search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "western ghats"

    • அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி முதல் அருவிக்கான பாதை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் சாடிவயல் பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழிப்பாதையிலும் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.

    இதுதொடர்பாக வனஅதிகாரிகள் கூறுகையில், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடை உத்தரவு தொடரும்.

    மேலும் மறுஉத்தரவு வரும்வரை பொதுமக்கள் யாரும் குற்றாலம் அருவியில் குளிக்க வர வேண்டாமென தெரிவித்து உள்ளனர்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும்.
    • பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலை என்பது அருட்கொடையான பகுதியாகும். கேரளாவில் தொடங்கி மஹாராஷ்டிரா வரை நீண்டுள்ள இந்த மலைப்பகுதி அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை கொண்டிருப்பதுடன் மழை வளத்துக்கும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

    இங்கு பல்வேறு வகை அரிய விலங்குகள், பாம்புகள் வசிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ஷோலோ காடுகளின் மீதான ஆர்வலர்கள் இப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் 'டெயில்-ஸ்பாட் ஷீல்டு டெயில்' எனப்படும் அரிய வகை பாம்பை கண்டறிந்துள்ளனர்.

    இது குறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் தெரிவிக்கையில், பாம்புகள் பெரும்பாலும் தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை பூமிக்கடியில் கழிப்பதகவும், மழைக்காலத்தின் போது இனப்பெருக்கம் செய்வதற்காக வெளியில் வருவதாகவும் தெரிவித்தனர்.

    கொடைக்கானல் மலைப்பகுதியிலும், மேகமலை-மூணாறு மலைப்பகுதியிலும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட பாம்புகள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. இதன் மீது 3 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் டி.என்.ஏ. தரவுகளுடன் பல அருங்காட்சியக மாதிரிகளை ஒப்பிட்டு பார்த்ததில் இங்கு இருப்பது அரிய வகை பாம்பு என கண்டறியப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைகளில் மறைக்கப்பட்ட பன்முகத் தன்மையை இந்த பாம்பு வகை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவில் ஊர்வன விலங்குகள் மாறுபட்ட தன்மை கொண்டதாகும். 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளூர் இனங்களும், அகாசியா, லந்தானா, வாட்டில் போன்ற அன்னிய ஊர்வன விலங்குகளும், மலை சார்ந்த பகுதிகளில் உள்ளன. இவை பெரும்பாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளானது.

    பாம்புகளில் விஷத்தன்மை கொண்டது, விஷத்தன்மை இல்லாதது என இருந்தபோதும், இவை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து மட்டும் 15 வகை புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சர்வதேச மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றனர்.

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
    • 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, கண் மாய், வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் தொடங்கி செண்பகத் தோப்பு, அய்யனார்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதி வரை கடுமையான மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் வெளியேறி தங்கு தடை இன்றி அடிவாரத்தை நோக்கி வருகிறது.

    குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. அதேபோல் பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

    இதற்கிடையே செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்ட போது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    மேற்கண்ட இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்க ளாகவும் விளங்குகிறது. கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.

    வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோவில் ஆறு, அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் அருவி, செண்பகத் தோப்பு மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு முழு வதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்ய னார் கோவில் ஆறு, செண் பகத்தோப்பு பேயனாறு மற்றும் அதனைச் சார்ந்த நீர்வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதன் மூலம் தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ராஜபாளையம் அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில், சாஸ்தா கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தி மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதேபோல் அந்த பகுதியில் மலைப்பகுதியில் வேலைக்குச் செல்பவர்களும் பத்திரமாக சென்று வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வருகிறார். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்க ளில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    • அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
    • காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர் ணமி தினங்களை யொட்டி தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்களும் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்ததின் காரணமாக பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதோடு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது மட்டும் கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.

    இதில் மார்கழி 1-ந்தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மழை காரணமாக அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

    வருகிற 23-ந்தேதி தை மாத பிரதோஷ விழா நடைபெற உள்ளது. எனவே அன்று மாலையில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    25-ந்தேதி தை மாத பவுர்ணமி தினத்துடன், அன்றைய தினம் தைப்பூசம் என்பதால் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 26-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது.

