என் மலர்
நீங்கள் தேடியது "செங்காந்தள் மலர்கள்"
- வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
- செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
செங்காந்தள் செடியின் கிழங்கு ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் பாம்புக்கடி, தேள்கடி போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்கள் இந்தச் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு தினமும் காலை, மாலை என 3 நாள்கள் சாப்பிட்டு வந்தால், விஷம் இறங்கும். உப்பில்லா பத்தியம் அவசியம். சிறிய பாம்புகள் கடித்தாலோ, வண்டு கடித்தாலோ இதன் இலையை அரைத்துப் பூசி சீயக்காய் தேய்த்துக் குளித்தால் விஷம் இறங்கிவிடும்.
செங்காந்தள் வேரில் செய்யப்பட்ட தைலத்தை வாரம் ஒருநாள் தலையில் தேய்த்து குளித்துவந்தால் எலி, வண்டு, பூரான், சாரைப்பாம்பு கடிபட்டவர்களுக்கு விஷத்தன்மை குறைந்துவிடும். பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து தொப்புள், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். உடனடியாக நஞ்சுக்கொடி இறங்கிவிடும்.
- ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
- கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான தேவதானம் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத் தோப்பு பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இது தமிழக அரசின் மலராகும்.
பார்ப்போருக்கு ரம்மிய மாக காட்சி அளிக்கும் இந்த மலர்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. கார்த்திகை மாதம் 1-ந் தேதி பூக்கத் தொடங்கி கார்த்திகை மாத முடிவிற்குள் இது பூத்து முடிந்து விடும் தன்மை வாய்ந்தது.
இதற்கு கார்த்திகைப்பூ என்றும், கண்வழிப்பூ என்றும் பெயர்கள் உண்டு. இது மிகுந்த மருத்துவ குணமுடையது. அரிய வகையான இந்த செடியின் மலர்கள், கிழங்கு, வேர் போன்றவை சித்த மருத்து வத்தில் முக்கியமாக இடம் வகிக்கிறது.
தேனி மாவட்டம் போடி, பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பகுதிக்கு வந்து சித்த மருத்துவத்திற்காக செங்காந்தள் மலர்களின் வேர்களை பறித்து கிழங்கை எடுத்துவிட்டு செடிகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.
இதன் காரணமாக கார்த்திகை மாத தொடக்கத்திலேயே பூத்துக் குலுங்கும் இத்தகைய மலர்கள் சித்த மருத்துவ சேகரிப்பாளர்களால் அழியும் நிலை ஏற்படுகிறது.
இத்தகைய அரிய வகை மலர்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு வேளாண்மை துறை மற்றும் இதர துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
- மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. ராஜ பாளையம் அய்யனார் கோவில், தேவதானம் சாஸ்தா கோவில் மற்றும் செண்பகத் தோப்பு சாலை போன்ற பகுதிகளில் இந்த மலர்கள் வண்ணமயமாக பூத்துக் குலுங்குகின்றன.
கார்த்திகைப் பூ எனவும், கண்வழிப்பூ எனவும் செங்காந்தள் மலர்களை அழைப்பதுண்டு. நெற்பயிர்களை தாக்க வரும் பூச்சி வண்டுகளை இந்த பூக்களை ஆங்காங்கே கட்டி எல்லையாக அமைத்தால் பூச்சி வண்டு போன்றவை தாக்காமல் இருக்கும்.
மேலும் சித்த மருத்து வத்தில் செங்காந்தள் மலர்களின் வேர், பூ போன்ற பகுதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. புற்றுநோய், காச நோய் உள்பட பல்வேறு நோய்களை தீர்க்கவல்ல இந்த செங்காந்தள் மலரின் கிழங்குகள் பல்வேறு நபர்க ளால் செடியை வேருடன் பிடுங்கி கிழங்கை எடுத்து விட்டு செடிகளை ஆங்காங்கே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.
இதன் காரணமாக செங்காந்தள் மலர்கள் பூத்த பத்து தினங்களுக்குள்ளேயே இவைகள் அழியத் தொடங்கி விடுகின்றன.
கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் அந்த செடிகளை கண்டறிந்து கிழங்குகளை தோண்டி எடுத்து சித்த மருத்துவத்திற்கு பயன்படுவது வழக்கம். ஆனால் சிலர் கார்த்திகை மாதம் பிறந்த உடனே இப்பூக்களை கண்டு கிழங்கு களை தோண்டி எடுத்து சென்று விடுவதால் இந்த செங்காந்தள் மலர்கள் இனம் அழியும் அபாயத்தில் உள்ளது.
தமிழக அரசு மற்றும் வேளாண் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி செங்காந்தள் மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






