆளிவிதைகள், மீன், நட்ஸ் போன்றவை தீய கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக எல்.டி.எல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
மீன்: கடல் உணவு எனப்படும் "சீ புட்ஸ்", கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த உணவாகும். குறிப்பாக மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்து இதற்கு உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், இயற்கையான முறைகளில் மிக எளிதாக தீயக் கொழுப்புகளை அகற்ற உதவுவது நார்ச்சத்து உணவுகள் தான். பழங்கள், காய்கறிகள், தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. தினமும் ஏதேனும் ஓர் காய்கறி அல்லது பழம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஓட்ஸ்: அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்களுக்கு சிறந்த உணவு இந்த ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம்.
- வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
- செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என 3 நாள்கள் சாப்பிட்டு வந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும். பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.
- உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட். சிவப்பு நிறக் காய்கறி- பழங்களில் லைக்கோபின் என்ற சிவப்பு நிறத்திலான கரோட்டினாய்ட் உள்ளது. மிக முக்கியமான ஆன்டிஆக்சிடன்ட் இது. ஏராளமான நன்மைகளைக் கொடுக்கவல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல் ஆகியவை முக்கியமான செயல்பாடுகள். இவை தவிர சூரியக் கதிர்வீச்சால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதுடன், சிலவகையான புற்றுநோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நினைவாற்றல் பாதிப்பு நோய் வருவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம்
- ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது.
சரியான உணவு உண்ணாமல் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைபாட்டினர்,
நாட்பட்ட நோயாளர்கள், வயதானவர்கள், குழந்தைகள் ரத்தம் அதிகரிக்க என்ன சாப்பிடலாம். ஆரோக்கியமான சரிவிகித உணவு மிக அவசியம். எல்லாவிதமான கீரைகளிலும் இரும்புச்சத்தும் மற்ற விட்டமின்களும் நிறைந்திருக்கிறது. அத்துடன் பருப்பு, பால் மீன் முட்டை போன்றவை புரோட்டின் சத்தை கொடுக்கும்.
ஒரு சில காய்கறிகள் பழங்களில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக பேரிச்சை, முருங்கை புளிச்சக்கீரை.
- ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும்.
- இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும்.
அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய பேஸ்மேக்கரை (பேஸ்மேக்கர் என்பது இதயத் துடிப்பைக் சீராக்கும், இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு உதவும் ஒரு மருத்துவ மின்சாதனம்) கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு சிரிஞ்சியின் நுனிக்குள் பொருத்தக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாகும். இந்த பேஸ்மேக்கர் தற்காலிகமாக தேவைப்படுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரிசியை விட சிறியதாக இருக்கும் இந்த சாதனம், 1.8 மி.மீ. அகலம், 3.5 மி.மீ. நீளம் மற்றும் 1 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்டது. மேலும் தேவைப்படாதபோது உடலில் கரையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதை உடலில் இருந்து வெளியே எடுக்க வேண்டியதில்லை. இதனால் பேஸ்மேக்கரை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை தேவையில்லை.

நிரந்தர பேஸ்மேக்கர் இதயத்தில் உள்ள மின் அமைப்பை (இதய மின் அமைப்பு என்பது, இதயம் துடிக்கவும், ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்யவும் உதவும் அமைப்பு) ஆதரிக்க அறுவை சிகிச்சை மூலம் உடலில் வைக்கக்கூடிய ஒரு சாதனமாகும். இது அசாதாரண இதய துடிப்புகளை சரிப்படுத்தி, உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது.
இதேபோல சில நேரங்களில், இதய செயல்பாட்டை ஆதரிப்பதற்கு குறுகிய காலத்திற்கு பேஸ்மேக்கர் தேவைப்படுகிறது. குறிப்பாக திறந்த இதய அறுவை சிகிச்சை, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக இதயத் துடிப்பு மாறும்போது இந்த வகையான தற்காலிக பேஸ்மேக்கர் பயன்படும்.
இது இதயத் துடிப்பு நிலைப்படுத்தப்படும் வரை, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே செயலில் இருக்கும். தற்போது உள்ள தற்காலிக பேஸ்மேக்கரை அறுவை சிகிச்சை மூலம் இதய தசைகளில் வைக்க வேண்டியுள்ளது.
அந்த சாதனம் இனி தேவைப்படாதபோது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுப்பதால் சில நேரங்களில் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பேஸ்மேக்கர் தேவைப்படாதபோது உடலில் கரைந்து போகும் என்பதால் அதனை வெளியே எடுக்க வேண்டியதில்லை.

