search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "animals"

    • கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
    • பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    உடுமலை:

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணியானது ஏரிகள் மற்றும் குளங்களில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட என். மருள்பட்டிகுளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராயகுளம், தேன்குளம், சின்ன ஆண்டிபாளையம்குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர்குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் அணை உள்ளிட்ட 20 குளங்களில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    இந்த கணக்கெடுப்பில் வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை வனச்சரகத்தில் உள்ள செங்குளம் மற்றும் பெரியகுளம் பகுதி கணக்கெடுப்பு பணியில் உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார், உயிரியளாளர் மகேஷ் குமார், ஆரண்யா அறக்கட்டளை கார்த்திகேயன்,ரவிக்குமார், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் மாங்குயில், நீல தாளை கோழி, நீர்காகம், புள்ளிச்சில்லை, நாமகோழி, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, மைனா, புதர் காடை, கொக்குகள், மீன்கொத்தி, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகள் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த பணியானது இன்றும் நடைபெற்றது. 

    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் சிறுத்தைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ராஜன் நகர் அருகே காந்தி நகர் கிராமத்தில் சுப்புராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்து 3 ஆடுகளை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது கால் தடயங்களை வைத்து அது சிறுத்தை உடையது என வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ராஜன் நகரில் வெள்ளியங்கிரி என்பவர் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை அடித்துக் கொன்றது. கிட்டத்தட்ட 2 நாட்களில் 7 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் முதற்கட்டமாக தானியங்கி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. கேமிரா பதிவுகளை கண்காணித்த பின் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே நடமாட வேண்டாம். அடர்ந்த வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்ன வலியுறுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தை உறுமல் சத்தம், கால்நடைகள் அலறல் சத்தம் கேட்டால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    • வழங்கப்படும் மூலிகைகள் அடங்கிய பிரசாதம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது
    • பல விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேங்காய், நிலக்கடலை, தக்காளி, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து விடுகின்றன.

    காங்கயம்:

    காங்கயம் அருகே உள்ள ஊதியூரில் வரலாற்று சிறப்பு மிக்க பொன்னூதி மலையில் முருகன், உத்தண்ட வேலாயுதசாமி என்னும் உருவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த மலையின் மீது கொங்கன சித்தர் குகைக்கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் தாராபுரம், காங்கயம் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

    அப்போது வழங்கப்படும் மூலிகைகள் அடங்கிய பிரசாதம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக நம்பப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மலையோடு சுமார் 940 ஏக்கர் பரப்பளவில் காட்டுப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான், முயல், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டு் அணில் உள்பட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

    இவைகளுக்கு மலை மற்றும் காட்டுப்பகுதியில் தற்போது போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள ஊர்களுக்குள் வருவதாக குற்றச்சாட்டு் எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஊதியூர் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கூறியதாவது:-

    ஊதியூர் பொன்னூதி மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. அவை அங்குள்ள சுனைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன. கடந்த ஒரு வருடமாக ஊதியூர் பகுதியில் போதுமான மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது.

    இதனால் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர், உணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது. இந்த நிலையில் விலங்குகள் அனைத்தும் தண்ணீர் மற்றும் உணவு தேவைகளுக்காக அருகில் உள்ள தோட்டங்கள் மற்றும் ஊர்களுக்குள் வரத்தொடங்கிவிட்டன. குரங்குகள் காங்கயம் வரை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. திருப்பூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2 மான்கள் அடிபட்டு சாலையோரத்தில் இறந்தன. சிறுத்தை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடுகளை வேட்டையாடுவது, தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரினை அருந்தி செல்வது என இருந்து வருகிறது. பல விலங்குகள் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தேங்காய், நிலக்கடலை, தக்காளி, மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் கடும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஊதியூர் மலை மீது தண்ணீர் தொட்டிகள் அமைப்பதோடு, விலங்குகள் தண்ணீர் அருந்தி செல்வதற்கு ஏதுவாக அந்த தொட்டிகளில் வருடம் முழுவதும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது.
    • பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கடந்த காலங்களில் இறைச்சி மற்றும் முக்கிய உறுப்புகளை கடத்துவதற்காக வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிறைவு பெறும் வரை, அதன் உடற்பாகங்களை பாதுகாத்து வருகின்றனர். இதேபோல் இயற்கையான முறையில் வனவிலங்குகள் உயிரிழக்கும் நிலையில், உடற்கூறு ஆய்வுக்கு பின் அதன் உறுப்புகளை வனத்துறையினர் சேகரித்து வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சரவணன், வனச்சரகர்கள் முன்னிலையில் ஓவேலி வனச்சரக பகுதியில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகள், இறைச்சிகள் உள்ளிட்ட பாகங்களை எரிக்கும் பணி கூடலூர் மாக்கமூலாவில் உள்ள வன அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    அதில் பல மாதங்களாக சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த காட்டெருமைகள், மான்களின் எலும்புகள் மற்றும் இறைச்சிகளை விறகுகள் மீது வன ஊழியர்கள் அடுக்கி வைத்தனர். பின்னர் ஆவணங்களின் அடிப்படையில் உடற்பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் கூறும்போது, வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதி பெற்று 500 கிராம் வனவிலங்கு இறைச்சி, 30 கிலோ காட்டெருமை எலும்புகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது என்றார்.க

    சர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. #Circus #CentralGovt
    புதுடெல்லி:

    சர்க்கஸ் என்றாலே மிருகங்களும், கோமாளிகளும், சாகசங்களும் நினைவுக்கு வரும். குழந்தைகள் ரசித்து மகிழ்வார்கள்.