    தைப் பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    அதோடு பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.
    • விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    நெல்லை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டிய கன மழையால் களக்காடு தலையணையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    அணை பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 50 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 36 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைகளுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,753 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 1,505 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 142.20 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.65 அடியாகவும் உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.29 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1240 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,980 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் மாஞ்சோலை நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட தொடர்ந்து ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதியில் இருந்தே சுமார் 2 மாதங்களாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நிலவி வருகிறது. தொடக்கத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து பார்வையிட அனுமதி வழங்கிய நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிடவும் தடை விதித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 68 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் காக்காச்சியில் 52 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 48 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 45 மில்லி மீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 51 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி ஆற்றில் இன்று காலை 5000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென்காசி, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை பெய்து வருகிறது. குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதனால் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இன்று காலையில் புலியருவி, ஐந்தருவியில் சற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் ஆண்கள் பகுதியில் மட்டும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் தடை நீடிக்கிறது.

    காலை முதல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. கடனா, ராமநதி அணைகள் நிரம்பிய நிலையில் அந்த அணைகளுக்கு வரும் நீரானது உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
    • மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளன. ராஜ பாளையம் அய்யனார் கோவில், தேவதானம் சாஸ்தா கோவில் மற்றும் செண்பகத் தோப்பு சாலை போன்ற பகுதிகளில் இந்த மலர்கள் வண்ணமயமாக பூத்துக் குலுங்குகின்றன.

    கார்த்திகைப் பூ எனவும், கண்வழிப்பூ எனவும் செங்காந்தள் மலர்களை அழைப்பதுண்டு. நெற்பயிர்களை தாக்க வரும் பூச்சி வண்டுகளை இந்த பூக்களை ஆங்காங்கே கட்டி எல்லையாக அமைத்தால் பூச்சி வண்டு போன்றவை தாக்காமல் இருக்கும்.

    மேலும் சித்த மருத்து வத்தில் செங்காந்தள் மலர்களின் வேர், பூ போன்ற பகுதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. புற்றுநோய், காச நோய் உள்பட பல்வேறு நோய்களை தீர்க்கவல்ல இந்த செங்காந்தள் மலரின் கிழங்குகள் பல்வேறு நபர்க ளால் செடியை வேருடன் பிடுங்கி கிழங்கை எடுத்து விட்டு செடிகளை ஆங்காங்கே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.

    இதன் காரணமாக செங்காந்தள் மலர்கள் பூத்த பத்து தினங்களுக்குள்ளேயே இவைகள் அழியத் தொடங்கி விடுகின்றன.

    கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் அந்த செடிகளை கண்டறிந்து கிழங்குகளை தோண்டி எடுத்து சித்த மருத்துவத்திற்கு பயன்படுவது வழக்கம். ஆனால் சிலர் கார்த்திகை மாதம் பிறந்த உடனே இப்பூக்களை கண்டு கிழங்கு களை தோண்டி எடுத்து சென்று விடுவதால் இந்த செங்காந்தள் மலர்கள் இனம் அழியும் அபாயத்தில் உள்ளது.

    தமிழக அரசு மற்றும் வேளாண் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி செங்காந்தள் மலர்கள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
    • தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீர் தாழ்வான பகுதியை நோக்கி பாய்ந்து வந்தது.

    இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் உருவானது. பாறைகளும், மரங்களும் கரை புரண்டு வந்தன. இதையடுத்து ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்ற பலர் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அத்தி கோவில் ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவுக்கு மதுரை, வருச நாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    குறிப்பாக மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த சாஜூக் (வயது 48) என்பவர் தனது பேரனுக்கு மொட்டை எடுப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 70 பேருடன் நேற்று காலையிலேயே வந்தனர். தர்காவில் வழி பாட்டை முடித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது திடீரென மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்பகுதியில் தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.