இந்த பேஸ்மேக்கர் ஒரு கால்வனிக் கலத்தால் (கால்வனிக் கலம் என்பது ஒரு மின்வேதியியல் கலமாகும், இதில் ரசாயன ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது) இயக்கப்படுகிறது. இது வேதியியல் ஆற்றலை இதயத்தை ஒழுங்குபடுத்தும் மின் துடிப்புகளாக மாற்ற உடலின் திரவங்களைப் பயன்படுத்துகிறது.
ஒரு சதவீத குழந்தைகள் பிறவி இதயக் குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். அக்குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சையின்போது தற்காலிக பேஸ்மேக் கருக்கான தேவை உள்ளது. அவர்களுக்கு இந்த சிறிய அளவிலான பேஸ்மேக்கர் சிறந்தது.
அதன் சிறிய அளவு காரணமாக, வயது வந்தோருக்கான இதய சிகிச்சைகளிலும் பயனுள்ளதாக இருக்கும். நிரந்தர பேஸ்மேக்கரை போலவே அதிக தூண்டுதலை இதனால் வழங்க முடியும்.
பாதிக்கப்பட்ட நோயாளியின் மார்பில் சிறிய நெகிழ்வான, வயர்லெஸ் முறையில் இயங்கும் சாதனத்துடன் பேஸ்மேக்கர் இணைக்கப்பட்டிருக்கும். இது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகளை கண்டறியும்போது, பேஸ்மேக்கருக்கு ஒளி சமிக்ஞையை அனுப்பி, அதை செயல்படுத்துகிறது.

ரேடியோ சிக்னல்களை பயன்படுத்தும் முந்தைய பேஸ்மேக்கரை போல் அல்லாமல், இந்த புதிய சாதனம் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்த ஒளியைப் பயன்படுத்துகிறது.
ஆய்வகத்தில் எலிகள், பன்றிகள், நாய்கள் மற்றும் மனித இதய திசுக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேஸ்மேக்கர் நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது.
மனிதர்களிடத்தில் இந்த பேஸ்மேக்கரை பரிசோதிக்க சில ஆண்டுகள் ஆகும் என்றாலும், குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
- பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
- கருணைக் கிழங்கை புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.
மூல நோய் என்பது மருத்துவத்தில், 'ஹெமராய்ட்ஸ்' அல்லது 'பைல்ஸ்' என்று குறிப்பிடப்படுகிறது. பெருங்குடலின் கடைசிப் பாகம் முதல் ஆசனவாய் வரையுள்ள ரத்த நாளங்கள் புடைத்து வீங்கி வலியைத் தருவதைத் தான் 'மூலம்' என்கின்றோம்.
ஆசன வாயில் உள்ள வெண் கோடு போன்ற பகுதிக்கு மேலே தோன்றுவது 'உள்மூலம்' என்றும், கோட்டிற்கு கீழே தோன்றுவது 'வெளிமூலம்' என்றும் பிரிக்கப்படுகிறது.