    காட்டுக்கு சென்று பார்க்க முடியாத சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய மிருகங்களை கூண்டில் அடைத்து நம் கண்முன் நிறுத்தி விடுவார்கள். இவ்வாறு மிருகங்களை கூண்டில் அடைத்து சித்ரவதை செய்யக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மிருகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    ஆனால் நாய், யானை, குதிரை போன்ற மிருகங்களை வைத்தும் கிளிகளை வைத்தும் வேடிக்கை காட்டி வந்தனர். இப்போதும் அதற்கும் தடை வருகிறது. இது தொடர்பாக மிருக பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு ஏற்கனவே அனைத்து வகையான மிருகங்களையும் சர்க்கசில் காட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதற்காக மத்திய அரசு புதிதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் மிருகங்களை காட்சி பொருளாகவோ, சித்ரவதை செய்து துன்புறுத்துவதை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது

    .
    இதை சர்க்கசில் அமல்படுத்த வேண்டும் என்று வனவிலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து சர்க்கசில் நாய், குதிரை, யானை போன்ற மிருகங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே சிங்கம், புலி, கரடி தடை செய்யப்பட்டதாலும், டி.வி., செல்போன், இணைய தளம் வருகையாலும் சர்க்கசுக்கு மவுசு குறைந்தது. இப்போது எஞ்சியுள்ள மிருகங்களையும் தடை செய்தால் சர்க்கஸ் தொழில் அடியோடு பாதிக்கும் என்று சர்க்கஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இந்தியாவில் மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் தான் சர்க்கஸ் ஊழியர்கள் அதிகம் உள்ளனர். ஏற்கனவே சினிமா போன்ற தொழிலுக்கு அவர்கள் வாய்ப்பு தேடிச் சென்று விட்டனர். சர்க்கசும் முன்பு போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Circus #CentralGovt
    தாவரங்கள் வெட்டும்போது அவற்றின் உணர்வு மண்டலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது குறித்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.
    நியூயார்க்:

    இயற்கையின் கொடைகளில் ஒன்றாக கருதப்படும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஞானிகளின் ஆத்மார்த்த கருத்து. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்துள்ளன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளும், அதற்கான ஆதாரங்களும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தாவரங்கள் தாக்கப்படும்போது, அவற்றின் நரம்பு மண்டலங்கள் வழியே உணர்வுகள் கடத்தப்பட்டு இதர பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கொண்டு அவை அடுத்து என்ன செய்யும்? என்பது குறித்தான ஆய்வு நீண்டு கொண்டு வருகிறது.

    எனினும், நரம்பு மண்டலமே இல்லாத தாவரங்கள், விலங்குகளை போல தங்கள் உணர்வுகளை அடுத்த பாகங்களுக்கு கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஃப்ளூரோசெண்ட் புரதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமே தாவரங்களின் உணர்வுகள் கடத்தப்படுவது வெளிப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக தாவரவியலாளர் சைமன் கில்ராய் கூறுகையில், ‘இந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்களை தூண்டுகிறது. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது’ என தெரிவித்தார்.

    இதன்மூலம், நாம் அன்றாடம் மிக அலட்சியமாக வெட்டி வீழ்த்தும் தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணர்ந்து, தாவரங்களை வெட்டுவதை குறைத்து இயற்கையையும் பாதுகாக்க முயற்சிப்போம்.


    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று தொடங்கியது. களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் பணிகளை தொடங்கி வைத்தார். வரும் 18-ம் தேதி வரை பணி நடக்கிறது.

    இதில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் 100 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்பர்கோதையாறு வனசரகத்தில் 5 குழுவினரும், களக்காடு, திருக்குறுங்குடி வனசரகங்களில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் வனப்பகுதியில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    முதல் 3 நாட்கள் புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் குளம்பினங்கள் குறித்தும், கணக்கெடுப்பு நடத்துகின்றனர். வன சரக அலுவலர்கள் களக்காடு புகழேந்தி, திருக்குறுங்குடி கமலக்கண்ணன், அப்பர்கோதையாறு பாலாஜி ஆகியோர் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தனர். கணக்கெடுப்பின் போது செங்கல்தேரி வனப்பகுதியில் புலிகளின் கால்தடங்கள், எச்சங்கள் கிடைத்துள்ளன.
    பழனி வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க 100 காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
    பழனி:

    பழனி வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. இவற்றை பாதுகாக்கும் பணியில் பழனி வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி அருகே பாப்பம்பட்டி, காவலப்பட்டி, குதிரையாறு அணைப்பகுதி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் ஆனைமலை வனச்சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அந்த வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 6 பீட் பகுதிகளில் வனவிலங்குகளை கண்காணிக்க காமிராக்களை பொருத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை முடிவு செய்தது. அதன்படி தற்போது ஆனைமலை வனச்சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட 6 பீட் பகுதிகளில் தற்போது 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த காமிராக்கள் ஒவ்வொன்றும் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து 7½ மீட்டர் தூரத்தில் நடமாடும் விலங்குகளை புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டவை.

    முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகள் முதல் யானை உள்ளிட்ட பெரிய விலங்குகளின் நடமாட்டத்தை இந்த காமிராக்கள் மூலம் துல்லியமாக கண்டறியலாம்.

    வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் போது மட்டும் இந்த கேமராக்கள் செயல்படும். மற்ற நேரங்களில் காமிராவின் இயக்கத்தை தானாக நிறுத்தும் வகையில் ஒரு கருவியும் காமிராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த காமிரா மூலம் எடுக்கும் படங்கள் அதில் உள்ள தற்காலி நினைவகத்தில் சேமிக்கப்படும். அதன் மூலம் எங்களால் எந்தெந்த பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதை எளிதில் கண்டறிய முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×