    மழையின் வேகம் குறைந் ததையடுத்து ஆற்றிலும் நீர்வரத்து சற்று குறைந்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் மூலம் ஆற்றை கடந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

    அவர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததும், அனைவரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல் ராஜபாளை யம் மேற்கில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றிலும் நேற்று மாலை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    தென்காசி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர்,புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோன்று மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்தது. காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இருப்பினும் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவே காணப்பட்டது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் குளிர்ந்த காற்று வீசி வருவதால் இன்றும் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • யானைகள் உடுமலை மூணாறு செல்லும் வழித்தடத்தில் இருக்கும் பசுமையான முச்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.
    • சாலையோரம் வரும் யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை வனப்பகுதியில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து இருப்பதால் காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருகின்றன என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி வனச்சரகபகுதிகளில் யானைகள், மான்கள், சிறுத்தை, புலி, கரடி, உடும்பு பாம்பு, காட்டுமாடு, சென்னாய்கள், காட்டு யானைகள் என்று ஏராளமான வசித்து வருகின்றன தற்போது பருவமழை அடிக்கடி பெய்து வருவதாலும் பருவநிலை அடிக்கடி மாறுவதால் வனப்பகுதிகளில் கொசுக்கள் அதிகரித்து யானைகளை கடித்து வருவதால் அவற்றிலிருந்து தப்பிப்பதற்காக யானைகள் உடுமலை மூணாறு செல்லும் வழித்தடத்தில் சாலையோரம் இருக்கும் பசுமையான முச்செடிகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளன.பகல் முழுவதும் சாலையோரம் போல வரும் யானைகளை கண்டு வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

    உடுமலை மூணார் சாலையில் காம ஊத்துபள்ளம், ஏழுமலையான் கோயில் பிரிவு ஆகிய பகுதிகளில் யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் வாகன ஓட்டுனர்ளை எச்சரிக்கையுடன் பயணிக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

    • மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே, 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன.
    • கல்திட்டைகள் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை,

    தமிழகத்தின் வரலாற்று ஆதாரங்களில் முக்கியமாக கருதப்படுவது கல்திட்டைகள் ஆகும். கற்களை கருவியாக மாற்றி பயன்படுத்திய பின்னர் மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாக இருப்பது கல்திட்டைகள் ஆகும்.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கல்திட்டைகள் மற்றும் கல்பதுக்கைகள் வரலாற்று சின்னமாக வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

    சமவெளிப்பகுதிகளில் மட்டும் காணப்படும் கல்திட்டைகள், மலைத்தொடரில் அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு இடங்களில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டு அம்மலைத்தொடருக்கும், மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தி வருகின்றன.

    உடுமலை அருகே கோடந்தூர், ஈசல்திட்டு, தளிஞ்சி உட்பட மலைவாழ் குடியிருப்பு பகுதிகளின் அருகே, 25க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன. ஆனால், இவற்றின் வரலாறு தெரியாமல் படிப்படியாக அவை அழிந்து வருகின்றன.கல்திட்டைகள் குள்ளமனிதர்கள் வாழ்ந்த வீடு உட்பட பல்வேறு வதந்திகள் காரணமாக, அங்குள்ள பெரிய கற்களை அழிப்பது வழக்கமாகி விட்டது.வனப்பகுதியில் மலைத்தொடரில் அரிதாக காணப்பட்ட, பல்வேறு கல்திட்டைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. மேலும் சுற்றுலா பயணிகள் கல்திட்டைகளின் உள்பகுதியிலுள்ள உருவங்களை அழிக்கும் வகையில், தங்களின் பெயர்களை எழுதுவது போன்ற அவலங்களும் தொடர்கதையாக உள்ளது.உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில்கேரள மாநில அரசு மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மேற்குத்தொடர்ச்சி மலையில் மறையூர் உட்பட பகுதிகளிலுள்ள கல்திட்டைகளை பாதுகாக்க, கம்பி வேலி அம்மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாறை ஓவியங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடவும் அவற்றிற்கு பாதுகாப்பாகவும், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கல்திட்டைகள் குறித்த தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.இதனால், அங்குள்ள வரலாற்றுச்சின்னங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன், சுற்றுலா பயணிகளுக்கு வரலாறு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.இம்முறையை தமிழக அரசும் பின்பற்றினால் முன்னோர்கள் வரலாறு பாதுகாக்கப்பட்டு இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×