மூல நோய் எதனால் ஏற்படுகின்றது?
'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையர் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கை நிலையில் இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.
ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உணவு பழக்கம்
துத்திக் கீரையுடன், சிறு வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.
கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.
முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
காரநூல் சிகிச்சை
மருந்துகளினால் தீராத மூல நோய்க்கு சித்தர்கள் கூறியுள்ள பாரம்பரிய 'காரநூல்' அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம். காரநூல் என்பது உறுதியான லினன் நூலை, நாயுருவி உப்பு, மஞ்சள், உத்தாமணிப் பால், எருக்கம்பால் போன்றவைகளைக் கொண்டு முறைப்படி செய்து மூலம் பாதித்த பகுதிகளை அந்த நூலினால் இறுக்கிக்கட்டி விடும் முறை. இது மூலத்தை அறுத்து புண்ணை ஆற்றும் இயல்புடையதால் நோயாளிக்கு எந்த பக்க விளைவுகளும் கிடையாது.
- நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
- நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும்.
'இடதுபக்க நெஞ்சுவலி என்றதுமே, நாம் முதலில் நினைத்து மிகவும் பயப்படுவது 'மாரடைப்பு' அதாவது 'ஹார்ட் அட்டாக்' தான். கொஞ்சமாக நெஞ்சு வலி இருந்தால் கூட அந்த பயமே உங்களுக்கு வலியை அதிகமாக்கிவிடும்.
நெஞ்சின் இடதுபக்கம் கனமாக, பாரமாக, இறுக்கமாக இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு. அவை: இதயம், நுரையீரல், நெஞ்சிலுள்ள தசைப்பிரச்சினைகள், ஜீரணக்கோளாறு, மன நல பிரச்சினைகள், விலா எலும்பு நோய், அதிக அளவில் வாயு சேருதல், ஆஸ்துமா, நிமோனியா போன்ற பல காரணங்களைச் சொல்லலாம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்றால், நெஞ்சின் இடப்பகுதி பாரமாக இருக்கும். இடது தோள்பட்டை வலிக்கும், இடது கை, இடது கைவிரல்கள் வரை வலி பரவும், உடம்பெல்லாம் மிக அதிகமாக வியர்த்துக் கொட்டும். தலை லேசாக வலிக்கும், வாந்தி வருவது போன்று இருக்கும், இதயத் துடிப்பு மிக அதிகமாக துடிக்கும்.
மூச்சு வாங்கும், இதயத்துக்கு நேராக பின்பக்க முதுகில் வலி, நெஞ்சைச் சுற்றி கயிற்றைக் கட்டி இறுக்குவது போன்றதொரு உணர்வு ஏற்படும். இதுபோன்ற மாரடைப்புக்கான அறிகுறிகளில் சில உங்களுக்கு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.

வாய்வுக்கோளாறு தான் நெஞ்சுவலியை ஏற்படுத்துகிறது என்று முடிவுசெய்து அதற்குண்டான வீட்டு வைத்தியம், மருந்துக் கடையில் நீங்களே மருந்தை வாங்கி சாப்பிடுவது போன்றவை மிகப்பெரிய தவறாகும்.
மேலும், அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சலை உண்டுபண்ணும். இதுவே நெஞ்சு வலி வந்துவிட்டதோ என்ற பயத்தை உண்டாக்கும். எனவே இவைகளை குறையுங்கள்.
மது, புகைப்பழக்கம் கூடாது. ஆஸ்துமா இருப்பவர்கள் அதை தூண்டிவிடும் பொருட்கள், உணவுகளிடமிருந்து விலகி இருங்கள்.
உங்களுக்கு இதயப் பிரச்சனையைவிட, மனப்பயம் தான் அதிகமாக இருக்கிறது. வீடு, அலுவலகம், தொழில் போன்ற பிரச்சனைகளால் டென்ஷனாகும் போது சிலருக்கு நெஞ்சுவலி வரலாம். முதலில் மன தைரியம் வேண்டும். நெஞ்சுவலி வந்தால், உடனே அருகிலுள்ள இதய நோய் சிகிச்சை நிபுணரை சந்திக்க வேண்டும்.






